புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
32 Posts - 51%
ayyasamy ram
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
1 Post - 2%
Jenila
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
75 Posts - 61%
ayyasamy ram
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
6 Posts - 5%
Rutu
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
3 Posts - 2%
prajai
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
3 Posts - 2%
Jenila
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_m10இலங்கையின் பூர்வ குடிகள் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் பூர்வ குடிகள் யார்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 31, 2012 9:06 am

மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும்.

மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.

புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?
மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன் யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள் நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன் தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன் மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன். இங்கு கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின் அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு!

தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன் ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின் தலைவர் ஆவார்.

இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள் அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ்
மன்னன் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின் மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக் கூறுகின்றனர்.
இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்? விடை சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன் என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும். அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும் இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன் மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

மேற்கண்ட தகவல்களுக்கு மகாவம்சக் கூற்றே மகா முரணாக இருக்கிறது. அது~
""இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் 11:19) என்பதாகும்.

இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும் தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின் மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.

சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும் பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும் பொருளாகிறது.

இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும் விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக்
கூறுவதன் மூலம் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.

வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம் என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும் குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம் கூறியிருக்க முடியுமா? (1) இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும். மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில் வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத் தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது. அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.

1. சிர்கா (Circa-Wintle and Oakley-1972)
குகை ஓவியம்
2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி அகழ்வாய்வுகள் ((Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971))
3. பொன்பரப்பி (Ponbarippu) குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) போடியகம்பளை (Podiya Gampala).
இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன. (2)

முதல் பிரிவான சிர்கா மற்றும் குகை ஓவியச் சான்றுகளின்படி அவை சுமார் கி.மு. 4500-க்கு முந்தைய காலத்தைச் சார்ந்தன என அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவைகளின் காலத்தை வரையறுக்கும்போது இச்சான்றுகள் ஸ்ட்ராட்டம்-1 ((Stratum-1) காலம் என மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கின்றனர்.

மனித சமூகம் காட்டுமிராண்டிக் கால நிலையிலிருந்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, நாகரிகமடைந்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம் செய்யும் தொழிலில் இறங்கியது வரையிலான வளர்ச்சிக் காலத்தை, மானுடவியலாளர் ""ஸ்ட்ராட்டம்'' என்று குறிப்பிட்டு, அதன் வளர்நிலையைக் கணிக்கின்றனர். அதன்படி ""சிர்கா'' பகுதியின் காலம் முதல் பிரிவைச் சார்ந்ததாகிறது. மனித சமூகம் கல் ஆயுதத்தைப் பயன்படுத்திய காலம். இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் மற்றும் அக்கால மனித சமூகம் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன.

அதேபோன்று இரண்டாவது பிரிவான அநுராதபுரத்தின் கிடுக்கிப் பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயுதங்கள், நாணயங்கள், ஓடுகள் ஆகிய சான்றுகளின் மூலம் இவைகளின் காலம் ஸ்ட்ராட்டம் ஐஐ-ன் காலம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த நாணயங்களை மதிப்பீடு செய்த அறிஞர் மறைதிரு டாக்டர் எஸ். தனிநாயகம், ""குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பாவின் காலத்தை ஒட்டிய சிந்துவெளி நாகரிக வரலாற்றைச் சேர்ந்தவை'' என்கின்றார். அவை ஆரியருக்கு முந்தைய திராவிடர் நாகரிகத்தை ஒட்டியதாகும் எனவும் வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

மூன்றாவது பிரிவைச் சார்ந்த பொன்பரப்பி, குருகல்கின்னா, கதிரவெளி, போடிய கம்பளை, யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளின் அகழ்வாய்வுகளில் இரும்பாலான ஆயுதங்களும், அக் காலத்தைச் சேர்ந்த பொருட்களும் கிடைத்தன. இவை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆதித்தநல்லூரில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தும் தமிழ் எழுத்துக்களுடன் காணப்படுகின்றன (படம் காண்க). ஆகையால் அப்பகுதி மக்கள் இரும்புக் காலத்தைச் ((Megalithic Age) சேர்ந்தவர்கள் என கணிக்கப்படுகின்றனர். இந்தச் சமூக மக்கள் இரும்பைப் பயன்படுத்த தெரிந்துகொண்டு, அலைந்து திரியும் நாடோடிக் கூட்டமாக இல்லாது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்தனர். விவசாயத்தை அறிந்து இருந்தனர். மூன்றாவது பிரிவைச் சார்ந்த அகழ்வாய்வுச் சான்றுகளின்படி இரும்பாயுதக் காலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இக்காலமே ஸ்ட்ராட்டம்-IIIA ஆகும். இந்த ஆய்வுகளின்படி கிடைத்த தகவல்களிலிருந்து பார்க்கையில் இவை தென்னிந்திய இரும்புக் காலத்தை (கி.மு. 800-100) ஒத்து உள்ளன. மேலும், இப்பகுதி வாழ் மக்கள், குடியிருப்பு விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர் என வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

இப்பகுதி மக்களின் காலமான ஸ்ட்ராட்டம்-ஐஐஐஅக்குப் பின்னரே வட இந்திய மெüரிய சாம்ராஜ்யம் வருகிறது என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். ஆக மேற்கண்ட அகழ்வாய்வுகளின் மூலம் இலங்கை வாழ் பூர்வகுடிகள் அம்மண்ணில் குளங்களின் மூலம் பாசனம் செய்து விவசாயத்தை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. உதாரணமாக அநுராதபுரத்தில் கிடைத்த சான்றின்படி அப்பகுதியில் இருக்கும் குளமானது ஐம்பத்து நான்கு மைல் நீளமான கால்வாயுடன் இணைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சான்றுகளின்படி நான்கு விஷயங்கள் தெளிவாக உணரப்படுகின்றன. அவை:
(1)‘‘The Kurus were one of the most prominent tribes of the later Vedic period, but it is curious that Pandus are mentioned for the first time in Buddhist literature, when they are described as a hill tribe’’
-Sinha & Banerjee in History of India (1952) page 46.
‘‘A.L.Basham was inclined to think that this claim of the arrival of Vijaya and his followers was only a personification of the first Aryan contact. However, G.S.Mendis had rejected their Vijayan episode as a mere legend. There is no authentic record about the arrival of Vijaya except scanty references in the Chronicles especially the Mahavamsa...
The Mahavamsa is a puranic work heavily laden with legends and politico-religious fervour...’’
-Poson : It has historical significance too ..
By A.Thevarajan.

‘‘However, despite the weight of popular and semi scholarly acceptance of the Vijaya story itself is purely legendary, a myth of origin synthesized from various early Indian legends and to be understood in terms of the histographical objectives of the chroniclers rather than as actual historical records. The same historians however premise of the Vijaya story that civilization in Srilanka had its origins in the settlement and expansion of migrant colonists from the Indian mainland.’’
‘‘Ethnicity and Social Change’’
Dr. SenakeBandaranayake.

(2) (i) ‘‘To many the history of our country begins with the legend of Vijaya and Kuveni, itself a parallel, according to John Still, to the tale of Ulysses and Circe. Some declare there can be no Tamil homelands since the ruins of Buddhist Shrines have been unearthed in areas considered to be Tamil and because some Tamil places have Sinhala origins. But the burial mounds of ‘‘Anaikoddai’’ and the megalithic artifacts of ‘‘Ponbarippu’’ and other places in the North-western sector may well tell a different story.
It is reasonable to assume that some of the earliest settlers in the North Ceylon came from the South-Eastern part of the adjoining subcontinent.’’
- by S.K.Gnanamuttu.

‘‘Noses & Dravidian Kissingers’’, Saturday Review, 4th Aug, 1984
(ii) The physical basis for early Srilanka culture was in the village tanks associated with this South Indian megalithic culture.
- Dr.Susantha Gunathilake
‘‘Formation of Srilankan Culture’’
(iii) ‘‘Artifacts and remains of stone tool using man have been found in several sites of Srilanka with the site at Bellan-Bandi Pelassa being dated by thermoluminiscent testing of associated artifacts as circa 4500 BC (Wintle and Oakley 1972). Excavations at a carefully stratified basis at the Gedige area of Anurathapura (S.Deraniyagala 1972) has also brought out artifacts associated with this culture was wide spread in the country. But it is not with stone age man or his cultural products to whom one could possibly assign cave paintings (S.Deraniyagala 1971-page 38) that we are interested in, it is with the culture associated with settled agriculture.
However there is considerable evidence both direct and indirect that settled irrigated agriculture arose before independent of the coming of the North Indian language speakers.’’
- Dr.Susantha Gunathilake
( நன்றி:ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு : பாவை சந்திரன்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக