புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
2 Posts - 6%
heezulia
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 22, 2013 9:46 am

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில், பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பில், 207 பேர் தான் இறந்துள்ளனர் என, கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், பலி எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டும் என, தெரிவிக்கிறது; 60 ஆயிரம் பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.

40 ஹெலிகாப்டர்கள்:

பேய் மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, கடும் குளிர் போன்றவற்றால், உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் மற்றும் பல பகுதிகளில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை, 22 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல், 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ராணுவத்தின், 8,000 வீரர்கள், இந்தோ - திபெத் எல்லை போலீசின், 2,000 வீரர்கள், எல்லை சாலைகள் அமைப்பின், 3,000 பணியாளர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், சில இடங்களில், தற்காலிக இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்படுகின்றனர். ஓட்டல்கள், தங்குமிடங்கள் தகர்ந்து விட்டதால், காடுகளிலும், உயர்ந்த இடங்களிலும் தஞ்சம் அடைந்தவர்கள், ஹெலிகாப்டரில், நூல் ஏணி மூலம் மீட்கப்படுகின்றனர்.

33 ஆயிரம் பேர் மீட்பு:

கேதார்நாத்தில் மீட்புப் பணி துவங்கி, மூன்று நாட்கள் ஆன நிலையில், நேற்று தான், அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மதிய நிலவரப்படி, கேதார்நாத், ஹரித்துவார் பகுதிகளில், 33 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும், 60 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரித்துவாரில் நேற்று, 40 உடல்கள் கண்டெடுக்கப் பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை, 207 என, அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான உத்தரகண்ட் மாநில அரசின், விவசாய அமைச்சர், ராகேஷ் சர்மா, ""கேதார்நாத் பகுதியில் இரண்டு நாட்களாக தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்; பலி எண்ணிக்கை, அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என, கருதுகிறேன். இரண்டு நாள் மழையில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய, குறைந்தபட்சம், ஐந்தாண்டு களாகவது ஆகும்,'' என்றார். கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபடச் சென்றிருந்த பக்தர்கள் தான், அதிக அளவில் இறந்துள்ளனர். கோவில் வாசலில், நேற்று காலை, சடலக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுருட்டிய பந்து போல, நான்கைந்து பேர் இறந்து கிடந்ததை, பத்திரிகையாளர்கள் பார்த்தனர். தரை மட்டத்திலிருந்து, 15 அடி உயரத்திலிருந்த கோவில், இப்போது, சமதளமாகியுள்ளது. சுற்றிலும் ஆள் உயர பாறைகளும், கற்குவியல்களும், அந்த புனிதமான இடத்தை, கல்குவாரி போல் மாற்றியுள்ளன.

தகவல் தொடர்பு இல்லை:

கேதார்நாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்னமும் நிலைமை மோசமாகவே உள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு அறவே இல்லை. ஹெலிகாப்டர்கள் மட்டும் தான், ஒரே வாகன போக்குவரத்தாக மாறிப் போயுள்ளன. இன்று முதல், பத்ரிநாத் பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி, பத்ரிநாத் பகுதியில், 9,000 பேர் சிக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சலிலும் பாதிப்பு:

அது போல், உத்தரகண்டின் அண்டை மாநிலமான, பனி சூழ்ந்த, இமாச்சலிலும் மழை, நிலச்சரிவு பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு பக்தர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மாறாக, உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை, 600 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், சில ஆயிரம் பேர், நான்கைந்து நாட்களாக நடுங்கும் குளிரில், உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்து, வெறும் அனுதாபம் மட்டுமே தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை விட, ராணுவ வீரர்கள் தான் உண்மையான, "ஹீரோ'க்கள் என, மீட்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். ஏனெனில், மாநில நிர்வாகமே அணுக முடியாத சூழ்நிலையில், தங்கள் உயிரையும் துச்சமாக கருதி, பொதுமக்களை மீட்கும், ராணுவ வீரர்களின் பணி மெச்சத் தகுந்தது என, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

சம்பளத்தை பிடிக்கிறார் சோனியா:

காங்கிரஸ் தலைவர் சோனியா, தன் கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை, உத்தரகண்ட் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சியின் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 10 லட்சம் ரூபாயை உத்தரகண்ட் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான, சில நிமிடங்களிலேயே, பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர், ராஜிவ் சுக்லா, இரண்டு மாத சம்பள பணத்தை வழங்குவதாக அறிவித்து, கட்சி மேலிடம் மீதான விசுவாசத்தைக் காட்டினார். "ஐ.பி.எல்., கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த அவர், இரண்டு மாதமென்ன, இரண்டு ஆண்டு சம்பள தொகையையும் நன்கொடையாக கொடுக்கலாம்' என, டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர் கிண்டலாக கூறினார்.

உ.பி.,யில் நிலைமை மோசம்:

உத்தர பிரதேசத்திலும், மழையின் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்கை, ஷாரதா நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக, அபாய மட்டத்தில் யமுனை நதியில் வெள்ளம் பாய்வதால், கைரானா மாவட்டத்தில் உள்ள முக்கிய பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், உ.பி., - அரியானா சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின், 13 மாவட்டங்கள், வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின், "சிக்கன' முதல்வர், அகிலேஷ், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இது, "பெருங்கடலில் பெருங்காயம் கரைத்தது போலத் தான்' என, பாதிக்கப்பட்ட மக்கள் கிண்டல் செய்கின்றனர்.

முதல்வர்கள் தாராளம்:

உத்தரகண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள, கங்கை நதி பாயும் மாநிலங்களில், இந்துக்களின் புனித தலங்கள் பல அமைந்துள்ளதால், அந்த இடங்களுக்கு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சென்றுள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால், அனைத்து மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும், பல மாநில முதல்வர்கள் முன்வந்துள்ளனர். வட மாநிலங்களின் முதல்வர்கள் பலர், 1 கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை நிவாரண நிதி வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் நேற்று, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லாவும் சேர்ந்தார்.

அரசியல் செய்கிறார் அசோக்:

காங்கிரஸ் ஆளும், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்திற்கு, இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், உத்தரகண்ட் சென்று, பாதிக்கப்பட்டுள்ள, அம்மாநில மக்களை மீட்க, முதல்வர் அசோக் கெலாட் நேற்று அங்கு சென்றார். நெருக்கமான அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களின் உதவியாளர்களுடன், முதல்வர் அசோக் கெலாட் உத்தரகண்ட் சென்றுள் ளார். "இதெல்லாம் அரசியல் ஸ்டன்ட்' என, பலரும் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே அங்கு நிலைமை மோசமாக உள்ள நிலையில், இத்தகைய பயணம் தேவையில்லாதது என, கூறினர்.

அடிதடி சண்டை:

தண்ணீரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து போடப்படும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்து கொள்வதில், பல இடங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டது. பொருட்கள் கிடைக்காத பலர், அரசு அதிகாரிகளையும், ராணுவத்தினரையும் குற்றம்சாட்டினர். ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகி, பரிதவித்து வரும் பயணிகளிடம், சில இடங்களில் கொள்ளையும், கொள்ளை முயற்சியும் நடந்ததாக கூறப்படுகிறது.

பெண்கள் பலாத்காரம்:

உத்தரகண்ட்டில், சிக்கித் தவிக்கும் பெண்களிடமிருந்து, நேபாளத்தை சேர்ந்த கொள்ளையர்கள், நகைகளை பறித்து சென்றுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சிலர், வனப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இரு தினங்களுக்கும் மேலாக உணவின்றி தவித்தவர்கள், சோர்வடைந்திருந்தனர். அப்போது, மலைப்பகுதியில், பதுங்கியிருந்த மர்ம கும்பல், ஆயுதங்களுடன் அங்கு வந்து, பெண்களை மிரட்டி, அவர்களின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களில் சிலர், பெண்களை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.

சிறப்பு அதிகாரி நியமனம்:

உத்தரகண்ட்டில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செல்ல, மத்திய அரசின் சிறப்பு அதிகாரியாக, உள்துறை முன்னாள் செயலர், வி.கே.துகால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டருக்கு மாரடைப்பு:

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் டவுடியால், கேதார்நாத், ருத்ரபிரயாகை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்றார். அங்குள்ள நிலைமையை நேரில் கண்ட அவருக்கு, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக பக்தர்கள் பலி:

புனித யாத்திரையாக, ஹரித்துவார் சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த, 37 பேர், மழை வெள்ளத்தில் சிக்கினர். இவர் களில், 2 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தினமலர்



உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2013 10:20 am

பேரிடர் மேலாண்மை என்ற குப்பை அமைப்பை வைத்து கொண்டு அதிக மக்களை பலி குடுத்து விட்டது இந்த காங்கிரஸ் அரசு ...சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக