Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
3 posters
Page 1 of 1
வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது, வெயிலின் பாதிப்பும் குறைந்துவிட்டது. மழை பெய்யாதா, குளிர்ந்த சூழல் வராதா என்றே ஏங்குகிறோம்.
ஆம்...இப்போதெல்லாம் நாம் அனைவருமே ஏப்ரல், மே வந்துவிட்டாலே மனதளவில் வெயிலை நினைத்து அஞ்சத் தொடங்கிவிடுகிறோம். வெயில் என்றாலே அதை எதிரிப்படையை விட கொடுமையானதாகவே நினைக்கிறோம்.
சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்து உழைப்போர் இன்றைக்கும் நம்மில் இருக்கிறார்களே! அவர்கள் வெயிலை என்றைக்குமே வெறுத்ததில்லை. வெயில் வெறுக்கத்தக்கதும் அல்ல.
வெயில் இல்லாவிடில் உலகில் உயிர்களே இல்லை என்பதுதான் உண்மை!
வெயிலில்தானே நமது தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை (ஸ்டார்ச்), இலைகள் மூலம் உற்பத்திசெய்கின்றன. அந்தத் தாவரங்கள் மூலம் கிடைக்கும் காய்கறிகளைத்தானே நாமும் உணவாக உட்கொள்கிறோம். வெப்பச் சலனம் ஏற்பட்டால்தானே அது மழை பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்?
அனைத்துக்கும் ஆதாரமானது வெயில் என்பதை உணர்த்துவதற்காக ஹிந்து மதத்தில், "சூரிய நமஸ்காரம்' என்ற பெயரில் கதிரவனை தினமும் காலையில் வணங்கச் சொல்லப்பட்டுள்ளது. இது அறிவியல் பூர்வ உண்மை என்பதை இப்போது அனைத்து மருத்துவர்களும் கூறிவருகிறார்கள். ஐரோப்பியர் வருகைக்கு முன்பெல்லாம் வெயிலைப் பற்றிய அச்சம் நம்மிடம் இருந்ததே இல்லை. கொடைக்கானல் வெப்பத்தையும், கோடை வெயிலையும் சரிசமமாகவே பாவித்து வந்துள்ளோம்.
50 ஆண்டுக்கு முன்பெல்லாம் நம்மவர்கள் குளிர்சாதன வசதியை நினைத்துப் பார்த்ததுண்டா? வீட்டுக்குள் குளிர்சாதனப் பெட்டிகள் இருந்தது உண்டா? பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகூட அவசியப்படவில்லை. ஆக, இயற்கை நமது உடலை சூழலுக்கு ஏற்பவே படைத்திருக்கிறது. நமது நாடு வெப்பமண்டலத்தில் இருப்பதால் நமது உடலும் வெப்பத்தைத் தாங்கும் வகையிலே இருந்தது.
ஆனால், நாம் நமது வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டோம். வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மரங்களது எண்ணிக்கையைக் குறைத்துவிட்டோம். மனிதத் தலைகளை விட மரங்களின் கிளைகள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டோம். விளைவு நம்மால் இயற்கை வெப்பத்தைக் கூட ஏற்கமுடியாத உடல் அமைப்பினராகிவிட்டோம்.
தென்னை ஓலை, மஞ்சம் புல் ஆகியவற்றிலான கூரை வீடுகளையும் மங்களூர் ஓடு, நாட்டு (சொருகு) ஓடுகளால் கூரை வேய்ந்த மண் சுவரால் ஆன வீடுகளையும் விட்டுவிட்டு சிமென்டை இழைத்துப் பூசிய, டைல்ஸ் பதிக்கப்பட்ட "கொதி அடுப்பு - புறாக் கூண்டு' வீடுகளைக் கட்டிக்கொண்டுவிட்டோம். வாணலியில் வறுபடும் சுண்டெலிகளாக வெந்துபோகிறோம்.
வெப்பம் என்பது வெறும் சுற்றுச்சூழல் மட்டுமல்ல. அது நமது உடலுக்குத் தேவைப்படும் இயற்கை சக்தி. ஆம்... சூரிய வெயில் மூலம் நமது உடல் நமக்குத் தேவையான வைட்டமின் "டி'யை உற்பத்திசெய்கிறது. தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பில் வெயில்பட்டால் அது வேதிவினையில், வைட்டமின் "டி' ஆகிறது. அதன் மூலம் நமக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது.
உடல் என்பதே பல்வேறு தாதுப் பொருள்களால் ஆனதே! அதன்படி ஒவ்வொரு தாதுவும் அந்தந்த அளவுக்கு இருக்கவேண்டியது அவசியம். இதில் ஏதாவது ஒரு தாது, அளவு குறைந்தாலும் அதற்கேற்ப உடல்நலம் கெடும். தாதுக்களைச் சீர்படுத்தும் வகையிலேயே சிகிச்சை முறையும் உள்ளது. ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை வைட்டமின் "டி'யே நிர்ணயிக்கிறது. கால்சியம் அளவு சரியாக இருந்தாலே நமது எலும்பு உறுதியாக இருக்கும். கால்சியம் குறைவால் எலும்பு வலு குறைந்து குழந்தைகளுக்கு "ரிக்கெட்ஸ்' எனும் பாதிப்பும், முதியோருக்கு மூட்டு வலி உள்ளிட்டவையும் ஏற்படும்.
கால்சியம் குறைந்தால் தசை இறுக்கம் மற்றும் நரம்பு வலுவிழத்தல் பாதிப்பு ஏற்படும் என்பதும் மருத்துவர்களது கருத்து.
ஆக வெப்பத்தை நாம் வெறுத்து நிழலில் மட்டுமே வாழ்ந்தால் பல்வேறு உடல் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
முன்பெல்லாம் பள்ளிக்கும், பணிக்கும் நடந்துசெல்லும் வாய்ப்பு இருந்தது. இதனால் நமது உடல் மீது சூரிய ஒளிபட்டது. ஆனால், இப்போதெல்லாம் உடலில் சூரியன் நேரடியாகப் படுவதே அரிதாகிவிட்டது.
சமீபகாலமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை சுமார் 75 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் "டி' குறைபாடால் ஏற்படும் பாதிப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முன்பெல்லாம் அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு வரும் மூட்டுவலி தற்போது 45 வயதினருக்கே வந்துவிடுகிறது! "வெயிலின் அருமை நிழலில் தெரியும்' என்பது பழமொழி. "வெயிலின் அருமை வியாதியில் தெரியும்' என்பது புதுமொழி!
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
நல்ல பகிர்வு சிவா.
இதெல்லாம் தெரிஞ்சுதான் நாங்க படிக்கும்போதே கிளாசுக்கு வெளில வெயிலில் நிப்போம்.
இதெல்லாம் தெரிஞ்சுதான் நாங்க படிக்கும்போதே கிளாசுக்கு வெளில வெயிலில் நிப்போம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
தெரியாத தகவல் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி அண்ணா
புது மொழி உண்மை தான் நாமும் உணற தான் செய்கிறோம்
புது மொழி உண்மை தான் நாமும் உணற தான் செய்கிறோம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» ....தொலைத்தவருக்குத்தான் தெரியும் அருமை..!!
» வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?
» இரவின் அருமை உறக்கத்துக்கு புரியும் ,விழிகளுக்கு தெரியும் .
» இந்த நடணத்தைப் பாருங்கள் அருமை அருமை
» அருமை அருமை மிகவும் அருமை .....
» வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?
» இரவின் அருமை உறக்கத்துக்கு புரியும் ,விழிகளுக்கு தெரியும் .
» இந்த நடணத்தைப் பாருங்கள் அருமை அருமை
» அருமை அருமை மிகவும் அருமை .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|