புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
46 Posts - 40%
prajai
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
2 Posts - 2%
kargan86
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%
jairam
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
8 Posts - 5%
prajai
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%
jairam
அமில அவலம்! Poll_c10அமில அவலம்! Poll_m10அமில அவலம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமில அவலம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 26, 2013 11:16 am

கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம்தேதி அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட, மூன்று மாதங்களாக மருத்துவமனையில்சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் பொறியியல் பட்டதாரிப்பெண் விநோதினி, நோய்த்தொற்று காரணமாக இறந்தார். அதனைத் தொடர்ந்துதற்போது இரண்டாவது சம்பவமாக சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இன்னொரு இளம்பெண் வித்யா, அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் இறந்துள்ளார். விநோதினி ஒருஆணின் கைக்கிளையால் (ஒருதலைக் காதல்) அமிலவீச்சுக்கு ஆளானவர். வித்யாவோ, திருமணம் உடனே நடைபெறாமல் தள்ளிப்போவதற்காகத் தாக்கப்பட்டவர்.
காதலுக்கு சம்மதிக்கவில்லை; மணம்புரிய விரும்பவில்லை; மணமுறிவுக்கு உடன்படவில்லைஆகியவைதான் பெண்கள் மீதான அமில வீச்சுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாழ்நாள்முழுதும், சில தருணங்களில் பார்வை இழப்புடனும், சில தருணங்களில் முகம் சிதைந்தும் நடமாடுவது என்பது, அவரை ஒவ்வொரு வினாடியிலும் ஒவ்வொரு நாளிலும் நரக வேதனையில் வாழச்செய்வதாகும். ஒரு பெண்ணைக் கொல்வதைவிட மிகக் கொடிய செயல் அமில வீச்சு.
2008-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவிகள் மீது கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர், தனது இரு நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் சென்று அமிலம் வீசித் தாக்கியதில், காதலிக்க மறுத்த பெண் மட்டுமின்றி, வாகனத்தில் உடன்சென்ற பெண்ணுக்கும் முகம் சிதைந்தது.
இந்த வழக்கில், போலீஸாரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத்தப்பிச்செல்ல முயன்ற அந்த மூவரும் அடுத்த நாளே"என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். அது "போலி என்கவுன்டர்' என்று குற்றவாளிகளின் பெற்றோரும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், வாரங்கல் காவல் கண்காணிப்பாளருக்கு கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மலர்க்கொத்துகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.
அமில வீச்சுக்குக் கடும் தண்டனைகள் இல்லாத அந்த நேரத்தில், இத்தகைய"என்கவுன்டர்', பெண்கள் அமைப்புகளால் நியாயப்படுத்தப்பட்டதை சற்று வேதனையுடன் புரிந்துகொள்ள முடிந்தது. தற்போது அமலுக்கு வந்துள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த அவசரச் சட்டத்தில்,அமில வீச்சில் உடல்பாகங்கள் சேதமடைந்தால்10 ஆண்டுகள் சிறை; வெறும் அமிலவீச்சு முயற்சி, மோசமானபாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகள்வரை சிறைஎன்று பரிந்துரைந்திருக்கிறது வர்மா கமிஷன்.
அமில வீச்சு என்பது கொலைக் குற்றத்தைவிட மிகக்கொடியது.இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஒன்றாகக் கலந்து பேசி, அமில விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு காண வேண்டும் என்று கூறியது. ஆனால் அதற்கான முயற்சியில் எந்தவொரு மாநிலமும் முனைப்புடன் இறங்கியதாகத் தெரியவில்லை. வித்யாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலும்கூட, அமில விற்பனைக்குக் கட்டுப்பாடுஉண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
"ராஜதிராவகம்' பொதுவாக நகைக்கடைகளில் மட்டுமே இருக்கும். அதற்கு அடுத்தபடியாக கல்லூரி, மேனிலைப் பள்ளிகளில் வேதியியல் ஆய்வுக்கூடத்துக்காக நைட்ரிக் ஆசிட், சல்பூரிக் ஆசிட் வாங்கப்படும். நைட்ரிக் அமிலம் மிகஅதிகமாக நீர்த்த நிலையில், கழிவறைகள் கழுவும் திரவமாக விற்கப்படுகிறது. இவற்றின் விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லை. யார் யார் வைத்திருக்கலாம் என்பதற்கும் நிபந்தனைகள் இல்லை. விற்பனையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெரியும் என்றும், புதிய ஆட்களுக்குத் தருவதில்லை என்றும் கூறினாலும், யார் யார் அமிலம் வைத்திருக்கலாம் என்று சட்டம் வரையறுக்கவில்லை. அதனால், அமில விற்பனைக்குக்கட்டுப்பாடு கொண்டுவர வேண்டியது இன்றியமையாதது.
அமில வீச்சு இல்லாமல் வேறு வகையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாதா என்ற கேள்வி எழலாம். கத்தியால் குத்தியும், தீயினால் சுட்டும் ஏற்படுத்தும் காயங்களையும்விட மோசமானது அமில வீச்சு. இது தசை முழுவதையும் அழித்து எலும்புகளையும் அரித்துச்செல்லும் தன்மை உடையது. ஆகவேதான் அமில விற்பனை, பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.
அமில வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு "பிளாஸ்டிக் சர்ஜரி', மனநல ஆலோசனை, வேலைவாய்ப்பு ஆகியவை இன்றியமையாதவை. அமிலவீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும் அமைப்புகள் சில இருந்தாலும், இதில் அரசின் நிதியுதவி இல்லாமல், பாதிக்கப்பட்டவர் முழு சிகிச்சையைப் பெறுவது இயலாது. இதற்கான சிகிச்சைகள் மிகச் செலவு மிக்கவை. இந்த விஷயத்திலும்ஒரு பொதுவான விதியை அரசு உருவாக்கியே தீரவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதற்கு, மூன்று மாதங்கள்கழித்து இறந்த விநோதினி மற்றும் 30 நாள்கள் கழித்துஇறந்த வித்யா இருவரும் சாட்சி. இவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி அரசு திட்டத்தில் இப்போது இல்லை.
அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம்.இது தெரிந்தும் செயல்படாமல் இருக்கிறார்களே, அவர்களும்தான் வினோதினி, வித்யா போன்றவர்களின் மரணத்திற்குக் காரணம்!
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Feb 26, 2013 12:11 pm

அரசும், காவல்துறையும், அரசியல்வாதிகளும் கண்மூடிகளாக இருந்தால் இவ்வாறான குற்றச் செயல்கள் இலகுவாக நடைபெறும்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 12:25 pm

அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம்
உண்மை உண்மை, ஆனால் அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவர்கள் இருந்தும், உபகரணங்கள் இல்லை.
உதாரணம் என் அண்ணா காது மூக்கு தொண்டை நிபுணர் - சென்னையில் பெரிய மருத்துவமனையில் பணியாற்றுகிறார், சிறந்த சிகிச்சை அளிக்க அவரே 3 லட்ச ரூபாய் செலவில் (சொந்த) உபகரணங்கள் வாங்கி செய்து வருகிறார். இதற்கு அவருக்கு ஏகப்பட்ட சொந்த பிரச்சனைகள் உண்டு, இதையெல்லாம் தாண்டி தான் சேவை செய்து வருகிறார்.
அவர்களின் மாத சம்பளமும் மிக குறைவு, என்னில் பாதி தான் எனது அண்ணன் வாங்குகிறார் இதற்கு என்ன செய்வது, அரசு தான் இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டும்....... பார்க்கலாம் ரிலாக்ஸ்




அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 26, 2013 12:33 pm

chinnavan wrote:உண்மை உண்மை, ஆனால் அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவர்கள் இருந்தும், உபகரணங்கள் இல்லை.உதாரணம் என் அண்ணா காது மூக்கு தொண்டை நிபுணர் - சென்னையில் பெரிய மருத்துவமனையில் பணியாற்றுகிறார், சிறந்த சிகிச்சை அளிக்க அவரே 3 லட்ச ரூபாய் செலவில் (சொந்த) உபகரணங்கள் வாங்கி செய்து வருகிறார். இதற்கு அவருக்கு ஏகப்பட்ட சொந்த பிரச்சனைகள் உண்டு, இதையெல்லாம் தாண்டி தான் சேவை செய்து வருகிறார்.
அவர்களின் மாத சம்பளமும் மிக குறைவு, என்னில் பாதி தான் எனது அண்ணன் வாங்குகிறார் இதற்கு என்ன செய்வது, அரசு தான் இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டும்....... பார்க்கலாம் ரிலாக்ஸ்
சூப்பருங்க நன்றி பெருமையாக உள்ளது சின்னவன் , உங்கள் சகோதரர் போல மருத்துவர்களும் உள்ளதால் தான் இன்னும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் இருக்கிறது இல்லையென்றால் எப்போவோ மூடியிருப்பார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 12:36 pm

நிறைய பேர் உள்ளார்கள் தல, சில மருத்துவர்களின் அலட்சியம் தான்




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 6:15 pm

இந்த அவலம் நிற்க சட்டம் வரப்போகிறது மகிழ்ச்சி




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக