புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கண-இலக்கியப் பயில்முறை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:46 pm

17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுவாமிநாததேசிகரே இலக்கணக் கொத்தின் ஆசிரியராவர். இவர், திருநெல்வேலியைச் சேர்ந்த பெரும் புலவர் தாண்டவமூர்த்தி என்பார் மைந்தராகிய மயிலேறும் பெருமாளிடம் 12 ஆண்டுகள் தமிழ் கற்றார். செப்பறைப்பதியினராகிய சிவச்செல்வர் கனகசபாபதி என்பவரிடம் வடமொழி கற்றார். இரு பெரும் அறிஞர்களிடம் இரண்டு மொழிகளைக் கற்ற சுவாமிநாததேசிகர் தாமியற்றிய இலக்கணக் கொத்தில் கூறியுள்ள இலக்கண-இலக்கியப் பயில்முறை எந்நூல் நோக்குதற்கும் பொதுவான கருத்தாகும். ஆதலால் அவற்றை ஈண்டு அறிவோம். முதற்கண் அவர் கூறியுள்ள நூற்பாவை நோக்குவோம்.

சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக
விதிகளில் சிற்சில வெளிப்படா ஆயின்
உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க
தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின்
எந்நூல் விதியோ எனவே எண்ணுக
சிலநாள் பழகின் சிலவும் பலியா
பலநாள் பழகின் பலிக்கும் என்க
விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்
விரையாது ஏற்கின் கருகாது என்க
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக
நூலினை மீளவும் நோக்க வேண்டா
சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக
மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டுக்
கூரிய னுடனே கொடுத்தும் பழகுக
வேறுஒரு கருமத்தினை மனத்து எண்ணின்
ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக
சொல்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன்
அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக


நூற்பாவின் விளக்கம் வருமாறு:

இலக்கியத்தில் ஓரிடம் விளங்காதாயின் அப்பகுதிக்கு முன், பின் பகுதியைப் படித்துப் பார்த்தால், அவ்விடம் இன்ன பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பது விளங்கும் அல்லது முன்பு கற்ற இலக்கியத்திலிருந்தோ அல்லது பின்பு கற்கப்போகும் நூல்களிலிருந்தோ விளங்காத இடம் விளங்கக்கூடும்.

சிலவற்றிற்குப் பொருள் தெளிவாய் தெரியாவிட்டால் உப இலக்கணத்தால் பொருள் தெளியலாம்.

தாம் முன் உணர்ந்ததற்கு இப்பொழுது படிக்கும் செய்தி வேறுபடின், இப்படி ஓர் இலக்கியம் உண்டு போலும். அதன் பொருளைக் கூறுவதால் இவ்விடம் மாறுபட்டுள்ளதென்று உணரவேண்டும்.

ஓரிலக்கியத்தில் சில நாளைய பயிற்சி ஏற்பட்டால் சில செய்திகூடத் தெளிவாகத் தெரியாது. பலநாள் ஆழ்ந்த பயிற்சி வேண்டும்.

ஓரிலக்கியத்தை விரைந்து படித்தால் அவ்விலக்கியத்தில் ஒன்றும் தெரியாது. விரையாமல் ஆழ்ந்து படித்தால் பொருள் தெளிவு உண்டாகும்.

கற்றதைத் தெளிவாய் உணரச் சிந்தனையை இறக்காமல், புதிதாகக் கற்பனவற்றில் சிந்தனையை இறக்குதலால் பயனில்லை என்க. எல்லார்க்கும் புதிதாகக் கற்பதில் கருத்து இறங்கும். கற்றதில் கருத்து இறங்காது அத்தகைய உள்ளத்தை வலிந்து இறக்க வேண்டும்.

இலக்கியம் ஒன்றை முழுமையும் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை என்று படிப்பவர்கள் உள்ளனர். அங்கங்கே உள்ள செய்யுளை ஒருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை என்று படித்து பொருளை வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஏமந்தன் ஒருவன் மாரிபோல் நமக்குப் பொருள் கொடுத்தாலும் அப்பொருளைக் கருதி அவனுடன் பழகாமல், கூர்மையான அறிவுள்ளவனிடம் கொடுத்தும் பழகுக.

இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும்போது பசி முதலிய வருத்தம் வந்தாலும், உணவு முதலியவற்றின் மேல் விருப்பம் வந்தாலும், வேறு காரணங்களால் கருத்து மயங்கினாலும் அப்பொழுதே படித்தலை விட்டுவிட்டு அவை தீர்ந்த பிறகு படிக்க வேண்டும்.

பிணி, வறுமை முதலியன இல்லாதிருத்தலும், பொருள், இளமை முதலியன பெற்றிருத்தலும் கற்றற்குக் கருவியாயினும் மிகவும் சிறந்த கருவி ஆசிரியன் கருத்தில் அருள்வர நடத்தல் ஒன்றே அரிய கருவியாம்.

மேற்கூறிய பத்து வகையால் கல்வி பயில்முறையை இலக்கணக் கொத்தாசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியவாறு இலக்கண-இலக்கியக் கல்வியைப் பயின்றால் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராய் விளங்கலாம்.
(நன்றி தினமணி )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக