புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
68 Posts - 53%
heezulia
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
15 Posts - 3%
prajai
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
9 Posts - 2%
jairam
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_m10தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 5:40 am

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே


மனிதர்களாகிய நாம் நமக்குள் எத்தனை பாகுபாடு பார்க்கின்றோம். இனம், மதம், மொழி, நாடு என்று எத்தனையோ காரணிகள். அத்தனை காரணிகளையும் முழுமூச்சோடு பயன்படுத்தி வேற்றுமையை வளர்க்கின்றோம். ஆனால் தெய்வமும் அப்படி இருக்க முடியுமா? இருந்தால் அது தெய்வமாகுமா? திருக்குறள் என்ன சொல்கின்றது? "வேண்டுவார் வேண்டாதார் இலான்" என்று இறைவனைச் சொல்கின்றது. இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. வடமொழியில் "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது இறைவனின் கடமை என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்றால் பிற்காலத்தில் அருணகிரியும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார். எப்படி தெரியுமா?
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்

வண்டுகள் மொய்க்கின்ற மலர்களால் கட்டப்பட்ட பூச்சரத்தை குழலில் சூட்டிக் கொள்ளும் வள்ளி நாச்சியாரைக் களவு செய்து கலவு கொண்டவன் முருகன். தன்னை யாரேனும் தமிழால் வைதாலும் கூட அவரைக் காப்பாற்றி வாழ வைப்பான் அந்த முருகன். பாருங்களேன்! கந்தனின் கருணையை! ஆகையால் சூரனுடன் போரிட்டு தேவர்களைக் காத்து சூரனுக்கும் வாழ்வளித்தான். சூரனை சேவலும் மயிலுமாக்கி தன்னுடன் வைத்துக் கொண்டானே! அந்த சேவலையும் மயிலையும் இன்றும் நாம் வழிபடுகின்றோமே! ஆக தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு என்கிறது தமிழ். கச்சியப்பரும் கூட இதே கருத்தைக் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

ஆதாளம் என்றால் தன்னைப் பற்றியே பெருமை பேசுதல். பாருங்கள் இத்தனை சிறிய சொல்லில் எத்தனை பெரிய பொருள். ஆதாளி என்றால் தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர். ஆதாளிவாயன் என்று ஊர்ப்பக்கம் இன்னமும் சொல்வதுண்டு. ஒன்றறியேனை - நல்லவைகள் ஒன்றும் அறியாதவனை. அறத்தீதாளி - அறத்திற்கு எதிரான தீய கருத்துகளை ஆள்கின்றவர். ஆண்டது செப்புமதோ - அருள் தந்து ஆட்கொண்டதை எப்படிச் சொல்வது? இந்த வரியை இப்பொழுது படியுங்கள். ஆதாளியை ஒன்று அறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ! "முருகா! வீண்பெருமை பேசித் திரிந்து கொண்டிருந்த என்னை, நல்லவைகள் என்று ஆன்றோர் கூறுவதையெல்லாம் அறியாத என்னை, தருமத்திற்கு எதிரான தீய கருத்துகளைக் கொண்ட என்னை, நீ வலிய வந்து ஆட்கொண்டாயே! அந்தக் கருணையை என்னவென்று சொல்வது?" அருணகிரி கதறுகின்றார்..

அப்படி ஆட்கொண்டது எப்படித் தெரியுமா? அதையும் அவரே சொல்கின்றார். கூதாள மலர் என்று ஒன்று உண்டு. மிகவும் அழகான மலராக இருந்தாலும் மலருக்குரிய நறுமணமில்லாமல் திகழும். பொதுவாக மணமில்லாத மலர்களை யாரும் விரும்பிச் சூடிக் கொள்வதில்லை. ஆனால் முருகப் பெருமானுக்கு கூதாள மலரும் சூட்டப் படுகிறது. கிராதகன் என்றால் கொலைத் தொழில் புரிகின்றவர். அவர்களுக்கு வேடவர் என்றும் பெயருண்டு. ஆனால் இன்றைக்குத் தீயவர்களைக் கிராதகர் என்று கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. கிராத குலிக்கு இறைவா - வள்ளியை மணம் புரிந்து கொண்டதன் மூலம், கொலைத்தொழில் புரிவதால் இழிவானவர் என்று மற்றவர்களால் கருதப் படும் வேடர்கள் குலத்திற்கும் தலைவனாக விளக்குகின்ற வேலவா!

மணமில்லாத கூதாள மலருக்கும் மதிப்பளித்து சூடிக்கொண்டு, வள்ளியை மணந்து கொலைத் தொழில் வேடுவருக்கும் தலைவனாகி, வேதாளங்களுக்கும் பூதங்களுக்கும் கூட இறைவனாக விளங்கும் வேலவரே! வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! இந்தப் பெருமையை எப்படிச் சொல்வது!

நன்றி - கோ.இராகவன் - தமிழ் இலக்கியம் வெப்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக