புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
29 Posts - 34%
prajai
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
1 Post - 1%
jairam
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
7 Posts - 5%
prajai
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 12:17 pm

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் P5

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க, ரய்சினா குன்றத்தின் மீது அமைந்திருக்கும் அந்த நாள் வைஸ்ராய் மாளிகையான இந்நாள் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நாளும் கிழமையும் அதிகரித்து வருகிறது. 13வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்கிற பெருமைக்குரியவர் இன்னார்தான் என்று இன்னும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமைக்குக் காரணம், எந்த ஒரு கட்சியும், கூட்டணியும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான்.

÷இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகும் இந்தியாவின் அடுத்த முதல் குடிமகன் யார் என்கிற சர்ச்சை வலுத்து வருகிறதே தவிர, அதன் பின்னணியில் சில மரபுகள் மீறப்படுவதும் அதன்மூலம் தென்னகம் வஞ்சிக்கப்படுவதும் வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.

÷இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950-ல் பதவி ஏற்றபோது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறாத நிலையில், உடனடியாகக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது யாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார்.

÷""இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தென்னிந்தியாதான். தென்னிந்திய மக்கள் "தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது' (தில்லி பஹுத் தூர் ஹை) என்று துளியும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குடியரசுத் துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராகவும், குடியரசுத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் துணைத் தலைவர் வடநாட்டைச் சேர்நதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல, குடியரசுத் தலைவர் பதவி வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்குமாக மாறிமாறி கிடைக்கும்படியான மரபும் கடைபிடிக்கப்பட வேண்டும்'' என்று தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதுடன் நிற்கவில்லை.

÷குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சார்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் பண்டித ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. அறிஞர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக வருவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். "தத்துவ மேதை' டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்வு பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட தேர்வாக இருந்தது.

÷குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு முதன்முதலில் பிரதமர் இந்திரா காந்தியால் 1974-ல் மீறப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜி.எஸ். பதக்குக்கு பதிலாக பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1977, 1982, 2002, 2007 தேர்தல்களிலும் இந்த மரபு மீறப்பட்டது.

ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் என்று வடக்கும் தெற்கும் மாறி மாறிக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த மரபு முதல் முறையாக மீறப்பட்டது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்போதும்கூடத் துணைத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

÷2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மிகப்பெரிய மரபு மீறல் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சி "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டுத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

÷தென்னிந்தியரான (தமிழரான) ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் வருவதைத் திமுக ஆதரித்ததில் தவறில்லை. மரபுப்படி வடநாட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டியதுதான் முறையும் கூட. ஆனால், குடியரசுத் துணைத் தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மரபு வழி நின்று திமுக குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.


மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திமுகவின் ஆதரவு இருந்தாக வேண்டும் என்கிற நிலைமையும் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

÷"தினமணி' தனது தலையங்கத்தின் மூலம் மரபு மீறப்படுவதை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, ஏன் திமுகவின் பொதுச் செயலாளரான க. அன்பழகனைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பி இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.


÷அப்படிச் செய்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் ஒரு தென்னிந்தியர்தான் மரபுப்படி குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருந்தால், இப்போதைய குடியரசுத் தேர்தலின் போக்கே மாறி இருக்கக் கூடும். அப்படி குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் தென்னிந்தியரின் பெயர்தான் மரபுவழி குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னணி வகிக்கும் பெயராக இருந்திருக்கும்.

÷இப்போது 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் மரபு மீறப்பட்டு தெற்கு வஞ்சிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மரபு வழி பார்த்தால், இந்த முறை குடியரசுத் தலைவர் பதவி ஒரு தென்னிந்தியருக்குத் தான் தரப்பட வேண்டும். அவர் தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமாக இருந்தாலும் சரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் சரி. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராகத் தென்னிந்தியர் ஒருவரின் பெயர் கூடப் பேசப்படுவதில்லை.

÷இந்த முறை மீண்டும் வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த மரபு, இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க அவர் ஏற்படுத்திய மரபு மீறப்படுவது மட்டுமல்ல, இனி வரும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தென்னிந்தியர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் நிலைமைகூட ஏற்பட்டாலும் ஏற்படலாம்; படும்!

÷அப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிற பெருமை கருணாநிதியைத்தான் சாரும் - தெற்கை வஞ்சித்து வடக்கு வளர்வதற்கு உதவிய பெருமை!

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 12:20 pm

கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.

தினமணி நாழிதல் தவறு செய்து விட்டு கருணாநிதியின் மேல் குறை சொல்கிறார்கள்.... தினமணி என்ன செய்து இருக்க வேண்டும்... அஞ்சாநெஞ்சன் அழகிரி பெயரையோ அல்லது கனிமொழியின் பெயரையோ பரிந்து இருந்தால் நிச்சயம் நடந்து இருக்கும் அதை விட்டு விட்டு சும்மா கே. அன்பழகன், "விடுதலை' கி. வீரமணி என்றால் எப்படி என்ன கொடுமை சார் இது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 12:22 pm

பிரசன்னா wrote:
கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.

தினமணி நாழிதல் தவறு செய்து விட்டு கருணாநிதியின் மேல் குறை சொல்கிறார்கள்.... தினமணி என்ன செய்து இருக்க வேண்டும்... அஞ்சாநெஞ்சன் அழகிரி பெயரையோ அல்லது கனிமொழியின் பெயரையோ பரிந்து இருக்க வேண்டும்.... அப்படி எழுதியிருந்தால் நிச்சயம் குடியரசுத் துணைத் தலைவர் பதவி நமக்கு கிடைத்து இருக்கும் அதை விட்டு விட்டு சும்மா கே. அன்பழகன், "விடுதலை' கி. வீரமணி என்றால் எப்படி என்ன கொடுமை சார் இது


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 10, 2012 4:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் 1357389மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் 59010615மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Images3ijfமீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 10, 2012 7:07 pm

சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக