புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_m10ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:30 am

பொருளாதார வளர்ச்சி, ராணுவ வலிமை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில், உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல சீனா. ஓய்வின்றி உழைப்பதிலும், சீனர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், சீன மக்களிடையே, வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.

இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் கண்கள் மீது, இவர்களுக்கு ஆசை அதிகம். தங்களுக்கும் அதுபோன்ற பெரிய கண்கள் வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இமைகளை பெரிதாக்கி கொள்ளும் நடைமுறை, அங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், சீனர்களுக்கு ஆசை உண்டு. லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்குகின்றனர், ஆயிரக்கணக்கான சீன மக்கள்.

இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர். லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. இங்கு சென்றால், நாம் சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் விடும்.

இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

"ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எப்போதும் மிகவும் பிசியாக காணப்படும் இந்த <உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயித்தாலும், இதை வடிவமைத்தவர்கள் முகங்களில், அந்த மகிழ்ச்சியை காண முடியவில்லை. "இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள வீடுகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இத்தனை வீடுகள் கட்டப்பட்டும், ஒரு சில வீடுகளில் தான் ஆட்கள் வந்துள்ளனர். அதற்கான விலை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனைவரும் நினைப்பதே இதற்கு காரணம்...' என, கவலை யுடன் கூறுகின்றனர்.
***

தினமலர்



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 7:44 am

சீனர்களுக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது ஆனால் இந்தியர்களுக்கு அது
வாழ்கையின் இன்றியமாத ஒன்றாகி விட்டது. ஒரு சமயம் சீனாவிற்கு வந்த
அமெரிக்க சுற்றுலா குழுவினர் ஒரு பஸ்ஸில் ஏறி சீனாவை சுற்றி பார்த்துகொண்டு
வந்தார்கள் அப்பொழுது சீனாவை பற்றி வண்டியில் வந்த சீன வழிகாட்டி இளைஞன் உடைந்த
ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வந்தான். அனைவரும் அவன் ஆங்கிலத்தில் பேசுவதை
கண்டு சிரித்து கொண்டும் நக்கல் செய்து கொண்டும் வந்தனர். இறங்க வேண்டிய இடம் வந்த போது அவர்களில் ஒருவர் அவனை பார்த்து தாங்கள் கிண்டல் செய்தது வருத்தமாக இருந்ததா என்று கேட்டார். அவனோ அப்பெடிஎல்லாம் ஒன்றும் இல்லையே ஏன் என்றால் எனக்கு உங்கள் மொழி கொஞ்சமாவது தெரியும் ஆனால் சீன மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாத உங்களை கண்டு நான் ஏன் வெட்கி இருக்கவேண்டும் என்று கேட்டார். அமெரிக்கர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:51 am

நன்றி தர்மா அண்ணா.

ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும்..

வட மாநில மக்கள் பலர் இங்கே சாலை அமைக்கும் பணி மற்றும் பல தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள் .

அவர்களிடம் நம் கடைகாரர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ஹிந்தியில் பேசுகிறார்கள்.

அதாவது ஏக் ருபி, தஸ் ருபி இது போல ...

ஒரு தொழிற்சாலையில் நான் ப்ராஜெக்ட் கு சென்றபோது அங்கெ இருந்த தொளிலார்களுக்கு தமிழ் துளியும் தெரியவில்லை. அவர்களுக்கு உண்மையில் தெரியவில்லையா இல்லை நடிக்கிறார்களா என்று தெரியவில்லை..

ஆனால் வடமாநிலங்களில் இது போல அல்லாமல் ஹிந்தி மொழியே திணிக்கப்படுவதாக கருத்து இருக்கிறது..

இதை பற்றி உங்கள் கருத்து. ?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 8:22 am

கரெக்ட் தம்பி நாம் எந்த சூழ்நிலைக்கும் அடாப்டபல் அதனால் தான் இங்கு அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு தனி மரியாதை உள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு மருத்துவமனை சென்று உடம்பு சரியில்லை என்று விடுப்பு கேட்டேன். அதற்க்கு அங்கு இருந்த மராத்தி டாக்டர் சொன்னார். மதராசிகள் தான் நன்றாக வேலை பார்ப்பார்கள் உங்களுக்கு உடம்பு அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை உங்களுக்கு விடுப்பு தர இயலாது என்றார். மேலும் தமிழகம் தவிர இந்தி அனைத்து மாநிலங்களிலும் ஒரு பாடமாக உள்ளதால் நம்மை தவிர வேறு யாரும் ஹிந்தி காக கஷ்டபடுவதில்லை. நமது பெயர் கூட அவர்களுக்கு உச்சரிக்க தெரியாததுதான். ஒரு மலையாளி, கன்னடிகன், தெலுங்கன் ஹிந்தி மொழி தெரிந்ததால் இலகுவாக மற்ற மாநிலத்தவருடன் ஒட்டி கொள்கிறான். ஹிந்தி தெரியாமல் வந்து இங்கு நான் திண்டாடியது வேறு யாருக்கும் வரகூடாது என்பதே. தமிழ்நாட்டில் கேந்திரிய ஸ்கூல்களில் வேலை செய்ய ஹிந்தி அவசியம் படித்திருக்க வேண்டும் இது தான் நிலைமை. கனி மொழி அன்பு மணி மாறன் சகோதரர்கள் அனைவருக்கும் ஹிந்தி நன்றாக வரும்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 8:43 am

தகவலுக்கு நன்றி தர்மா அண்ணா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 20, 2012 9:50 am

சிறந்த தகவல்கள் அளித்த தர்மா அண்ணா மற்றும் பிரபு அண்ணாவுக்கு நன்றி நன்றி , பிரபு அண்ணா நீங்க சொன்னது அந்த பாபா அடொமிக் தொழிற்சாலை தானே ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 9:52 am

இரா.பகவதி wrote:சிறந்த தகவல்கள் அளித்த தர்மா அண்ணா மற்றும் பிரபு அண்ணாவுக்கு நன்றி நன்றி , பிரபு அண்ணா நீங்க சொன்னது அந்த பாபா அடொமிக் தொழிற்சாலை தானே ஜாலி
இன்னுமா நம்மளை உலகம் நம்புது.. ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 9:54 am

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! Kumari
அப்படி தான் நினைக்கிறன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 20, 2012 9:57 am

இன்னுமா நம்மளை உலகம் நம்புது..

ஆமாம் அந்த நியூ-கிளியர் ரிசர்ஜ் ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 10:16 am

இரா.பகவதி wrote:
இன்னுமா நம்மளை உலகம் நம்புது..

ஆமாம் அந்த நியூ-கிளியர் ரிசர்ஜ் ஜாலி
அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக