Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
3 posters
Page 1 of 1
OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன.
22.10.2007 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் அனுராதபுரம் வானூர்தி தளம் மீது விடுதலைப் புலிகளின் வான் படை மற்றும் தரைக் கரும்புலிகளால் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலினைப் பற்றிய உண்மைச் சம்பவத்தைப் பேசி நிற்பதே இந்த எல்லாளன் திரைப்படமாகும். 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் ஈழ யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்கு முன்பதாக இலங்கை இராணுவம் தனது முற்றுகையினை வன்னிப் பகுதிக்குள் அதிகமாக்கிய வேளையில் குறுகிய மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான திரைப்படங்களுக்கு நிகரான முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது இந்த எல்லாளன்.
சுருங்கக் கூறின் ஹாலிவூட்டின் யூனிவேர்சல் ஸ்டூடியோவின் தொழில் நுட்பத் திறனுக்கு நிகரான முறையில் ரியாலிட்டியாக இந்த திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் அமைந்திருக்கிறது.
இலகுவில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த முடியாது எனும் இறுமாப்போடு இலங்கை இராணுவத்தினரால் தமிழர் பிரதேசங்களில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த "கிபிர்" விமானங்களை விமானத் தளத்தில் தரித்து நிற்கும் வேளையில் தாக்குதல் நடாத்தி தகர்த்தெறிந்து இலங்கை அரசாங்கத்திற்கு அச்சமூட்டும் வகையில்;
புலிகளின் 21 பேர் கொண்ட கரும்புலி அணியினராலும், புலிகளின் இரு விமானங்களின் உதவியோடும் அனுராதபுரம் முகாம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக 22.10.2007 அன்று நிகழ்த்தப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு முன்பதாக புலிகளின் வேவுப் பிரிவினர் எப்படி அனுராதபுரம் முகாமினுள் ஊடுருவித் தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தார்கள், புலிகளின் அணியினர் எவ்வாறு இத் தாக்குதல்களுக்குத் தம்மைத் தயார்படுத்தினார்கள், சாதாரண மனிதர்கள் போல வாழ்ந்த தமிழர்களின் மனதில் எவ்வாறு கரும்புலியாக உருவாக வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது? எனப் பல தரப்பட்ட விடயங்களை வெறுமனே ஆக்சன் படமாக அல்லாது நவரசங்கள் கலந்த ஒரு ஆக்சன் + மசாலா கமர்சியல் ஹிட்டாக சொல்லி நிற்பது தான் இந்த எல்லாளனின் திரைப்படத்தின் உள்ளடக்கமாகும்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் அவல நிலை தான் இந்த தாக்குதலுக்கான மூல காரணி என்பதனை நக்கலும் நையாண்டியும் கலந்த எள்ளல் தொனியில் அழகிய காட்சியமைப்பினூடாக காட்டி நிற்கிறார் இயக்குனர் தமிழன் அவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக செஞ்சோலைத் தாக்குதல் இடம் பெற்ற மறு நாள் கரும்புலித் தாக்குதலோடு தொடர்புடைய கரும்புலி வீரனொருவர் தான் கரும்புலி என்று வெளிப்படுத்தாது பொது மக்களோடு சென்று பத்திரிகை வாசிக்கும் சந்தர்ப்பத்தில் புலிகளின் குரல் வானொலியின் நாளிதழ் நாளிப் பத்திரிகைச் செய்தியினைச் செவிமடுத்த பெரியவர்கள் பின் வருமாறு எள்ளி நகைப்பார்கள்.
"சமாதானம் சமாதானம் என்று உலகம் முழுக்கத் திரிஞ்சாங்கள். உந்தக் கிபிரை வீழ்த்த ஒரு வழியும் அறியாமல் நிற்கிறாங்கள்". இவ்வாறு பேசுவது கரும்புலியின் மனதில் உள்ள உணர்ச்சியிற்குத் தூண்டு கோலாக அமைந்து கொள்கிறது. இதே போல ஒவ்வோர் இடங்களிலும் மக்கள் கிபிர் தாக்குதல்களால் பாதிக்கப்படும் போது, "கிபிரைச் சுட்டு வீழ்த்த புலிகளால் முடியாதா? எனக் கேள்வி கேட்டு புலிகள் மனதினைச் சோதிக்கும் நிஜமான சம்பவங்கள் தான் இந்தத் தாக்குதலுக்குத் தூண்டு கோலாக விளங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் தாக்குதலுக்கான தயார்படுத்தல்கள், பயிற்சிகள் என விறு விறுப்பாகச் செயற்படும் புலிகளின் கரும்புலி அணியினரின் மனிதாபிமானம் நிறைந்த செயற்பாடுகளைக் காட்சிப்படுத்திய இயக்குனர் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குள் நெருப்பு மாத்திரம் அல்ல! அவர் தம் உளத்தினுள் ஈரமும் நிறைந்திருக்கிறது என்பதனையும் அழகுறப் படமாக்கியிருக்கிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக தாக்குதல் நடாத்தி தான் இன்னும் சில நாட்களுக்குள் வீரச்சாவடைந்து விடுவேன் என்பதற்கு அப்பால், தாம் வாழும் காலம் வரை இந்த உலகில் உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதனை "நாயிற்கு கட்டிலை கொடுத்து விட்டு, தாம் வெறும் நிலத்தில் தூங்கும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும், எலிக் குஞ்சுகளைத் தனது மிலிட்டரித் தொப்பியினுள் துயில் கொள்ள வைத்து விட்டு பயிற்சி வழங்கும் மாஸ்டரிடம் தண்டனை பெறும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும் அழகுறப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள். ஒளிப்பதிவினைப் பொறுத்தவரை மிகத் தரமான அதே வேளை துல்லியமான காட்சியமைப்புக்களை சந்தோஷ் அவர்கள் தன் கமெராக் கை வண்ணம் மூலம் காண்பித்திருக்கிறார்.
இசை பற்றி நான் அதிகம் சொல்லுவதை விட நீங்கள் திரையில் பார்க்கும் போது உணர்ந்து கொள்வீர்கள். பின்னணி இசையில் நிரு அவர்களும், பாடல் இசையில் தேவேந்திரனும் பின்னி எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்ப இசையமைப்பும், கலவை (Sound Mixing) ஒலிகளும் பயன்படுத்தப்பட்டு இப் படத்திற்கு உயிரோட்டமாக இசையும் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கணீரெனும் கம்பீரக் குரலில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில் "தாயக மண்ணே... தாயக மண்ணே....." எனும் பாடல் உங்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒரு முறை உசுப்பி விடும் என்பதில் ஐயமில்லை.
நீண்ட காலமாக ஈழத்து காதலை படங்களில் கண்டு களிக்க முடியலையே எனும் குறை உள்ளோருக்கு எல்லாளன் படத்தில் வரும் மச்சான் மச்சாள் சேஸிங் காட்சிகள் விருந்தளிக்கும். ஈழத்து மண் வாசனை கலந்த நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள் போராளிகள். உண்மைச் சம்பவத்தை எம் மனக் கண் முன்னே கொண்டு வரும் போது இருக்க வேண்டிய உயிர்ப்பூட்டல், யதார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, இயல்புத் தமிழ் உச்சரிப்பு ஆகிய அம்சங்கள் இத் திரைப்படத்திற்கு மெரு கூட்டியிருக்கிறது.
தமிழ் திரைக் கண் திரைப்பட பிரிவின் வெளியீட்டில், 2009ம் ஆண்டு வன்னிப் பகுதியிலிருந்து உலக நாடுகளில் வெளியீடு செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டிருந்த இந்தத் திரைப்படம் தான் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இறுதியாக வன்னிப் பகுதியில் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமாகும். எல்லாளன் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் இப் படத்தில் பயன்படுத்தப்பட்டு முற்று முழுதாக ஒரு ரியாலிட்டித் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் தமிழ் திரைக் கண் வெளியீட்டுப் பிரிவினர்.
இந்தத் திரைப்படத்தினைப் படமாக்கும் போது நான்கு பேர் வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.
ஒரு மணித்தியாலம் 42 நிமிடங்கள் கால அளவை கொண்ட இத் திரைப் படத்தினை Youtube இல் பார்த்து மகிழ இங்கே கிளிக் பண்ணுங்கள்:லிங் இதோ. https://www.youtube.com/watch?v=XBHyQGfEWCg&feature=player_embedded
விடுதலைப் புலிகளின் போரியல் திட்டமிடல்கள், புலிகளின் தாக்குதல் மதி நுட்பங்கள் பற்றி அறியாதோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது!
எல்லாளன்: தமிழர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய அதிரடிக் காவியம்!
தற் கொடைப் போராளிகள்: தம்மைத் தம் இனத்திற்கா கொடையாக கொடுப்போர்.
பிற் சேர்க்கை: விடுதலைப் புலிகளால் 2009ம் ஆண்டு மாசி மாதம் ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை அரசிற்குச் சொந்தமான இரண்டு கிபிர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டன.
நன்றி தமிழ்நாட்டு பிளாக்ஸ்பாட்
22.10.2007 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் அனுராதபுரம் வானூர்தி தளம் மீது விடுதலைப் புலிகளின் வான் படை மற்றும் தரைக் கரும்புலிகளால் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலினைப் பற்றிய உண்மைச் சம்பவத்தைப் பேசி நிற்பதே இந்த எல்லாளன் திரைப்படமாகும். 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் ஈழ யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்கு முன்பதாக இலங்கை இராணுவம் தனது முற்றுகையினை வன்னிப் பகுதிக்குள் அதிகமாக்கிய வேளையில் குறுகிய மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான திரைப்படங்களுக்கு நிகரான முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது இந்த எல்லாளன்.
சுருங்கக் கூறின் ஹாலிவூட்டின் யூனிவேர்சல் ஸ்டூடியோவின் தொழில் நுட்பத் திறனுக்கு நிகரான முறையில் ரியாலிட்டியாக இந்த திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் அமைந்திருக்கிறது.
இலகுவில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த முடியாது எனும் இறுமாப்போடு இலங்கை இராணுவத்தினரால் தமிழர் பிரதேசங்களில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த "கிபிர்" விமானங்களை விமானத் தளத்தில் தரித்து நிற்கும் வேளையில் தாக்குதல் நடாத்தி தகர்த்தெறிந்து இலங்கை அரசாங்கத்திற்கு அச்சமூட்டும் வகையில்;
புலிகளின் 21 பேர் கொண்ட கரும்புலி அணியினராலும், புலிகளின் இரு விமானங்களின் உதவியோடும் அனுராதபுரம் முகாம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக 22.10.2007 அன்று நிகழ்த்தப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு முன்பதாக புலிகளின் வேவுப் பிரிவினர் எப்படி அனுராதபுரம் முகாமினுள் ஊடுருவித் தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தார்கள், புலிகளின் அணியினர் எவ்வாறு இத் தாக்குதல்களுக்குத் தம்மைத் தயார்படுத்தினார்கள், சாதாரண மனிதர்கள் போல வாழ்ந்த தமிழர்களின் மனதில் எவ்வாறு கரும்புலியாக உருவாக வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது? எனப் பல தரப்பட்ட விடயங்களை வெறுமனே ஆக்சன் படமாக அல்லாது நவரசங்கள் கலந்த ஒரு ஆக்சன் + மசாலா கமர்சியல் ஹிட்டாக சொல்லி நிற்பது தான் இந்த எல்லாளனின் திரைப்படத்தின் உள்ளடக்கமாகும்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் அவல நிலை தான் இந்த தாக்குதலுக்கான மூல காரணி என்பதனை நக்கலும் நையாண்டியும் கலந்த எள்ளல் தொனியில் அழகிய காட்சியமைப்பினூடாக காட்டி நிற்கிறார் இயக்குனர் தமிழன் அவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக செஞ்சோலைத் தாக்குதல் இடம் பெற்ற மறு நாள் கரும்புலித் தாக்குதலோடு தொடர்புடைய கரும்புலி வீரனொருவர் தான் கரும்புலி என்று வெளிப்படுத்தாது பொது மக்களோடு சென்று பத்திரிகை வாசிக்கும் சந்தர்ப்பத்தில் புலிகளின் குரல் வானொலியின் நாளிதழ் நாளிப் பத்திரிகைச் செய்தியினைச் செவிமடுத்த பெரியவர்கள் பின் வருமாறு எள்ளி நகைப்பார்கள்.
"சமாதானம் சமாதானம் என்று உலகம் முழுக்கத் திரிஞ்சாங்கள். உந்தக் கிபிரை வீழ்த்த ஒரு வழியும் அறியாமல் நிற்கிறாங்கள்". இவ்வாறு பேசுவது கரும்புலியின் மனதில் உள்ள உணர்ச்சியிற்குத் தூண்டு கோலாக அமைந்து கொள்கிறது. இதே போல ஒவ்வோர் இடங்களிலும் மக்கள் கிபிர் தாக்குதல்களால் பாதிக்கப்படும் போது, "கிபிரைச் சுட்டு வீழ்த்த புலிகளால் முடியாதா? எனக் கேள்வி கேட்டு புலிகள் மனதினைச் சோதிக்கும் நிஜமான சம்பவங்கள் தான் இந்தத் தாக்குதலுக்குத் தூண்டு கோலாக விளங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் தாக்குதலுக்கான தயார்படுத்தல்கள், பயிற்சிகள் என விறு விறுப்பாகச் செயற்படும் புலிகளின் கரும்புலி அணியினரின் மனிதாபிமானம் நிறைந்த செயற்பாடுகளைக் காட்சிப்படுத்திய இயக்குனர் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குள் நெருப்பு மாத்திரம் அல்ல! அவர் தம் உளத்தினுள் ஈரமும் நிறைந்திருக்கிறது என்பதனையும் அழகுறப் படமாக்கியிருக்கிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக தாக்குதல் நடாத்தி தான் இன்னும் சில நாட்களுக்குள் வீரச்சாவடைந்து விடுவேன் என்பதற்கு அப்பால், தாம் வாழும் காலம் வரை இந்த உலகில் உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதனை "நாயிற்கு கட்டிலை கொடுத்து விட்டு, தாம் வெறும் நிலத்தில் தூங்கும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும், எலிக் குஞ்சுகளைத் தனது மிலிட்டரித் தொப்பியினுள் துயில் கொள்ள வைத்து விட்டு பயிற்சி வழங்கும் மாஸ்டரிடம் தண்டனை பெறும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும் அழகுறப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள். ஒளிப்பதிவினைப் பொறுத்தவரை மிகத் தரமான அதே வேளை துல்லியமான காட்சியமைப்புக்களை சந்தோஷ் அவர்கள் தன் கமெராக் கை வண்ணம் மூலம் காண்பித்திருக்கிறார்.
இசை பற்றி நான் அதிகம் சொல்லுவதை விட நீங்கள் திரையில் பார்க்கும் போது உணர்ந்து கொள்வீர்கள். பின்னணி இசையில் நிரு அவர்களும், பாடல் இசையில் தேவேந்திரனும் பின்னி எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்ப இசையமைப்பும், கலவை (Sound Mixing) ஒலிகளும் பயன்படுத்தப்பட்டு இப் படத்திற்கு உயிரோட்டமாக இசையும் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கணீரெனும் கம்பீரக் குரலில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில் "தாயக மண்ணே... தாயக மண்ணே....." எனும் பாடல் உங்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒரு முறை உசுப்பி விடும் என்பதில் ஐயமில்லை.
நீண்ட காலமாக ஈழத்து காதலை படங்களில் கண்டு களிக்க முடியலையே எனும் குறை உள்ளோருக்கு எல்லாளன் படத்தில் வரும் மச்சான் மச்சாள் சேஸிங் காட்சிகள் விருந்தளிக்கும். ஈழத்து மண் வாசனை கலந்த நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள் போராளிகள். உண்மைச் சம்பவத்தை எம் மனக் கண் முன்னே கொண்டு வரும் போது இருக்க வேண்டிய உயிர்ப்பூட்டல், யதார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, இயல்புத் தமிழ் உச்சரிப்பு ஆகிய அம்சங்கள் இத் திரைப்படத்திற்கு மெரு கூட்டியிருக்கிறது.
தமிழ் திரைக் கண் திரைப்பட பிரிவின் வெளியீட்டில், 2009ம் ஆண்டு வன்னிப் பகுதியிலிருந்து உலக நாடுகளில் வெளியீடு செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டிருந்த இந்தத் திரைப்படம் தான் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இறுதியாக வன்னிப் பகுதியில் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமாகும். எல்லாளன் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் இப் படத்தில் பயன்படுத்தப்பட்டு முற்று முழுதாக ஒரு ரியாலிட்டித் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் தமிழ் திரைக் கண் வெளியீட்டுப் பிரிவினர்.
இந்தத் திரைப்படத்தினைப் படமாக்கும் போது நான்கு பேர் வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.
ஒரு மணித்தியாலம் 42 நிமிடங்கள் கால அளவை கொண்ட இத் திரைப் படத்தினை Youtube இல் பார்த்து மகிழ இங்கே கிளிக் பண்ணுங்கள்:லிங் இதோ. https://www.youtube.com/watch?v=XBHyQGfEWCg&feature=player_embedded
விடுதலைப் புலிகளின் போரியல் திட்டமிடல்கள், புலிகளின் தாக்குதல் மதி நுட்பங்கள் பற்றி அறியாதோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது!
எல்லாளன்: தமிழர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய அதிரடிக் காவியம்!
தற் கொடைப் போராளிகள்: தம்மைத் தம் இனத்திற்கா கொடையாக கொடுப்போர்.
பிற் சேர்க்கை: விடுதலைப் புலிகளால் 2009ம் ஆண்டு மாசி மாதம் ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை அரசிற்குச் சொந்தமான இரண்டு கிபிர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டன.
நன்றி தமிழ்நாட்டு பிளாக்ஸ்பாட்
Last edited by ராஜு சரவணன் on Sun Jun 23, 2013 11:11 am; edited 2 times in total
Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
இது ஈழத்தமிழர் எடுத்த படத்தினை பற்றியது.படம் 2010 ல் வெளியான என நினைக்கிறேன் . இந்த படத்தை நேற்று தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
உண்மையில் சொல்லப்போனால் இங்கு எடுக்கும் நாடக சாயல் படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ மேல் . அதுமட்டுமல்ல விடுதலைபுலிகளுடன் நாம் இருந்தது போன்ற ஒரு உணர்வு கிடைக்கிறது . அவர்கள் தம் தாய் நாட்டிற்காக எதைஎதை எல்லாம் இழந்து எவ்வாறு போராடினார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
உண்மையில் படம்பார்த்த பிரம்மிப்பில் தான் இந்த பதிவு. படம் எப்போது வந்தால் என்ன? முடிந்தால் பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள்.
இது படம் இல்லை தமிழனின் வீர வரலாறு
டொரன்ட் லிங் http://kickass.to/operation-ellalan-eelam-movie-t4216264.html
உண்மையில் சொல்லப்போனால் இங்கு எடுக்கும் நாடக சாயல் படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ மேல் . அதுமட்டுமல்ல விடுதலைபுலிகளுடன் நாம் இருந்தது போன்ற ஒரு உணர்வு கிடைக்கிறது . அவர்கள் தம் தாய் நாட்டிற்காக எதைஎதை எல்லாம் இழந்து எவ்வாறு போராடினார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
உண்மையில் படம்பார்த்த பிரம்மிப்பில் தான் இந்த பதிவு. படம் எப்போது வந்தால் என்ன? முடிந்தால் பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள்.
இது படம் இல்லை தமிழனின் வீர வரலாறு
டொரன்ட் லிங் http://kickass.to/operation-ellalan-eelam-movie-t4216264.html
Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
தமிழனின் வீர வரலாறு
பதிவு ராஜு அண்ணா
பதிவு ராஜு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
தரவிறக்கிகொண்டிருக்கிறேன் , பகிர்வுக்கு நன்றி ராஜு
பெயர் ஓடும்போதே கண்ணீர் பெருகுகிறது
பெயர் ஓடும்போதே கண்ணீர் பெருகுகிறது
Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
இந்த படம் உலகில் எங்கும் திரையிடபடவில்லை என்று நினைக்கிறேன்
Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்
நேரடி தரவிறக்க சுட்டிகள்
- Code:
http://www.filefactory.com/file/41mqttkpkz0z/n/www_TamilRockers_net_-_Operation_Ellalan_2008_DVDRip_Tamil_EELAM_Movie_1CDRip_700MB_avi
http://www.directmirror.com/files/1G5X0MP4
http://uptobox.com/p05cfc0d6o3v
http://www.multiupload.nl/8YCRULE83C
http://BillionUploads.com/k1h5tp8afrqv
http://extabit.com/file/29g2kl3y5477h/
http://turbobit.net/b8c2l3315im7.html
Guest- Guest
Similar topics
» மெய் சிலிர்க்க வைக்கும் தருணங்கள்..
» மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்.
» சேலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
» பால்காரியின் மகள்! ஜனாதிபதி யின் மருமகள் ஆன உண்மைச் சம்பவம்!
» மெய் சிலிர்க்க வைத்த பதிவு... மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்.
» சேலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
» பால்காரியின் மகள்! ஜனாதிபதி யின் மருமகள் ஆன உண்மைச் சம்பவம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|