புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_m10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_m10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_m10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_m10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_m10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_m10தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..!  - ஈழம் போய்ஸ் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்..! - ஈழம் போய்ஸ்


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Mar 13, 2013 6:05 pm

தனித் தமிழீழத்திற்காக ஓங்கிக் குரலெழுப்பி போராடிவரும் தமிழக மாணவ சகோதரர்களிற்கு ஓர் அவசர வேண்டுகோள்.

உங்கள் உணர்வுகளிற்கு ஈழத்தமிழர்களாகிய நாம் தலைவணங்குகின்றோம். எங்கே உங்கள் போராட்டங்கள் வெறுமனே உணர்ச்சிவசத்தால் பலவீனப்பட்டுவிடுமோ என்ற நியாயமான அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் முன்வைத்த ஒன்பது கோரிக்கைகளானது முத்தாய்ப்பானவையாகும். இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் முன்வைக்காத தீர்க்கமான கோரிக்கைகளாகும்.

தமிழகத்தில் போராட்டக்களம் புகுந்துள்ள மாணவர்கள் அனைவரும் அந்த தீர்மாணங்களை வலியுறுத்தியே உங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுகின்றோம். மாணவர்களிடம் தெளிவான ஒருங்கிணைவு அவசியமாகின்றது. தமிழகத்தில் எந்த மூலையில் இருந்து போராடினாலும் அத்தனை மாணவர்களிடமும் ஒருங்கிணைவும் தகவல் தொடர்புகளும் அவசியமாகும்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்து என்ற கோரிக்கையை முதன்மையானதாக முன்வைத்து போராடுங்கள். உங்கள் போராட்டத்தின் பிரதிபலனை அடையவேண்டும் என நீங்கள் கருதும் ஈழத்தமிழர்களாகிய நாங்களே எங்கள் தலைவிதியை தீர்மாணிக்க வேண்டும்.

மனித உரிமை மீறல் என்றளவில் இருந்து ஐ.நாவோ அமெரிக்காவோ கடந்துசெல்ல மறுக்கின்றது இந்திய அரசும் போர்குற்றம் என்பதை தாண்டி செல்ல முற்படவில்லை. இந்நிலையில் இந்த நொடிப்பொழுது கூட சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையானது ஈழமண்ணில் அரங்கேறி வருகின்றது.

தத்தமது வசதிக்காக உலக பிராந்திய வல்லரசுகள் எமது வாழ்வோடு விளையாடிவரும் நிலையில் அதையும் கடந்து எமக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்றால் ஒற்றைக் கோரிக்கையாக சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்து என்ற கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானித்துக் கொள்கின்றோம். அதுதான் சரியானதாகவும் அமையும். அறுபது ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்து சதா துன்பச்சிலுவையை சுமந்து வருகின்றவர்கள் என்ற ஒரே முதன்மையான தகுதியே எமக்கான தீர்வை நாமே தீர்மாணிக்க முடியும் என்ற தகுதியை தந்துள்ளது.

பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்குள்ளாகவோ அதற்கு மேலாகவோ சென்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகானவேண்டும் என இந்தியத்தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அது இன்னொரு நாட்டுப் பிரச்சனை அதில் நாம் தலையிட முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.

இரண்டரை இலட்சம் தமிழர் கொன்றொழிக்கப்பட்டும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தமது உயிர்களை விதையாக்கியும் உள்ள நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சேர்ந்து வாழவேண்டும் என்ற கோரி;க்கை இன்னும் மரணிக்காமல் ஒலித்து;ககொண்டிருப்பது வேதனையினைத் தருகின்றது.

ஒட்டுமொத்தமாக இரண்டரை இலட்சம் தமிழகள் கொன்று குவிக்கப்பட்ட போதும் 2009 மே 16 17 18 ஆகிய இறுதி நாட்களில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டும் அரைகுறை உயிருடனும் உயிருடனும் கொன்று புதைக்கப்பட்ட போதும் சிங்களவர்கள் அரசுடன் இணைந்து அதனை மாபெரும் வெற்றியாகவே கருதி வெடி வெடித்தும் பொங்கல் வைத்தும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடியது உலகறிந்த வரலாறு. அவர்களுடனா சேர்ந்து வாழச் சொல்கின்றது இந்த உலகம்.

நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் நடக்க வேண்டியாதை பார்ப்போம் என பேசுபவர்கள் மறுகட்டுமானம் புனர்வாழ்வு நல்வாழ்வு என ஏதேதோ கூறிவருகின்றனர். நாங்கள் கேட்பது அபிவிருத்தியை அல்ல வாழும் உரிமையை.

எமக்கான தேசத்தை அமைக்க நாம் வலிமைகொண்டு போராடியபோது பயங்கரவாதம் என்று கூறி நசுக்கிவிட்டார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் மௌனம்தான் முப்படைகளை கட்டியமைத்து உலக விடுதலைப் போராட்ட வரலாற்றையே புரட்டிப்போட்டு தலைவர் வே.பிரபாகரன் வழிநடத்திவந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் மக்களையும் ஒருசேர முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்டதற்கு முதன்மை காரணமாக அமைந்திருந்தது.

இன்று அந்த வரலாற்று பழியை துடைத்தெறிந்து தமிழீழ விடுதலைக்காக ஓங்கிக் குரல்கொடுத்து நிற்கும் மாணவச் சகோதரர்களது போராட்டம் தீவரமடைந்து வருவது எமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஈழவிடுதலைக்காக பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் வெறுமனே சடங்குமுறைப் போராட்டங்களாக அமைந்துள்ளதை கசப்புடன் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஈழத்திலே எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது தமிழகத்தில் இதுபோன்றதொரு கொதிநிலையை உருவாக்க வேண்டும். அதனால்தான் தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்பதனை நன்குணர்ந்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் தனது உடலில் தீயை பற்றிப்படரவிட்டு வீரமரணம் அடைந்தான்.

அதனை கருணாநிதி அரசு தடுத்து நிறுத்தியது உண்மையென்றால் கருணாநிதியின் துரோகத்திற்கு துணைபோனது தமிழகத்தில் உள்ள தலைவர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. எத்துனை அடக்குமுறை வந்தாலும் அதனை மக்கள் எழுச்சியுடன் உடைத்தெறிந்து தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தியிருக்க முடியம். ஆனால் அவர்கள் செய்யாது கருணாநிதியின் துரோகத்திற்கு பாதையமைத்துக் கொடுத்ததை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை.

தமிழினம் உலகம் கண்விழித்துப் பார்திருக்க விரட்டி விரட்டி கொன்று புதைக்கப்பட்ட போது சாதியாலும் மதத்தாலும் பிரிந்து நின்று அரசியல் காரணங்களிற்காக இவர்கள் ஒப்பிற்கு செய்த போராட்டங்களை வேறு எப்படிதான் சொல்வது.

இன்றும் இந்த இழிநிலை மாறவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் உறக்கம் தொலைத்து உலக வல்லாதிக்க நாடுகள் முதற்கொண்டு பல்வேறு நாடுகளின் அதிகார மையங்களின் கதவுகளை ஓயாது தட்டியதன் விளைவாக தவிர்க்க முடியாமல் தமிழர்களது பிரச்சினையில் தலையிட்டே ஆகவேண்டும் என்றநிலைக்கு உலகநாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

இவ்வேளையில் தாய்த்தமிழகத்தில் இருந்தும் வலிமையான ஆதரவுக்குரல் எழுப்பப்பட வேண்டிய தேவை முன்னிலும் அதிகமாக இத்தருணத்தில் தேவைப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் அடையாளப்போராட்டங்களாக அமைந்து பத்திரிகையின் பக்கங்களை நிரப்பியதோடு அவர்களது கணக்கில் எண்ணிக்கையை அதிகிரத்ததோடு முடிந்துபோயிருந்தமையானது உலகத் தமிழர்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்தது.

இந்த நியைலில் சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் மூட்டி போராட்ட நெருப்பு இன்று தமிழகத்தை ஒரு போர்களமாக மாற்றியுள்ளது. அந்த போராட்டம் தீர்கமான நிலையை அடைவதற்கு உங்களிற்குள் கருத்து தெளிவும் உறுதியும் முதலில் ஏற்பட வேண்டும்.

தனித் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கைகள் அடங்கிய இந்த எட்டு தீர்மானங்களே உங்களது ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வேண்டும்.

1 – இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டுமல்ல அது திட்டமிட்ட இனப்படுகொலை.

2 – சர்வதேச விசாரணையும் பொது வாக்கெடுப்புமே தமிழ்மக்களிற்கான ஒரே தீர்வு. சர்வதேச விசாரணையும் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து கொண்டுவர வேண்டும்.

3 – சிங்கள இனவெறி அரசின் துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

4 – தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்.

5 – உலகத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

6 – ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரனைக்குழுவில் இடம்பெற்கூடாது.

7 – தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

8 – ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். இந்த பிரச்சாரத்தில் மாணவர்கள் நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம்.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் இனிவரும் நாட்களில் அந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ள இருக்கும் மாணவர்கள் என அத்தனை பேரது கோரிக்கைகள் இருவாகத்தான் இருக்க வேண்டும்.



malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Mar 13, 2013 6:06 pm

சிலர் குழப்பபுவதுபோன்று இவை ஒன்றும் அடையமுடியாத கோரிக்கைகள் கிடையாது. இந்த கோரிக்கைகள் தமிழக அரசு சார்பில் வைத்து போராடவேண்டிய கோரிக்கைகளாகும். அந்த அரசை தீர்மாணிக்கும் தமிழக மக்கள் இந்த கோரிக்கைகளிற்கு உயிர் கொடுங்கள் அது நிச்சயம் வெற்றிபெறும்.

சிறுபிள்ளை வேளான்மை வீடுவந்து சேராது என்ற முதுமொழிக்கு முதுமுமை கொடுத்து உலகம் வியக்கும்வண்ணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் துப்பாக்கிபிடித்தது உங்களைவிட குறைவான வயதில்தான்.

வெற்றி தோல்விகளிற்கு அப்பால் தமிழகத்தை விடுதலைக்கான பாதையில் எழுப்பி நடைபோடவைக்க மாணவர்களாகிய உங்களால்தான் முடியும். உங்களிற்கும் பிளவுகளையும் வேறுபாடுகளையும் தயவுசெய்து உள்நுழையவிட்டுவிடாதீர்கள்.

இலயோலா கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிற்கு ஆதரவாக விடுதலைகோரி எத்தனை மாணவர்கள் அணிதிரண்டீர்கள்? இதே போன்று திருச்சி தூயவளனார் கல்லூரியில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களது போராட்டத்தை தி.மு.க. பிரமுகரது மிரட்டலால் கல்லூரி நிர்வாகம் தடுத்துநிறுத்தியபோது எத்தனை மாணவர்கள் அணிதிரண்டு நின்றீர்கள்?

அந்தத்த இடங்களில் உள்ள மாணவர்களிடம் ஏற்படாத ஒற்றுமையின்மையே உன்னதமான போராட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களை அப்புறப்படுத்த எடுக்கப்பட்ட பெரும் அதிகார முயற்சியை அங்கு திரண்ட மாணவர்படை தடுத்துநிறுத்தியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்த மாணவர்களது போராட்டத்தை அடக்க மாவட்ட உதவி ஆட்சியர் காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் முற்பட்டபோது கல்லூரி விடுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டுவந்ததால் அந்த முயற்சி தேற்கடிக்கப்பட்டுள்ளது.

வரலாறு திரும்புகின்றது என மிகப்பெரும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் உங்கள் போராட்டத்தை கண்டு அச்சப்படுகின்ற நேரத்தில் ஒற்றுமையாக இருந்து வரலாற்றை மாற்றியமையுங்கள். உங்கள் போராட்ட நெருப்பின் அனல் தமிழக கட்சிகள் தொடங்கி தேசியக் கட்சிகளது கூடாரங்களிற்குள் வீசிவருவதன் எதிரொலியாகவே தலைவர்கள் உங்களிடம்தேடி வருகின்றார்கள்.

நிச்சயமாக தலைவர்களைத் தொடர்ந்து மக்களையும் உங்கள்பின் அணிதிரளச் செய்யுங்கள். அதனை சாத்தியப்படுத்தி விட்டீர்கள் என்றால் தெளிவான பாதையில் பயணிக்கத் தலைப்பட்டுள்ள தமிழக அரசையே உங்கள் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லும் நிலையை உருவாக்கலாம். அதன்பின்னர் நடப்பவை எல்லாம் நமக்கானதாகவே அமையும் இது சாத்தியப்பட வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த உறுதியான போராட்டம் வேண்டும்.

ஏழு கோடி தமிழர்கள் கொதித்தெழுவதன் மூலமே இந்தியாவின் கள்ளமௌனத்தை கலைக்க முடியும். இந்தியா தனது கள்ளமௌனத்தை கலைத்துவிட்டால் உலகநாடுகள் தமிழர் பிரச்சினையில் தலையிடுவதில் தடையிருக்காது.

சுதந்திர தமிழீழ குடியரசை நோக்கிய போராட்டத்தின் இயங்குவிசை ஒன்றுபட்ட தமிழக எழுச்சியிலேயே தங்கியுள்ளது. அந்த விசையை முறுக்கி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்த வேண்டிய வரலாற்றுக் கடமை மாணவர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. உங்களால் மட்டும்தான் முடியும்.

உங்களது போராட்டங்களின் தொடர்நிகழ்வாகவே சுதந்திர தமிழீழத்திற்கான பாதை திறக்கப்படும். அதனால் சதிகள் துரோகங்கள் அடக்குமுறைகள் எதுவந்தாலும் எதிர்கொள்ளும் வலிமையை திரட்டி போராடுங்கள்.

புலம்பெயர் தமிழ் இளையேரது கைகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை கையளித்துவிட்டு உங்கள் ஒவ்வொரு அசைவையும் தலைவர் பிரபாகரன் உற்றுநோக்கியவாறு உள்ளார். அதனை மனதில்நிறுத்தி களமாடுங்கள் வெற்றி நிச்சயம்.

“… தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேசவிடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகின்றேன். அத்துடன் தங்களது தாரள உதவிகளையும் வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்…” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

- ஈழம் போய்ஸ்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 6:10 pm

நல்ல பகிர்வு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 13, 2013 6:48 pm

சூப்பருங்க நல்ல பகிர்வு , நன்றி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 10:57 am

நல்ல பதிவு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக