புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
1 Post - 1%
bala_t
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
1 Post - 1%
prajai
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
292 Posts - 42%
heezulia
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
6 Posts - 1%
prajai
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_m10குள்ள நரியும் சின்ன முயலும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குள்ள நரியும் சின்ன முயலும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat 12 Jan 2013 - 14:49

முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும்,​​ தந்திரமான குள்ள நரியும் இருந்தன.

பருவநிலை மாறியது.​ விரைவிலேயே வந்துவிட்டது குளிர் காலம்.​ பனிப்புயல் வீசியது.​ வானத்திலிருந்து சிறுசிறு பனித்துகள்கள் மழைபோல் கொட்டத்தொடங்கின.​ குளிரின் கடுமையால் முயலின் சாம்பல் நிறம் முற்றிலும் வெளுத்து,​​ பனி வெண்மையானது.

'இந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை.​ நான் அவசியம் ஒரு குடிசை கட்டிக்கொள்ளத்தான் வேண்டும்'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது முயல்.

அது கொஞ்சம் மரப்பட்டைகளைச் சேகரித்து வந்து வேலையைத் தொடங்கியது.​ வீடு கட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முயலைப் பார்த்து குள்ளநரி கேட்டது:' அடேய், முயல் பயலே,​​ நீ என்னதான் செய்துகொண்டிருக்கிறாய்?''

'நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய் குள்ளநரி அக்கா?​ நான் கதகதப்பாக வசிக்க ஒரு குடிசை கட்டிக்கொண்டிருக்கிறேன்.''

'ஆமாம், ​​ ஆமாம்.​ ரொம்ப நல்ல யோசனைதான்'' என்ற குள்ளநரி,​​ பிறகு தனக்குள் ரகசியமாகச் சொல்லிக்கொண்டது:​ "நாமும் ஏன் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடாது?​ ஆனால் நான் கட்டப்போகும் வீடு ஒரு பளிங்கு மாளிகையாக இருக்கும்.​ ஆமாம்,​​ நான் ஒரு அற்புதமான பளிங்கு அரண்மனைபோன்று என் வீட்டைக் கட்டுவேன்.​ முட்டாள்கள்தான் மரப்பட்டைகளால் வீட்டைக் கட்டுவார்கள்.​ ஹா...ஹா...ஹா...'

பிறகு அந்தக் குள்ள நரி,​​ பெரிய பெரிய பனிக்கட்டிகளைத் தூக்கிவரத் தொடங்கியது.​ ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பனிக்கட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது.

இரண்டு வீடுகளும் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன.​ முயலும்,​​ நரியும் அதனதன் வீட்டிற்குள் குடிபுகுந்தன.​ குள்ளநரி தன் பனிக்கட்டி வீட்டின் சன்னலில் அமர்ந்தபடி முயலை உற்றுப் பார்த்து,​​ "இந்த முயல் பயலைப்போல ஒரு மட சாம்பிராணி எங்காவது இருப்பானா!' என்று நினைத்து கேலிச் சிரிப்புச் சிரித்தது.​ "இவன் நாகரிகம் தெரியாத நாட்டுப்புறத்தான்!​ போயும் போயும் அந்த மரப் பட்டைகளை வைத்து வீடு கட்டியிருக்கிறானே,​​ என்ன ஒரு கோமாளித்தனம்!​ என்னுடைய வீடு தூய்மையாகவும்,​​ பளபளப்பாகவும் இருக்கிறது.​ இது உண்மையிலேயே ஒரு பளிங்கு அரண்மனைதான்.​ ராஜாக்களிடம்தான் இதுபோன்ற வீடு இருக்கும்.'

குளிர்காலம் இருக்கும்வரை நரிக்கு ஏதும் சிக்கலில்லை.​ இளவேனிற்காலம் வந்ததும்தான் தொடங்கியது பிரச்னை.​ அப்போது கதிரவன் வெப்பமாகப் பிரகாசிக்கத் தொடங்கினான்.​ குள்ளநரியின் அரண்மனை உருகித் தண்ணீராக ஓடியது.​ வீடு இல்லாமல் இனிமேல் என்ன செய்யும் அந்த நரி?​ ஒருநாள் முயல் புல் மேய்வதற்காக வெளியே சென்றது.​ அந்த நேரம் பார்த்து நரி,​​ முயலின் வீட்டிற்குள் நுழைந்தது.​ ​ ​

முயல் அங்கங்கே புல் மேய்ந்துகொண்டே மெதுவாக வீட்டிற்குத் திரும்பியது.​ அது தன் வீட்டுக் கதவைத் தள்ளியது.​ ஆனால் திறக்க முடியவில்லை.​ ​ அது மறுபடியும் கதவைத் தட்டத் தொடங்கியது.​ ​

' யார் அது?'' குள்ளநரி கோபத்துடன் மிரட்டியது.

'நரியக்கா,​​ நான்தான் சாம்பல் நிற முயல் வந்திருக்கிறேன்.​ கதவைத் திறங்கள்.''

'சாம்பல் முயலாவது,​​ சோம்பல் முயலாவது...​ யாராக இருந்தாலும் வெளியிலேயே கிட!​ '' குள்ள நரி சிடுசிடுப்புடன் சொன்னது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முயல் மறுபடியும் சொன்னது:​ 'நரியக்கா,​​ உங்கள் கிண்டல் பேச்சைக் கொஞ்சம் நிறுத்துங்கள்.​ என்னை உள்ளே விடுங்கள்.​ நான் தூங்கவேண்டும்.''

ஆனால் தந்திரமான குள்ள நரி உறுமியது.​ 'நான் உன்னை உதைத்து நொறுக்குவேன்,​​ அடித்து விளாசுவேன்.​ முயலே,​​ அதன் பிறகு உன்னைப் பழந்துணிபோல் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!''

முயல் அழுதுகொண்டே துயரத்துடன் அலைந்து திரிந்தது.​ வழியில் அது ஒரு ஓநாயைப் பார்த்தது.​ 'முயலே, எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டது ஓநாய்.​ ​

முயல் அழுதுகொண்டே சொன்னது:​ 'என் நிலை உனக்கு வந்தால் நீயும்கூட இப்படித்தான் அழுவாய்.​ எனக்கு மரப்பட்டைகளால் ஆன ஒரு வீடு இருந்தது.​ குள்ள நரிக்கு பனிக்கட்டியால் ஆன வீடு இருந்தது.​ அந்த நரியின் வீடு சூரிய வெப்பத்தால் உருகிக் கரைந்து காணாமல்போய்விட்டது.​ உடனே,​​ நரி திருட்டுத்தனமாக என் வீட்டிற்குள் நுழைந்துகொண்டது.​ அது இப்போது என் சொந்த வீட்டிற்குள்ளேயே என்னை உள்ளே விடமாட்டேன் என்று மிரட்டுகிறது.''

'நீ கொஞ்சம் பொறுமையாக இரு.'' ஓநாய் சொன்னது.​ 'நாம் இருவருமாகச் சேர்ந்து அதை வெளியே துரத்திவிடுவோம்.'' ​

' அய்யோ உன்னால் முடியாது ஓநாய் அண்ணா,​​ முடியவே முடியாது.​ அந்த நரி உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுள்ளது.''

'அட! ​ நான் என்ன செய்கிறேன் என்று நீ பார்க்கத்தானே போகிறாய்.​ அதை நான் துரத்தியடிக்காவிட்டால் என் பெயர் ஓநாய் அல்ல!​ என் பெயரை சுண்டெலி என்று மாற்றி வைத்துக்கொள்கிறேன்.''

முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.​ நரியை விரட்டியடிப்பதற்காக அவை இரண்டும் புறப்பட்டன.​ சற்று நேரத்தில் வீட்டையடைந்தன.​ ​

'ஏய்... ​ திமிர்பிடித்த நரியே,​​ மரியாதையாக வெளியே வந்துவிடு!'' ஓநாய் சத்தமாகச் சொன்னது.​ ​ஆனால் தந்திரமான நரி பதிலுக்கு மிரட்டியது:​ 'ஓநாயே,​​ நான் வெளியே வந்தேனென்றால் உன்னை அடித்துத் துவைத்துவிடுவேன்,​​ பின்னியெடுத்துவிடுவேன்,​​ அப்புறம் உன்னைக் கந்தல் கந்தலாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!'' ​

'அய்யய்யோ!​ நரி மிகவும் கோபமாக இருக்கிறது போலிருக்கிறது'' என்று மெதுவாகச் சொன்ன ஓநாய்,​​ வாலைப் பின்னங்கால்களுக்குள் ஒடுக்கிக்கொண்டது.​ பிறகு பயத்தில் அலறியபடியே ஒரே பாய்ச்சலாக ஓடிச் சென்றது.​ ​

பிறகு எருது ஒன்று முயலைப் பார்த்தபோது கேட்டது:​ 'நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் சின்ன முயலே?''

முயல், ​​ எருதிடம் எல்லா விவரத்தையும் சொன்னது.​ முயலின் கதையைக் கேட்ட பிறகு சொன்னது எருது:​ 'கவலைப்படாதே முயலே.​ நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை அங்கிருந்து விரட்டியடித்துவிடுவோம்.'' முயல், 'உன்னால் முடியாது'' என்று தடுத்தும் கேளாமல் எருது நரி இருக்கும் வீட்டிற்கு வந்தது.

'ஏய்... ​ நரியே, வெளியே வா!'' எருது அதிகாரமாக அழைத்தது.​ ஆனால் நரியின் மிரட்டலில் அதுவும் பயந்து ஓடி ஒளிந்தது.​ பிறகு, முயலுக்கு உதவுவதாகச் சொன்ன கரடியும், நரியின் வசவைக் கேட்டு பாய்ந்தோடிச் சென்றது.​ என்ன செய்வதென்று தெரியாமல் முயல் ஒரு மண்மேட்டின் மீது அமர்ந்து அழத் தொடங்கியது.​ அப்போது, வாள் ஏந்தியபடி வந்தது ஒரு சிவப்புக் கொண்டைச் சேவல்.​ ​ அது முயலிடம் கேட்டது:

'முயலே!​ நீ எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?''

தன் கதையை மறுபடியும் சொல்லி அழுதது முயல்.

சேவல் சொன்னது:​ 'கொஞ்சம் பொறு.​ நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை உன் வீட்டிலிருந்து விரட்டியடித்துவிடுவோம்.''

'ஓ... ​ சிவப்புக் கொண்டைச் சேவலே,​​ உன்னால் அது முடியாது.​ முதலில் ஓநாய் வந்தது.​ நரிக்குப் பயந்து​ அது ஓடிவிட்டது.​ பிறகு எருது வந்தது.​ அதுவும் அஞ்சி நடுங்கி பாய்ந்தோடிவிட்டது.​ கரடியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.​ இப்போது நீ எனக்கு உதவுகிறேன் என்கிறாய்.​ நீயும் தோற்றுத்தான் போவாய்.''

'சந்தேகப்படாதே முயலே.​ நாம் முயற்சி செய்து பார்க்கலாம்'' என்றது சேவல்.​ அவை இரண்டும் நரியை விரட்டியடிக்கப் புறப்பட்டன.​ முயலின் வீட்டை அடைந்ததும் சேவல் எழுச்சியான குரலில் பாடலொன்றைப் பாடியது:

'செந்நிறக் கொண்டையன் தலையுயர்த்தி வருகிறான்!

பந்தாடப்போகிறான் பண்பற்ற நரியையே!வீட்டைத் திறந்து முயலையும் குடியேற்றப் போகிறான்!

நரித் தோலை உரித்து தோரணமும் கட்டுவான்!''

குள்ள நரி பயந்து நடுங்கியது.​ அது கெஞ்சும் குரலில் சொன்னது:​ 'திரு செந்நிறக் கொண்டையன் அவர்களே,​​ ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள்.​ ஒரே ஒரு நிமிடம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் அய்யா!​ நான் என் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறேன்...''

ஆனால் சேவல் தொடர்ந்து வீரத்துடன் பாடியது:

'சேவல் வருகிறான் வாள்கொண்டு!​ ​

இரு துண்டாய் ஆகுமே உன் தலையும்!''

குள்ள நரி நைசாக கதவைத் திறந்தது.​ பிறகு விருட்டென்று தாவி ஓட்டம் ஓட்டமாக ஓடிப்போனது.​ அதன் பிறகு சேவலும் முயலும்,​​ அந்த வீட்டில் என்றும் இணைபிரியாத நண்பர்களாக வசித்தன.
---
நன்றி தினமணி!



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat 12 Jan 2013 - 14:54

நல்ல கதை அண்ணா.......... நன்றி



குள்ள நரியும் சின்ன முயலும்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 12 Jan 2013 - 17:17

கதை நன்று அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக