புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_lcapஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_voting_barஉத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 22, 2013 9:46 am

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில், பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பில், 207 பேர் தான் இறந்துள்ளனர் என, கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், பலி எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டும் என, தெரிவிக்கிறது; 60 ஆயிரம் பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.

40 ஹெலிகாப்டர்கள்:

பேய் மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, கடும் குளிர் போன்றவற்றால், உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் மற்றும் பல பகுதிகளில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை, 22 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல், 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ராணுவத்தின், 8,000 வீரர்கள், இந்தோ - திபெத் எல்லை போலீசின், 2,000 வீரர்கள், எல்லை சாலைகள் அமைப்பின், 3,000 பணியாளர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், சில இடங்களில், தற்காலிக இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்படுகின்றனர். ஓட்டல்கள், தங்குமிடங்கள் தகர்ந்து விட்டதால், காடுகளிலும், உயர்ந்த இடங்களிலும் தஞ்சம் அடைந்தவர்கள், ஹெலிகாப்டரில், நூல் ஏணி மூலம் மீட்கப்படுகின்றனர்.

33 ஆயிரம் பேர் மீட்பு:

கேதார்நாத்தில் மீட்புப் பணி துவங்கி, மூன்று நாட்கள் ஆன நிலையில், நேற்று தான், அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மதிய நிலவரப்படி, கேதார்நாத், ஹரித்துவார் பகுதிகளில், 33 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும், 60 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரித்துவாரில் நேற்று, 40 உடல்கள் கண்டெடுக்கப் பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை, 207 என, அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான உத்தரகண்ட் மாநில அரசின், விவசாய அமைச்சர், ராகேஷ் சர்மா, ""கேதார்நாத் பகுதியில் இரண்டு நாட்களாக தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்; பலி எண்ணிக்கை, அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என, கருதுகிறேன். இரண்டு நாள் மழையில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய, குறைந்தபட்சம், ஐந்தாண்டு களாகவது ஆகும்,'' என்றார். கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபடச் சென்றிருந்த பக்தர்கள் தான், அதிக அளவில் இறந்துள்ளனர். கோவில் வாசலில், நேற்று காலை, சடலக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுருட்டிய பந்து போல, நான்கைந்து பேர் இறந்து கிடந்ததை, பத்திரிகையாளர்கள் பார்த்தனர். தரை மட்டத்திலிருந்து, 15 அடி உயரத்திலிருந்த கோவில், இப்போது, சமதளமாகியுள்ளது. சுற்றிலும் ஆள் உயர பாறைகளும், கற்குவியல்களும், அந்த புனிதமான இடத்தை, கல்குவாரி போல் மாற்றியுள்ளன.

தகவல் தொடர்பு இல்லை:

கேதார்நாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்னமும் நிலைமை மோசமாகவே உள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு அறவே இல்லை. ஹெலிகாப்டர்கள் மட்டும் தான், ஒரே வாகன போக்குவரத்தாக மாறிப் போயுள்ளன. இன்று முதல், பத்ரிநாத் பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி, பத்ரிநாத் பகுதியில், 9,000 பேர் சிக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சலிலும் பாதிப்பு:

அது போல், உத்தரகண்டின் அண்டை மாநிலமான, பனி சூழ்ந்த, இமாச்சலிலும் மழை, நிலச்சரிவு பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு பக்தர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மாறாக, உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை, 600 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், சில ஆயிரம் பேர், நான்கைந்து நாட்களாக நடுங்கும் குளிரில், உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்து, வெறும் அனுதாபம் மட்டுமே தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை விட, ராணுவ வீரர்கள் தான் உண்மையான, "ஹீரோ'க்கள் என, மீட்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். ஏனெனில், மாநில நிர்வாகமே அணுக முடியாத சூழ்நிலையில், தங்கள் உயிரையும் துச்சமாக கருதி, பொதுமக்களை மீட்கும், ராணுவ வீரர்களின் பணி மெச்சத் தகுந்தது என, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

சம்பளத்தை பிடிக்கிறார் சோனியா:

காங்கிரஸ் தலைவர் சோனியா, தன் கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை, உத்தரகண்ட் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சியின் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 10 லட்சம் ரூபாயை உத்தரகண்ட் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான, சில நிமிடங்களிலேயே, பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர், ராஜிவ் சுக்லா, இரண்டு மாத சம்பள பணத்தை வழங்குவதாக அறிவித்து, கட்சி மேலிடம் மீதான விசுவாசத்தைக் காட்டினார். "ஐ.பி.எல்., கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த அவர், இரண்டு மாதமென்ன, இரண்டு ஆண்டு சம்பள தொகையையும் நன்கொடையாக கொடுக்கலாம்' என, டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர் கிண்டலாக கூறினார்.

உ.பி.,யில் நிலைமை மோசம்:

உத்தர பிரதேசத்திலும், மழையின் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்கை, ஷாரதா நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக, அபாய மட்டத்தில் யமுனை நதியில் வெள்ளம் பாய்வதால், கைரானா மாவட்டத்தில் உள்ள முக்கிய பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், உ.பி., - அரியானா சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின், 13 மாவட்டங்கள், வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின், "சிக்கன' முதல்வர், அகிலேஷ், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இது, "பெருங்கடலில் பெருங்காயம் கரைத்தது போலத் தான்' என, பாதிக்கப்பட்ட மக்கள் கிண்டல் செய்கின்றனர்.

முதல்வர்கள் தாராளம்:

உத்தரகண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள, கங்கை நதி பாயும் மாநிலங்களில், இந்துக்களின் புனித தலங்கள் பல அமைந்துள்ளதால், அந்த இடங்களுக்கு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சென்றுள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால், அனைத்து மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும், பல மாநில முதல்வர்கள் முன்வந்துள்ளனர். வட மாநிலங்களின் முதல்வர்கள் பலர், 1 கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை நிவாரண நிதி வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் நேற்று, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லாவும் சேர்ந்தார்.

அரசியல் செய்கிறார் அசோக்:

காங்கிரஸ் ஆளும், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்திற்கு, இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், உத்தரகண்ட் சென்று, பாதிக்கப்பட்டுள்ள, அம்மாநில மக்களை மீட்க, முதல்வர் அசோக் கெலாட் நேற்று அங்கு சென்றார். நெருக்கமான அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களின் உதவியாளர்களுடன், முதல்வர் அசோக் கெலாட் உத்தரகண்ட் சென்றுள் ளார். "இதெல்லாம் அரசியல் ஸ்டன்ட்' என, பலரும் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே அங்கு நிலைமை மோசமாக உள்ள நிலையில், இத்தகைய பயணம் தேவையில்லாதது என, கூறினர்.

அடிதடி சண்டை:

தண்ணீரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து போடப்படும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்து கொள்வதில், பல இடங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டது. பொருட்கள் கிடைக்காத பலர், அரசு அதிகாரிகளையும், ராணுவத்தினரையும் குற்றம்சாட்டினர். ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகி, பரிதவித்து வரும் பயணிகளிடம், சில இடங்களில் கொள்ளையும், கொள்ளை முயற்சியும் நடந்ததாக கூறப்படுகிறது.

பெண்கள் பலாத்காரம்:

உத்தரகண்ட்டில், சிக்கித் தவிக்கும் பெண்களிடமிருந்து, நேபாளத்தை சேர்ந்த கொள்ளையர்கள், நகைகளை பறித்து சென்றுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சிலர், வனப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இரு தினங்களுக்கும் மேலாக உணவின்றி தவித்தவர்கள், சோர்வடைந்திருந்தனர். அப்போது, மலைப்பகுதியில், பதுங்கியிருந்த மர்ம கும்பல், ஆயுதங்களுடன் அங்கு வந்து, பெண்களை மிரட்டி, அவர்களின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களில் சிலர், பெண்களை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.

சிறப்பு அதிகாரி நியமனம்:

உத்தரகண்ட்டில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செல்ல, மத்திய அரசின் சிறப்பு அதிகாரியாக, உள்துறை முன்னாள் செயலர், வி.கே.துகால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டருக்கு மாரடைப்பு:

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் டவுடியால், கேதார்நாத், ருத்ரபிரயாகை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்றார். அங்குள்ள நிலைமையை நேரில் கண்ட அவருக்கு, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக பக்தர்கள் பலி:

புனித யாத்திரையாக, ஹரித்துவார் சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த, 37 பேர், மழை வெள்ளத்தில் சிக்கினர். இவர் களில், 2 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தினமலர்



உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2013 10:20 am

பேரிடர் மேலாண்மை என்ற குப்பை அமைப்பை வைத்து கொண்டு அதிக மக்களை பலி குடுத்து விட்டது இந்த காங்கிரஸ் அரசு ...சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக