புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்
Page 1 of 1 •
நமது இணையதளத்தில் வெளியான டாஸ்மாக் கொள்ளை பற்றிய கட்டுரை மதுபானிகள் (மது அருந்துகிறவர்கள்) மத்தியில் பிரபலமடைந்திருக்கிறது. மதுபானிகள் நலனை முன் வைத்து தீட்டப்பட்ட அக்கட்டுரையை மதுபானி ஒருவர் ஆதரிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஆனால் ஆச்சரியமாக... நம்புங்கள், கோடம்பாக்கம் கோயிந்தன் அக்கட்டுரை குறித்த தனது அதிருப்தியை இங்கே பதிவு செய்கிறார்.
“மிஸ்டர் கோவிந்தன்...”
“கோடம்பாக்கம் கோ-யி-ந்-த-ன்.”
“ஓகே, மிஸ்டர் கோடம்பாக்கம் கோயிந்தன். சிறந்த மதுபானியான உங்களுக்கு டாஸ்மாக் கட்டுரையில என்ன பிரச்சனை?”
“பிராப்ளம் என்னாக்கன்னா நானு மதுபானிங்கிறது ரைட்டு. ஆனா பயங்கர கலா ரசிகனுங்க.”
“அதாவது ஆர்ட்னா உங்களுக்கு உயிர். மியூஸிக், பெயிண்டிங், ஸ்கல்ப்சர்...”
“இன்னா சார் அல்சர் கில்சர்னு ஆள பயமுத்திக்கினு. கரீட்டா சொல்றேன் பாரு. கலா ரசிகனுன்னாக்க சினிமா. தெனத்துக்கும் ரெண்டு தபா படம் பார்ப்பேன்.”
“ஓ... அதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?”
“கட்சியா நீ கொட்டாயில போய் இன்னா படம் பார்த்த சார்? இன்னா முழிக்கிற? பேப்பர்காரங்களுக்கு போடுற ஓசி படம் பார்க்கிற பார்ட்டியா நீ. காசு குட்த்து நீயெல்லாம் கொட்டாயில படம் பார்த்ததுதான். செரி, நானே டீட்டெய்லா சொல்லிக்கிறேன்.”
கோயிந்தன் டீட்டெயிலாகச் சொல்லிக்கிட்டதை சென்னைக்கு வெளியே உள்ள வாசகர்களின் ஆரோக்கியம் கருதி பொது மொழியில் தருகிறோம். கோயிந்தனின் கருத்து பின்வருமாறு.
1. டாஸ்மாக்கில் குவாட்டருக்கு ஐந்து ரூபாய், பீருக்கு பத்திலிருந்து முப்பது ரூபாய் வரை அதிகமாகப் பிடுங்கிக் கொள்கிறார்கள், ஒன்றரை ரூபாய் வாட்டர் பாக்கெட்டை நான்கு ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று டாஸ்மாக்கில் மட்டுமே கொள்ளை நடப்பதாக அக்கட்டுரையில் எழுதியிருந்த தொனி கோயிந்தனுக்கு இஷ்டப்படவில்லை. தெனத்துக்கும் ரெண்டு தபா படம் பார்க்கிற கோயிந்தனைப் பொறுத்தவரை டாஸ்மாக்கைவிட கொள்ளை நடக்கிற இடம் ஒன்று உண்டு. அது திரையரங்கு.
2. திரையரங்கில் பார்க்கிங் என்று கணிசமான ஒரு தொகையை பிடுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக்கில் பார்க்கிங் கட்டணம் இல்லை. டாஸ்மாக்கில் ஏது பார்க்கிங் என்ற கேள்விக்கு சிறந்த மதுபானியான கோயிந்தனின் பதில். “செரி, கடியாது. ஆனா விருகம்பாக்கம் ஜில்ஜில் ஒயின்ஸாப்லயும், நெசப்பாக்கம் ஒயின்ஸாப்லயும் உண்டே. துட்டா வாங்கறான்?” கோயிந்தன் சொன்ன இன்னொரு விளக்கம் ஹோட்டல் பாரில் மது அருந்தச் செல்பவர்களிடம் ஹோட்டல் நிர்வாகம் பார்க்கிங் காசு வசூலிக்கிறதா என்ன.
3. திரையரங்குகளில் பாக்கெட்டை தடவி, பையை துழாவிக் கொண்டு வரும் ஸ்நாக்ஸை எடுத்துவிட்டே உள்ளே அனுமதிக்கிறார்கள். நாம் எடுத்து வரும் தின்பண்டங்கள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. டாஸ்மாக் பார்களில் இந்த சட்டம் அமலில் இருந்தாலும் திருமதி கோயிந்தன் காதலுடன் செய்து தரும் பீஃப் பொரியலை எடுத்துச் சென்றால் யாரும் எதுவும் சொல்வதில்லை. இந்த ஸ்நாக்ஸில் ஒளிந்திருக்கும் அரசியலை பற்றிய கோயிந்தனின் விளக்கம் வருமாறு.
* திரையரங்குகளில் சரியாக 11.30க்கு காலைக் காட்சி ஆரம்பிக்கிறார்கள். இடைவேளை ஒருமணிக்கு. தமிழனின் மதிய உணவு நேரம். பசியில் இருக்கும் பார்வையாளன் திரையரங்கு கேண்டீனில் உள்ளவற்றை தின்றே ஆக வேண்டும், என்ன விலையாக இருந்தாலும். நாம் உணவு எடுத்தும் வரக்கூடாது, அவர்களின் யானைவிலை தின்பண்டங்களை வாங்கியும் ஆக வேண்டும். இது தனி மனித உரிமை மீறல் என்பது கோயிந்தன் தரப்பு வாதம்.
4. தின்பண்டங்களின் விலை. இந்த விஷயத்தில்தான் டாஸ்மாக் கட்டுரையை கொள்கை அளவில் எதிர்க்கிறார் கோயிந்தன். டாஸ்மாக்கில் 16 ரூபாய் மதிப்புள்ள ஒரு லிடடர் வாட்டர் பாட்டில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே திரையரங்குகளில் பத்து ரூபாய் மதிப்புள்ள அரை லிட்டர் வாட்டர் பாட்டில் ரூபாய் 20. ஒரு லிட்டர் வாங்கினால் நாற்பது ரூபாய். கொள்ளை நடப்பது டாஸ்மாக்கிலா, திரையரங்கிலா? இதேபோல் ஐந்து ரூபாய் வீல் சிப்ஸ் 20 ரூபாய், எட்டு ரூபாய் முட்டை பப்ஸ் 20 ரூபாய். “இத்த மாரி அநியாயம் எங்கியாச்சும் இருக்கா சார்” என்கிறார் பயங்கர கலா ரசிகரான கோயிந்தன். பத்து உப்புக்கடலையை பாக்கெட் போட்டு நாலு ரூபாயக்கு விற்பது மட்டும் தப்பில்லையா என்ற கேள்விக்கு மிஸ்டர் கோயிந்தன் கோபமாக விழித்தபடி பின்வருமாறு கூறினார்.
“இன்னா சார் புர்யாத ஆளா இருக்கே. என்ன மாரி அன்றாடங்காய்ச்சிங்க நாலு ரூபா எடுத்துக்கினு போனா உப்புக் கடலையாச்சும் பர்சேஸிங் பண்ணிப்போம். கொட்டாயில என்ன கெடக்கிம்ங்கிற? பத்து ரூபாய்க்கு டிக்கெட் கெட்ச்சிரும், திங்கிறது இருவது ரூபாய்க்கு குறைச்சலா கொட்டாய் காத்துதான் கெடைக்கும்.” பண்டங்களின் டேஸ்டைப் பற்றியும் கோயிந்தனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. “கால்வாசி முட்டையும் இத்துனூண்டு மாவும் வச்சு தர்ற பப்ஸ்ல இன்னா சார் பெரிய டேஸ்ட்டு. நம்ம மாரியோட பேக்கரியில் எண்ணைய் கையோட எட்த்து தருவான். இவனுங்க கையில கேரி பேக் மாட்டி எட்த்து தர்றானுங்க. கேரி பேக்குக்கு இருவது ரூபாய்ங்கிறது அநியாயம் இல்லையா சார்.” (ஒரு விடுபடல். கோயிந்தன் சிறந்த நளபாகரும்கூட).
5. கோவிந்தனை மடக்குவதற்காக குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் எடுப்பது பற்றி கேட்டோம். கோயிந்தனின் பதில் அதிர்ச்சியானது. கோயம்பேடு பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸில் டிக்கெட் கட்டணம் என்ன என்று யாருக்கும் தெரியாது என்றான். டிக்கெட்டிலும் கட்டணம் இருப்பதில்லை. அவர்கள் கேட்பதை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அசோக்நகர் பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸில் பார்வையாளர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு இருக்கும் உறவு அடர்த்தியானது. நெருக்கடியான நேரங்களில் ஊழியர்களே நேரடியாக பிளாக்கில் டிக்கெட் விற்பதுண்டு. அவர்களுக்கான மன உறுதி காவல்துறையால் எப்போதும் உறுதி செய்யப்பட்டிருக்கும். விரைவில் அந்த காம்ப்ளக்ஸில் பிளாக் டிக்கெட்டிற்கு தனி கவுண்ட்டர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதாக கோயிந்தன் தெரிவித்தான்.
6. இந்த விஷயத்தில் கோயிந்தன் தப்பிக்கவே முடியாது. போலி மதுவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் கோயிந்தன்?
“ஐயோ சார் ஒலகம் புர்யாத ஆளா இருக்கிற. எங்க சார் ஒரிஜினல் இருக்கு? நம்ம வூட்ல பையன் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீசு படமா பாப்பான். அன்னிக்கு ஒரே அடிபுடியா இருக்கேன்னு நானும் கொஞ்சமா லுக் வுட்டேன். டேக்கனோ டோக்கனே. அத அப்பிடியே நம்ம கேப்டன் விருதகிரியில அடிச்சிட்டாரு. ஊழலை ஒழிப்பேங்கிறவரே இப்பிடின்னா...… அதவுடு. உங்க கம்ப்யூட்டரிலேயே ஒரு புள்ள எழுதியிருக்கே. மை சேச்சி...”
“சேச்சி இல்ல மை சாஸி கேர்ள்.”
“அதேதான். அந்தப் படத்துல வர்ற புள்ள வாந்தி எடுக்கிறதை அப்படியே சிந்தனை செய் ங்கிற படத்துல வாந்தியெடுத்திடுத்திருக்கிறதா. பார்ல குட்ச்சிட்டு வாந்தியெடுப்பானுங்க, இங்க என்னடான்னா எவனோ எடுத்த படத்தை இங்க வந்து வாந்தி எடுக்கிறானுங்க ஹா...ஹா...ஹா...”
7. இதற்கு மேல் கோயிந்தனிடம் பேச எதுவுமில்லை. என்றாலும் கடைசி அஸ்திரமாக டாஸ்மாக் விடுமுறை நாட்களில் டபுள் மடங்கு விலையில் மது விற்கப்படுகிறதே என்றோம்.
இதை கேட்டபோது கோயிந்தன் பார்வையில் மரியாதை கணிசமாக குறைந்திருந்தது. “இன்னா மேன் பேசுற. ரஜினி கமல் தொடங்கி தளபதி வரைக்கும் படம் ரிலீஸாகிறச்ச அம்பது ரூவா டிக்கெட்டை ரெண்டாயிரத்துக்கு சேல் பண்றதை இன்னான்னு சொல்ற. டாஸ்மாக் லீவுன்னாக்க மொத நாளே வாங்கி ஸ்டாக் வச்சிக்கினுவோம். அப்படியே வேணும்னாக்க அறுபது ரூவாய்க்கு நூத்தியிருபது குட்த்தா போதும். அது மாதிரியா இது?” இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல் நமது கலா ரசிகர் எழுந்து கொண்டார்.
அனேகமாக கோயிந்தன் நம்மை தோற்கடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மதுபானிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தி. அவர்கள்தான் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள் என்று நினைத்தால் அவர்களைவிட அதிகம் சுரண்டப்படுகிறவர்கள் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே. ஹோட்டல் குளுகுளு பாரும், மல்டிபிளிக்ஸும் ஒன்று என்று கோயிந்தன் அது பற்றி பேசவே முன் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
எல்லாவற்றையும் மறுத்தாலும் ஒரு விஷயத்தில் திரையரங்கே மேல் என்பது கோயிந்தனின் அபிப்ராயம். அது சுகாதாரம். டாஸ்மாக் ‘பன்னி கொட்டாய்’ என்பது அவரின் உறுதியான நிலைப்பாடு.
கிளம்புகையில் திரையரங்குகளில் டாஸ்மாக் பார் வைக்க வேண்டும் என ஒரு கோஷ்டி கோரிக்கை வைத்தது பற்றி கேட்டோம். கோயிந்தனின் இத்தனை விளக்கத்திற்குப் பிறகும் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாது. நமது தப்புதான். “நாங்க உண்டு டாஸ்மாக் உண்டுன்னு ஓரமா இருந்துகினு போறோம். கொட்டாயில பாரை வைக்கிறேன்னு கேரி பேக்ல பப்ஸ் எட்த்தாந்து காசப் புடுங்கலாம்னு பார்க்கிறானுங்களா. இல்ல எங்க டவுசரை தடவி பீஃப் பொரியலை லவட்டலாம்னு திட்டம் வச்சிருக்கானுங்களா. கொட்டாயில பாரை ஓபன் பண்ணுனாக்கா டெமாக்கிரஸி என்னாறது, செல்ஃப் ரெஸ்பெக்ட் என்னாறது...” கோயிந்தனின் குரல் தழுதழுத்தது. “உப்புக் கடலைக்கும், வாட்டர் பாக்கெட்டுக்கும் குவாட்டர் ரேட் கேட்பானுகளே சார்..”
பின் குறிப்பு: புரட்சி கலைஞர், புரட்சி தளபதி என்று சினிமாக்காரர்கள் அடைமொழி வைத்து புரட்சி என்ற வார்த்தையை கெட்டவார்த்தை அளவுக்கு சீரழித்தது போல, மது அருந்துகிறவர்களை தினப்பத்திரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வெகுஜனங்களுக்கு இது புதிதாகத் தெரிந்தாலும் சிறு பத்திரிகைகளுக்கு இது பழைய வார்த்தையே. மதுபானி என்பது அம்பானி என்பதற்கு நெருக்கமாக உச்சரிக்கப்படுவதால் ஒரு மினுக்கும் பகட்டும் இந்த வார்த்தைக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. வருடத்துக்கு பதினெட்டாயிரம் கோடியை அள்ளித் தரும் மதுபானிகளுக்கு இது பொருத்தமான பெயரும்கூட.
- வெப்துனியா
“மிஸ்டர் கோவிந்தன்...”
“கோடம்பாக்கம் கோ-யி-ந்-த-ன்.”
“ஓகே, மிஸ்டர் கோடம்பாக்கம் கோயிந்தன். சிறந்த மதுபானியான உங்களுக்கு டாஸ்மாக் கட்டுரையில என்ன பிரச்சனை?”
“பிராப்ளம் என்னாக்கன்னா நானு மதுபானிங்கிறது ரைட்டு. ஆனா பயங்கர கலா ரசிகனுங்க.”
“அதாவது ஆர்ட்னா உங்களுக்கு உயிர். மியூஸிக், பெயிண்டிங், ஸ்கல்ப்சர்...”
“இன்னா சார் அல்சர் கில்சர்னு ஆள பயமுத்திக்கினு. கரீட்டா சொல்றேன் பாரு. கலா ரசிகனுன்னாக்க சினிமா. தெனத்துக்கும் ரெண்டு தபா படம் பார்ப்பேன்.”
“ஓ... அதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?”
“கட்சியா நீ கொட்டாயில போய் இன்னா படம் பார்த்த சார்? இன்னா முழிக்கிற? பேப்பர்காரங்களுக்கு போடுற ஓசி படம் பார்க்கிற பார்ட்டியா நீ. காசு குட்த்து நீயெல்லாம் கொட்டாயில படம் பார்த்ததுதான். செரி, நானே டீட்டெய்லா சொல்லிக்கிறேன்.”
கோயிந்தன் டீட்டெயிலாகச் சொல்லிக்கிட்டதை சென்னைக்கு வெளியே உள்ள வாசகர்களின் ஆரோக்கியம் கருதி பொது மொழியில் தருகிறோம். கோயிந்தனின் கருத்து பின்வருமாறு.
1. டாஸ்மாக்கில் குவாட்டருக்கு ஐந்து ரூபாய், பீருக்கு பத்திலிருந்து முப்பது ரூபாய் வரை அதிகமாகப் பிடுங்கிக் கொள்கிறார்கள், ஒன்றரை ரூபாய் வாட்டர் பாக்கெட்டை நான்கு ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று டாஸ்மாக்கில் மட்டுமே கொள்ளை நடப்பதாக அக்கட்டுரையில் எழுதியிருந்த தொனி கோயிந்தனுக்கு இஷ்டப்படவில்லை. தெனத்துக்கும் ரெண்டு தபா படம் பார்க்கிற கோயிந்தனைப் பொறுத்தவரை டாஸ்மாக்கைவிட கொள்ளை நடக்கிற இடம் ஒன்று உண்டு. அது திரையரங்கு.
2. திரையரங்கில் பார்க்கிங் என்று கணிசமான ஒரு தொகையை பிடுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக்கில் பார்க்கிங் கட்டணம் இல்லை. டாஸ்மாக்கில் ஏது பார்க்கிங் என்ற கேள்விக்கு சிறந்த மதுபானியான கோயிந்தனின் பதில். “செரி, கடியாது. ஆனா விருகம்பாக்கம் ஜில்ஜில் ஒயின்ஸாப்லயும், நெசப்பாக்கம் ஒயின்ஸாப்லயும் உண்டே. துட்டா வாங்கறான்?” கோயிந்தன் சொன்ன இன்னொரு விளக்கம் ஹோட்டல் பாரில் மது அருந்தச் செல்பவர்களிடம் ஹோட்டல் நிர்வாகம் பார்க்கிங் காசு வசூலிக்கிறதா என்ன.
3. திரையரங்குகளில் பாக்கெட்டை தடவி, பையை துழாவிக் கொண்டு வரும் ஸ்நாக்ஸை எடுத்துவிட்டே உள்ளே அனுமதிக்கிறார்கள். நாம் எடுத்து வரும் தின்பண்டங்கள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. டாஸ்மாக் பார்களில் இந்த சட்டம் அமலில் இருந்தாலும் திருமதி கோயிந்தன் காதலுடன் செய்து தரும் பீஃப் பொரியலை எடுத்துச் சென்றால் யாரும் எதுவும் சொல்வதில்லை. இந்த ஸ்நாக்ஸில் ஒளிந்திருக்கும் அரசியலை பற்றிய கோயிந்தனின் விளக்கம் வருமாறு.
* திரையரங்குகளில் சரியாக 11.30க்கு காலைக் காட்சி ஆரம்பிக்கிறார்கள். இடைவேளை ஒருமணிக்கு. தமிழனின் மதிய உணவு நேரம். பசியில் இருக்கும் பார்வையாளன் திரையரங்கு கேண்டீனில் உள்ளவற்றை தின்றே ஆக வேண்டும், என்ன விலையாக இருந்தாலும். நாம் உணவு எடுத்தும் வரக்கூடாது, அவர்களின் யானைவிலை தின்பண்டங்களை வாங்கியும் ஆக வேண்டும். இது தனி மனித உரிமை மீறல் என்பது கோயிந்தன் தரப்பு வாதம்.
4. தின்பண்டங்களின் விலை. இந்த விஷயத்தில்தான் டாஸ்மாக் கட்டுரையை கொள்கை அளவில் எதிர்க்கிறார் கோயிந்தன். டாஸ்மாக்கில் 16 ரூபாய் மதிப்புள்ள ஒரு லிடடர் வாட்டர் பாட்டில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே திரையரங்குகளில் பத்து ரூபாய் மதிப்புள்ள அரை லிட்டர் வாட்டர் பாட்டில் ரூபாய் 20. ஒரு லிட்டர் வாங்கினால் நாற்பது ரூபாய். கொள்ளை நடப்பது டாஸ்மாக்கிலா, திரையரங்கிலா? இதேபோல் ஐந்து ரூபாய் வீல் சிப்ஸ் 20 ரூபாய், எட்டு ரூபாய் முட்டை பப்ஸ் 20 ரூபாய். “இத்த மாரி அநியாயம் எங்கியாச்சும் இருக்கா சார்” என்கிறார் பயங்கர கலா ரசிகரான கோயிந்தன். பத்து உப்புக்கடலையை பாக்கெட் போட்டு நாலு ரூபாயக்கு விற்பது மட்டும் தப்பில்லையா என்ற கேள்விக்கு மிஸ்டர் கோயிந்தன் கோபமாக விழித்தபடி பின்வருமாறு கூறினார்.
“இன்னா சார் புர்யாத ஆளா இருக்கே. என்ன மாரி அன்றாடங்காய்ச்சிங்க நாலு ரூபா எடுத்துக்கினு போனா உப்புக் கடலையாச்சும் பர்சேஸிங் பண்ணிப்போம். கொட்டாயில என்ன கெடக்கிம்ங்கிற? பத்து ரூபாய்க்கு டிக்கெட் கெட்ச்சிரும், திங்கிறது இருவது ரூபாய்க்கு குறைச்சலா கொட்டாய் காத்துதான் கெடைக்கும்.” பண்டங்களின் டேஸ்டைப் பற்றியும் கோயிந்தனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. “கால்வாசி முட்டையும் இத்துனூண்டு மாவும் வச்சு தர்ற பப்ஸ்ல இன்னா சார் பெரிய டேஸ்ட்டு. நம்ம மாரியோட பேக்கரியில் எண்ணைய் கையோட எட்த்து தருவான். இவனுங்க கையில கேரி பேக் மாட்டி எட்த்து தர்றானுங்க. கேரி பேக்குக்கு இருவது ரூபாய்ங்கிறது அநியாயம் இல்லையா சார்.” (ஒரு விடுபடல். கோயிந்தன் சிறந்த நளபாகரும்கூட).
5. கோவிந்தனை மடக்குவதற்காக குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் எடுப்பது பற்றி கேட்டோம். கோயிந்தனின் பதில் அதிர்ச்சியானது. கோயம்பேடு பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸில் டிக்கெட் கட்டணம் என்ன என்று யாருக்கும் தெரியாது என்றான். டிக்கெட்டிலும் கட்டணம் இருப்பதில்லை. அவர்கள் கேட்பதை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அசோக்நகர் பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸில் பார்வையாளர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு இருக்கும் உறவு அடர்த்தியானது. நெருக்கடியான நேரங்களில் ஊழியர்களே நேரடியாக பிளாக்கில் டிக்கெட் விற்பதுண்டு. அவர்களுக்கான மன உறுதி காவல்துறையால் எப்போதும் உறுதி செய்யப்பட்டிருக்கும். விரைவில் அந்த காம்ப்ளக்ஸில் பிளாக் டிக்கெட்டிற்கு தனி கவுண்ட்டர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதாக கோயிந்தன் தெரிவித்தான்.
6. இந்த விஷயத்தில் கோயிந்தன் தப்பிக்கவே முடியாது. போலி மதுவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் கோயிந்தன்?
“ஐயோ சார் ஒலகம் புர்யாத ஆளா இருக்கிற. எங்க சார் ஒரிஜினல் இருக்கு? நம்ம வூட்ல பையன் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீசு படமா பாப்பான். அன்னிக்கு ஒரே அடிபுடியா இருக்கேன்னு நானும் கொஞ்சமா லுக் வுட்டேன். டேக்கனோ டோக்கனே. அத அப்பிடியே நம்ம கேப்டன் விருதகிரியில அடிச்சிட்டாரு. ஊழலை ஒழிப்பேங்கிறவரே இப்பிடின்னா...… அதவுடு. உங்க கம்ப்யூட்டரிலேயே ஒரு புள்ள எழுதியிருக்கே. மை சேச்சி...”
“சேச்சி இல்ல மை சாஸி கேர்ள்.”
“அதேதான். அந்தப் படத்துல வர்ற புள்ள வாந்தி எடுக்கிறதை அப்படியே சிந்தனை செய் ங்கிற படத்துல வாந்தியெடுத்திடுத்திருக்கிறதா. பார்ல குட்ச்சிட்டு வாந்தியெடுப்பானுங்க, இங்க என்னடான்னா எவனோ எடுத்த படத்தை இங்க வந்து வாந்தி எடுக்கிறானுங்க ஹா...ஹா...ஹா...”
7. இதற்கு மேல் கோயிந்தனிடம் பேச எதுவுமில்லை. என்றாலும் கடைசி அஸ்திரமாக டாஸ்மாக் விடுமுறை நாட்களில் டபுள் மடங்கு விலையில் மது விற்கப்படுகிறதே என்றோம்.
இதை கேட்டபோது கோயிந்தன் பார்வையில் மரியாதை கணிசமாக குறைந்திருந்தது. “இன்னா மேன் பேசுற. ரஜினி கமல் தொடங்கி தளபதி வரைக்கும் படம் ரிலீஸாகிறச்ச அம்பது ரூவா டிக்கெட்டை ரெண்டாயிரத்துக்கு சேல் பண்றதை இன்னான்னு சொல்ற. டாஸ்மாக் லீவுன்னாக்க மொத நாளே வாங்கி ஸ்டாக் வச்சிக்கினுவோம். அப்படியே வேணும்னாக்க அறுபது ரூவாய்க்கு நூத்தியிருபது குட்த்தா போதும். அது மாதிரியா இது?” இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல் நமது கலா ரசிகர் எழுந்து கொண்டார்.
அனேகமாக கோயிந்தன் நம்மை தோற்கடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மதுபானிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தி. அவர்கள்தான் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள் என்று நினைத்தால் அவர்களைவிட அதிகம் சுரண்டப்படுகிறவர்கள் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே. ஹோட்டல் குளுகுளு பாரும், மல்டிபிளிக்ஸும் ஒன்று என்று கோயிந்தன் அது பற்றி பேசவே முன் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
எல்லாவற்றையும் மறுத்தாலும் ஒரு விஷயத்தில் திரையரங்கே மேல் என்பது கோயிந்தனின் அபிப்ராயம். அது சுகாதாரம். டாஸ்மாக் ‘பன்னி கொட்டாய்’ என்பது அவரின் உறுதியான நிலைப்பாடு.
கிளம்புகையில் திரையரங்குகளில் டாஸ்மாக் பார் வைக்க வேண்டும் என ஒரு கோஷ்டி கோரிக்கை வைத்தது பற்றி கேட்டோம். கோயிந்தனின் இத்தனை விளக்கத்திற்குப் பிறகும் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாது. நமது தப்புதான். “நாங்க உண்டு டாஸ்மாக் உண்டுன்னு ஓரமா இருந்துகினு போறோம். கொட்டாயில பாரை வைக்கிறேன்னு கேரி பேக்ல பப்ஸ் எட்த்தாந்து காசப் புடுங்கலாம்னு பார்க்கிறானுங்களா. இல்ல எங்க டவுசரை தடவி பீஃப் பொரியலை லவட்டலாம்னு திட்டம் வச்சிருக்கானுங்களா. கொட்டாயில பாரை ஓபன் பண்ணுனாக்கா டெமாக்கிரஸி என்னாறது, செல்ஃப் ரெஸ்பெக்ட் என்னாறது...” கோயிந்தனின் குரல் தழுதழுத்தது. “உப்புக் கடலைக்கும், வாட்டர் பாக்கெட்டுக்கும் குவாட்டர் ரேட் கேட்பானுகளே சார்..”
பின் குறிப்பு: புரட்சி கலைஞர், புரட்சி தளபதி என்று சினிமாக்காரர்கள் அடைமொழி வைத்து புரட்சி என்ற வார்த்தையை கெட்டவார்த்தை அளவுக்கு சீரழித்தது போல, மது அருந்துகிறவர்களை தினப்பத்திரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வெகுஜனங்களுக்கு இது புதிதாகத் தெரிந்தாலும் சிறு பத்திரிகைகளுக்கு இது பழைய வார்த்தையே. மதுபானி என்பது அம்பானி என்பதற்கு நெருக்கமாக உச்சரிக்கப்படுவதால் ஒரு மினுக்கும் பகட்டும் இந்த வார்த்தைக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. வருடத்துக்கு பதினெட்டாயிரம் கோடியை அள்ளித் தரும் மதுபானிகளுக்கு இது பொருத்தமான பெயரும்கூட.
- வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆகா நம்ம குவார்ட்டர் கோயிந்தனுக்கு இந்த வார சண்டே கோட்டா அதிகமாயிடிச்சு போல இருக்கே?
ஆகாஷவாணி போல் இந்த மதுபாணியும் வாழ்க வளர வாழ்த்துகள்.
ஆகாஷவாணி போல் இந்த மதுபாணியும் வாழ்க வளர வாழ்த்துகள்.
மது அருந்துகிறவர்களை தினப்பத்திரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
சூப்பரப்பு , ஒரு சின்ன சந்தேகம் இப்பல்லாம் நிறைய மாதுக்களும் மதுபானிகளா உள்ளார்களே அவங்களை எப்படி சொல்லுறது ??
ராஜா wrote:மது அருந்துகிறவர்களை தினப்பத்திரிகைகள் குடிமகன்கள் என எழுதி எழுதியே அந்த வார்த்தையை குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். அதனால் குடிமகன்களுக்குப் பதில் மதுபானி என்ற வார்த்தையை இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
சூப்பரப்பு , ஒரு சின்ன சந்தேகம் இப்பல்லாம் நிறைய மாதுக்களும் மதுபானிகளா உள்ளார்களே அவங்களை எப்படி சொல்லுறது ??
மதுபானியன் -ஆண்கள்
மதுபானியவள் - பெண்கள் . ( மகளிர் அணியினரே , சிவாதான் இந்த பட்டதை கொடுத்தார் , எண்ணம் சிவாவுடையது , எழுத்து மட்டும் என்னுடையது )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எண்ணம் (என்னும்) எழுத்தும் கண்ணெனத் தக...வை.பாலாஜி wrote:
மதுபானியன் -ஆண்கள்
மதுபானியவள் - பெண்கள் . ( மகளிர் அணியினரே , சிவாதான் இந்த பட்டதை கொடுத்தார் , எண்ணம் சிவாவுடையது , எழுத்து மட்டும் என்னுடையது )
கொலவெறி wrote:எண்ணம் (என்னும்) எழுத்தும் கண்ணெனத் தக...வை.பாலாஜி wrote:
மதுபானியன் -ஆண்கள்
மதுபானியவள் - பெண்கள் . ( மகளிர் அணியினரே , சிவாதான் இந்த பட்டதை கொடுத்தார் , எண்ணம் சிவாவுடையது , எழுத்து மட்டும் என்னுடையது )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|