ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வித்துறை செய்திகள்

Go down

கல்வித்துறை செய்திகள் Empty கல்வித்துறை செய்திகள்

Post by JOHN888 Sat Jun 15, 2013 7:23 am

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே, இதன் நோக்கம். அதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்குத் தேவையான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் படிப்பு, தொழில் கல்வி, மாற்றுத்திறனாளிகள் கல்விக்கு முக்கியத்துவம், மாணவியர் விடுதிகள் அமைப்பது என, நான்கு திட்டங்களை அமல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.இதற்கான ஒப்புதல், ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு, பாட ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கு பின், பயிற்சி வழங்கினால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தாண்டு பயிற்சியை, ஜூலையில் துவங்கி, ஆகஸ்டில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/03/2013

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

கல்வித்துறை செய்திகள் Empty கல்வித்துறை செய்திகள்

Post by JOHN888 Sat Jun 15, 2013 7:24 am

ஆசிரியர் நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் நெல்லையில்கிருஷ்ணசாமி பேட்டி.

புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான 76 சமுதாய மக்களே தாழ்த்தப்பட்ட பிரிவைசார்ந்தவர்கள் ஆவர். எஸ்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் குறிக்காது. 76 ஜாதிகளின் உட்பிரிவைஇந்திய அரசு  சமூக நீதித்துறை என்ற ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் கண்காணித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 76 ஜாதிகளின் உட்பிரிவுகளை கண்காணிக்கும் துறையை  ஆதிதிராவிடர்நலத்துறை  என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். பல ஜாதிகள் அடங்கிய எஸ்.சி. பிரிவுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் நலத்துறை இருப்பது கூடாது.எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு 18% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு என்பது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதில் தொடர்ந்து இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

http://tjtnptf.blogspot.in/
JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/03/2013

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

கல்வித்துறை செய்திகள் Empty கல்வித்துறை செய்திகள்

Post by JOHN888 Sat Jun 15, 2013 7:25 am

ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி தேர்வு வாரிய தலைவரை நீக்கம் செய்ய கோரிக்கை.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர்தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக்குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது: கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது.இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.ஆசிரியர் பணி நியமனம் செய்யும்போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ்வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவை குறிப்பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையானஅறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது.என்சிடிஇநெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை. இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின்அனைத்து இடங்களையும் முற்பட்ட சாதியினருக்கு தாரை வார்த்துள்ளார்.எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள்ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.அவர் மீது விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்து விட்டு இட ஒதுக்கீடு படி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இதை அரசு செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
http://tjtnptf.blogspot.in/

JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/03/2013

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

கல்வித்துறை செய்திகள் Empty கல்வித்துறை செய்திகள்

Post by JOHN888 Sat Jun 15, 2013 7:26 am

257 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவக்கம்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மொத்தம் 257 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1200 அரசு துவக்க,நடுநிலைப் பள்ளிகளில், திருப்பூர் வடக்கு 27, திருப்பூர் தெற்கு 12, அவிநாசி 18, ஊத்துக்குளி 10, உடுமலை 9, வெள்ளக்கோவில் 6, தாராபுரம் 5, காங்கேயம் 4, பொங்கலூர் 3என மொத்தம் 94 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 35 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 17 பள்ளிகளில் துவங்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை வருவாய் மாவட்டத்தில் 128 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை நேற்று முன்தினம்(10ம் தேதி) துவங்கியது.ஆங்கில வழிக்கல்வி முறையின் கீழ் செயல்படும், உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை இன்று அறிவிக்கப்படவுள்ளது.

http://tjtnptf.blogspot.in/
JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/03/2013

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

கல்வித்துறை செய்திகள் Empty Re: கல்வித்துறை செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum