புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
10 Posts - 2%
prajai
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
9 Posts - 2%
jairam
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தொட்டில் மரணம் Poll_c10தொட்டில் மரணம் Poll_m10தொட்டில் மரணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டில் மரணம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 5:42 pm

தொட்டில் மரணம் Baby_lyingஅந்தக் குழந்தையின் மரணம் பெற்றோர்க ளுக்கும் உறவினர்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆறாத் துயரையும் ஏற்படுத்தியது. அதற்கு மேலாக குழந்தை ஏன் இறந்தது என்பது விளக்க முடியாத புதிராகவும் அமைந்தது.
குழந்தைக்கு ஐந்து மாதமளவில் இருக்கும். மிகுந்த செல்லக் குழந்தை. அந்தக் குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பெரும் பொக்கிஷம். வயதுக்கு மீறிய துடிதுடிப்பும் உற்சாகமும் கொண்டது. எல்லோருடனும் தயக்கமின்றி சேர்ந்து சிரித்து மகிழும் பண்பு கொண்டதால் அனைவரது பிரியத்திற்கும் ஆளானது. வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரமின்றி அந்தத் தெருவில், அக்கம் பக்கம் இருந்த அனைவருக்குமே அதனோடு ஒட்டுதல்.
அன்றும் வழமைபோல உடம்பு திருப்பியது, பால் குடித்தது, விளையாடியது, சிரித்தது, குளித்தது. எதுவுமே மாற்றமில்லை. சிறிய தடிமன் காய்ச்சல் கூட இல்லை. தாயாருக்கு அருகிலேயே இரவு படுத்துத் தூங்கியது. அதிகாலை 5 மணியளவில் தாய் கண்விழித்த போதும் அதேபோலப் படுத்திருந்தது. தாய் தொட்டு அணைக்க முற்பட்டபோது குழந்தை சில்லிட்டுக் கிடந்தது தெரியவந்தது. பேச்சு மூச்சில்லை. டொக்டர் பார்த்தபோது இறந்துவிட்டதாக அறிவித்தார்.
தொட்டில் மரணம் என்றால் என்ன?தொட்டில் மரணம் Cot+death
நோயெதுவுமின்றி நலமாக இருந்த குழந்தை திடீரெனக் காரணமெதுவுமின்றி இறந்து கிடப்பது எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். ஆயினும் மருத்துவ ரீதியில் இது ஒரு புதினமான விடயமல்ல. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் இவ்வாறு பல குழந்தைகள் இறக்கின்றன. தொட்டில் இறப்பென (Cot Death) இதனைக் கூறுவர்.

மருத்துவதில் Sudden infant death syndrome என்பர். இத்தகைய மரணங்கள் பொதுவாக குழந்தையின் முதல் மாதத்திலேயே மிக அதிகமாக இடம்பெறுகிறது. 2ஆம், 3ஆம் மாதங்களிலும் ஓரளவு உண்டு. ஆயினும் 6 மாதங்களுக்குப் பிறகு மிகக் குறைவே.

ஏன் ஏற்படுகிறது தொட்டில் மரணம் Cot+death1
இது ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆயினும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணங்கள் சேரந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

தூக்கத்தையும், விழித்தெழுதலையும் கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாயிருக்கலாம். உதாரணமாக தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தின் மேல் (அதாவது மூக்கு வாய் இரண்டும் மூடும்படியாக) துணி விழுந்தால், அதனால் ஏற்படக் கூடிய சுவாசத்தடையை சமாளிக்கு முகமாக திணறி விழித்தெழுதலை மூளையால் ஏற்படுத்த முடியாதது காரணமாகலாம் என்கிறார்கள்.
ஆயினும் தொட்டில் மரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த தூக்கத்தில்தான் நடக்கும் என்றில்லை. தாயின் மடியிலோ அல்லது பிறாமிலோ (Pram)குட்டித் தூக்கம் செய்யும்போது கூட நிகழலாம்.

யாருக்கு ஏற்படலாம்

வசதி குறைந்த குடும்பங்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

ஆசியச் சமூகத்தில் குறைவு என்று சொல்லப்படுகிறது.

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிலும், முக்கியமாக 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளிடையே கூடுதலாக ஏற்படலாம்.

பிறக்கும்போது வழமையை விட எடை குறைந்த பிள்ளைகளிலும் அதிகம்.
இரட்டைக் குழந்தைகளிடையேயும் அதிகம் காணப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்கனவே வேறு குழந்தைகள் அவ்வாறு இறந்திருந்தாலும் சாத்தியம் அதிகம்.

அதிலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இறப்பது அதிகமாம்.
வருடாந்தம் ஒரு வயதிற்குள், 300 குழந்தைகள் இவ்வாறு இறப்பதாக மருத்துவப் பதிவுகள் கூறுகின்றன. இது இலங்கைக்கானது அல்ல, இங்கிலாந்து நாட்டின் முடிவு.

எந் நேரத்தில், காலத்தில்?

இவ்வாறு இறப்பது பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாகும்.
அதிலும் முக்கியமாக நடுநிசிக்கும் காலை 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே நடக்கிறது. இவ்வாறு இறப்பதற்கான காரணத்தை பத்தில் ஒரு பிள்ளைக்கே கண்டறிய முடிகிறதாம்.
பெற்றோரின் மனப் பாதிப்பு

மிக முக்கியமான பிரச்சினை பெற்றோர்களுக்கு ஏற்படக் கூடிய மனப்பாதிப்பு ஆகும். இது தாங்கள் விட்ட தவறினால் அல்லது கவனிப்பின்மையால் ஏற்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மன ஆறுதலுக்காக மருத்துவருடன் தொட்டில் மரணம் பற்றிப் பேசி விரிவாக அறிந்து கொள்வது நல்லது.

புதினம் பிடுங்குபவர்களைத் தவிர்த்து ஆதரவோடும், புரிந்துணர்வோடும் நடப்பவர்களுடன் பேசி மனம் ஆறுவது புத்திசாலித்தனமானது.
தடுக்கும் வழிகள்

* குழந்தை இருக்கும் அறையில் புகைப்பது தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பமாயிருக்கும் போது தாய் ஒருபோதும் புகைக்கக் கூடாது.
* குழந்தையை எப்பொழுதும் முதுகு கீழிருக்குமாறே படுக்க விட வேண்டும். ஒரு போதும் குப்புற படுக்க அனுமதிக்கக் கூடாது.

* போர்வையால் போர்த்தக் கூடாது. படுக்கையில் வேறு துணிகள் இருக்கக் கூடாது.

* இறுக்கமான தட்டையான மெத்தைகளையே உபயோகிக்க வேண்டும். தொட்டிலுக்குள் நீக்கல் இடைவெளி ஏதும் இன்றி முழுமையாக தொட்டிலை நிரப்பும்படியான மெத்தைகளே நல்லது. மெத்தையின் வெளிப்புறம் தண்ணீர் தேங்காததாக (waterproof ) இருக்கவேண்டும். தடித்த ஒற்றைத் துணியால் மடிப்புகள் விழாமலும், நழுவாதபடியும் மூடியிருக்க வேண்டும்.

* படுக்கையறை கடும் குளிராகவோ, கடும் வெக்கையாகவோ இருக்கக் கூடாது.

* பெற்றோர் படுக்கும் அறையிலேயே குழந்தையின் தொட்டில், கொட் இருப்பது நல்லது.

* புகைக்கும், மது அருந்தும் அல்லது மருந்துகள் உபயோகிக்கும் பெற்றோர் தமது கட்டிலிலேயே ஒருபோதும் குழந்தையைக் கூட வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

* அதேபோல கடும் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு தூங்க வேண்டாம்.

* சோபா, செற்றி, கதிரை போன்றவற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு தூங்கவே கூடாது.

* குழந்தைக்கு சிறு வருத்தம் என்றாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

* பல குழந்தைகள் உள்ள வீடாயின் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையின் பராமரிப்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
சூப்பி கொடுப்பதுதொட்டில் மரணம் Cot+death+Dummy
சில ஆய்வுகள் சூப்பி கொடுப்பதால் தொட்டில் மரணம் ஏற்படக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கலாம் என்கின்றன. முக்கியமாக தூக்கம், குட்டித் தூக்கம் ஆகியவற்றின் போது சூப்பி கொடுப்பது இதனைத் தடுக்க உதவலாம்.

ஆயினும் இதனைக் கொடுப்பதால் தாய்ப்பால் ஊட்டலுக்கு தடங்கல் ஏற்படலாம் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். தாயப்பால் ஊட்டுபவரகள் பாலூட்டல் செயற்பாடானது சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் வரை அதனை ஆரம்பிக்கக் கூடாது. முக்கியமாக முதல் மாதம் சூப்பியைக் கொடுக்காது விட்டால் குழுந்தை தாய்ப்பாலை நன்கு குடிக்கக் கற்றுக் கொண்டுவிடும். அதன் பின் தேவையானால் கொடுக்கலாம்.


மின்காற்றாடி
குழந்தை தூங்கும் அறையில் மின்காற்றாடி(Fan) போடுவதால் தொட்டில் மரணத்தைத் தடுக்கலாம் என அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஏற்கனவே இப்பிரச்சனையால் இறந்த 185 பிள்ளைகளின் தாய்மாரை செவ்வி கண்ட ஆய்வு இது. குறைந்தளவு எண்ணிக்கையினரை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு என்பதால் இதன் முடிவு சர்ச்சைக்குரியது.தொட்டில் மரணம் Fan-baby
இது பற்றி மேலும் வாசிக்க :- http://www.healthjockey.com/2008/10/07 யைச் சொடுக்குங்கள்.

நினைவுப் பொருட்கள்

குழந்தையின் போட்டோ, அது உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை ஞாபகார்த்தமாக வைத்திருக்கலாம்.

பாலூட்டும் தாயாயின் மேலும் பால் சுரப்பதைத் தவிர்பதற்காக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

- டொக்டர் எம்.கே. முருகானந்தன்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 10, 2009 5:46 pm

தொட்டில் மரணம் Icon_eek தொட்டில் மரணம் 677196 தொட்டில் மரணம் 678642 தொட்டில் மரணம் 154550

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 5:49 pm

தொட்டில் மரணம் Icon_eek தொட்டில் மரணம் Icon_eek தொட்டில் மரணம் Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக