புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
2 Posts - 4%
prajai
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
2 Posts - 4%
viyasan
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
1 Post - 2%
Rutu
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
1 Post - 2%
சிவா
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
2 Posts - 15%
Rutu
அப்பாவின் மனசு! Poll_c10அப்பாவின் மனசு! Poll_m10அப்பாவின் மனசு! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் மனசு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 7:26 pm

மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன்.
அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள்.
""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.''
என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் வித்யா.
""அம்மாவும், அப்பாவுமாக இருந்தவரைக்கும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராமல் இரண்டு பேருமாக இருந்துட்டாங்க. இனி, அப்பாவின் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு அண்ணி. இனி, அவரை தனியா விட முடியாது. அண்ணன்கிட்ட, இது விஷயமா பேசினேன். "அப்பாவை என்னோடு கொண்டு போய் வச்சுக்க, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதில், உங்க அண்ணி சம்மதம் தான் முக்கியம். அவதான் கூடவே வச்சு கவனிக்கப் போறவ. அதனால, அவக்கிட்டே பேசு'ன்னு சொல்லிட்டாரு... நீங்க தான் அண்ணி, அப்பாவை, இனி உங்க பொறுப்பில் வச்சு பார்த்துக்கணும்.''
""இங்கே பாரு யமுனா. உன் ஆதங்கம் எனக்குப் புரியுது. எனக்கு மனசிலே ஒண்ணு வச்சுகிட்டு, வெளியே ஒண்ணு பேசத் தெரியாது. அப்பாவை அழைச்சிட்டுப் போய் வச்சிக்கிறது எனக்கு சரியா வரும்ன்னு தோணலை. நீ, ஏன் உங்கப்பாவை உன்னோடு கூட்டிட்டுப் போகக்கூடாது.''
""நீங்க சொல்றது சரிதான் அண்ணி. இருந்தாலும், இப்ப தான் என் மாமனாருக்கு ஆபரேஷன் நடந்தது, வீட்டில இருக்கிறாரு. மாமனாரும், மாமியாரும் அவங்க ஊருக்குப்போக ஆறு மாசம் ஆகும். அதுவரைக்கும், என்னால அப்பாவை அழைச்சிட்டு போக முடியாது. அதற்குப் பின், அப்பாவை என்கிட்டே வச்சுக்கிறேன். இரண்டு வீட்டிலுமாக மாத்தி, மாத்தி இருக்கட்டும். தயவு செய்து வயசான காலத்தில், அவரைத் தனியே விட வேண்டாம் அண்ணி.''
""உங்கப்பாவோட குணம் தெரிஞ்சு, அவரைக் கூட்டிட்டு போகச் சொல்றியே... அத்தை அவர்கிட்டே பட்டபாடு நமக்குத் தெரியாதா... பாவம் அந்த மனுஷியை...என்னமா ஆட்டி வச்சாரு. சாம்பாரில் துளி உப்பு கூடிப் போச்சுன்னா அவ்வளவு தான், "இந்த சாப்பாட்டை எவன் சாப்பிடுவான் தூக்கி குப்பையிலே கொட்டு'ன்னு சத்தம் போடுவாரு. கடைக்குப் போய்விட்டு வந்தவர்கிட்டே, ஒரு சாமான் மறந்து போய், திரும்ப வாங்கிட்டு வரச்சொன்னா," நீ வச்ச வேலைக்காரன்னு நினைச்சியா. ஒரு மனுஷனை, எத்தனை முறை அலைய விடுவேன்'னு கத்துவாரு. நேரத்துக்கு சாப்பாடு வைக்காட்டி கோபம். பூஜை ரூமிலே சுவாமி படத்துக்கு, பூப் போடாட்டி சத்தம் ... ஏ... அப்பா அத்தைய பாடாய் படுத்திவச்சாரே.
""நல்ல வேளை உங்க அண்ணன், உங்கப்பா மாதிரி இல்லை, நல்ல குணமாக இருக்கிறதாலே, எங்க குழந்தைகளோடு, இந்த பத்து வருஷமா நிம்மதியா குடித்தனம் நடத்திட்டு இருக்கேன். இவரை நான் கூட்டிட்டுப் போய் வச்சுட்டு, நிம்மதியா இருக்கிற எங்க குடும்பத்திலே பிரச்னையை உண்டாக்கவா... வேண்டாம் யமுனா, இது சரிப்பட்டு வராது.''
""தயவு செய்து அண்ணி, இப்படி ஒரேயடியாக மறுத்தீங்கன்னா எப்படி. அண்ணனுக்கும், உங்களுக்கும் அப்பாவை பராமரிக்கிற பொறுப்பு இருக்கு. தயவு செய்து தட்டிக்கழிக்காதீங்க. ஆறு மாசம் கழிச்சு, நானே வந்து கூட்டிட்டுப் போறேன். புரிஞ்சுக்குங்க அண்ணி.''
ஒரு நிமிஷம் மவுனமாக இருந்தவள், "" சரி யமுனா. நீ இவ்வளவு தூரம் சொல்றியேன்னு கூட்டிட்டுப் போறேன். ஆனா... தேவையில்லாம பிரச்னை ஏதும் செய்தார்ன்னா, அத்தை மாதிரி நான் வாயை மூடிட்டு இருக்கமாட்டேன் புரியுதா... அப்பறம், நீ வந்து ஏதும் சொல்லக்கூடாது.''
""அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங்க தைரியமாக அப்பாவை அழைச்சிட்டு போங்க. எனக்கு, இப்பதான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு.''
காலை மணி ஏழாக, வாசலையே பார்த்துக் கொண்டிருந்த மருமகளிடம் வந்தார் கதிரேசன்.
""என்னம்மா பார்த்துட்டு இருக்கே.''
""பால்காரன் மாமா. ஒரு நாளை போல ஒரு நாள் லேட்டாகவே வர்றான். காபி கலக்கணும். பால் இல்லை. அதான் பார்த்துட்டு இருக்கேன்.''
""பால் தானே, இனி பால்காரனை போடச் சொல்ல வேண்டாம். நான் தான் அஞ்சு மணிக்கே எழுந்திருக்கிறேனே... வாக்கிங் போற மாதிரி போய், பால் பூத்தில் நாளையிலிருந்து, நானே வாங்கிட்டு வரேன்மா.''
குழந்தைகளை ஸ்கூலில் விடுவதற்கு வித்யா கிளம்ப, ""வித்யா... இனி நீ போக வேண்டாம். நானே காலையில ஸ்கூலில் கொண்டு போய் விட்டுட்டு, சாயந்திரம் திரும்ப அழைச்சிட்டு வந்துடறேன். வீட்டிலே சும்மா உட்கார்ந்திருக்கிறதுக்கு, என்பேரன் பேத்தியோடு பேசிக்கிட்டேபோய் வருவேன்.''
அவராகவே முன் வந்து வித்யாவுக்கு உதவ ஆரம்பித்தார்.
தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, சாயந்திரம் பிள்ளைகளை பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு விளையாட அழைத்துச் செல்வது என, வித்யாவின் அன்றாட வேலைகளை சுலபமாக்கினார்.
சாதத்தில் சாம்பாரை ஊற்றி பிசைந்து, ஒரு வாய் வைத்தவள், உப்பு கரிக்க, "அடடா... கை மறதியா உப்பை அதிகம் போட்டுட்டேன் போலிருக்கு...' மாமா ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுச் சென்றது ஞாபகம் வர, ""மாமா சாம்பாரில் உப்பு அதிகமா போட்டுட்டேன் போலிருக்கு, சாப்பிட்ட நீங்க ஒண்ணும் சொல்லலையே.''
""அதுவாம்மா. நல்லாதான் சமைக்கிறே. என்னவோ சமயத்தில், இப்படி திருஷ்டி பட்டாற்போல் நடந்துடுது. அதுக்கு என்ன செய்ய முடியும். நல்லா செய்த போது ருசித்து சாப்பிட்ட நாக்கு, இதையும் ஏத்துக்க வேண்டியது தான்.''
புன்னகையுடன் பதில் சொன்ன மாமனாரை, ஆச்சரியமாகப் பார்த்தாள். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர் எப்படி, இப்படி மாறிப் போனார். அன்பாக, அனுசரணையாக இருக்கும் மாமனாரை, அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஊரிலிருந்து வந்திருந்தாள் யமுனா. ""அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா மலர்ந்த முகத்தோடு இருக்காரு. நீங்க, நல்லபடியா கவனிச்சுக்கிறீங்கன்னு நினைக்கிறேன். என் மாமனார், மாமியார் ஊருக்குப் போயிட்டாங்க. அப்பாவை நான் அழைச்சிட்டுப் போயி, ஒரு ஆறு மாசம் என் வீட்டில் வச்சிருக்கிறேன் அண்ணி. அப்பாவை, அழைச்சிட்டுப் போகத்தான் வந்தேன்.''
""என்ன... மாமாவை அனுப்பறதா... சான்ஸே இல்லை. உனக்கு, அப்பாவோடு இருக்கணும்ன்னு ஆசையா இருந்தா...கூட ஒரு வாரம் தங்கிட்டு போ. மாமாவை, நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன். அவரில்லாமல், என்னால் இருக்க முடியாது. என்கிட்டே எவ்வளவு அன்பும், பிரியமுமாக இருக்காரு தெரியுமா... நான் விட்டாலும், அவரோட பேரன், பேத்தி விட மாட்டாங்க.''
""அம்மா வித்யா,'' என்று கதிரேசன் குரல் கேட்டு, ""இதோ வந்திட்டேன் மாமா,'' என்று அண்ணி, அப்பாவை நோக்கி செல்வதை ஆச்சரியமாக பார்த்தாள்.
இந்த ஆறு மாசத்தில், இவர்களிடம் எப்படி இவ்வளவு அன்னியோன்யம் ஏற்பட்டது. அப்பாவின் கோப குணத்துக்கு, எப்படி அவரால் அண்ணியிடம் இவ்வளவு நல்ல பெயர் வாங்க முடிந்தது. கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னவள், இப்போது அனுப்ப மறுக்கிறாளே... யமுனாவுக்கு புரியவில்லை.
""யமுனா, நீ மாமாகிட்டே பேசிட்டு இரு. பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்திருக்கு. தொட்டிலில் போடறாங்களாம்... கூப்பிட்டாங்க. நான் போய் பாத்துட்டு, பத்து நிமிஷத்துல வந்துர்றேன்.''
வித்யா புறப்பட்டு செல்ல, அப்பாவுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்க, அவரருகில் வந்தாள் யமுனா.
""அப்பா.''
""சொல்லும்மா... நீ என்னைப் பார்க்க வந்தது சந்தோஷம்மா.''
""அப்பா, நீங்க எப்படிப்பா இருக்கீங்க. அண்ணி, உங்களை நல்லபடியா பார்த்துக்கிறாங்களா?''
""என்னம்மா இப்படி கேட்டுட்டே. அவ, எனக்கு இன்னொரு மகள்மா.''
""அப்பா... கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க நிறைய மாறிப் போயிட்டதாக எனக்கு தோணுது. அம்மாவோடு இருக்கும் போது, உங்ககிட்டே நான் பார்த்த கோபம், அதிகாரம் எதுவுமே, இப்ப உங்ககிட்டே இருக்கிறதாகத் தெரியலை. ஏன்ப்பா...உங்களை மாத்திக்கிட்டீங்களா?''
புன்னகையோடு மகளைப் பார்த்தார். ""அம்மாவோடு, நான் வாழ்ந்த வாழ்க்கை, எங்களோட முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தின் வெளிப்பாடு. ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு, அவங்கவங்க குணநலத்தோடு ஏத்துக்கிட்டோம். என் கோபக்குரல், அவளுக்கு அத்துப்படி. இதுக்கெல்லாம் சளைக்க மாட்டா. நான் கோபப்படறது மட்டும் தான் <உங்களுக்குத் தெரியும். உள்ளூர எங்களுக்குள் இழையோடும் அன்பும், பாசமும் உங்களுக்குத் தெரியாது. சாப்பாட்டில் உப்பு கூடி இருந்தா, கோபப்பட்டேனே... அது அவளுகாக. அவளுக்கு ப்ரஷர் இருக்கு, உப்பு ஆகாது. அவளும், அந்த சாப்பாட்டை சாப்பிடணுங்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடு. நான் அவக்கிட்டே ஆத்திரப்பட்டது, கத்தறது எல்லாமே உரிமையின் குரல். கசப்பு மருந்தை பிள்ளைக்கு கொடுக்கிறதாலே அம்மாவுக்கு, பிள்ளைக்கிட்ட பாசம் இல்லைன்னு சொல்லமுடியுமா? இதுவும், ஒரு வகை அன்பின் வெளிப்பாடு தான். எங்க தாம்பத்தியம் முடிவுக்கு வந்துடுச்சு.
"" இப்ப நான் வாழறது, என் மகனோட குடும்பத்தில். அந்தக் குடும்பத்தில் என்னால, எந்தப் பிரச்னையும் வரக் கூடாது. இங்கே என் கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் வேலை இல்லை. இது, என் அன்பை மட்டுமே காட்ட வேண்டிய இடம். இப்ப என் கண்ணோட்டம் மாறிடுச்சும்மா. என் கடைசி கால வாழ்க்கையை, என் பிள்ளையோடு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இதில், என் ஞாபகங்களாக, அன்பு மட்டும் தான் இருக்கணும். அப்பா, நம்மோடு இருந்த நாட்கள், நம் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததுன்னு, அவங்க நினைக்கிற மாதிரி வாழ்ந்துட்டு போகணும்மா.
""என் மருமகளுக்கு, ஒரு நல்ல தகப்பனாக இருக்கேன். அவளும், என்னை ஒரு தந்தை ஸ்தானத்தில் வச்சு, அன்போடு பராமரிக்கிறா. நான் நிறைவோடு வாழ்ந்திட்டிருக்கேன்,'' என்று அப்பா சொல்ல, அவரை நினைத்து பெருமிதப்பட்டவளாக, அன்போடு அவரைப் பார்த்தாள் யமுனா.

நன்றி : சக்தி பாலாஜி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 24, 2013 7:45 pm

கதை சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




அப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Uஅப்பாவின் மனசு! Tஅப்பாவின் மனசு! Hஅப்பாவின் மனசு! Uஅப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Oஅப்பாவின் மனசு! Hஅப்பாவின் மனசு! Aஅப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Eஅப்பாவின் மனசு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:08 pm

// இப்ப நான் வாழறது, என் மகனோட குடும்பத்தில். அந்தக் குடும்பத்தில் என்னால, எந்தப் பிரச்னையும் வரக் கூடாது. இங்கே என் கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் வேலை இல்லை. இது, என் அன்பை மட்டுமே காட்ட வேண்டிய இடம். இப்ப என் கண்ணோட்டம் மாறிடுச்சும்மா. என் கடைசி கால வாழ்க்கையை, என் பிள்ளையோடு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இதில், என் ஞாபகங்களாக, அன்பு மட்டும் தான் இருக்கணும். அப்பா, நம்மோடு இருந்த நாட்கள், நம் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததுன்னு, அவங்க நினைக்கிற மாதிரி வாழ்ந்துட்டு போகணும்மா.//

இதைப்போலவே எல்லோரும் வாழ்ந்து விட்டால் பிரச்சனயே வராதே முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 8:09 pm

கதை அருமை மா.....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 19, 2013 5:57 am

இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம கதியும் கதையும் இப்படித்தான் இருக்குமோ? எதுக்கும் இப்ப இருந்தே தயார் படுத்திக்கனும். கதைக்கு ரொம்ப நன்றிங்கோ.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 24, 2013 8:35 pm

நன்றி மணி, நன்றி மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 24, 2013 8:39 pm

krishnaamma wrote:// இப்ப நான் வாழறது, என் மகனோட குடும்பத்தில். அந்தக் குடும்பத்தில் என்னால, எந்தப் பிரச்னையும் வரக் கூடாது. இங்கே என் கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் வேலை இல்லை. இது, என் அன்பை மட்டுமே காட்ட வேண்டிய இடம். இப்ப என் கண்ணோட்டம் மாறிடுச்சும்மா. என் கடைசி கால வாழ்க்கையை, என் பிள்ளையோடு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இதில், என் ஞாபகங்களாக, அன்பு மட்டும் தான் இருக்கணும். அப்பா, நம்மோடு இருந்த நாட்கள், நம் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததுன்னு, அவங்க நினைக்கிற மாதிரி வாழ்ந்துட்டு போகணும்மா.//

இதைப்போலவே எல்லோரும் வாழ்ந்து விட்டால் பிரச்சனயே வராதே முத்து புன்னகை
உண்மை தான் யாரும் இதை பற்றி ஆழமாக சிந்திப்பதில்லையே அம்மா




அப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Uஅப்பாவின் மனசு! Tஅப்பாவின் மனசு! Hஅப்பாவின் மனசு! Uஅப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Oஅப்பாவின் மனசு! Hஅப்பாவின் மனசு! Aஅப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Eஅப்பாவின் மனசு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Aug 25, 2013 7:30 pm

கதை அருமை அம்மா



அப்பாவின் மனசு! Mஅப்பாவின் மனசு! Aஅப்பாவின் மனசு! Dஅப்பாவின் மனசு! Hஅப்பாவின் மனசு! U



அப்பாவின் மனசு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 29, 2013 10:00 pm

நன்றி மது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக