புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 தேவையான கடிவாளம்! Poll_c10 தேவையான கடிவாளம்! Poll_m10 தேவையான கடிவாளம்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவையான கடிவாளம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 05, 2013 8:58 am


தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும்' என்று மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ளதால் மட்டுமே இந்திய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வந்துவிடாது. ஆனாலும் இந்த அறிவிப்பு நிச்சயமாக ஒரு கடிவாளமாக இருக்கும்.

அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இதற்கு மாறுபடும் கருத்தைச் சொல்லத் தொடங்கிவிட்டார். "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் நடைமுறைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம் என்று கருதுகிறேன். விரும்பியபடி செயல்பட அனுமதிக்க இயலாது' என்று அவர் கூறியுள்ள இந்த முரண்குரல், இனி காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களால் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளின் இரண்டாம்நிலைத் தலைவர்களாலும் எதிரொலிக்கப்படும்.

"இந்த அரசியல் கட்சிகளுக்காக அரசின் பணம் செலவிடப்படுகிறது. இவற்றுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆகவே இவை பொதுநிறுவனங்களைப் போன்று மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளன" என்று மத்திய தகவல் ஆணையம் கூறியுள்ள கருத்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்போது, பாராட்டப்படும்போது, அரசியல் கட்சிகள் மட்டுமே ஏன் முணுமுணுக்கின்றன? தங்கள் குட்டு வெளிப்படுகிறதே என்கின்ற ஆற்றாமைதான் இதற்குக் காரணம்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா மட்டுமல்லாமல் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்கிற பாகுபாடே இல்லாமல் எல்லாப் பெரிய கட்சிகளுக்கும் பல தொழிலதிபர்கள் பல கோடி ரூபாய் நிதியளிக்கிறார்கள். இந்த விவரம் அந்த நிறுவனங்களால் ஆண்டு அறிக்கையில் பங்குதாரர்களுக்குக் கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் அந்தப் பணத்தைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டும் இது குறித்துப் பேச மறுக்கின்றன. அவர்கள் கொடுத்த தொகையின் அளவு தெரிந்தால், இதற்கு ஆதாயமாக அந்த நிறுவனங்கள் அடைந்த எதிர்பலன்கள் என்ன என்பதை மக்களும் எதிர்க்கட்சிகளும் கண்டறிந்துவிடுவார்கள் என்று அச்சம் கொள்கின்றன அரசியல் கட்சிகள்.

பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டிலிருந்து நன்கொடை வந்து சேர்கிறது. டௌ கெமிக்கல்ஸ், வேதாந்தா, மால்கோ என பல்வேறு நிறுவனங்களிலிருந்து வெளிப்படையாக வந்து சேரும் பணம் 25 விழுக்காடு மட்டுமே. ரூ.20,000-க்கு குறைவான நன்கொடை கொடுத்தவர்கள் விவரத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், பெருவாரியான பணத்தைத் தொண்டர்கள் கொடுத்ததாக "பொய்க்கணக்கு' காட்டுகின்றனர்.

தேர்தல் நிதி என்ற பெயரில், மாவட்டந்தோறும் சில கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்ததாகக் கணக்கு காட்டப்படுகிறது. மாவட்டந்தோறும் தலைவருக்கு, அவரது வயது எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கக்காசு மாலை அணிவிப்பதும்கூட, தொண்டர்களின் பணம் அல்ல. இத்தகைய நிதியளிப்பு விழாக்கள் பெரும்பாலும் ஊழல் செய்து பயனடைந்தவர்கள் தலைவருக்கு நடத்தும் "காணிக்கை மேளா'. அல்லது அரசியல் கட்சிகள் தங்களுக்கு நன்கொடையாகக் கிடைக்கும் கருப்புப் பணத்தைக் கணக்கில் கொண்டுவரும் "வெள்ளை விழா'!

அண்மையில், ஒரு எதிர்க்கட்சி, இலக்கு நிர்ணயித்து தேர்தல் நிதி வசூலித்தபோது, அதற்கு எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், அதிகாரிகள் சிலரும் அவரவர் சக்திக்கும் சாமர்த்தியத்திற்கும் ஏற்ப நன்கொடை அளிப்பார்கள் என்றால், அவர்கள் அந்தக் கட்சியால் எந்த அளவுக்குப் பயன் அடைந்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

சில தொழிலதிபர்களும், கல்வியாளர்களும் தங்களுக்கென ஒரு கட்சியை வைத்துக்கொள்வது, அரசியலில் இறங்கவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ அல்ல. வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்கான பாதுகாப்புப் பெட்டகமாக அரசியல் கட்சியைப் பயன்படுத்துகின்றனர். கட்சி நிதி என்கிற பெயரில் கருப்புப் பணத்தைக் கணக்குக் காட்ட, அறக்கட்டளைகளைவிட அரசியல் கட்சி வசதியாக இருப்பதுதான் காரணம்.

அரசியல் கட்சிகள், அரசுத் துறை நிறுவனங்களைப் போன்று மக்களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி கூறுவது மேம்போக்கான பார்வைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் சற்று விரிவாகவும் ஆழமாகவும் சிந்தித்தால், எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் வரிப்பணத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்கள் கட்சிப்பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை அரசின் தணிக்கைக்கு உள்படுத்த மறுக்கிறார்கள். அப்படியானால் இவர்களுக்கு வருமான வரி விலக்கு ஏன்?

தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அவருக்காகத் தேர்தல் ஆணையம் செலவிடும் மக்கள் வரிப்பணம் மிகமிக அதிகம். இவர்கள் செலுத்தும் டெபாசிட் தொகைக்கும் அரசு செய்யும் செலவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது. ஆகவேதான், தேர்தல் செலவுக் கணக்கை கேட்கவும், தவறான கணக்கைக் காட்டினால் தகுதிநீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

இனிமேல் நன்கொடைகளை நேரடியாக வாங்க மாட்டார்கள். தேர்தலில் எந்தெந்தச் செலவை எந்தெந்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும், தங்கள் தொண்டருக்கு எவ்வளவு தொகை தர வேண்டும், வாக்காளருக்குப் பணம் தர எத்தனை வார்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நன்கொடை தருவோருக்கு அரசியல் கட்சிகள் பட்டியல் போட்டு பிரித்துக் கொடுக்கும். "பயனாளிகளுக்கு நேரடி மானியம்' திட்டம்போல!

அரசியல் கட்சிகளை மட்டுமல்ல, வரி விலக்கு பெறும் அனைத்து அறநிலை/ அறக்கட்டளை/ டிரஸ்ட்/ சொசைட்டி/ திருப்பணிக்குழு ஆகிய எல்லாவற்றின் கணக்குகளையும் தகவல்பெறும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் ஓட்டை கண்டுபிடிப்பார்கள். ஏமாற்றுவார்கள். ஏமாற்றப்படும். ஆனால், கடிவாளம் நிச்சயம் தேவை.

பூனைக்கு மணி கட்ட மத்தியத் தகவல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. நமது பாராட்டுகள்!

தினமணி தலையங்கம்



 தேவையான கடிவாளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 9:18 am

இனிமேல் நன்கொடைகளை நேரடியாக வாங்க மாட்டார்கள். தேர்தலில் எந்தெந்தச் செலவை எந்தெந்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும், தங்கள் தொண்டருக்கு எவ்வளவு தொகை தர வேண்டும், வாக்காளருக்குப் பணம் தர எத்தனை வார்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நன்கொடை தருவோருக்கு அரசியல் கட்சிகள் பட்டியல் போட்டு பிரித்துக் கொடுக்கும். "பயனாளிகளுக்கு நேரடி மானியம்' திட்டம்போல!

உண்மை தான்

ஒரு வழியை அடைத்தால் மறு வழியை பார்ப்பார்கள் அவர்கள்




 தேவையான கடிவாளம்! M தேவையான கடிவாளம்! U தேவையான கடிவாளம்! T தேவையான கடிவாளம்! H தேவையான கடிவாளம்! U தேவையான கடிவாளம்! M தேவையான கடிவாளம்! O தேவையான கடிவாளம்! H தேவையான கடிவாளம்! A தேவையான கடிவாளம்! M தேவையான கடிவாளம்! E தேவையான கடிவாளம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக