புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
11 Posts - 4%
prajai
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
9 Posts - 3%
Jenila
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
3 Posts - 1%
jairam
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_m10உங்களுக்கும் மரணம் வரும்..!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் மரணம் வரும்..!!


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 20, 2009 3:39 pm

உங்களுக்கும் மரணம் வரும்...........

நம்பவே முடியவில்லை, இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஒரு ஏக்கம் மேலிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த எனது நெருங்கிய நண்பர் முதல் மாரடைப்பிலேயே காலமாகி விட்டார். மரணம் சற்று சர்ச்சைக்குரியதாகி விடவே போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னரே உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரது அடுக்கக வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் கார் பார்க்கிங்கில் பார்வைக்காக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பழகுவதற்கு இனிமையானவர், நாணயமானவர், கெளரவமானவர், காவல் அதிகாரி போன்ற கம்பீரத் தோற்றமுடையவர், விதிகளை மீறாதவர் எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் அவர். நேற்று வரை அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எத்தனை, சுற்றி வந்த நண்பர்கள் எத்தனை பேர், அட்டவணை போட்டு சுற்றி வரும்படியான நண்பர்கள். இன்று அவருக்காக அழுது கொண்டிருப்ப‌வர் அவரது மனைவி மட்டுமே. அவர் அழுவது கண்டு கண்கலங்கி சிலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர், அவ்வளவுதான். ஆம்புலன்சுக்கு அருகில் போக மனமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை, சொல்லி வைத்தது போல் எல்லோரும் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தனர். அவரது பத்து வயது மகன் திகிலடித்துப் போய் அங்குமிங்கும் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்தான். அவனை அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் எத்தனிக்கவில்லை.

பாவம், அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடக் கூட ஆளில்லை. அந்த அளவு அலட்சியம். இறந்தவருக்கு என்ன வாங்கிப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற பகுத்தறிவுத்தனமாகக் கூட இருக்கலாம். மாலை கூட இல்லாததைக் கண்டு வெறுத்துப் போய் நண்பருடன் பைக்கில் சென்று மாலை வாங்கி வந்தேன். பைக்கில் என் பின்னால் அமர்ந்து மாலையைச் சுமந்து வந்த நண்பருக்கு மாலை சாத்த உடன் வர தயக்கம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது வரவில்லை என்று நூறடி தள்ளியே நின்று விட்டார். மாலையை ஆம்புலன்சில் படியேறிப் போட எனக்கு உதவி செய்ய எவருமில்லை. நான் திணறுவது கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரைமனதுடன் பீடியை வீசிவிட்டு வந்து உதவினார்.

அலுவலக நண்பர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் வந்த‌ உடன் பைல் செய்ய வேண்டும் போன்ற அலுவலக ரீதியான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன‌. மலர் வளையம் வைத்த பின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பயப் பார்வை, அத்துடன் கழன்று கொண்டனர். வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி, வந்தாக வேண்டுமே என்று வந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

கடைந்தெடுத்த அயோக்கியன் இறந்தால் கூட சொல்லப்படுகிற "பாவம் நல்ல மனுஷன் போயிட்டாரு" போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளைக் கூட அங்கே கேட்க முடியவில்லை. "இம்பெர்சனல் அஃபிஷியல் ஒர்க்" மாதிரி ஒரு வேலைக்கு வந்தது போன்ற இறுக்கமான எந்திர முகபாவனைகள், அவற்றில் மெய்யான‌ வருத்தம் புலப்பட‌வில்லை. தேவையற்ற ஒரு இறுக்கம், அது துக்கத்தின் பொருட்டு விளைந்ததல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. தவறிக்கூட சிரித்து விடக்கூடாது, அதிரப் பேசக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த முகங்களில் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட கவலை தொக்கி நிற்கிறது. சில அக்கம்பக்கவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் பரிதாபப் பார்வைகள் மட்டுமே சொல்லத்தக்கவை.

போஸ்ட் மார்ட்டம் செய்ததால் வீட்டுக்குள் கொண்டு செல்லாமல் உடனடியாக‌ பக்கத்திலிருக்கும் மயானத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று முதலில் உறவினர் ஒருவர் தெரிவித்தார். பின்னர், ஊருக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி வந்த‌தும் கூட்டம் கலைய ஆரம்பிக்கின்ற‌து.

"அதான் ஊருக்கு கொண்டு போறாங்களாமில்லே, நாம இருந்து என்ன பண்ண" என்ற முணு முணுப்புகள் கேட்கின்றன‌. இறந்தவருக்கு மாலை கூட இடாதவர்கள், கடைசி வரை இருந்து என்ன செய்ய‌ முடியும் என்று தெரியவில்லை.

"நல்ல வேளையா ஊருக்கு கொண்டு போறாங்க, இல்லேன்னா மயானம் வரைக்கும் கூடப் போயாகணும்" என்ற நிம்மதி பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிற‌து.

"பரவாயில்லை, மயானம் வரை போற சிரமம் மிச்சம், அதனால ஆம்புலன்ஸ் கிளம்பற வரை இருக்கலாம்" என்று சிலர் பெரியமனதுடன் முடிவு செய்துவிட்டிருந்தனர்.

"அடேங்கப்பா ஊரு வரைக்கும் போயிட்டு வரணுமா?" என்று கறுப்பு கால்சராயில் துக்கம் அனுஷ்டித்த‌ சில நாகரீக கனவான்களின் முகங்கள் கறுக்கின்றன‌.

நகரத்தனத்தின் சுழலில் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நோய் தொற்றிக் கொள்ளுமா? மறைந்தவர் பாய்ந்து வரப்போகிறாரா, பேய் பிசாசு பயமா? என்ன பயம் உங்களுக்கு?

நீங்கள் மேதாவிகளாகவும், பணம் படைத்தவர்களாகவும், நகரவாசிகளாகவும்,இருக்கலாம். மனிதர்களாக இருக்கிறீர்களா? சக மனிதனது மரணத்திற்குக் கூட மரியாதை செலுத்தாத, இரங்காத நீங்கள் பண்பாடற்ற காட்டுவாசிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்கு கஷ்டம் வந்த போது உதவியவர், அறிவுறுத்தியவர், நேற்று வரை கூடிக் குலவியவருக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? ஒருவருடன் மணிக்கணக்கில் அரட்டையில் நேரத்தைக் கழித்த நீங்கள் அவரது இறுதிச் சடங்குக்கு மயானம் வரை செல்ல நேரக்கணக்கும் சிரமமும் பார்க்கிறீர்களே, உங்களுக்கும் மரணம் வரும், நினைவில் கொள்ளுங்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 20, 2009 3:47 pm

இந்த மாதிரி இறந்தவரைக் கூட தொடுவதற்கு சிலர் ரொம்ப யோசிப்பாங்க..... அவங்க வீட்ல யாராவது இறந்துட்டா இப்படித்தான் யோசிப்பாங்களா.....

என்ன மனுசண்டா அவன்

மனிதனை தொட மனிதனே யோசித்தால் என்ன ........ அவன் உயிர் வாழனும்....

மன்னிக்கவும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை உணர்ச்சிகளை....
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 20, 2009 4:33 pm

வணக்கம்
படித்தேன். இதயத்தை உருவி வெளியில் போட்டதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. அமரர் திரு தமிழ் வாணன் அவர்கள் அடிக்கடி கூறுவார்களாம். இழவு வீட்டில் அடிக்கிற மேளச் சத்தம் " டொண்டொண்டொணக்கு டொணக்கு " என்று கேட்குமாம். அதன் பொருள் " உண்டு உண்டு உனக்கும் உண்டு " என்பதாம்,. உலகத்தில் ஆச்சரியமான விஷயம் எது என்றால் செத்தவர்க்காகச் சாம்பிணங்கள் அழுவது தான் என்றார்கள். ஆனால் அழுவது போன்று நடிப்பவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டார்கள், நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 4:40 pm

ஆமா நமக்கும் மரணம் வரும்.. அப்போ நம்மளால் நம்ம மரணத்தை(இறந்த பின்னாடி) பார்க்கவா போறோம் ..என்ற திமிர் .. ஆனா பலருக்கும் தெரியலை..நாம இறந்த பின்னாடி கொஞ்ச நேரம் நம் உடம்பின் மேல் பரப்பில் நம்ம ஆத்தமா எல்லாத்தையும் பார்த்துகிட்டேதான் இருக்குமாம்--
நாம் கல்யாண வீட்டில் உதவி செய்வது ஒரு விஷயம் இல்லை..மரண வீட்டில் தான் நாம் எல்லாமே பண்ணனும் ,,
இங்கு சொல்லி இருப்பதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ,,மனிதர்களா இவர்கள் ??



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக