புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
101 Posts - 52%
heezulia
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
16 Posts - 3%
prajai
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
9 Posts - 2%
jairam
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணிக் கொள்ளை!….


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 13, 2012 12:12 pm

சிமென்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு விலையை அதிகமாக நிர்ணயித்து விற்றுப் பெரும் லாபம் ஈட்டிய குற்றத்துக்காக, 11 சிமென்ட் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.6,307 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் “”போட்டியை உறுதி செய்யும் ஆணையம்” இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட சிமென்ட் நிறுவனங்கள் 2009 முதல் 2011 வரையிலான நிதியாண்டுகளில் ஈட்டிய லாபத்தின் அடிப்படையில்தான் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

தங்கள் லாபத்தையும் முழுமையாக கணக்குக் காட்டியிருப்பார்கள் என்ற பொதுவான நம்பிக்கையில்தான் லாபத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த முறைகேடு பற்றித் தெரிந்தும் தலையிட்டு, சீர்செய்யாமல் வேடிக்கை பார்த்த சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் ரூ.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதென்ன வர்த்தகப் போட்டியை உறுதி செய்யும் ஆணையம்? ஒருவர் மட்டுமே ஒரு தொழிலில் ஈடுபடும் ஏகபோகம் இருப்பதால்தான் அவர்கள் வைத்ததே சட்டமாகவும், தரம் நல்லதோ கெட்டதோ அதை நுகர்வோர் வாங்க வேண்டியது கட்டாயமாகவும், அந்த நிறுவனங்கள் வைத்ததே விலையாகவும் இருந்து வருவதை ஒழிப்பது என்பதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கம்.

பல நிறுவனங்கள் ஒரே பொருளைத் தயாரித்து விற்பனை செய்யும்போது அவர்களுக்குள் நியாயமான தொழில் போட்டி ஏற்படும். அதனால், பொருளின் தரமும், நியாயமான விலையும், தட்டுப்பாடு இல்லாத நிலையும் சந்தைப் பொருளாதாரத்தால் ஏற்படும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவாக சந்தைப் பொருளாதாரக் கொள்கை லைசென்ஸ் பர்மிட் காலகட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பல தனியார் நிறுவனங்கள் களமிறங்கின. இவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டதால் தரத்துக்கு முன்னுரிமை தரப்பட்டு வந்தது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதில் காட்டிய போட்டியை விலைக் குறைப்பிலும் தரத்தை அதிகரிப்பதிலும் காட்டவில்லை என்பதுதான் நிஜம்.

தனியார்மயமாக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நுகர்வோரை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக 2002-ல் கொண்டு வரப்பட்டதுதான் வர்த்தகப் போட்டியை உறுதி செய்யும் ஆணையம்.

தி காம்படிஷன் ஆக்ட் 2002, 2007-ல் திருத்தப்பட்டு, மேலும் பல புதிய நிபந்தனைகளும் சட்டத்திட்டங்களும் வர்த்தகப் போட்டி இல்லாத தனியார் ஏகபோகத்தைத் தடுப்பதற்காக சீரமைக்கப்பட்டது. இனி பிரச்னைக்கு வருவோம்.

எந்தவொரு பொருளின் விலை உயர்வும் தவிர்க்க முடியாதது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுண்ணாம்புக் கல் கொண்டு வரும் லாரி வாடகை, சுண்ணாம்புச் சுரங்க வயல்களின் குத்தகை உயர்வு, வேலையாள்களின் சம்பள உயர்வு என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகைய நியாயமான காரணங்கள் எதுவுமே இல்லாமல், சிமென்ட் நிறுவனங்கள் அனைத்தும் கூட்டாகத் திட்டமிட்டு உற்பத்தியைக் குறைத்து, சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையைக் கூட்டியுள்ளன. இது வெறும் முறைகேடு அல்ல. பெரும் குற்றம்.

மிகஅதிகபட்ச அபராதமாக ரூ.1323 கோடி செலுத்தப்போகும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், அதையடுத்துள்ள ஆதித்ய பிர்லா குழுமம், அல்ட்ராடெக், இந்தியா சிமென்ட்ஸ் உள்ளிட்ட இந்த 11 நிறுவனங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை 90 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பது ஆணையத்தின் உத்தரவு. ஆனால் இந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்து அபராதம் செலுத்தாமல் தவிர்க்க முயலும்.

முறையீடும், விசாரணையும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்ப்பு மறக்கடிக்கப்படும். அல்லது நலிந்துகிடக்கும் சிமென்ட் தொழிலை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற சாக்கில் அபராதத் தொகையை ரத்து செய்யவும் அரசு துணியும். எதுவும் நடக்கலாம்.

பெரிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, பேசி முடிவெடுத்து, வேண்டுமென்றே ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரும் லாபத்தைச் சம்பாதிப்பது மிகப்பெரும் குற்றம். இந்தக் குற்றத்தைக் கண்டுபிடித்து, தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும்தான் வர்த்தகப் போட்டியை உறுதிசெய்ய ஆணையம் அமைக்கப்பட்டது. சிமென்ட் தட்டுப்பாடு அல்லது விலையேற்றம் நடைபெறும் அதே காலகட்டத்தில், அப்போதே அதை கண்காணித்து ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால், எத்தனை கோடி நடுத்தர மக்கள் பலன் அடைந்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதுதான். இப்போதாவது அபராதம் விதித்தார்களே என்று ஒரு குடிமகன் திருப்தி அடைந்தாலும்கூட, இந்த நடவடிக்கையால் அந்தக் குடிமகன் ஏற்றுக்கொண்ட இழப்பை அரசு எவ்வாறு ஈடு செய்ய முடியும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரு குடிமகன் கொடுத்த கூடுதல் விலை நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

இப்போது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை இந்த சிமென்ட் நிறுவனங்கள் அப்படியே முழுமையாகச் செலுத்தினாலும்கூட, இது அரசுக்குப் போய்ச் சேரும்தான். தவறு செய்த நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டன என்று வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனால் என்ன லாபம்? நடவடிக்கை எடுத்தார்களே என்கின்ற மனத்திருப்தி கிடைப்பதுடன் சரி.

இவ்வாறு கூட்டணி அமைத்து விலையேற்றம் செய்யும் தொழில்கள் நிறைய உள்ளன. அரிசி, பருப்பு மண்டிகள், அடுக்குமனை மற்றும் மனை விற்பனைத் தொழில், சர்க்கரைத் தொழிற்சாலைகள், பருத்தி, மஞ்சள் கொள்முதல் செய்யும் தனியார் அமைப்புகள் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இவர்கள் கூட்டணி அமைத்து நிர்ணயிக்கும் விலைதான் அன்றைய நாளின் விலை. ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நுகர்வோரைத் தள்ளுகிறார்கள்.

இத்தகைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து தண்டிப்பதும், இத்தகைய நிறுவனங்களை அரசே ஏற்றுக்கொள்வதுமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே மக்கள் வர்த்தக நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுவது குறையும்.

ஆணையம் அமைப்பதாலும், அபராதம் விதிப்பதாலும் நிலைமை மாறிவிடாது – அரசுக்கு உண்மையாகவே சராசரி மக்கள் மீது அக்கறையும் இருந்தால்தான் அது சாத்தியம்!
http://www.thannambikkai.net



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 12:44 pm

நல்ல வேளை அந்த சிமென்ட்ட வாங்கின மக்களுக்கு அபராதம் போடலியே - தப்பிச்சோம்.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் - என்று தணியும் இந்த ஊழல் தாகம்?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 12:49 pm

நல்ல பதிவு,என்ன அபராதம் வித்தித்து என்ன பயன்.பாதிக்கபட்டவர்கள் சுமக்கும் கடன் மூட்டைகளை சுமப்பார்களா இந்த சிமெண்ட் நிறுவனத்தினர்கள். சோகம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 13, 2012 1:02 pm

படங்களில் மற்றுமே ஊழல், லஞ்சத்திற்கு எதிராக தண்டனை கொடுப்பதை பார்க்கிறோம்.
ஆனால் நிஜத்தில்??????



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 1:34 pm

அனைத்து முன்னணி சிமென்ட் நிறுவனத்திலும் , அரசியல்வாதிகளின் ஷேர் உள்ளது . இப்படி
ஒரு சுழ்நிலையை ஏற்படுத்தி பணம் பார்த்ததே அரசியல்வாதிகள்தானே ஆகவே இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக