புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
21 Posts - 4%
prajai
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_m10அவசரப்படுகிறார் அத்வானி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரப்படுகிறார் அத்வானி!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 7:58 am

அவசரப்படுகிறார் அத்வானி! Eo88

கோவாவில் கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரம் இந்த அளவுக்கு சர்ச்சையை எழுப்புகிறது என்பதே, நரேந்திர மோடி இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள், கோவாவில் அன்று கூடிய செயற்குழுவில் வற்புறுத்தியபோது, நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருந்தவர் அத்வானி. இன்றைய நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவரும், அவரை குஜராத் முதல்வராக்கியதிலிருந்து கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கக் காரணமாக இருந்தவரும் அத்வானிதான். இப்போது, அதே அத்வானி நரேந்திர மோடி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாததுதான் வியப்பாக இருக்கிறது.

2004, 2009 இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அத்வானியை முன்னிறுத்திப் பிரசாரம் செய்தும், பாரதிய ஜனதாவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது ஊரறிந்த உண்மை. 85 வயதான அத்வானியால், பழைய உற்சாகத்துடன் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தலைமை தாங்கி நடத்த முடியாது என்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டிய உண்மை. இந்த நிலையில் பிரசாரக் குழுத் தலைமைப் பொறுப்பை அத்வானியே நரேந்திர மோடிக்கு அளித்திருந்தால், அவருக்கும் மரியாதையாக இருந்திருக்கும், கட்சியின் மானமும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

நரேந்திர மோடியை சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நரேந்திர மோடி ஒரு மத வெறியர் போன்ற கருத்துகளும், குற்றச்சாட்டுகளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு வெளியே உள்ளவர்களும், அதன் எதிர்ப்பாளர்களும் எழுப்பும் பிரச்னைகள். குஜராத் கலவரத்துடன் மோடி தொடர்புபடுத்தப்படுவது போலவே, அயோத்தி பாபர் மசூதி இடிப்புடன் தொடர்புபடுத்தப்படுபவர் அத்வானி. இந்த இருவருக்கும் இடையில் சிறுபான்மையினர் பெரிய வித்தியாசம் காணப் போவதில்லை.

நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதால், சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரஸýக்குச் சாதகமாகத் திரும்பக்கூடும் என்று வேண்டுமானால் கருத இடமிருக்கிறதே தவிர பாரதிய ஜனதாக் கட்சிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்கிற வாதத்தில் அர்த்தமில்லை. மோடி முன்னிறுத்தப்பட்டாலும், படாவிட்டாலும் சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்காது என்பதில் சந்தேகம் வேண்டாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு முறைகேடுகளையும், ஊழல்களையும் மறைப்பதற்கு, "நரேந்திர மோடி' என்று பூச்சாண்டி காட்டி தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் திசைதிருப்பக்கூடும். நரேந்திர மோடியால் காங்கிரஸýக்குக் கிடைக்கப் போகும் பயன் அதுவாக மட்டுமேதான் இருக்கும்.

கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏறத்தாழ 170 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தனியாகப் போட்டியிடும் பலமோ, கூட்டணி வாய்ப்போ இல்லாத நிலையில் நரேந்திர மோடி பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதில் என்ன லாபம் ஏற்பட்டுவிட முடியும் என்று கேட்கலாம். ஏனைய 370 தொகுதிகளில், குறைந்தது 250 தொகுதிகளில் நரேந்திர மோடியின் தாக்கம் பாரதிய ஜனதாவின் பலத்தைக் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் பரவலாக பாஜகவின் பலத்தை நரேந்திர மோடியின் பிரசாரம் வலுவடையச் செய்யும்.

35 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்கள் இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதியினர் இருக்கிறார்கள். இவர்கள் ஊழல், முறைகேடுகள், காங்கிரஸின் வம்சாவளி அரசியல், துணிவான முடிவெடுக்காத தலைமை ஆகியவற்றால் சலிப்படைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நரேந்திர மோடி புதியதொரு நம்பிக்கையாகத் தெரிகிறார். அவர்களது நம்பிக்கையை எந்த அளவுக்கு நரேந்திர மோடியால் பூர்த்தி செய்ய முடியும் என்பது வேறு கேள்வி. ஆனால், அப்படி ஒரு நம்பிக்கையை ராகுல் காந்தியோ, வேறு யாராவதோ தராத நிலையில் மோடி நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார். அதை பாஜக பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது.

நரேந்திர மோடி கிராமப்புறங்களைச் சென்றடையவில்லை. நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில்தான் அவரது செல்வாக்கு. 2009 தேர்தலில் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க நகர்ப்புற வாக்குகள்தான் காரணமாக இருந்தன. காங்கிரஸ் கடந்த முறை பெற்ற வெற்றியை இந்த முறை நரேந்திர மோடி மூலம் அடையத் திட்டமிடுகிறது பாஜக, அவ்வளவே!

நரேந்திர மோடியின் எழுச்சிக்கும், 1969-இல் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று தன்னைப் பிரதமராக்கிய காமராஜ் உள்ளிட்ட தலைவர்களை ஓரங்கட்டி புதிய எழுச்சியைக் காங்கிரஸில் ஏற்படுத்தினார் இந்திரா காந்தி. இந்திரா காந்தியின் எழுச்சியால் இந்தியாவுக்கு நன்மை ஏற்பட்டதா இல்லையா என்பதைப்போல, நரேந்திர மோடியின் எழுச்சியால் பாஜகவும் இந்தியாவும் நன்மையடையுமா என்பது விவாதப் பொருளாகத்தான் இருக்கும். வருங்காலம்தான் விடையளிக்க வேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்தன. இப்போது அகாலி தளம், சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய மூன்றே மூன்று கட்சிகள்தான் உறுப்பினர்களாக உள்ளன. ஒருவேளை பாஜக அடுத்த மக்களவைத் தேர்தலில் அதிகபட்சம் 200 இடங்களை அல்லது குறைந்தபட்சம் 140 இடங்களைப் பிடிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். 270 இடங்களுடன் பெரும்பான்மை பலம் கிடைக்க, நரேந்திர மோடி உதவமாட்டார். அவரை பெரும்பாலான கட்சிகள் பிரதமராக ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அத்வானி உதவக்கூடும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், நரேந்திர மோடியேகூட அத்வானியை வழிமொழிவார் என்று நம்பலாம்.

அவசரப்பட்டுவிட்டாரே அத்வானி!


-ஆசிரியர்
நன்றி தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 16, 2013 5:34 pm

பாராளுமன்றம் கிண்டி ரேஸ் கோர்ஸ் மாதிரிதான் ஆகும்ன்னு தோணுது!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 16, 2013 11:13 pm

யார் வந்தாலும் மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை




அவசரப்படுகிறார் அத்வானி! Mஅவசரப்படுகிறார் அத்வானி! Uஅவசரப்படுகிறார் அத்வானி! Tஅவசரப்படுகிறார் அத்வானி! Hஅவசரப்படுகிறார் அத்வானி! Uஅவசரப்படுகிறார் அத்வானி! Mஅவசரப்படுகிறார் அத்வானி! Oஅவசரப்படுகிறார் அத்வானி! Hஅவசரப்படுகிறார் அத்வானி! Aஅவசரப்படுகிறார் அத்வானி! Mஅவசரப்படுகிறார் அத்வானி! Eஅவசரப்படுகிறார் அத்வானி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக