ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

3 posters

Go down

7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Empty 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

Post by டார்வின் Wed Jun 26, 2013 8:43 pm

https://2img.net/r/ihimizer/img811/1078/ko9i.jpg
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சென்னை கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் (33) சிக்கிக் கொண்டார். இவர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

உயிர் தப்பி சென்னை திரும்பிய இவர் தன்னை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபரையும் சென்னைக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்துள்ளார். பேராசிரியர் வெங்கடேஷ் தெரிவித்த தகவல் நெஞ்சை உருக்குவதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.

தனது நண்பர்கள், மாணவர்கள் 7 பேருடன் பேராசிரியர் வெங்கடேஷ் கேதார்நாத் சென்றார். வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அவர் குழுவினருடன் அங்கு கவுரி குண்ட் என்ற மலை கிராமத்தில் 4 நாட்கள் உணவு உறக்கம் இன்றி தவித்தார். ஊரே அழிந்து விட்டது. மீட்பதற்கு யாரும் வரவில்லை. அந்த இடத்தை யாராலும் நெருங்கவும் முடியவில்லை.

அப்போது அந்த கிராமத்தில் வசிக்கும் பிரமோத் கோஸ்வாமி என்ற 23 வயது இளைஞரும் அவரது 2 சகோதரர்களும் பேராசிரியர் மற்றும் 6 பேருக்கு அடைக்கலம் கொடுத்தனர். மலைப்பாதையில் பல கி.மீ. தூரம் உயிரை பணயம் வைத்து நடந்து வந்த களைப்புடன் இருந்த அவர்களுக்கு 4 நாட்கள் தூக்கம் இல்லை. உணவும் இல்லை.

7 பேருக்கும் அவர்கள் டீ போட்டு கொடுத்து வீட்டில் தூங்கச்சொல்லி ஓய்வு எடுக்க வைத்தனர். 2 நாட்களுக்குப்பின் ஓரளவு களைப்பு தீர்ந்த பின்பு அந்த இளைஞர் 7 பேரையும் தனக்கு தெரிந்த மலைப்பாதை வழியாக அழைத்துச் சென்றார். குப்த காசியில் 7 பேரையும் உத்தரகாண்ட் போலீசில் ஒப்படைத்தார்.

அப்போது பிரமோத் கோஸ்வாமி பேராசிரியரை கண்ணீருடன் உருக்கமாக வழியனுப்பி வைக்க முயன்றார். அவரால் விடைபெற முடியவில்லை. அவர் தங்கள் ஊர் வழியாக யாத்ரீகர்களை குதிரையில் கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் வேலை செய்து வந்தார்.

வெள்ளத்தில் குதிரைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஊரே அழிந்து விட்டது. ஊரில் யாரும் இல்லை. கேதார்நாத் இயல்பு நிலைக்கு திரும்ப பல வருடங்கள் ஆகும். இனி பிழைப்புக்கு நாங்கள் எங்கே போவோம் என்று இந்தியிலும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும் கோஸ்வாமி அழுதார்... பேராசிரியர் வெங்கடேஷ் மனதும் இளகியது.

‘‘எங்கள் 7 பேர் உயிரை காப்பாற்றிய உனக்கு நாங்கள் இருக்கிறோம்’’ என்று கூறிய பேராசிரியர் உள்ளூர் போலீசாரிடம் தகவல் கொடுத்து விட்டு வாலிபர் பிரமோத் கோஸ்வாமியை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.

கோஸ்வாமி அதிகம் படிக்காதவர் ஓட்டல் வேலை தெரியும் என்பதால் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலை அணுகி நிலைமையை எடுத்துக் கூறினார். அந்த ஓட்டல் நிர்வாகமும் கோஸ்வாமிக்கு வேலை கொடுத்து தங்குமிடம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.

கோஸ்வாமியின் தம்பி எம்.ஏ. படிக்கிறார். இன்னொரு தம்பியும் படித்துக் கொண்டு இருக்கிறார். இனி நாங்களும் சென்னை வந்து ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்று போனில் அண்ணனிடம் பேசி தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் பேரழிவு குறித்து பேராசிரியர் வெங்கடேஷ் கூறியதாவது:-

நாங்கள் 5 ஆண்டுகளாக தொடர்ந்து ரிஷிகேஷ், கேதார்நாத் சென்று வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தோம். சாவின் விளிம்புக்கு சென்று மீண்டு இருக்கிறோம். நாங்கள் ரிஷிகேஷ், கங்கோத்ரி, கங்கை உற்பத்தியாகும் கோமுகி உள்பட பல இடங்களை பார்த்து விட்டு கேதார் மலைக்கு சென்றோம்.

அப்போது 3 நாட்கள் இடைவிடாத மழை கேதார்நாத்தில் வெள்ளம் உயர்ந்து கொண்டே இருந்தது. நாங்கள் ஓட்டலுக்கு சென்றோம். ஓட்டல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. எங்களை வெளியேறச் சொன்னார்கள். நாங்கள் ஓட்டலை விட்டு வெளியேறி மலை மீது ஏறிக் கொண்டோம். இரவு முழுவதும் உறக்கம் உணவு இன்றி மலை மீது நடந்து திரிந்தோம். எங்கு போவது என்றே வழி தெரியவில்லை.

அப்போதுதான் கோஸ்வாமி எங்களுக்கு வழிகாட்டி உதவினார். நாங்கள் தவித்த இடத்துக்கு ராணுவத்தால் கூட வரமுடியவில்லை. நாங்களாத்தான் 16 கி.மீ. தூரம் நடந்து சென்று சீதாபூர் கிராமத்தை அடைந்தோம். அங்குதான் ராணுவம் இருந்தது. அவர்கள் எங்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரிஷிகேஷில் நாங்கள் இருப்பதை அறிந்து தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் சந்தித்து தைரியம் கூறினார்கள். உங்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக கூறி உதவிகள் செய்தனர்.

கேதார்நாத்தில் இதற்கு முன்பு லேசாக மழை பெய்யும். இந்த முறை 3 நாட்கள் இடைவிடாமல் கொட்டியது. ஜூலை மாதம் தொடங்க வேண்டிய பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி விட்டது. வானிலை இலாகாவினர் எச்சரிக்க தவறியதால் இந்த நிலை ஏற்பட்டது.

நான் கேதார் மலையில் இருந்த போது நூற்றுக்கணக்கான பிணங்கள் வெள்ளத்தில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு லட்சம் பேர் வரை இறந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

கேதார்நாத் கோவில் சேதத்துடன் தப்பியது. அதே சமயம் அம்மன் குளித்த இடமாக கருதப்படும் தங்க கோவில் முற்றிலும் அழிந்து விட்டது. அங்கு தரை மட்டும்தான் இப்போது காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Empty Re: 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

Post by தர்மா Wed Jun 26, 2013 11:04 pm

காலத்தால் செய்த உதவி இருவரும் செய்த உதவி. வாழ்த்துகிறோம். சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Empty Re: 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

Post by yarlpavanan Thu Jun 27, 2013 2:20 pm

சிறந்த அனுபவப் பகிர்வு
காப்பாற்றியவருக்கு உதவிய செயல்
கடவுளுக்குச் செய்த நன்றியே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Empty Re: 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜித்!
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
» டெல்லயில் உயிரை துச்சமென நினைத்து தம்பதியை காப்பாற்றிய போலீஸ்..!
» உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum