ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 25, 2024 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013

Go down

இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013 Empty இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013

Post by krishnaamma Fri Jun 14, 2013 11:34 am

இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013 2uwc

எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின் போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. உலகளவில் ரத்தத்தின் தேவை, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தேவைப்படும் ரத்தத்தை, இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை.

ரத்ததானம் செய்வதன் மூலம், ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. இன்னொருவருக்கு ரத்த தானம் செய்ய வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். ரத்ததானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் செய்வோர் தினமாகவும், அக்., 1ம் தேதி தேசிய ரத்த தான தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

யார் வழங்கலாம்:


நல்ல உடல்நிலையுடன், 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்த தானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த தானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பம். 2 நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டு விடலாம். 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் வழங்கலாம்.


பெறுவோருக்கு மட்டுமல்ல; கொடுப்பவருக்கும்:


ரத்தம் வழங்குவதால் மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச் சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள தானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும், தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளெட் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பேருக்கு எதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள், நண்பர்கள் மூலமே ரத்த தானம் செய்யப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து ரத்தானம் செய்தால் மட்டுமே, தேவையான ரத்தத்தை பெற முடியும்.


கொடுத்தாலும் குறையாத "தானம்':


அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்க முடியாத "தத்துப்பிள்ளைகளாகி' விட்டன. விபத்தில் அடிபட்டு, ரோட்டில் ரத்தம் வீணாக... ரத்தம் தந்து காப்பாற்றினால், உயிர்பிழைக்கும் மனிதஉயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம்மால் எப்போதும் செய்ய முடிகிற, கொடுத்தாலும் குறையாத தானம்... ரத்ததானம் தான். இன்று உலக ரத்ததான தினம். ரத்ததானம் செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர்கள், தங்களின் "தான' அனுபவங்களை கூறுகின்றனர்.


யார் அழைத்தாலும் வருவேன்:


சி.சாமுவேல் அன்புச்செல்வன், என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை: எனது ரத்த வகை "ஓ நெகடிவ்'. கடந்த நான்கு ஆண்டுகளில், 14 முறை ரத்ததானம் செய்துள்ளேன். இது அரிய ரத்தவகை என்பதால், அவசரத்திற்கு யார் அழைத்தாலும், ரத்த தானம் செய்வேன். எங்கள் கல்லூரியில், கடந்த ஆண்டில் நான்கு முகாம்கள் அமைத்து, மாணவர்கள் மூலம், 600 யூனிட்கள் ரத்ததானம் செய்தோம். மதுரை காமராஜ் பல்கலையின், சிறந்த திட்ட அலுவலருக்கான விருதுபெற்றேன்.


டெங்கு காய்ச்சலுக்கு அதிக ரத்ததானம்:


எஸ்.கணேஷ் முருகன், ஜீவநதி அறக்கட்டளை நிர்வாகி,மதுரை: 2001ல் நண்பர்களாக இணைந்து, ரத்ததானம் செய்ய திட்டமிட்டோம். அந்த நேரம், குஜராத் பூகம்பம் வந்தது. பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 35 யூனிட் ரத்ததானம் செய்தோம். தற்போது, ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 500 பேர் எப்போது அழைத்தாலும், உடனடியாக வந்து ரத்ததானம் செய்வர். 2012 ல், 1431 யூனிட் தானம் செய்திருக்கிறோம். கடந்த ஆண்டு, டெங்கு காய்ச்சல் பாதிப்பால், நிறைய பேருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இந்த ஆண்டு, ஜனவரி முதல் தற்போது வரை, 472 யூனிட் கொடுத்துள்ளோம். நான் "ஓ பாசிட்டிவ்' ரத்தவகை. நான் உட்பட பலரும், 40 முறைக்கு மேல் ரத்ததானம் செய்து உள்ளோம்.


வரவுக்கு மேல் செலவாகும் ரத்ததானம்:


மதுரை அரசு மருத்துவமனையில், உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி, தென்மாவட்ட நோயாளிகளும், சிகிச்சை பெறுகின்றனர். தினமும், குறைந்தது 80 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. 2012 ஜன., முதல் டிசம்பர் வரை, 21 ஆயிரத்து 620 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. ஆனால், மற்ற நோய்களோடு, டெங்கு பாதிப்பும் சேர்ந்ததால், 22 ஆயிரம் யூனிட்டிற்கு மேல், நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.


"சொகுசாக' ரத்ததானம் செய்யலாம்:


ரத்ததானம் செய்வதற்காகவே, ரூ.1.50 கோடி மதிப்பிலான "ஏசி' பஸ் தயாராக உள்ளது. ஒரே நேரத்தில், 4 பேர் ரத்ததானம் செய்யலாம். முகாம் இல்லாத நாட்களில், மதுரை சிம்மக்கல் நூலகம் முன், காலை 9.30 முதல் மதியம் ஒரு மணி வரை, பஸ் நிற்கும். 25 பேராக ரத்ததானம் தர முன்வந்தால், உங்களை தேடி வீடு, அலுவலக, கல்லூரி வாசலில் (இடவசதி இருந்தால்) வந்து நிற்கும். மற்ற நேரங்களில், மருத்துவமனை ரத்தவங்கியில், காலை 8 முதல் மதியம் ஒரு மணி வரை, ரத்ததானம் செய்யலாம். தானம் செய்து, உயிரை வாழவைக்க: 94425 34647.

nandri : dinamalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum