புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_m10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_m10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_m10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_m10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_m10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_m10ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 7:59 am



பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

*மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது.

*நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் விரைவில் 9 சதவீதத்தை எட்டும்.

*கறுப்பு பணத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*லஞ்சத்தை ஒழிப்பதற்கான உறுதியான மசோதாவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

*கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விசேஷ திறன் படைத்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

*பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.

*பாராளுமன்றத்துக்கு முக்கிய அலுவல்கள் உள்ளன. அதை நிறைவேற்ற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்.



ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 8:02 am

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் CNI130314

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லபட்ட வீடியோ காட்சியை இங்கிலாந்து டெலிலிஷன் நிறுவனமான சேனல்-4 வெளியிடுகிறது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை சிங்கள ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.

போரின்போது, நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தற்போது, ஜெனீவாவில் நடைபெற்று வரும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.

தண்டிக்கப்படாத போர்க்குற்றம்

இந்த தீர்மானத்தின் மீது வருகிற 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிங்கள அரசுக்கு எதிரான மற்றொரு போர்க்குற்ற ஆதாரத்தை இங்கிலாந்தின் சேனல்-4 டெலிவிஷன் வெளியிட உள்ளது.

``தண்டிக்கப்படாத போர்க் குற்றம்'' என்ற பெயரில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான காலம் மாக்ரே மேலும் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

பிரபாகரனின் 12 வயது மகன்

சேனல்-4 தொலைக்காட்சியில் நாளை இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணி அளவில்) இந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள போர்க்குற்ற காட்சிகள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்துள்ளன.

5 துப்பாக்கிச்சூடு காயங்கள்

இதுபற்றி இங்கிலாந்தின் `தி இன்டிபென்டென்ட்' நாளேட்டில் சேனல்-4 ஆவணப்படத்தை தயாரித்து உள்ள காலம் மாக்ரே எழுதி உள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட உள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை தெளிவாக உறுதி செய்கிறது. நீதிக்கு புறம்பான முறையில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். அவருடைய உடலில் 5 துப்பாக்கிச்சூடு காயங்கள் இருக்கின்றன.

கைகள் கட்டப்பட்ட நிலையில்....

அந்த சிறுவனின் உடலுக்கு அருகே, 5 பேருடைய சடலங்கள் கிடக்கின்றன. இவர்கள் அனைவரும் பாலச்சந்திரனுடைய மெய்க் காவலர்களாக இருக்கலாம் என்று நம்பபப்படுகிறது. அவர்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் தரையில் கிடக்கின்றன. எனவே, அவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளது தெளிவாகிறது.

இதேபோன்று, கடைசி கட்டத்தில் சரண் அடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பல போராளிகளும், முன்னணி தலைவர்களும், சிறுவர்களும், சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கைக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி..

பாலச்சந்திரன் மற்றும் மெய்க்காவலர்களின் உடல்கள் கிடக்கும் மிகத் தெளிவான வீடியோ ஆதாரங்கள் சேனல்-4 தொலைக்காட்சிக்கு கிடைத்து உள்ளன. இவை சிங்கள ராணுவத்தினர் சிலரால் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.

இந்த காட்சிகள் பிரபல தடயவியல் நிபுணரான டெரிக் பவுண்டர் மூலமாக ஆராயப்பட்டது. அதன் மூலமாக, சிறுவன் பாலச்சந்திரன் கைக்கெட்டும் தூரத்தில் அதாவது 2 அல்லது 3 அடி தூரத்தில் இருந்தே சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு காலம் மாக்ரே தெரிவித்து உள்ளார்.

ராஜபக்சே உத்தரவுப்படி

இதேபோன்று, பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ``இறுதிகட்ட யுத்தத்தில் பொதுமக்களை குறிவைக்கப்பட்டதற்கு அதிபர் ராஜபச்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம்'' என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மே 18-ந்தேதி


ரத்தத்தை உறைய வைக்கும் இந்த வீடியோ காட்சி படம் பிடிக்கப்பட்ட நாள், மே 18-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், பாதுகாப்பு வலயங்கள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இவர்களுடைய கட்டளையின் பேரிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்து உள்ளனர்.

ஐ.நா. பதுங்கு குழிகள் மீதும்

ஐ.நா. அறிவித்த பதுங்கு குழிகள் மீதும், அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை சிங்கள ராணுவத்தினர் மேற்கொண்டனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்கு சவால்விட முடியாது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில், சிங்கள ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அப்போது, ஐ.நா.சபையோ, மேற்குலக நாடுகளோ போதுமான எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

மறுப்பு தெரிவிக்கவில்லை

சிங்கள ராணுவத்தினரால் பாலச்சந்திரன் சட்டவிரோதமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக சேனல்-4 தொலைக்காட்சி சுமத்தி உள்ள குற்றச்சாட்டை, இலங்கை அரசு இதுவரையில் நிராகரிக்கவும் இல்லை, இதுதொடர்பாக எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு ``இலங்கையின் கொலைக் களங்கள்'' என்ற பெயரில் காலம் மாக்ரே தொகுத்திருந்த, சிங்கள ராணுவத்தினரின் போர்க்குற்ற காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது நினைவு கூறத்தக்கது.


தினதந்தி



ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 8:44 am

வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருந்து கடமைக்காக தனது கடைசி உரையை ஆற்றியதைத் தவிர வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை இவ்வுரையில்.

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஆதரவு தெரிவித்து
மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் அறிந்தே செய்த கொடுமைக்கு துணை போனதிலிரிந்து மீள ஒரு வாய்ப்பாவது உண்டு.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக