புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_m10மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jul 15, 2012 8:14 am


மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! E_1342072158
"பெருந்தலைவர்' என, அன்பாக அழைக்கப் படும் காமராஜரை பற்றி நினைக்கும் போது, நான் புகைப்படக் கலைஞர் என்ற ரீதியில், அவருடன் பழகியிருந்தாலும், ஏதோ அவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற பாச உணர்வு தான் மேலோங்கி நின்றது. எங்கள் பகுதியில், பெட்டிக்கடை வைத்திருக் கும் நண்பர் ஒருவர், எந்த அரசியல் கட்சியிலும் இல்லாதவர்; ஆனால், காமராஜரின் அபிமானி. என்னிடம், "தலைவரோடு சேர்ந்து, ஒரு போட்டோ எடுக்க வேண்டும்...' என்று தன் ஆசையை அடிக்கடி சொல்வார்.
காமராஜர் மதுரை வந்திருந்த நேரம், நான் அந்த நண்பரை அழைத்து, தலைவர் வழக்கமாக தங்கும் ரயில் நிலைய மாடிக்கு சென்றேன். அறைக்குள் நான் நுழைந்ததும், தோளில் தொங்கும் கேமரா பேக்குடன் என்னை பார்த்த காமராஜர், "வா... வா... என்ன பொட்டியை (@கமராவை) தூக்கிட்டு வந்திருக்கே... இன்னிக்கு ஒண்ணும் நிகழ்ச்சி இல்லியே...' என்றார்.
"இல்லீங்க... உங்கள் அபிமானி ஒருவர், உங்களோடு போட்டோ எடுக்கணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காரு. அவரை அழைத்து வந்துள்ளேன். கூப் பிடட்டுமா?' என்று கேட்டேன்.
"உனக்கு வேற வேலை இல்லே... அதெல்லாம், அந்த சினிமாக்காரங்க கிட்டே தான் வச்சுக்கணும். என்னை ஏன் தொந்தரவு பண்றே...' என்று கேட்டார். எனக்கு சங்கடமாக போய் விட்டது. சிறிது நேர அமைதிக்குப் பின், அவரே மீண்டும், "சரி சரி... நீ கூட்டிட்டு வந்த ஆள் எங்கே?' என்றார். நான் உடனே கதவை திறந்து, வெளியே நின்றிருந்த அந்த நண்பரை உள்ளே அழைத்தேன். அவரும் வந்தவுடன், காமராஜருக்கு வணக்கம் சொல்லியவாறு, ஒரு ஓரத்தில் நின்று கொண்டார்.
காமராஜர் குழந்தைத்தனமாக, "அது சரி... நான் எங்கே நிக்கணும்ன்னு சொல்லு...' என்றார். நான் சொன்ன இடத்தில் நின்று, போட்டோவுக்கு ஒத்துழைத்தார். துவக்கத்தில் மறுத்தாலும், கடைசியில் வந்தவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைப்பது, காமராஜரின் தனி பண்பு. சிறிது நேரத்தில் வெளியே சலசலப்பு. என்னவென்று விசாரித்ததில், நரிக்குறவர்கள் சிலர், காமராஜரை சந்திக்க வேண்டும் என வெளியே இருந்த கட்சிக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட காமராஜர், அறைக்கு வெளியே வந்து அவர்களிடம் என்னவென்று விசாரித்தார்.
காமராஜரை பார்த்ததும் குஷியான குறவர்கள், "சாமியோவ்... நீங்க நல்லா இருக்கணும், உங்க கையை காமிங்க. எதிர்காலம் பற்றிய குறி சொல்றோம்...' என, "காச்மூச்' என்று, அவர்கள் பாணியில் பேசினர். காமராஜரும் சிரித்தவாறு. "குறியெல்லாம் ஒண்ணும் வேணாம். அதை தெரிஞ்சு என்ன ஆகப் போகுது...' என்று மறுத்து விட்டார். பிறகு அருகிலிருந்த என்னை பார்த்த குறவர்கள், "சாமி... எங்களை தலைவரோடு சேர்த்து போட்டோ எடுங்க...' என்றனர். நான் தயங்கியபடி சும்மா நிற்பதை பார்த்த காமராஜர், "ஏம்பா... இவங்களையும், ஒரு போட்டோ எடு. அவங்களுக்கும் ஆசை இருக்காதா?' என்றவாறு, அவர்களுக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்து, அவர்களை வழி அனுப்பினார். இப்படி ஒவ்வொரு நேரத்திலும், அனைவரிடமும் பாசத்துடன் பழகுவதை காண முடிந்தது.
இப்படி அனைவரையும் மகிழ்ச்சியுடன் அனுப்பிய காமராஜர், அரசியலில் கடைசி காலத்தில் மனம் வருந்தும் அளவுக்கு, டில்லி அரசியல் மூலம் பல சம்பவங்கள் அரங்கேறின. அரசியலில் இந்திராவும், காமராஜரும் கிட்டத்தட்ட எதிரிகள் போல் ஆகி விட்டனர். கன்னியாகுமரி ரயில் நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் இந்திரா வந்திருந்தார். தொகுதி எம்.பி., என்ற முறையில், காமராஜரும் கலந்து கொண்டார். இந்திராவும், காமராஜரும் நீண்ட இடைவெளிக்குப் பின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், அனைவரும் ஆவலுடன் காணப்பட்டனர். பத்திரிகைக்காக படம் எடுக்க, நானும் கன்னியாகுமரி சென்றிருந்தேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த, அத்தனை போட்டோகிராபர்களும் காமராஜர், இந்திராவை சேர்த்து படம் எடுக்க ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், மேடையில் இடது ஓரம் கடைசி நாற்காலி, காமராஜருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகையால், நடுவில் அமர்ந்திருந்த இந்திராவுடன் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
விழா இறுதியில், நாட்டுப்பண் முடிந்தவுடன், பிரதமர் இந்திரா மேடையிலிருந்து கூட்டத்தை நோக்கி கை அசைத்தவாறு, இடது பக்க ஓரம் வந்தார். ஒரே பரபரப்பு... ஏனெனில், எப்படியும் இடது பக்க ஓரம் வரும் போது, காமராஜரை சந்தித்தே ஆக வேண்டும். அப்போது, இருவரையும் சேர்த்து படம் எடுக்க தயார் நிலையில் நாங்கள் இருந்தோம். அப்போது தான் எதிர்பாராத திருப்பம் நடந்தது.
காமராஜர் இருக்கும் பக்கம் போய்க் கொண்டிருந்த பிரதமர் இந்திராவிடம், விரைந்து சென்ற கருணாநிதி, தன் அருகில் உள்ள மதுரை முத்துவை காண்பித்து, "மேடம் இவர் தான் மதுரை முத்து. சேர்மன்மதுரை...' என்று ஆங்கிலத்தில் கூறி, சம்பந்தமில்லாமல் அறிமுகப்படுத்தினார். அவரும் வணக்கம் செலுத்தினார். அவ்வளவு தான்! உடனே கருணாநிதி கையை வலது பக்கம் நீட்டி, கீழே இறங்கும் வழியை காண்பித்தார். இந்திராவும், வலதுபக்க படி வழியே கீழே இறங்கி புறப்பட்டார். காமராஜர் மேடையில் இருந்து அசையாமல் பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று!
"தந்திரமாக செயல்பட்டு, இந்திரா, காமராஜர் சந்திப்பை கருணாநிதி தடுத்து விட்டாரே...' என, அங்கே இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் பேசியதை கேட்க முடிந்தது.
***

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=11261&ncat=2



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! 1357389மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! 59010615மக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Images3ijfமக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்! Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 15, 2012 6:51 pm

நல்ல மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி k7




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 10:26 am

அப்போதிருந்த அந்த நரி தந்திரம் கருணாநிதி கிட்ட இன்னும் அப்படியேதான் இருக்கு



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 16, 2012 11:07 am

வயசானாலும் நரி தந்திரம் மட்டும் குறையவே இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக