புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள்
Page 1 of 1 •
எனது வலைப்பூவில் இன்று நாள் எழுதிய கட்டுரை. ஈகரை உறவுகளுக்காக இங்கே.
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_24.html
நண்பர்களே வணக்கம். இங்கே நான் எழுதியிருப்பது பெரியரைப்பற்றியல்ல. சில உண்மைச் சம்பவங்களைப்பற்றி .!
சமூக சீர்திருத்தம் செய்தல், சாதிமுறைப் பிரிவினைகளை முற்றிலுமாக ஒழித்தல், மூட நம்பிக்கைகளை களைதல், பெண்விடுதலைக்காக பாடுபடுதல் என்ற மிகபெரும் கொள்கைகளோடு வாழ்ந்து, மூட நம்பிக்கைகளின் மேல் மிகப்பெரும் புரட்சியை உலகிற்கு அறிமுகம் செய்த வைக்கம் வீரர் ஐயா ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவு நாளான இன்று (24/12/12) "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற தலைப்பில் நான் இந்த கட்டுரை எழுதுவது சிலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். பலர் இந்த தலைப்பை ஆதரிக்கவும் செய்யலாம். தலைப்பிற்குள் போகும்முன் முதலில் ஐயா ஈ.வெ.ரா மற்றும் புரட்சித்தலைவர் எம். ஜி . ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
எதற்காக இந்த பதிவு
மதுரை மாவட்டம் சின்னப்பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற முடிதிருத்தும் முதியவர், தனது முதுமையின் காரணமாக அந்த தொழிலை செய்ய இயலாததால் அந்த ஊர் தலைவர் மற்றும் சிலரால் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த செய்தியை "புதியதலைமுறை" தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. அதோடு நிற்காமல் சுமார் பத்துநாட்களுக்கு முன் அதைப்பற்றிய விவாதத்தை "நேர்பட பேசு" என்ற அவர்களின் நிகழ்ச்சியில் ஒரு விவாதமும் நடத்தினர்.
அதற்கு சிறப்பு விருந்தினராக கோயம்பத்தூர் சாதிச் சங்கத்தைச்(கட்சி) சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார்.
ஆரம்பம் முதல் இறுதிவரை மேற்போக்காக சாதிக் கலவரம் கூடாது என்று அவர் கூறினாலும், மேல் சாதிக் காரர்கள் எந்த தவறையும் செய்வதில்லை, கீழ் சாதிக்காரர்களை யாரும் ஒடுக்குவதுமில்லை என்று அவரது வார்த்தைகள் யாவும் சாதியை ஆதரிப்பதாகவே இருந்தது. இதோடு நிறுத்தி இருந்தால் இந்த பதிவை நான் எழுதுவதற்கான தேவையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.
ஆனால் அவர் ஒரு வரியை மேற்கோள் கட்டினார் "எந்த கிராமத்திலாவது ஒரு கீழ் சாதிக்காரன் ஒடுக்கப்படுகிறான் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள், ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்". யாரும் அப்படி செய்வதில்லை என அப்பட்டமாக தனது வாதத்தை வைத்தார். எனது சொந்த ஊர் ஒரு சிறு கிராமம் என்பதால், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வெறும் வாய் பேசும் இது போன்ற சாதியவாதிகளுக்கு எனது கிராமத்தில் நடந்த சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டி பதிலடி தரவே இந்த பதிவை எழுதுகிறேன்.
அப்படி என்ன நடந்தது ..?
எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள ஒரு கிராமம். நான் பொறியியல் முடித்துவிட்டு கடைசி அஞ்சு வருசமா வெளியூர்ல வேல செய்யறதால அப்பப்ப வீட்டுக்கு போறப்ப ஊர்ல என்ன நடந்ததுன்னு என் அம்மாட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். அதில சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எங்க ஊர்ல ஒரு சில கீழ்சாதி குடும்பங்கள் இருந்தது(கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற) அதுல சில குடும்பங்கள் காலப்போக்கில் வெளியூர்ல போயி நிரந்தரமாக தங்கிட்டாங்க. ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அதுல ஒரு பையன். ரொம்ப நல்லா படிப்பான். அவனுக்கு என்ன கெட்ட காலமோ, ஒரு பொண்ணோட பழக்கம். அந்த பெண் மேல்சாதி (மேல்சாதி என்று சொல்லப்படுகின்ற) பழக்கத்தோட இருந்தா பரவாயில்ல. ரெண்டு பெரும் எல்லை மீறிட்டாங்க.
ஆனா இந்த தவறுக்கு ஏதோ அந்த பையன் மட்டும் தான் காரணம் என்கிற முறையில், அவனை அந்த பெண்ணின் சாதிக்காரர்கள் சேர்ந்து அடி பிரித்துவிட்டனர். ஊரை விட்டு விரட்டினர். அந்த பையன் குடுப்பம் காவல்நிலையம் போனதால், ஒருவழியாக ஏதோ செய்து சரிகட்டி இந்த விவகாரம் முற்றுப்பெற்றது. இப்ப அந்த குடும்பம் பக்கத்து ஊர்ல இருகாங்க.
சமீபத்தில், அதே கிராமத்துல நாங்க ஒரு வீடு கட்டி பால் காச்சினோம். அதற்கு அந்த பையனோட சித்தப்பா வந்திருந்தார். சாப்ட்டு முடிஞ்சு வாறவங்களுக்கு ஒரு தட்டில் வெத்தள பாக்கு வைத்து நான் கொடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் வந்தார். அவரிடமும் தட்டை நீட்டினேன். அவர் "இல்ல தம்பி நீங்களே எடுத்து கொண்டுங்கனு" சொன்னேர். இல்ல நீங்களே எடுதுக்கங்கனு சொன்னேன். நீங்க பண்றது உங்களுக்கு வேணும்னா சரியா இருக்கலாம். இங்க யாரும் ஏத்துக்க மாட்டங்க என்றார். மனம் வருந்தினேன்.
அதேபோல் ஒருமுறை எங்க ஊர்ல இருந்து வெளியூர் போன மேல்சாதி பையன் ஒருத்தன், கீழ் சாதிப்பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தான். அவன்ட யாரும் பேசல. அவங்க வீட்டுக்கும் யாரும் போறதுல்ல. இதனால அவன் மறுபடியும் மனைவிய கூட்டிகிட்டு வெளியூர் போயிட்டான். அவனோட அப்பா இறந்ததுக்கு அவன் வந்தான். கிராமத்து கலாச்சாரம் தெரிந்தவங்களுக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கும். இறந்தவங்க வீட்டின் முன், அந்த வீட்டு ஆண்கள்/பங்காளிகள் நின்று வருவோருடன் கை தழுவுதல் வழக்கம். ஆனா சொந்த அப்பா இறந்ததர்க்கே அவனை யாரும் நிற்க விடல. அத்தனை சாதி வெறி. இப்போது அவன் ஊருக்கே வருவதில்லை.
இப்படி மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பொண்ண திருமணம்செஞ்சா, அதிகபட்சம் நான் மேல சொன்ன மாதிரி நடக்கும். ஆனா இதையே ஒரு மேல்சாதி பொண்ணு செஞ்சா அவ்ளோ தான். என்ன நடக்கும் தெரியுமா .? அவள எப்படியும் கண்டுபிடிச்சு கட்டின தாலிய பிடிகிட்டு மேல்சாதி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைப்பாங்க (இதுமாதிரி நடக்குறப்ப, ரொம்பநாளா பொண்ணே கெடைக்காத ஒருத்தனுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிடும்). அதே போல் எனது பள்ளி பருவத்தில், கீழ் சாதி மனிதர்களுக்காக தனியா தேனீர் கடைகளில் தேநீர் தர அலுமினிய பாத்திரம் தந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.
அதோடு கிராமத்திற்குள் கீழ்சாதி மக்கள் வரும்போது தங்களின் காலணிகளை கலட்டி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலுடன் வருவது வழக்கம். நான் பொறியியல் முடிக்கும் வரை இதை அறிவேன். அதற்கு பிறகு வேலைக்காக வெளியூர் வந்ததால் இந்த நடைமுறை இன்னும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
எங்க கிராமமும் பக்கத்து கிராமமும் சேர்ந்து மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவாங்க. கோவில் இருப்பது பக்கத்து ஊர்ல. அந்த கோவில் திருவிழா மூணு வருசமா நடக்கல. காரணம் என்ன தெரியுமா .? கோவில் பூசாரியோட பொண்ணு, மேலே சொன்ன ஒரு சாதிக்கார பையன கல்யாணம் பண்ணிகிட்டா. இதுக்கெல்லாம் கோவில் திருவிழாவ நிறுத்துவாங்கலானு நீங்க கேக்கலாம். ஆனா நிறுத்தினாங்க. சில பஞ்சாயத்துக்கப்பறம் திருவிழா நடந்தது.
இந்த உதாரணங்களை வைத்து, எனது ஊர் ஒரு அடிமட்ட கிராமம் இதைவிட கேவலமா யாரும் செய்யமாட்டங்கனு முடிவுக்கு வரவேண்டாம். ஏன்னா இதவிட பின்தங்கிய மோசமான நிகழ்வுகள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சாதிகளின் பேரில். இவற்றை வைத்து பல சாதிக்கட்சிகளும் சாதிச்சங்கங்களும் குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு ஞாபகத்தில் இருந்த சில நிகழ்வுகளை மட்டுமே இங்கே மேற்கோள் காட்டினேன்.
இத்தனை நிகழ்வுகளை நான் கூறியதால், இவன் கீழ்சாதிக்காரனாக இருப்பான் அதனால் தான் இத்தனை குறைகளைக் கூறுகிறான் என்று எனக்கு பட்டம் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், இங்கே மேல்சாதி என்றுயாரைச் சுட்டிக் காட்டினேனோ அதே சமூகத்தில் இருந்து வந்தவன்தான் நான். "புதியதலைமுறை" தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த பெரியவரின் சமூகத்தைச் சேர்ந்தவன் (மனிதம் தவிர எதிலும் நம்பிக்கை இல்லாத, சாதிய முறைகளில் முற்றிலும் உடன்பாடு கொள்ளாத இளைஞன். ஆனால் சில உண்மைகளை மேற்கோள் காட்டவே இங்கு அதைக் குறிப்பிடும் படியாக ஆனது. மன்னிக்கவும்).
நான் மேலே சொன்னதுபோல், தொலைக்கட்சியில் வாதம் செய்த அந்த மேல்சாதியைச் சேர்ந்தவர், ஒரு கிராமத்தில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச்சொன்னர். நான் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன்.
இது சாதி கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் சொகுசாக வாழ "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற எண்ணத்தோடு தொலைக்கட்சியில் பேசுவதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, சரி என்று மனதில் ஏற்றிக்கொண்டு உங்கள் பின்னால் திரிய நாங்கள் மண்ணைத் தின்னும் மடையர்கள் அல்ல. இந்த தலைமுறை இளைஞர் பட்டாளாம் உங்களை நம்பும் ஈனப் பிறவியுமல்ல. காலம் கடந்து கொண்டிருக்கிறது. உங்கள் சாதியையும் சாதி வெறிகளையும் எலும்பொடித்து முடமாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எச்சரிக்கையாக இருங்கள். எமன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
நன்றி..!
அன்புடன்,
அகல்
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_24.html
நண்பர்களே வணக்கம். இங்கே நான் எழுதியிருப்பது பெரியரைப்பற்றியல்ல. சில உண்மைச் சம்பவங்களைப்பற்றி .!
சமூக சீர்திருத்தம் செய்தல், சாதிமுறைப் பிரிவினைகளை முற்றிலுமாக ஒழித்தல், மூட நம்பிக்கைகளை களைதல், பெண்விடுதலைக்காக பாடுபடுதல் என்ற மிகபெரும் கொள்கைகளோடு வாழ்ந்து, மூட நம்பிக்கைகளின் மேல் மிகப்பெரும் புரட்சியை உலகிற்கு அறிமுகம் செய்த வைக்கம் வீரர் ஐயா ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவு நாளான இன்று (24/12/12) "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற தலைப்பில் நான் இந்த கட்டுரை எழுதுவது சிலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். பலர் இந்த தலைப்பை ஆதரிக்கவும் செய்யலாம். தலைப்பிற்குள் போகும்முன் முதலில் ஐயா ஈ.வெ.ரா மற்றும் புரட்சித்தலைவர் எம். ஜி . ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
எதற்காக இந்த பதிவு
மதுரை மாவட்டம் சின்னப்பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற முடிதிருத்தும் முதியவர், தனது முதுமையின் காரணமாக அந்த தொழிலை செய்ய இயலாததால் அந்த ஊர் தலைவர் மற்றும் சிலரால் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த செய்தியை "புதியதலைமுறை" தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. அதோடு நிற்காமல் சுமார் பத்துநாட்களுக்கு முன் அதைப்பற்றிய விவாதத்தை "நேர்பட பேசு" என்ற அவர்களின் நிகழ்ச்சியில் ஒரு விவாதமும் நடத்தினர்.
அதற்கு சிறப்பு விருந்தினராக கோயம்பத்தூர் சாதிச் சங்கத்தைச்(கட்சி) சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார்.
ஆரம்பம் முதல் இறுதிவரை மேற்போக்காக சாதிக் கலவரம் கூடாது என்று அவர் கூறினாலும், மேல் சாதிக் காரர்கள் எந்த தவறையும் செய்வதில்லை, கீழ் சாதிக்காரர்களை யாரும் ஒடுக்குவதுமில்லை என்று அவரது வார்த்தைகள் யாவும் சாதியை ஆதரிப்பதாகவே இருந்தது. இதோடு நிறுத்தி இருந்தால் இந்த பதிவை நான் எழுதுவதற்கான தேவையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.
ஆனால் அவர் ஒரு வரியை மேற்கோள் கட்டினார் "எந்த கிராமத்திலாவது ஒரு கீழ் சாதிக்காரன் ஒடுக்கப்படுகிறான் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள், ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்". யாரும் அப்படி செய்வதில்லை என அப்பட்டமாக தனது வாதத்தை வைத்தார். எனது சொந்த ஊர் ஒரு சிறு கிராமம் என்பதால், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வெறும் வாய் பேசும் இது போன்ற சாதியவாதிகளுக்கு எனது கிராமத்தில் நடந்த சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டி பதிலடி தரவே இந்த பதிவை எழுதுகிறேன்.
அப்படி என்ன நடந்தது ..?
எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள ஒரு கிராமம். நான் பொறியியல் முடித்துவிட்டு கடைசி அஞ்சு வருசமா வெளியூர்ல வேல செய்யறதால அப்பப்ப வீட்டுக்கு போறப்ப ஊர்ல என்ன நடந்ததுன்னு என் அம்மாட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். அதில சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எங்க ஊர்ல ஒரு சில கீழ்சாதி குடும்பங்கள் இருந்தது(கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற) அதுல சில குடும்பங்கள் காலப்போக்கில் வெளியூர்ல போயி நிரந்தரமாக தங்கிட்டாங்க. ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அதுல ஒரு பையன். ரொம்ப நல்லா படிப்பான். அவனுக்கு என்ன கெட்ட காலமோ, ஒரு பொண்ணோட பழக்கம். அந்த பெண் மேல்சாதி (மேல்சாதி என்று சொல்லப்படுகின்ற) பழக்கத்தோட இருந்தா பரவாயில்ல. ரெண்டு பெரும் எல்லை மீறிட்டாங்க.
ஆனா இந்த தவறுக்கு ஏதோ அந்த பையன் மட்டும் தான் காரணம் என்கிற முறையில், அவனை அந்த பெண்ணின் சாதிக்காரர்கள் சேர்ந்து அடி பிரித்துவிட்டனர். ஊரை விட்டு விரட்டினர். அந்த பையன் குடுப்பம் காவல்நிலையம் போனதால், ஒருவழியாக ஏதோ செய்து சரிகட்டி இந்த விவகாரம் முற்றுப்பெற்றது. இப்ப அந்த குடும்பம் பக்கத்து ஊர்ல இருகாங்க.
சமீபத்தில், அதே கிராமத்துல நாங்க ஒரு வீடு கட்டி பால் காச்சினோம். அதற்கு அந்த பையனோட சித்தப்பா வந்திருந்தார். சாப்ட்டு முடிஞ்சு வாறவங்களுக்கு ஒரு தட்டில் வெத்தள பாக்கு வைத்து நான் கொடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் வந்தார். அவரிடமும் தட்டை நீட்டினேன். அவர் "இல்ல தம்பி நீங்களே எடுத்து கொண்டுங்கனு" சொன்னேர். இல்ல நீங்களே எடுதுக்கங்கனு சொன்னேன். நீங்க பண்றது உங்களுக்கு வேணும்னா சரியா இருக்கலாம். இங்க யாரும் ஏத்துக்க மாட்டங்க என்றார். மனம் வருந்தினேன்.
அதேபோல் ஒருமுறை எங்க ஊர்ல இருந்து வெளியூர் போன மேல்சாதி பையன் ஒருத்தன், கீழ் சாதிப்பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தான். அவன்ட யாரும் பேசல. அவங்க வீட்டுக்கும் யாரும் போறதுல்ல. இதனால அவன் மறுபடியும் மனைவிய கூட்டிகிட்டு வெளியூர் போயிட்டான். அவனோட அப்பா இறந்ததுக்கு அவன் வந்தான். கிராமத்து கலாச்சாரம் தெரிந்தவங்களுக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கும். இறந்தவங்க வீட்டின் முன், அந்த வீட்டு ஆண்கள்/பங்காளிகள் நின்று வருவோருடன் கை தழுவுதல் வழக்கம். ஆனா சொந்த அப்பா இறந்ததர்க்கே அவனை யாரும் நிற்க விடல. அத்தனை சாதி வெறி. இப்போது அவன் ஊருக்கே வருவதில்லை.
இப்படி மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பொண்ண திருமணம்செஞ்சா, அதிகபட்சம் நான் மேல சொன்ன மாதிரி நடக்கும். ஆனா இதையே ஒரு மேல்சாதி பொண்ணு செஞ்சா அவ்ளோ தான். என்ன நடக்கும் தெரியுமா .? அவள எப்படியும் கண்டுபிடிச்சு கட்டின தாலிய பிடிகிட்டு மேல்சாதி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைப்பாங்க (இதுமாதிரி நடக்குறப்ப, ரொம்பநாளா பொண்ணே கெடைக்காத ஒருத்தனுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிடும்). அதே போல் எனது பள்ளி பருவத்தில், கீழ் சாதி மனிதர்களுக்காக தனியா தேனீர் கடைகளில் தேநீர் தர அலுமினிய பாத்திரம் தந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.
அதோடு கிராமத்திற்குள் கீழ்சாதி மக்கள் வரும்போது தங்களின் காலணிகளை கலட்டி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலுடன் வருவது வழக்கம். நான் பொறியியல் முடிக்கும் வரை இதை அறிவேன். அதற்கு பிறகு வேலைக்காக வெளியூர் வந்ததால் இந்த நடைமுறை இன்னும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
எங்க கிராமமும் பக்கத்து கிராமமும் சேர்ந்து மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவாங்க. கோவில் இருப்பது பக்கத்து ஊர்ல. அந்த கோவில் திருவிழா மூணு வருசமா நடக்கல. காரணம் என்ன தெரியுமா .? கோவில் பூசாரியோட பொண்ணு, மேலே சொன்ன ஒரு சாதிக்கார பையன கல்யாணம் பண்ணிகிட்டா. இதுக்கெல்லாம் கோவில் திருவிழாவ நிறுத்துவாங்கலானு நீங்க கேக்கலாம். ஆனா நிறுத்தினாங்க. சில பஞ்சாயத்துக்கப்பறம் திருவிழா நடந்தது.
இந்த உதாரணங்களை வைத்து, எனது ஊர் ஒரு அடிமட்ட கிராமம் இதைவிட கேவலமா யாரும் செய்யமாட்டங்கனு முடிவுக்கு வரவேண்டாம். ஏன்னா இதவிட பின்தங்கிய மோசமான நிகழ்வுகள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சாதிகளின் பேரில். இவற்றை வைத்து பல சாதிக்கட்சிகளும் சாதிச்சங்கங்களும் குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு ஞாபகத்தில் இருந்த சில நிகழ்வுகளை மட்டுமே இங்கே மேற்கோள் காட்டினேன்.
இத்தனை நிகழ்வுகளை நான் கூறியதால், இவன் கீழ்சாதிக்காரனாக இருப்பான் அதனால் தான் இத்தனை குறைகளைக் கூறுகிறான் என்று எனக்கு பட்டம் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், இங்கே மேல்சாதி என்றுயாரைச் சுட்டிக் காட்டினேனோ அதே சமூகத்தில் இருந்து வந்தவன்தான் நான். "புதியதலைமுறை" தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த பெரியவரின் சமூகத்தைச் சேர்ந்தவன் (மனிதம் தவிர எதிலும் நம்பிக்கை இல்லாத, சாதிய முறைகளில் முற்றிலும் உடன்பாடு கொள்ளாத இளைஞன். ஆனால் சில உண்மைகளை மேற்கோள் காட்டவே இங்கு அதைக் குறிப்பிடும் படியாக ஆனது. மன்னிக்கவும்).
நான் மேலே சொன்னதுபோல், தொலைக்கட்சியில் வாதம் செய்த அந்த மேல்சாதியைச் சேர்ந்தவர், ஒரு கிராமத்தில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச்சொன்னர். நான் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன்.
இது சாதி கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் சொகுசாக வாழ "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற எண்ணத்தோடு தொலைக்கட்சியில் பேசுவதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, சரி என்று மனதில் ஏற்றிக்கொண்டு உங்கள் பின்னால் திரிய நாங்கள் மண்ணைத் தின்னும் மடையர்கள் அல்ல. இந்த தலைமுறை இளைஞர் பட்டாளாம் உங்களை நம்பும் ஈனப் பிறவியுமல்ல. காலம் கடந்து கொண்டிருக்கிறது. உங்கள் சாதியையும் சாதி வெறிகளையும் எலும்பொடித்து முடமாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எச்சரிக்கையாக இருங்கள். எமன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
நன்றி..!
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஜாதி பார்த்து பழகுவது மிகவும் கேவலமானது. பொதுவாகவே ஜாதி ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்வது அது எந்த ஜாதியானாலும் சரி நடை முறையில் அவர்கள் சார்ந்த சமூகத்தில் பெற்றோரின் மதிப்பு குறைந்து கேவலப்படும் சூழ்நிலை வருகிறது. நமது சமுதாயம் பக்குவபடும் வரை பெண்களோ ஆண்களோ அவரவர் இனங்களில் மனம் முடிப்பது பிரச்சனையை குறைக்கும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
திருமணத்தை விடுங்கள்.. ஆனால் மேலே கூறியவைகள் சக மனிதனுக்கு நிகழலாமா. கீழ் ஜாதி என்ற பெயரில் .?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Similar topics
» மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !
» தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்..
» நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)
» "பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்'
» 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்': பள்ளி உத்தரவால் சர்ச்சை
» தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்..
» நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும்...(கட்டாயம் படிக்க)
» "பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயம் வசிக்க வேண்டும்'
» 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்': பள்ளி உத்தரவால் சர்ச்சை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|