புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_m10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10 
20 Posts - 65%
heezulia
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_m10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_m10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10 
62 Posts - 63%
heezulia
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_m10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_m10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_m10புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 14, 2012 12:28 pm

சொர்க்கம் என்பது யாருக்கு கிடைக்கும் இது கேள்வி

கடவுள் நம்பிக்கை உடையவன் எவனோ அவனே சொர்கத்திற்கு அனுமதிக்கப்படுவான் இது பதில்

கடவுள் நம்பிக்கை உடையவனுக்கு மட்டும் எதற்காக சொர்க்கம் வழங்க வேண்டும் முதல் கேள்விக்கு விடையாக வந்த கருத்தை ஆராய்ந்த பிறகு பிறந்த இரண்டாவது கேள்வி இது

கடவுளை நம்புபவன் நியாயத்திற்கு பயப்படுவான் தவறுகள் செய்ய அச்சப்படுவான் தன்னை தனது செயலை கடவுள் கேள்வி கேட்பார் அப்போது பதில் சொல்ல முடியாமல் தத்தளிக்க வேண்டிவரும் அதனால் பாவம் செய்ய கூடாது என்று நினைப்பான் அதனாலேயே அவன் சொர்க்கத்தை அடையும் தகுதியை பெற்று விடுகிறான் இது இரண்டாவது கேள்விக்கு வந்த இரண்டாவது பதில்

இந்த பதில் சரியா? கடவுள் நம்பிக்கை உடையவருக்கு மட்டும் தான் சொர்க்கம் கிடைக்குமா? மற்றவர்களுக்கு சொர்க்கமில்லையா? இது பொதுவாக அனைவரின் மனதிலும் எழுந்து நின்று ஆற்பரிக்கும் கேள்வியாகும் இதற்கு மதங்கள் என்ன பதில் சொல்கிறது


இந்து மதத்தில் கருடபுராணத்தில் சொர்க்கம் நகரம் என்று ஏராளமான விஷயங்கள் விரிவாக பேசப்படுகிறது ஒரு மனிதன் என்னென்ன தவறுகள் செய்தால் என்னென்ன நகரம் கிடைக்கும் என்னென்ன நன்மைகள் செய்தால் எந்தெந்த சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் விபரங்கள் விரிந்து கொண்டே போகின்றது மற்ற புராணங்களும் இதிகாசங்களும் பலவித சொர்க்கங்கள் இருப்பதாக தகவல்களை தருகின்றன அவைகளில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்து விதமான கருத்துக்களையும் ஒன்று திரட்டி பார்த்தோமானால் நல்லவனுக்கும் நன்மைகள் செய்தவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்ற பொருள் வருகிறது

நல்லவனுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் அதை நாம் தடைசெய்ய போவதில்லை இங்கே ஒரு கேள்வி வருகிறது அதாவது நல்லவன் என்பவன் யார் என்பதே அந்த கேள்வி இந்து மதம் அதற்கு பல பதில்களை தருகிறது அவற்றில் முக்கியமானது பக்தியுடையவன் நல்லவன் என்பதே ஆகும் ஆக இங்கேயும் கிடைக்கும் பதில் ஏறக்குறைய கடவுள் நம்பிக்கை உடையவனே சொர்க்கத்தை அடைவான் என்பது தான்

இந்து மதத்தை விட சொர்க்கத்தை பற்றி அதிகமாக பேசுவது இஸ்லாம் மதமும் கிறிஸ்துவ மதமும் ஆகும் இந்து மதம் ஏன் சொர்க்கத்தை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை என்றால் அது ஒரு ஜீவனின் வாழ்க்கையை சொர்க்க நகரத்தோடு முடிந்து போவதாக சொல்லவில்லை அதையும் தாண்டி ஜீவனின் பயணம் இருக்கிறது என்பதே இந்து மதத்தின் வழிகாட்டுதலாகும்


இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் சொர்க்கம் என்பது பொன்விலங்கு நரகம் என்பது இரும்பு விலங்கு தங்கம் இரும்பு என்று தரம் வேறுபட்டாலும் சொர்க்கம் நரகமாகிய இரண்டுமே விடுதலையை கெடுக்கும் விலங்குகள் தான் எதுவால் செய்யபட்டால் என்ன விலங்கு விலங்கு தானே எனவே மனிதனது செயல் சொர்க்கத்தை நோக்கியோ நரகத்தை நோக்கியோ இல்லாமல் முத்தியை நோக்கி இருக்கவேண்டும் என்பதே இந்து மதத்தின் ஆதர சுருதி என்பதனால் அது சொர்க்கத்தை பற்றி அதிகம் கவலைப்படவில்லை

ஆனால் மற்ற இரண்டு மதங்கள் இறை ஐக்கியத்தை விட இறுதி தீர்ப்பு நாளில் உயிர்கள் பெரும் தண்டனையும் சன்மானத்தையும் பற்றியே அதிகமாக பேசுகிறது மிக தெளிவாக சொல்வதென்றால் உயிர்களின் இறுதி நோக்கம் கடவுளிடம் சொர்க்கத்தை பெறுவதே என்பதாகும் அதனால் யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அவர்களிடம் கேட்டால் தான் தெளிவான பதில் கிடைக்கும்

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கின்றவர்களை நாம் விரைவில் சொர்க்கத்தில் நுழைய செய்வோம் என்கிறது இஸ்லாமிய திருமறை அந்த மறையிலேயே இன்னொரு இடத்தில் அல்லாவுக்கும் அவரது தூதருக்கும் ஒருவர் கட்டுபட்டால் அவரை சொர்க்கத்தில் நுழைய செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது வேறு பல கருத்துக்கள் சொல்லபட்டாலும் கூட இஸ்லாம் மதத்தில் மிக தெளிவாக வெளிப்படையாக ஆணித்தரமாக சொல்லும் கருத்து ஈமான் கொண்டவருக்கே அதாவது இறை நம்பிக்கை உடையவருக்கே சொர்க்கம் என்பதாகும்


இஸ்லாத்தை அடுத்து கிறிஸ்தவத்தின் பைபிள் கருத்துக்களை கருத்து கொண்டு பார்த்ததால் அங்கேயும் தேவனை நம்புகிறவன் எவனோ கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றே சொல்லபட்டிருக்கிறது

இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களிலும் ஒரு மதத்தில் குறைவாகவும் மற்ற இரு மதங்களில் மிக அதிகமாகவும் சொல்லபட்டிருக்கும் கருத்து ஏறக்குறைய ஒன்று தான் அதாவது கடவுளை நம்புவனுக்கு சொர்க்கம் உண்டு என்பது தான் அது அப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் சொர்க்கத்திற்கு போக முடியாதா? போக கூடாதா என்பது நமது கேள்வி நல்லவனாக கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்பது எந்தவகையில் நியாயம்

ஒரு நல்லவர் நாட்டுக்காக உழைப்பவர் நாட்டு மக்களின் நலத்தை தவிர வேறெதையும் சிந்திக்காதவர் கனவில் கூட மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதவர் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இவருக்கு சொர்க்கம் கிடையாதா? கடவுள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்க்காக சொர்க்கத்தை கடவுள் கொடுக்க மறுத்தால் நல்லவனாக வாழ்வதில் அர்த்தமென்ன இருக்கிறது

வேலை தவறாமல் இறைவனை வணங்குவான் மத சடங்குகள் அனைத்தையும் அணு அளவு பிசகாமல் கடைபிடிப்பான் ஆனால் கள்ள சந்தையில் பணம் சம்பாதிப்பான் பெண்களின் மானத்தை கெடுத்து மகிழ்வான் கொலை செய்வதிலும் கொள்ளை அடிப்பதிலும் ஆர்வத்தோ ஈடுபடுவான் இவனுக்கு கடவுள் நம்பிக்கை உடையவன் என்ற இரே காரணத்திற்காக சொர்க்கத்தை கொடுப்பது எந்த வகையில் தர்மம்

புத்தருக்கும் மாகவீரருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது அதற்காக அவர்களுக்கு நரகம் கொடுக்கப்படுமா?ஹிட்லர்க்கும் ஒசாமா பில்லேடனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு அதற்காக அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கலாமா?

எனவே சொர்க்கம் கிடைபபது கடவுள் நம்புவதில் மட்டுமில்லை நல்லவனாக வாழ்வது மட்டும் சொர்க்கத்திற்கான தகுதி இல்லை ஏனென்றால் நல்லவர்கள் அனைவருமே நன்மையை மட்டும் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது அதனால் தான் கடோபநிஷத் நன்மை செய்தவனுக்கே சொர்க்கம் என்கிறது அதாவது நீ கடவுளை நம்பு நம்பாமல் போ அதை பற்றி கவலை இல்லை நீ நல்லவனாக இரு இல்லாமல் போ அதை பற்றி அக்கறை இல்லை ஆனால் உன் செயல் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும் அதுமட்டுமே உனக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒரே தகுதியாகும் ஆம் அது தான் தகுதி.


http://ujiladevi.blogspot.com/2012/03/blog-post_10.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  1357389புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  59010615புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Images3ijfபுத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?  Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 4:28 pm

கேசவன் wrote:புத்தருக்கும் மாகவீரருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது அதற்காக அவர்களுக்கு நரகம் கொடுக்கப்படுமா?ஹிட்லர்க்கும் ஒசாமா பில்லேடனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு அதற்காக அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கலாமா?
என்ன ஒரு கேள்வி??? மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 5:56 pm

நல்ல கேள்விதான்.
கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon May 14, 2012 11:26 pm

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிவோருக்கு அவரவருக்கு ஏற்ற கூலி வழங்கப்படும் என்றே குரான் சொல்லுகிறது ! புத்தரும் மகாவீரரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களல்ல !உருவ வழிபாட்டை மறுத்தவர்கள் மட்டுமே !பாவ புண்ணிய கர்மங்கள் பற்றிய கொள்கை கடவுள் நம்பிக்கையிலிருந்தே பிறக்கிறது ! அவர்கள் இந்தியாவின் ஏக இறை கொள்கைகாரர்கள் !!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக