புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_m10இன்னுமா இருக்கிறது காதல்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுமா இருக்கிறது காதல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 7:01 pm

இன்னுமா இருக்கிறது காதல்


காதல்..
மிக சிறிய சொல்,
பிரம்மாண்டமான சக்தி,
புராதன வேட்கை
வினோத சித்தபிரம்மை,
விந்தையான மனஎழுச்சி,
ஆதி உணர்வு,

நாகரிக மாற்றத்தை எதிர்த்து நம்மிடையே எஞ்சியிருக்கும் பழமைகளில் ஓன்று, அது ஒருவருக்குள் ஒருவரை அடிமைப்படுத்தும்....

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்...

இப்படி பலவாறாக காதலை எழுதாத கவிஞர்கள் உண்டோ?? பாடாத பாடகர்களும் உண்டோ?? இவற்றையெல்லாம் கேட்கும் போதே காதலின்றி வாழ்தல் சாத்தியமோ என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்...

ஹார்மோன் மாற்றமே:

காதல் ஒரு ஹார்மோன் மாற்றமே!! இதனால் கண்டதும் காதல் வயப்படும் வாய்ப்பும் உண்டு. கண்டவர்கள் மீதும் காதல் வயப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த காதல் நீடிக்குமா ?? என்பதில் தான் ஐயமே... இளைய சமுதாயத்தினர் தங்கள் டீன் ஏஜ் பருவத்தை கடக்கும் முன்னரே இந்த மாய வலையில் தங்களை சிக்க வைத்துக் கொள்கின்றனர். காதலுக்கும் எதிர் பாலின கவர்ச்சிக்கும் வித்தியாசத்தை அவர்கள் அறிவதில்லை. இந்த வகையான காதலில் சிக்கல் உண்டு. தன் காதலனை(காதலியை) விட அழகானவனோ, அல்லது இதர திறமைகளில் சிறந்தவனை பார்க்கும் போது இவர்கள் காதல் மாறும் வாய்ப்பும் உண்டு. இதை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல்? எனத் தோன்றுகிறது.

இன்றைய சமூக நிலை:

வயது வந்த பின்னர் ஒருவரையொருவர் புரிந்து வரும் காதல் என்பது தற்போது மிக குறைவே. இன்றைய சமூகத்தில் எந்த ஒரு ஆணும் உண்மையாய் காதலுக்காக ஏங்கி தேவதாஸ் ஆவதுமில்லை. எந்த ஒரு பெண்ணும் முன் பின் தெரியாத ஒருவனை நம்பி ஏமாறுவதுமில்லை. ஒத்து வராத காதலர்கள் கை குலுக்கி நண்பர்களாக பிரிகின்றனர். சேது சீயானையும், காதல் முருகனையும் படங்களில் மட்டுமே காண முடியும்.

காதல்:

காதல் ஒரு வித சித்த பிரம்மை. தன் நிலை மறந்து துணையை பற்றியே சிந்திக்க தூண்டும். உணவு உறக்கம் மறந்து வாழும் நிலை வரும். கனவு உலகம் மட்டுமே பிடிக்கும். அடிக்கடி பொய் சொல்ல வைக்கும்.

ஒரு தலை காதல்:

முன்னாளில் ஒரு தலை காதலில் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொண்டனர். காதல் நிறைவேறாத, ஏற்காத பட்சத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தாங்களே தொலைத்தனர். பெற்றோர்களின் கண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வே அந்த பெண்ணுடனே முடிந்தது என்பது போல செயல்பட்டனர்.

இந்நாளில் ஒரு தலை காதலில் பலர் வன்முறையை ஆயுதமாக எடுக்கின்றனர். ஒரு பெண் தன் காதலை ஏற்காத பட்சத்தில் அவள் மீது திராவகம் வீசுவது, கொலை செய்வது என காதல் என்ற பெயரில் வெறியோடு நடக்கின்றனர். தினம் தினம் செய்தி தாள்களில் இது போன்ற பல செய்திகள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.

மற்றுமொரு ரக ஒரு தலை காதலும் உண்டு. தங்கள் காதல் ஏற்கப்படாத பட்சத்தில் தங்கள் காதலையே மாற்றிக் கொள்கின்றனர். “திரிஷா இல்லைனா திவ்யா” என்ற கொள்கையோடு இருக்கின்றனர். இது முன்னர் கூறிய காதலை விட மேல் என்றாலும் இவற்றையெல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

முறையற்ற காதல்:

இந்த கலியுகத்தில் முறையற்ற காதல்களும் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. ஒரே பாலின காதல்களும் தற்போது ஏற்படுகிறது. இது இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. சமூகத்தால் ஏற்கப்படாத ஒன்று. இதை தவிர முறையற்ற உறவுகளுக்கு இடையேயும் காதல் ஏற்படுகிறது.. இதுவும் சமூகம் ஏற்க முடியாத ஒன்றே. இன்றைய திரைப்படங்களும் தவறான உதாரணங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. வயதில் மூத்த பெண்ணை காதலித்தல், அல்லது உங்கள் கல்லூரி பேராசிரியர் (பேராசிரியை) காதலித்தல் இவையெல்லாம் உங்கள் அபிமான நாயகன் உங்களுக்கு கற்று தரும் பாடம். இது திரையுலகில் மட்டும் அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றது.

இருதலை காதல்:

இரு தரப்பினரும் பேசி பழகி வரும் காதல் மட்டும் எல்லா வகையிலும் யோக்கியமா என்று கேட்காதீர்கள்!! காதலை தெரிவிக்கும் முன்னோ, காதலை தெரிவிக்கும் போதோ காதலனோ, காதலியோ செய்யும் சின்ன விஷயத்தை கூட பாராட்டும் மனம் காதலின் போதோ, கல்யாணத்தின் பின்னோ மாறி விடும்.அது போலத் தான் காதலிக்கும் போது செய்யும் பெரிய தவறை கூட மறந்து மன்னிக்கும் குணம் பின்னாளில் மறைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் விவாதம் வைக்கும். விட்டுக் கொடுக்கும் மனம் காணாமல் போய்விடும். தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்து இருவரும் வாழ்வில் தோல்வியை சந்திக்கின்றனர். தன் துணை தானாகவே முன் வந்து விட்டு கொடுக்க தோன்றும். காதல் திருமணங்கள் செய்ய அவசர அவசரமாக பதிவு திருமண அலுவலக வாயிலில் நின்றவர்கள் இன்று அதை விட அவசரமாக நீதிமன்ற வாயிலில் விவகாரத்திற்கு நிற்கின்றனர்.

காதலர்களிடையேயும் திருமணமானவர்களிடையேயும்‌ துணை தனக்கே சொந்தமானவள் என்ற எண்ணம் அதிகப்படையாக இருக்கிறது. தனக்கானவன், தனக்கானவள் என்ற உரிமை இருப்பதில் தவறில்லை. அதுவே விலங்காக மாறி துணையை கட்டி போடாமல் இருந்தால் சரி. நம்பிக்கை வாழ்வின் மிக முக்கிய அடித்தளம். இது இருந்தால் போதுமே தனக்கானவள் என்ற எண்ணம் வேண்டிய இடத்தில் மட்டும் இருக்குமே. ஆனால் பலர் அதை மறந்து அதீத அன்பினால் துணையை நோகடிக்கின்றனர். சந்தேகத்தினால் தாங்களும் நிம்மதி இழக்கின்றனர். இவற்றை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

பெற்றோர் நிச்சயித்த திருமணம்:

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களும் முக்கியத்துவம் கொடுப்பது ஜாதி, மதம், படிப்பு, தொழில், அந்தஸ்து இவற்றுக்கே. மனங்கள் இணைவது இரண்டாம் பட்சமே.

பெற்றோருக்காக பிடிக்காத வாழ்வை ஏற்போர் சிலர். இவர்கள் திருமணம் என்ற சடங்கை வேண்டுமானால் பெற்றோருக்காக ஏற்கலாம். அதன் மூலம் வரும் உறவை ஏற்க சிரம படுவர். வாழ்க்கையில் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து வாழலாம். ஆனால் வாழ்க்கையையே விட்டுக் கொடுத்து வாழ முடியாது.

இரண்டாம் ரகத்தினர் எந்த வித எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இல்லாமல் வாழ்வை ஏற்போர். இவர்களை தங்கள் வாழ்க்கை துணையால் தங்களுக்கு ஏற்றபடி மாற்ற முடியும். சில நாட்களிலேயே அவர்கள் தங்கள் வாழ்வை, வாழ்க்கை துணையை விரும்ப ஆரம்பித்து விடுவர்.

கடைசி ரகத்தினர் பல வித எதிர்பார்ப்புகள், ஆசைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை துணை எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றும் பட்சத்தில் இவர்கள் வாழ்வும் மகிழ்ச்சியாகவே அமையும். இல்லையேல் ஏமாற்றத்தினால் இவர்கள் வாழ்வு விரக்தி அடையும். இன்னொரு துணையை நாடவும் வாய்ப்பு உண்டு. இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

அப்படினா காதலே இல்லையா என்று தானா கேட்கிறீர்கள்?? இருக்கு.. ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படுவது என்றே பலரும் எண்ணி கொண்டிருக்கிறோம். முதலில் காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு இல்லை. இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே காதலித்து கொண்டு தான் இருக்கிறது. அன்பே கடவுள் என்று சிலர் கூறுகின்றனர். அன்பும் காதலின் ஒரு வகையான வெளிப்பாடு தான் என்பதால் காதலும் கடவுளும் ஒன்றே தான் என்று கூட கூறலாம். காதலின் சின்னம் என்றால் பலரும் தாஜ்மகாலை தான் கூறுவார்கள். ஒரு கணவன் தன் மனைவியின் மீது வைத்திருந்த உன்னதமான காதலின் சின்னமே தாஜ்மஹால். நம்மில் பல தம்பதிகள் தங்கள் துணையின் மீது அளவில்லா காதலை கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களை போற்றும் சின்னமே ஆக்ராவில் அமைந்துள்ள அந்த சின்னம்.

முடிவுரை:

அழகை பார்த்து காதல் வந்தால் அது இன கவர்ச்சி. படிப்பு, தொழில் பார்த்து காதல் வந்தால் அது சுயநலம். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற எண்ணம். திறமையை பார்த்து காதல் வந்தால் அது அந்த கலையின் மீது ஏற்படும் நாட்டமே அன்றி காதல் அல்ல. இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கடைசி வரை ஒத்து வாழ்வதே காதல். இதற்கு இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள், கருத்துக்கள், விருப்பங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ஒருவர் மற்றவரின் எண்ணங்களுக்கு, கருத்துக்களுக்கு, ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தாலே போதும்.

சின்ன சின்ன ஆசைகள், சின்ன சின்ன சந்தோஷங்கள், சின்ன சின்ன ஆச்சரியங்கள், சின்ன சின்ன சண்டைகள், சின்ன சின்ன மன்னிப்பு, சின்ன சின்ன சமாதானம் இவைகள் தான் வாழ்வை இனிமையாக்கும். காதல் என்ற உணர்வு கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும். “இன்னுமா இருக்கிறது காதல்?” என்ற கேள்விக்கும் அவசியம் இருக்காது.


கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sun Oct 14, 2012 7:08 pm

காதல் இன்னுமா இருக்கிறது ? பதில் தெரிந்து கொண்டேன் . பகிர்வுக்கு நன்றி.
கோபாலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோபாலன்



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
இன்னுமா இருக்கிறது காதல்  961517
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 7:14 pm

சித்தன் போக்கு சிவன் போக்கு
நமக்கு எதுக்கு இந்த காதல் ஷோக்கு
நான் சொல்லுறது சரித்தானே ருக்கு
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சிரி சிரி சிரி
- காதல் தண்டபானிகளை கண்டபடி கலாய்க்கும் கழக கண்மணிகள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்னுமா இருக்கிறது காதல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 7:21 pm

நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 9:22 pm

சின்ன சின்ன காதல்
சிலிர்க்க வைக்கும் காதல்
நடப்பில் இருந்தால் அதுவே பெரிய காதல்ன்னு
சின்ன சின்ன வரிகளில் அழகா சொல்லிட்டீங்க ருக்மணி.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 10:00 pm

இன்றைய நிலையை தங்கள் நிலையில் உணர்த்தியது நன்று.
இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது உளவியல் ரீதியான பிரட்சினைகள் என்பதே மிக முக்கியம்.

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Mon Oct 15, 2012 6:16 pm

நன்றி இனியவன், கரூர் கவியன்பன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 10:11 pm

காதலைப் பற்றிய விளக்கம் அருமை! இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் காதல் என்று சுற்றி இறுதியில் காதலில் தோற்று விட்டேன் என்று அழுது புரளும் இளைஞர்கள் ஏராளம்.



இன்னுமா இருக்கிறது காதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 10:43 am

சிவா wrote:காதலைப் பற்றிய விளக்கம் அருமை! இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் காதல் என்று சுற்றி இறுதியில் காதலில் தோற்று விட்டேன் என்று அழுது புரளும் இளைஞர்கள் ஏராளம்.

நீங்க யார சொல்றிங்க தல மாமா ?

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 10:53 am

ஆழமான புரிதலுடன் அழகாக ஆராய்ந்து எதாத்தத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் ருக்மணி.. அருமை வாழ்த்துக்கள்..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக