புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_m10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10 
21 Posts - 66%
heezulia
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_m10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_m10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10 
63 Posts - 64%
heezulia
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_m10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_m10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_m10'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 3:05 pm

'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
on Tuesday, February 7, 2012 | 0 Comment


'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! 15VBG_TPT_269747f
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என். ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) பஸ் கட்டண உயர்வு பற்றிப் பேசும்போது, 'ஷார்ட் ஜம்ப்' என்று சொல்லும் வகையில் பஸ் கட்டணத்தைச் சிறிது சிறிதாக உயர்த்தி இருக்கலாம் என்று சொல்ல, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, 'மத்திய அரசு அடிக்கடி 'ஷார்ட் ஜம்ப்' செய்து டீசல் விலையை உயர்த்தியதால் வேறுவழியில்லாமல் நாங்கள் 'லாங் ஜம்ப்' செய்ய வேண்டியதாகிவிட்டது' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

டீசல் விலை உயர்வு, பேருந்து உதிரி பாகங்கள் விலை உயர்வு, கடந்த பத்து ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாத நிலைமை எல்லாமும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது என்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும்கூட புரிந்த விவகாரம்தான். இருப்பினும், பஸ் கட்டண உயர்வில் தமிழக மக்களைத் தற்போது பாதித்துக் கொண்டிருப்பது, 'ஷார்ட் ஜம்ப்'போ, 'லாங் ஜம்ப்'போ அல்ல; 'ராங் ஜம்ப்' என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டியது நமது கடமை.

தமிழ்நாட்டில் சாதாரண பேருந்துகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் கிலோமீட்டருக்கு 42 காசுகள் (பழைய கட்டணம் 28 காசுகள்). செமி டீலக்ஸ் பேருந்துகளுக்கு 56 காசுகள், சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளுக்கு 60 காசுகள், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு 70 காசுகள். பிரச்னை இந்தக் கட்டண உயர்வல்ல. அரசுப் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள்.

சாதாரண பேருந்துகளுக்கு கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்படுவதற்கு முதல் காரணம், அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் இதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதும், மக்களுக்கு பஸ் கட்டணம் ஒரு அன்றாட மனச்சுமையாக மாறிவிடக்கூடாது என்பதாலும்தான். ஆனால், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கு அதிமுக அரசின் மீது என்ன கோபமோ தெரியவில்லை, இந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராகவே செயல்படுகின்றனர். சாதாரண பேருந்துகளை மிகக் குறைவாகவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளை அதிக எண்ணிக்கையிலும் இயக்குகின்றனர். இந்த 'ராங் ஜம்ப்'தான் மக்களைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கிறது. இதை அமைச்சர் தெரிந்து வைத்திருக்கிறாரா என்பதுதான் நமது சந்தேகம்.

தமிழக சட்டப்பேரவையில் ஒரு கேள்விக்குப் பதில் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர், 'அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 19,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 9,389 பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன' என்று கூறியுள்ளார். அவருக்குத் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரப்படி பார்த்தாலுமே கூட 50 விழுக்காட்டுக்கும் குறைவான பேருந்துகள்தான் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. இதைவிடவும் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.


சாதாரணப் பேருந்தில் ரூ.30 கட்டணம் என்றால், எக்ஸ்பிரஸ் பேருந்தில் ரூ.39 அல்லது ரூ.40 ஆக இருக்கின்றது. சாதாரண பேருந்துகளுக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கும் வண்ண மாறுபாடுகள் இல்லை என்பதால், எல்லாப் பேருந்துகளையும் - டவுன் பஸ்ஸைவிட கேவலமான நிலைமையில் இருந்தாலும் - நினைத்த மாத்திரத்தில் எக்ஸ்பிரஸ் என்று ஒட்டிவிட முடிகிறது. கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிகிறது. ஆனாலும் எல்லா நிறுத்தங்களிலும், சாதாரண கட்டணப் பேருந்து போல நின்று நின்றுதான் செல்கிறார்கள். இந்த உண்மை அமைச்சருக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளைக் காட்டிலும் தனியார் பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருந்து ஏறிச்செல்லும் அவல நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 5,000 தனியார் பேருந்துகள் சாதாரணக் கட்டணத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நல்ல இருக்கைகள், டிவியில் படம், இசை, படுவேகம், சிறிய ஊர்களிலும் பேருந்தை நிறுத்தி இறக்கிவிடுதல் என்று பலவற்றாலும் பயணிகளை ஏற்கெனவே ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. இப்போது இவற்றில் கட்டணமும் குறைவு என்பதால், சாதாரண நாள்களிலும்கூட தனியார் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. அரசுப் பேருந்துகள் கூவி அழைத்தாலும் அதில் பயணிகள் ஏறத் தயங்குகின்றனர். இது போக்குவரத்து அமைச்சருக்குத் தெரியுமா?

பஸ் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்கத் தமிழக அரசு விரும்புமேயானால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை 75 விழுக்காடாக உயர்த்த வேண்டும். சாதாரண கட்டணப் பேருந்து, எக்ஸ்பிரஸ் கட்டணப் பேருந்து என்பதை வாகனத்தின் வண்ணத்தாலேயே நிரந்தரமாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைக் குறைந்த கட்டணத்தில் இயக்குவதால் ஏற்படும் இழப்புகளை மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு ஈடுகட்டினால் தவறே இல்லை. பொதுப் போக்குவரத்துத் துறை என்பதே மக்கள் நலனுக்காகவும், தனியார் வாகனங்கள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும்தான் எல்லா நாடுகளிலும் செயல்படுகின்றன. ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் மக்கள் வரிப்பணம் வீணாவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

தனியார் துறை வசதியான இருக்கைகளுடனான புதிய பஸ்களுடன் குறைந்த கட்டணத்தில் லாபகரமாக இயங்க முடியுமென்றால், அரசுப் போக்குவரத்து மட்டும் ஏன் காயலான் கடைச் சரக்குகளாகத் தோற்றமளிக்கும் பஸ்களை நஷ்டத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறது?

அரசும் தொழிற்சங்கத் தலைவர்களும் உட்கார்ந்து பேசி, பொதுப் போக்குவரத்துத் துறையை லாபகரமாக நடத்தாவிட்டாலும் மக்கள் விரும்பிப் பயன்படுத்தும் வகையில், நிர்வாகக் குறைபாடுகளைக் குறைத்து செயல்பட வைப்பதுதான் புத்திசாலித்தனம். அரசு இதைச் செய்யத் தவறினால், போக்குவரத்துக் கழகங்கள் வழக்கம் போல நஷ்டத்தில்தான் இயங்கும். கடைசியில் தனியார் மயம்தான் தீர்வு என்றாகிவிடுமே என்பதுதான் நமது கவலை!


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 4:38 pm

இந்தக் கொடுமைய தினமும் தான் பார்க்கிறேன் சோகம்
மனசெல்லாம் பதறும் அதிலும் ஸ்கூல் பிள்ளைகள் தொங்கிக்கிட்டு வரும் பாருங்க அடிச்கி கை கால ஓடைச்சு போடலாமானு ஆத்திரம் வரும்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 07, 2012 6:52 pm

உண்மையை சொல்லும் பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! 1357389'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! 59010615'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Images3ijf'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'! Images4px
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Tue Feb 07, 2012 11:11 pm

மிக அருமையான அலசல் பதிவு.. நன்றி நண்பரே..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக