புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
3 Posts - 5%
prajai
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 4%
viyasan
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
1 Post - 2%
Rutu
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
1 Post - 2%
சிவா
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 13%
Rutu
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 8:13 am

தொழில் நேர்மை எல்லாத் துறைகளிலும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாகஅநீதியை அம்பலப்படுத்த வேண்டிய சட்டத் துறையிலேயே இத்தகைய நேர்மையின்மை புகுந்துவிட்டது. இதற்கு அடிப்படைக் காரணம் படித்தவர்கள் மத்தியில் நாணயத்தையும், நேர்மையையும்விட, பதவியும் பணமும்தான் பிரதானம் என்கிற மனப்போக்கு மேலெழுந்து விட்டதுதான்.
-
அண்மையில், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடும் வழக்குரைஞர் ஏ.கே. சிங் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்குக் காரணம், இவர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய "எதிரி'யான (குற்றஞ்சாட்டப்பட்டவர்)"யுனிடெக்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம், சி.பி.ஐ.-க்கு கிடைத்துள்ள தகவல்கள், அவரைக் குறுக்குவிசாரணை செய்வதற்கான கிடுக்கிப்பிடி போடும் கேள்விகள் குறித்து விவரித்துள்ளதாகத் தெரியவந்திருப்பதுதான்.
-
இருவரும் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு தற்போது தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த வழக்கில் மற்றொரு"எதிரி'யான ஷாகித் பல்வாவுடன் சி.பி.ஐ. வழக்குரைஞர் பேசியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்போதைய கவலையெல்லாம் சி.பி.ஐ. வழக்குரைஞர் கட்சி மாறியது எப்போது? இதுவரை நடைபெற்ற வழக்கின் போக்கில் இது எந்த அளவுக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.
-
அரசு வழக்குரைஞர்கள்"எதிரி'க்கு ஆதரவாக மாறக் காரணம், அரசு தரும் சம்பளம் குறைவு என்பதாக ஒரு கருத்துநிலவுகிறது. "எதிரி'யின் வழக்குரைஞர் ஒரு மணி நேரத்துக்கு சில லட்சங்கள் சம்பளம் வாங்கும்போது, இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவு என்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதற்காக விலைபோய்விடுவதா? பணத்தைவிட பதவியின் கௌரவம் முக்கியம் என்பதுகூடவா இந்த மெத்தப் படித்த மேதாவிகளுக்கும், அதிகாரம் படைத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது?
-
ரூ.1.76 லட்சம் கோடி வரை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், "எதிரி'கள் எத்தகைய பணக்காரர்களாக இருப்பார்கள் என்பதும், இவர்கள் மிக அதிக சம்பளம் கொடுத்து வழக்குரைஞர்களை நியமிப்பார்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதானே? அவர்களுக்கு இணையாக அரசு வழக்குரைஞர்களுக்கும் சம்பளம் கேட்பது நியாயமாகுமா?
புலனாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும்கூட சம்பளம் குறைவுதான். அவர்களும் விலைபோவது என்றால், என்ன ஆதாரங்கள் கிடைக்கும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைவிடஅதிகமாக வழக்குரைஞர்கள்"2ஜி' அலைக்கற்றை வழக்கில் சம்பாதிக்கக்கூடும். அதற்காக, நீதிபதிகளும் விலைபோனால் என்ன ஆகும்?
-
மக்கள் பணம் கொள்ளை போகிறது, அவ்வாறு கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிற தார்மிக ஆத்திரமும், கடமை உணர்வும் இல்லாதவர்களால் புலனாய்வும் செய்ய முடியாது, வழக்காடவும் முடியாது. சம்பளம் குறைவு என்பது ஒரு காரணம் அல்ல. தொழில் நேர்மையை மறக்கும் அளவுக்குப் பேராசை அதிகம் உள்ளவர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்குக் காரணம் அவர்களுக்குப் பரிந்துரைத்த அல்லது பதவி வாங்கிக் கொடுத்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும்.
-
இதுபோல, எதிர்மனுதாரரின்"மறைமுக' வழக்குரைஞராக மாறும் அரசு வழக்குரைஞர்கள் சரியாக வாதிடவில்லை என்று விலக்கப்படுவது உண்டே தவிர,தற்போது வழக்குரைஞர் ஏ.கே.சிங் - சஞ்சய் சந்திரா உரையாடல் பதிவுபோல, யாரும் சிக்கியது இல்லை. இந்த விவகாரத்திலும், இது உண்மை என்று தடயவியல் ஆய்வில் தெரியவந்தால், இவர்மீது எத்தகைய நடவடிக்கையை "பார் கவுன்சில்' மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்த விவகாரம், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பதால் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆனாலும் சாதாரண நிலைகளில், அரசு சாராத வழக்குகளிலும்கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் விலைபோக நேர்வதும், சட்டத்தின் ஓட்டைகளைத் திறந்துவிட்டு குற்றவாளிகளைத் தப்ப விடுவதும் அரசு வழக்குரைஞர்களின் சாமர்த்தியமாகக் கருதப்பட்டால், அது மிக மோசமான விளைவுகளுக்கு வழிகோல நேரிடும்.
தப்பாட்டம் ஆடும் வீரருக்கு "மஞ்சள் அட்டை' காட்டவும், களத்தைவிட்டு வெளியேற்றவும் விளையாட்டுப் போட்டிகளில்"ஆட்டநடுவர்' இருப்பதைப்போல, தொழிலுக்குக் களங்கம் விளைவிக்கும் வழக்குரைஞர்களை, அவர்களது வாதத்தை வைத்தே அடையாளம் காணவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும்"பார் கவுன்சிலால்' மட்டுமே முடியும்.
- வழக்குரைஞர்கள் எதிர்க்கட்சியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தொழில் தர்மம் அல்லஎன்பது பார் கவுன்சிலின் விதிகளில் ஒன்று. ஏ.கே. சிங் அந்த தர்மத்தை மீறியிருக்கிறார் என்பது தெளிவு.
கருப்பு அங்கிக்குள் புகுந்துவிட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு, நீதித்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டிய "பார் கவுன்சில்' பார்வையாளராக மாறிடாமல், இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளிவைக்காவிட்டால், நேர்மையும், தொழில் தர்மமும் உள்ள பெருவாரியான வழக்குரைஞர்கள் அனைவருக்குமே களங்கம் கற்பிக்கப்படும் சூழல் உருவாகும். பார் கவுன்சிலில் அரசியல் கலக்காமல் இருப்பதும், அரசுவழக்குரைஞர்கள் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு தவிர்க்கப்படுவதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
-
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்ஙணும் மேலோர்! -பாரதியார்
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 8:53 am

பாரதியார் சொன்னது போல் இன்று பொய்யகலத் தொழில் செய்து பிறர் போற்றிட வாழ்பவர் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வையகம் காப்பவ ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்கலந்து தொழில் செய்தே - பிறர்
தூற்றிட வாழ்பவர் எங்ஙணும் கீழோர்!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக