புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
1 Post - 2%
Guna.D
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
1 Post - 2%
prajai
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
17 Posts - 4%
prajai
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
4 Posts - 1%
jairam
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வேறென்ன செய்ய? ... Poll_c10வேறென்ன செய்ய? ... Poll_m10வேறென்ன செய்ய? ... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறென்ன செய்ய? ...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri 30 Nov 2012 - 15:12

ஓரு துளித் தண்ணீர் கூடக் கொடுப்பதற்கு இல்லை என்று கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் கூறிவிட்டார். "கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது, எங்களுக்கே தண்ணீர் போதாது; ஆகவே தர இயலாது' என்பதுதான் கர்நாடக முதல்வர் ஷெட்டர் அளித்துள்ள பதில். ஒரு மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக முதல்வருக்குக் கிடைத்துள்ள பதில் இது.

கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்பது தமிழக முதல்வருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவேதான், கர்நாடகம் சட்டப்படி வழங்க வேண்டிய 52.8 டிஎம்சியை வலியுறுத்தாமல், அதில் பாதியளவாக 30 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கேட்டார். இதை நன்றாகவே புரிந்துகொண்ட கர்நாடக முதல்வர், "எங்களுக்கும் பற்றாக்குறை. உங்களுக்கும் தட்டுப்பாடு. அதனால் நீங்கள் கேட்பதில் பாதியைத் தருகிறேன். இருவரும் இருக்கும் தண்ணீரைப் பங்கு போட்டுக் கொள்வோம்' என்று சொல்லி இருந்தால், இருதரப்பு விவசாயிகளும் அவரைப் பாராட்டி இருப்பார்கள். ஆனால், அவர் சொன்ன பதில், ஒரு துளித் தண்ணீர்கூடக் கிடையாது என்பதுதான்.

காவிரி என்பது கர்நாடகத்தின் நதியோ அல்லது தமிழகத்தின் நதியோ அல்ல. அது இந்திய நதி. சொல்லப்போனால் மனித குலம் தழைக்க இயற்கை தந்திருக்கும் கொடை. அதில் ஓடும் தண்ணீரை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதுதானே நியாயமாக இருக்கும்.

ஓராண்டில் எவ்வளவு தண்ணீர் ஓடுகிறது, அதில் எவ்வளவு தண்ணீரை எந்தெந்த மாநிலம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை காலத்தில், இருக்கும் நீரை எவ்வாறு இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்கூட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பற்றாக்குறை காலம் என்பது தெரிந்துதான் தமிழக முதல்வர், தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நீரின் அளவில் பாதியைக் கேட்டார். ஆனால், ஒரு துளிகூடத் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்கிறார் என்றால், பற்றாக்குறை காலத்தில் பகிர்ந்துகொள்ள நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவுகோலுக்கு என்ன மரியாதை?

"நானே திண்டாட்டத்தில் இருக்கிறேன்' என்று வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப தமிழ்நாடு என்ன கடன் கேட்டா செல்கிறது? பற்றாக்குறை நாளில் அவர்களே காவிர் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளவும், மிகைநீர் நாள்களில் போனால் போகிறது என்று சாக்கடையில் விடுவதைப்போல தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதும்தான் கர்நாடகத்தின் செயல் என்றால், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கமா இல்லையா என்று மத்திய அரசைக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசைக் கிடுக்கிப்பிடிபோட்டு நிறுத்தாமல், தமிழக அரசைப் பார்த்து, ""நீங்கள் போய் பேசிப் பாருங்கள்'' என்று ஆலோசனை வழங்கியதால்தானே, நிச்சயம் தர மாட்டார்கள் என்று தெரிந்தும் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு போக வேண்டிய நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையால் பயன் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா போகாமல் இருந்திருந்தால், "நாங்கள் சொன்னோம், தமிழ்நாடு முதல்வர் பேசிப் பார்க்கவில்லை' என்று நீதிமன்றம் சொல்லும். எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா போய்ப் பேசியிருந்தால், தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதற்குக் கர்நாடகம் தயாராக இருந்தது' என்று அறிக்கை விடுவார்கள். விவசாயிகள் பற்றிய அக்கறை இருந்திருந்தால் முதல்வர் கௌரவம் பார்க்கக்கூடாது என்று நீள்நாக்கால் நாலும் பேசுவார்கள்.

எல்லா குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், கர்நாடக முதல்வருடன் பேச்சு நடத்தி, அவர்கள் தர வேண்டியதில் பாதி அளவு நீரைக்கூடத் தர மறுத்துவிட்டார்கள் என்பதை உலகுக்கும், நீதிமன்றத்துக்கும் புரிய வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். இப்போது நீதிமன்றம் என்ன ஆலோசனை வழங்கப் போகிறது? யாருக்கு ஆலோசனை வழங்கப்போகிறது?

ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நியாயம் மறுக்கப்படும்போது கர்நாடக மாநிலத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், காவிரி நதியையும் அணைகளையும் தன்பொறுப்பில் ஏற்று நீரை, பற்றாக்குறை காலத்திற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடி பகிர்ந்தளிக்க வேண்டிய மத்திய அரசு, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அதிமுக இடம்பெறவில்லை என்ற காரணத்துக்காகவும் பாராமுகமாகச் செயல்படுவதால்தானே தமிழகம் நீதிமன்றத்தை நாடிப்போகும் நிலை ஏற்பட்டது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளும் அவற்றின் சார்பில் அமைச்சர் பதவியில் இருப்போரும், தமிழக விவசாயிகளுக்காக மத்திய அமைச்சரவையில் குரல் எழுப்பியிருந்தால், கர்நாடக அரசு இப்படியொரு பதிலை அளிப்பதற்கு ஆயிரம் முறை யோசித்திருக்காதா?

பேச்சுவார்த்தைக்கு வரும்போதே, ஜெயலலிதா பிடிவாதம் காட்டக்கூடாது என்றும், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் கொடுத்தால் எங்களை மக்கள் ஓடஓட விரட்டுவார்கள் என்றும் காவிரி பாதுகாப்புக் குழுத் தலைவர் மாதே கௌடாவால் முந்தைய நாளே, ""தண்ணீர் இல்லை'' என்று மறைமுகமாகச் சொல்லும்படி செய்வார்களா?

""நீதிமன்றத்திடம் ஆயிரம் காரணம் சொல்லலாம்; தீர்ப்பை அமல்படுத்தாமல் கண்டனத்துக்கும் ஆளாகலாம்; நம் ஆட்சியைக் கலைத்துவிட மாட்டார்கள்; அணைகளை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளாது; ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தின் நலனைவிடக் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்பது முக்கியம்; தமிழகத்துக்காகக் குரல் கொடுக்க மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வேட்டி கட்டிய தமிழர்கள் யாரும் இல்லை'', என்கிற தைரியம்தானே கர்நாடகத்திற்கு இத்தகைய துணிவைத் தந்திருக்கிறது?

இனி உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது, மத்திய அரசு என்ன சொல்லப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதல்லாமல் நமக்கு வேறென்ன வழி?

பாரதியின் வைரவரிகள்தான் நினைவுக்கு வருகின்றன - ""ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!........................

தினமணி .............

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக