புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
15 Posts - 3%
prajai
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
9 Posts - 2%
jairam
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_m10தன்மானம் (ஒரு பக்கக் கதை)  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்மானம் (ஒரு பக்கக் கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 06, 2013 11:51 am

ஊர்த் திருவிழாவிற்காக அப்பா, அம்மாவிற்கு துணிகளை வாங்கிவிட்டு, புற்றீசல் போல் கூட்ட நெருக்கமுள்ள அந்த தெருச்சாலையில் காலைப் பதித்தான் யோகன். நீண்ட நேரம் ஏசி அறையில் இருந்துவிட்டு வெளியே வந்ததால், ஞாயிற்றுக் கிழமை நான்குமணி கோடைவெயிலை அவன் உடலால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வியர்வை மொட்டுக்கள் அவன் உடலைவிட்டு வெளியேற ஆரபித்தது. நாளையே ஊருக்கு கிளம்பவேண்டும் என்ற கட்டாயத்தால் வீட்டிற்கு வாங்கிச் செல்லவேண்டிய மத்த பொருட்களை அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டிருந்தான் யோகன்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியும், அந்தத் தெருவில் சூடும், வேர்த்துக் கொட்டவைக்கும் வெட்கையும் குறைந்ததாகத் தெரியவில்லை. மதிய உணவை அவன் எடுத்துக்கொள்ள மறந்துபோனதை, அவனது விரல்களைத் தட்டிவிட்ட சிறிய கருங்கல் ஞாபகப்படுத்தியது. இரண்டு கைகளிலும் பைகளை சுமந்துகொண்டு மக்கள் நெரிசல்களுக்கிடையே சற்று தூரம் நடந்துபோனான் யோகன். தெருவின் வலதுபுறத்தில் சிவப்பு பெயர் பலகை வைக்கப்பட்ட பெரிய ஹோட்டல். உள்ளே புகுந்தவன் ஒரு பிளேட் பஜ்ஜி, ஒரு டீக்கு வாங்கிய டோக்கனை கிட்சன் டெலிவரி செய்யும் இடத்தில் நீட்டினான்.

பஜ்ஜியும், டீயும் அவனது வயிறுக்குள் போனவேகம், அவனது பசியின் ஆழத்தைக் சொல்வதாக இருந்தது. டீயைக் குடித்து முடித்தவன் இரண்டு கைகளிலும் பைகளை ஏந்திக்கொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தான். உள்ளே போகும்போது அந்த இரண்டு பெண் பிச்சைக்காரகளிடம் இருந்து தப்பியவனால் இப்போது முடியவில்லை. ஹோட்டல் படிக்கட்டுகளை விட்டு இறங்கினான். அவர்கள் இடை மறித்தார்கள். 25 முதல் 30 வயதுடைய இரண்டு பெண்களின் கைகளிலும் இரண்டு குழந்தைகள். சோகமான முகத்தை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டு கெஞ்சினார்கள். யோகன் இல்லை என்று மறுத்தான். அவர்களின் கெஞ்சல் தொடங்கியது, காலைப் பிடிக்க முர்ப்பட்டார்கள். மனதில் இறக்கமற்றவனாய் அவர்களை விரோதிகளாகப் பார்த்தான் யோகன்.

அவர்களும் கெஞ்சலை நிறுத்தவில்லை. உச்சகட்ட கோபத்தில் யோகன் அவர்களைத் திட்டினான். சுற்றி இருந்தோர் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள். பிச்சைக்காரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எதுவும் கிடைக்காது என்று தெரிந்து ஒருவழியாக யோகனைவிட்டு அடுத்த ஆளிடம் நகர்ந்தார்கள். அருகிலிருந்த கூட்டத்தைச் சுற்றி இருந்தவர்களின் ஒருவன்,

"ஒரு ரூபாய் கூட கொடுக்காத இவன் அந்தப் பிச்சைக் காரர்களைக் காட்டிலும் பெரிய பிச்சைக்காரன்" என்று தனது மனைவியிடன் சொல்லியது யோகனின் காதில் விழுந்துவிட்டது. அவள் சிரித்தாள்.

யோகன் அதைக் கண்டுகொள்ளவில்லை. கோபம் கலந்த இறுக்கமான முகத்துடன் அந்த இடத்தைவிட்டு 100 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்திருப்பான். சாலையின் இடதுபுறத்தில் போனவன், வலதுபுறத்தில் எதோ ஒன்றை கவனிக்கலானான். ஆங்காங்கே எலும்புகள் முட்டிக்கொண்டிருக்கும் ஒல்லியான உருவம், நரைமுடி, சவரம் செய்யப்படாத வெண்தாடி, தோல்கள் சுருங்கிய உடல், இவற்றோடு குத்தவைத்து அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர். சாலையைக் கடந்து அவரை நெருங்கினான் யோகன். அவருக்கு 80 வயதிற்கு குறையாமல் இருக்கும். அந்த பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் அமர்ந்திருக்கும் அவரது வலதுபுறத்தில் ஒரு கைத்தடி. இடுப்பில் இறுக்கி சொருகப்பட்ட வெள்ளை வேட்டி, பருத்தி ஆடையில் நெய்யப்பட்ட மேலாடையோடு அமர்ந்திருந்தார்.

அவர் பிச்சைக்காக கை ஏந்தியதாக யோகனுக்குத் தெரியவில்லை. அங்கு துண்டும் விரிக்கப்படவில்லை. ஆனால் அவரின் முன்புறம் ஒரு எடைபார்க்கும் வட்டவடிவ மெசின் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அதன் எடை காட்டும் கண்ணாடியில், எடை பார்க்க முடியாத அளவிற்கு கீறல்கள். மெஷினின் பெரும்பகுதி பெயிண்ட் விட்டுபோய் துருப்பிடித்த நிறத்தில் காணப்பட்டது. அவரின் இடது புறம், "எடை பார்க்க ஒரு ரூபாய்" என்ற எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த மெஷினுக்கு முன்னே போய் நின்றான் யோகன். இதை அவதானித்த பெரியவர், அவன் எடையைப் பார்ப்பதற்காக மெஷினை கஷ்டப்பட்டு முன்னே தள்ளிவைத்துவிட்டு எடை மெசினைப் பார்த்து கையை நீட்டியபடி அண்ணாந்து பார்த்தார். அவரின் மூக்குக் கண்ணாடி அவரது மூக்கில் இருந்து இரண்டு சென்டிமீட்டர் கீழே நகர்ந்தது. தனது கையில் இருந்த பைகளையும் செருப்பையும் கழட்டிவிட்டு ஏறி நின்று எடையைப் பார்த்தான் யோகன். கீறல்களுகிடையே உற்றுநோக்கி பார்த்த அவனது கண்களுக்கு அது எம்பது கிலோ காட்டுவதாகத் தெரிந்தது. அவனது எடையைவிட பத்துகிலோ அதிகமாகக் காட்டுகிறது என்பது அவனுக்குத் தெரியும்.

எடை பார்த்துவிட்டு மெசினைவிட்டு இறங்கியவன், அந்தப் பெரியவருக்கு இணையாக கீழே அமர்ந்தான். நூறு ரூபாய்த் தாளை பாக்கட்டில் இருந்து எடுத்து நீட்டினான். அது நூறு ரூபாய் தாள் தான் என்பதை சில வினாடிகள் உற்றுப் பார்த்து தெரிந்துகொண்டார் பெரியவர். பேச முயற்சி செய்தும் அவரின் குரல் காற்றோடு கலக்கவில்லை. முதலில் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டிவிட்டு, பிறகு ஐந்து விரல்களையும் காட்டி கையை விரித்தார் பெரியவர்.

"ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் கொடுத்தால் சில்லறை எப்படித் தருவது" என்று பெரியவர் சொல்வதை ஓரளவிற்கு புரிந்துகொண்டான் யோகன்.

விரல்கள் விரிக்கப்பட்ட அவரது வலது கையுடன் அவரது இடது கையையும் இணைத்து, அதற்குள் நூறு ரூபாயை நோட்டை வைத்துவிட்டு, சிறிய புன்முறுவலோடு "சில்லறை வேணாம் தாத்தா " என்று சொல்லிவிட்டு அவரது விரல்களை தனது இரண்டு கைகளால் மூடினான் யோகன். மூடப்பட்ட தனது இரண்டு கைகளையும் மெதுவாகத் தூக்கி, யோகனின் தலையில் வைத்தார் பெரியவர்.

முற்றும்...

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_5.html

அன்புடன்,
அகல்

http://1.bp.blogspot.com/-rQ8uNj27n5M/Ua80K4a36II/AAAAAAAACOs/RmMjGtxUceo/s1600/weight-waala-india.jpg



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 12:01 pm

உழைக்கும் வயதில் கையை நீட்டியர் ஒரு புறம் ஏதும் கிடைக்காமல் தூற்றவே
தள்ளாடும் வயதில் உழைக்கும் இவர் யோகனை போற்றவே ...

மிடுக்கோடுநடந்தான் யோகன் கதை அருமை ....உழைப்பின் பெருமை சொன்னவிதமும் அருமை சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 06, 2013 12:17 pm

பூவன் wrote:உழைக்கும் வயதில் கையை நீட்டியர் ஒரு புறம் ஏதும் கிடைக்காமல் தூற்றவே
தள்ளாடும் வயதில் உழைக்கும் இவர் யோகனை போற்றவே ...

மிடுக்கோடுநடந்தான் யோகன் கதை அருமை ....உழைப்பின் பெருமை சொன்னவிதமும் அருமை சூப்பருங்க
கருத்திற்கு நன்றிகள் பூவன்... புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 12:39 pm

சூப்பருங்க நன்றி அருமை அகல் .
சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது ரங்கநாதன் தெருவில் தேவையே இல்லாமல் மெழுகுவத்திகளை வாங்கி வந்து அறை நண்பர்களிடம் திட்டுவாங்குவேன் புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 06, 2013 2:01 pm

ராஜா wrote: சூப்பருங்க நன்றி அருமை அகல் .
சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது ரங்கநாதன் தெருவில் தேவையே இல்லாமல் மெழுகுவத்திகளை வாங்கி வந்து அறை நண்பர்களிடம் திட்டுவாங்குவேன் புன்னகை
நன்றி நன்றி புன்னகை .. ஆமா அந்த மெழுவர்த்தி எதுக்கு வக்கிட்டு போவிங்க ? புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 2:06 pm

அருமை அகல்
மனம் அகல (broaden) மகிழ
உழைப்பை போற்றும் பகிர்வு சூப்பருங்க




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 2:57 pm

அகல் wrote:நன்றி நன்றி புன்னகை .. ஆமா அந்த மெழுவர்த்தி எதுக்கு வக்கிட்டு போவிங்க ? புன்னகை
வாகன நிறுத்த இடம் கிடைக்காது என்பதால் மாம்பலம் ரயில்நிலையத்தின் மறுபக்கத்தில் நிறுத்திவிட்டு ரங்கநாதன் தெருவழியாக நடந்துசென்றுவிட்டு திரும்ப வருவோம். அப்போது தெருவில் மெழுகு வர்த்தி , இன்னும் சில சிற்சில பொருட்கள் விற்கும் நபர்களை பார்க்கும் நாம் கொடுக்கும் பணம் அவர்களுக்கு உதவுமே என்று வாங்கிகொண்டு செல்வேன் அகல்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 06, 2013 3:30 pm

ராஜா wrote:
அகல் wrote:நன்றி நன்றி புன்னகை .. ஆமா அந்த மெழுவர்த்தி எதுக்கு வக்கிட்டு போவிங்க ? புன்னகை
வாகன நிறுத்த இடம் கிடைக்காது என்பதால் மாம்பலம் ரயில்நிலையத்தின் மறுபக்கத்தில் நிறுத்திவிட்டு ரங்கநாதன் தெருவழியாக நடந்துசென்றுவிட்டு திரும்ப வருவோம். அப்போது தெருவில் மெழுகு வர்த்தி , இன்னும் சில சிற்சில பொருட்கள் விற்கும் நபர்களை பார்க்கும் நாம் கொடுக்கும் பணம் அவர்களுக்கு உதவுமே என்று வாங்கிகொண்டு செல்வேன் அகல்
ஹா ஹா சூப்பர் அண்ணே.. நல்ல எண்ணம் தானே. இதுக்கு ஏம்பா அவக திட்றாக.. புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 06, 2013 3:32 pm

யினியவன் wrote:அருமை அகல்
மனம் அகல (broaden) மகிழ
உழைப்பை போற்றும் பகிர்வு சூப்பருங்க
நன்றிகள் அண்ணே... புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 3:45 pm

அகல் wrote:ஹா ஹா சூப்பர் அண்ணே.. நல்ல எண்ணம் தானே. இதுக்கு ஏம்பா அவக திட்றாக.. புன்னகை
நல்ல எண்ணம் தான் அதுக்காக 10 சோப்பு டப்பா , 10 முகம் பார்க்கும் கண்ணாடி அப்புறம் எண்ணிலடங்கா பாக்கெட் சீப்புகள் இப்படி அறையில் சேர்ந்துகொண்டே இருந்தால் என்ன பண்ணுவார்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக