ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

3 posters

Go down

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Empty சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 9:07 pm

1. ஜாடிக்கேத்த மூடி.

ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

2. ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது. கஞ்சியோ கூழோ எது கிடைத்தாலும் அதை மன நிறைவுடன் சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது இந்த பழமொழியைக் கூறிக்கொண்டே திருப்தியாக சாப்பிடுவார்கள்.

3. சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை.

கண்டிப்பாக நமக்கு வாழ்கையில் துணை என்றால் அது நாம் செய்யும் தொழில் அல்லது வேலைதான். அதில் சோம்பேறித்தனமா இருந்தால் வாழ்வே நமக்கு சோதனைதான்.

4. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

ஒரு பொருளின் அருமை, அது நமக்கு கிடைக்காமல் ஏங்கும்போதுதான் தெரியும்.

5. நொய் அரிசி கொதிக்குத் தாங்காது.

இளகிய மனம் கொண்டவர்களை லேசாக திட்டினால் கூட அழுதுவிடுவார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது.

6. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஒரு சிறு கதை:

எங்கள் ஊரில் ஒருவனுக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு தன் கணவன் இன்னொரு பெண்ணை வைத்திருப்பது தெரியவர வீட்டில் தினமும் சண்டைதான். இரண்டாவது மனைவியை விட முதல் மனைவிதான் மிகவும் அழகு மற்றும் நல்லவள். ஆனால் அடிக்கடி சண்டை நடப்பதால் கோபத்தில் முதல் மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்றுவிட்டான்.

இதனை தன் பெற்றோர்களிடம் கூறினான். அவர்கள் இவ்வாறாக கூறினர்.

“ஒன்னு, நீ இந்த ஊர விட்டுட்டு கண் காணாத இடத்திற்கு ஓடிடு. இல்லை அவள மாதிரியே நீயும் செத்திடு. இல்லன்னா போலீஸ் எங்கள நிம்மதியா வாழவிடாது”

இதனைக் கேட்டதும் தன் பெற்றோர்களின் மீது ஆத்திரம் கொண்டு வாழ பிடிக்காமல் விஷம் சாப்பிட்டு இறந்தான். அவனது இரண்டாவது மனைவி இப்போது தனியாக தவிக்கிறாள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை இவன் விஷயத்தில் நன்கு உணரலாம்.

7. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்

பொய் மட்டும் அல்ல. ஒரு கெட்ட செயலை செய்ய ஆரம்பித்தால் மேலும் பல கெட்ட செயல்களை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

8. ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை

எப்போதாவது அபூர்வமாக செய்வதை இப்படிக் குறிப்பிடலாம். உதாரணம்: “இவன் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருகிறான்.”

9. பிஞ்சு வத்தினா புளி ஆகாது

புளியங்காய் பழுத்து அதனை காயவைத்து கொட்டை எடுத்தால்தான் அது புளி. பிஞ்சை பறித்து அதிலிருந்து புளி எடுக்க முடியாது. அதுபோல, பிள்ளைகளை புளியாக மாற்றவேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களை பிஞ்சிலே வத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

10.தடிக்கும் நோகாம பாம்புக்கும் வலிக்காம

அதாவது யாராவது நமக்கு பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என்றால், நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவருக்கும் மனம் வலிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவேண்டும்.

11.பாம்புன்னும் மிதிக்க முடியாம பழுதுன்னும் தாண்ட முடியாம

ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றே தெரியாது. அவர்களை ஒரு பிரச்சினையில் எப்படி அனுகுவது மற்றும் கையாள்வது என்று தெரியாது. அந்த சமயத்தில் இந்த பழமொழி அவர்களைக் குறிக்கும். அதாவது அவர்களை பாம்பு என நினைத்து மிதித்து கொல்லவும் முடியாது. பழுதென்று நினைத்து தாண்டவும் முடியாது.

12.பட்டாதான் தெரியும் பல்லிக்கு சுட்டாதான் தெரியும் நண்டுக்கு.

பல்லி நம் மேல் வந்து விழுவது, சாப்பாட்டில் விழுவது போன்ற பல ஐசாட்டியங்களைச் செய்யும். அது தவறு என்று அதனால் உணர முடியாது. நாம் அதனை அடிக்கும்போதுதான் உணரும். நண்டை நாம் சுட்டுத் திங்கும்போதுதான் அது புரிந்துகொள்ளும் வலையை விட்டு வெளியே வருவதால் வரும் ஆபத்தை.

அதுபோல, ஒருசிலருக்கு அவர்களது தவறை உணரமுடியாத அளவுக்கு மூளை மழுங்கியிருக்கும். அவர்கள் தவற்றின் விளைவுகளை அனுபவித்தால்தான் திருந்துவார்கள்.

13.உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யாதே.

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பார்கள். அதுபோல நமக்கு ஆபத்தில் உதவியவர்கள் மற்றும் பசிக்கு சோறு போட்டவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.

14.வாழப் பழத்தில் ஊசி ஏத்துவது போல்

சிலர் பேசுவது நம்மை திட்டுவது போல் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாக பேசுவதுபோல்தான் தெரியும். நமக்குதான் தெரியும் அவர்கள் பேசுவதில் எவ்வளவு சூழ்ச்சிமம் இருக்கிறது என்று. ஏன் என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்கவும் முடியாது. ஏனென்றால் அவர்கள் பேசுவது மறைமுகமாக இருக்கும். இப்படியாக எப்போது பார்த்தாலும் சாதாரணமாக பேசுவதுபோல் பேசி நம்மை அசிங்கப்படுத்துபவர்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசுகிறார்கள் என்போம்.

15.கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.

பிரச்சினைகளுக்கான சூழ்நிலையை (கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்கங்கள்) சுமந்து கொண்டிருந்தால், நம்மைத்தேடி பிரச்சினைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை தூக்கிபோடுங்கள். ஒரு பிரச்சினையும் நம்மை அணுகாது.

நன்றி தமிழ்ப்ரியன்.காம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Empty Re: சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

Post by யினியவன் Fri Jun 21, 2013 10:53 pm

பழமொழிகளின் விளக்கப் பகிர்வு நன்று ராஜூ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Empty Re: சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 7:06 pm

இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் பழமொழிகளின் விளக்கம் அருமையிருக்குஅருமையிருக்குஅருமையிருக்கு

இதை தெரியாமலே நான் எத்துணை முறை இந்த பழமொழிகளை உபயோகித்து இருக்கிறேன்
இப்போ தெரிந்து விட்டது மிக்க மகிழ்ச்சி



சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Mசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Uசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Tசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Hசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Uசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Mசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Oசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Hசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Aசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Mசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Eசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்  Empty Re: சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum