புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாலி - பாட்டும் பாராட்டும்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வாலி - பாட்டும் பாராட்டும்!
‘பாட்டு எழுதிகிறோம்;
பணம் வருகிறது;
வேறென்ன வேண்டும்?
குறையொன்றுமில்லை, கோவிந்தா!”
- இப்படி எண்ணிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை; பணத்தையும் தாண்டி, என் பாட்டுகள் பாராட்டையும் வாங்கி வந்தால்தான் - பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.
‘பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று’-என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால்,
என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்?
உடுமலை; மருதகாசி; கண்ணதாசன்; பட்டுக்கோட்டை - இந்த வரிசையிலே, காலம் என் பேரையும் வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் - நான், சென்னை வந்தேனே தவிர; பங்களாவும், படகனைய காரும், வாங்க வேண்டும் என்ற அரிப்போடு வந்தவனல்ல.
நான், பிறிதொரு உத்தியோகத்தில் அமர்ந்தே காரையும் கட்டடத்தையும் வாங்கியிருக்க முடியும்.
இவ்வுலகின் மாட்டு - பணம் பண்ண பத்து வழிகள் இருக்கின்றன; புகழ் பண்ண ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் திறமை!
என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடி வைக்கும் பெருத்த அவமானமாகும்.
சாதியால்; சந்தர்ப்பத்தால்; சிபாரிசால்; சிலாகித்து சிலரைப் பேசுவதால்-
எனக்குப் பட வாய்ப்பு வருமாயின், அது நான் நரகல் தின்பதற்கு ஒப்பாகும். நான் மிகப் பெரிய அங்கீகாரமாக, என் எழுத்துக்கு எதை எண்ணுகிறேன் என்றால் -
ஒரு பட இயக்குநரோ; ஓர் இசையமைப்பாளரோ; ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ -
என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும்.
‘வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமா சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது!இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!’ - என்னைப் பற்றிய இத்தகு கமெண்ட்ஸ் தான், என் தொழிலை கெளரவப்படுத்துகின்றன.
ஒருவருக்கு - என்னை, எதற்காகப் பிடிக்க வேண்டும்? அப்படிப் பிடித்துத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் - அந்த ஒருவருக்கும் இல்லை; அடியேனுக்குமில்லை!
ஆனால் - என் பாட்டு, இன்னொருவருக்குப் பிடித்திருக்க வேண்டியவனாயிருக்கலாம்; என் பாட்டு, தவிர்க்கப்பட முடியாத்தாக இருக்க வேண்டும். இதைத்தான், நான் என் தொழில் தர்மமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!
கேட்டு வாங்க வேண்டியது கைத்துட்டு; கேட்காமல் வாங்க வேண்டியது கைத்தட்டு!
சில பேச்சாளர்கள் மைக்கைப் பிடித்த உடனேயே, அவையோர் முன் கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோளை வைப்பார்கள்.
‘எனக்குத் தெரியும்... நான் பேசும்போது, ஆங்காங்கு உங்கள் பலத்த கைத்தட்டல்கள் மூலம் - என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று; ஏன் என்னை ஆரம்பத்திலேயே உற்சாகப் படுத்தக் கூடாதா?’
இப்படிக் கைத்தட்டைக் கேட்டு வாங்குவார்கள். அவையோரிடமிருந்து கைத்தட்டுகள் தானாய் வர வேண்டும் - அதாவது, அவர்களுக்கு ஏப்பம் வருவதுபோல; தும்மல் வருவது போல!
கேட்டுப் பெறுவது யாசகம்; கரகோஷங்களைக் கேட்காமல் பெறுவதுதான், மாணிக்க வாசகம்!
இறையருலால்- விருதுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. அன்னணம் நான் வாங்கிய விருதுகளெல்லாம் - என் பாட்டு வாங்கிய விருதுகளே தவிர, கேட்டு வாங்கிய விருதுகளல்ல!
படவுலகில், நான் புனைந்த எல்லாப் பாடல்களும், பாராட்டுகளைப் பெற்றவை அல்ல; ஆனால், பாராட்டுகளை இயல்பாகப் பெற்று, என்னை எனக்கே இனங்காட்டிய பாடல்கள் உண்டு!
திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில், ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா - 1963-ல் திரு.விசுவநாத அண்ணன்; திரு.ராமமூர்த்தி அண்ணன் இருவருக்கும் நடந்தது.
சிவாஜி, கண்ணதாசன் முதலிய திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து, விசுவநாதன் ராமமூர்த்தியை -
வாய்கள் மணக்க, வாழ்த்தியருளிய விழா அது!
அந்த விழாவில் - விசுவநாதன் ராமமூர்த்திக் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடந்து -
கற்கண்டுத் தமிழைக் காற்று வாகனத்தில் ஏற்றி, அண்டை அயல் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்த அற்புதம் -
அந்த அந்தி நேரத்தில் அங்கு நிகழ்ந்தது!
கண்ணதாசன் பாடல்களுக்கிடையே - அதுகாறும் படத்தில் வெளிவராத என்னுடைய ஒரு பாட்டை -
அண்ணன் விசுவநாதன் அவர்கள் பி.சுசிலாவைக் கொண்டு பாடவைத்தார்கள்.
அந்தப் பாடல் -
அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும், இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் - ‘கற்பகம்’ படத்துப் பாடல்; பாடலின் பல்லவி -
‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்; பார்வையிலே படம் பிடிச்சான்; பார்வையிலே படம் பிடிச்சு - பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்!’ - இந்தப் பாடலின் சரணத்தில், ஒரு வரி வந்தது.
’மனசுக்குள்ளே தேரோட்ட -
மை விழியில் வடம் பிடிச்சான்!’
- என்பதுதான் அந்த வரி; இந்த வரியைக் கண்ணதாசன் ‘ஓஹோ’வென்று சிலாகித்து மேடையிலே பாராட்டி -
‘வாலியை என் வாரிசு என்பேன்!’ என்றார் -
அவை நடுவில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று - கவியரசு கண்ணதாசனை நோக்கி கை கூப்பினேன்.
எவருக்கு எதிராக நான் கடைவிரித்தேனோ - அவர் பராட்டுகிறார். இதுதான் நூறு விழுக்காடு, கிடைத்தற்கரிய நிஜமான பாராட்டு. இந்தப் பாராட்டின் எடையை நிறுத்துச் சொல்ல, ஏது ஒரு தராசு?
இந்த விழாவில்தான் -
என் அருமை அண்ணன்; என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியப் பெருந்தகை -
விசுவநாதன் அவர்களுக்கும் அண்ணன் ராமமூர்த்தி அவர்களுக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் பட்டம், பலத்த கரகோஷத்திற்கிடையே -
சிவாஜி, கண்ணதாசன் இருவராலும் வழங்கப் பெற்றது!
எத்துணையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் -
ரசிகமணி டி.கே.சி. போல் - உடனே நல்ல வரியைக் கேட்ட மாத்திரம் பாட்டைப் பாராட்டுவதில் -
இராம நாராயணனுக்கு நிகர் இராம நாராயணனே!
பல பாடல்களைச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்டு ‘ப்ரமாதம் சார்; ப்ரமாதம் சார்’ என்று சின்னத் தொந்தி குலுங்கச் சிரிப்பார்.
இதோ - அவர் ரசித்த ஒரு பாடல், ஒரு பானைச் சோறுக்கு, ஓர் அரிசி பதம்போலே!
’மஞ்சள் பூசி
மைல்கல் இருந்தால் -
கடவுள் என்பாரு; இந்த -
மக்களைப் பத்தி
நானா சொன்னேன்?
பெரியார் சொன்னாரு!’
இன்னோர் இயக்குநரை, இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏ. ஆர்.ரஹ்மான் இசையில், அவர் படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் எழுதி, அவை பதிவாகி - அதற்கான பணம் மொத்தத்தையும், அந்த இயக்குநர் எப்பொழுதோ கொடுத்துவிட்டார்.
அவர் - திடீரென்று ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார்.
‘உங்களுக்கு நான் முழுப் பணமும் செட்டில் பண்ணிட்டேன். இருந்தாலும், கடைசியா ஒரு சிச்சுவேஷனுக்கு நீங்க எழுதிக் கொடுத்த பாட்டு இருந்ததே -
அது அற்புதம்! ஒரு ரசிகன் என்கிற முறையிலே, என்னுடைய அன்பளிப்பாக இந்தப் பணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகணும்!’
- என்று சொல்லி என் கையில், ஒரு லட்சம் ரூபாயைத் திணித்து விட்டு -
என் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அவர் காரேறிப் போய்விட்டார்.
அவர்தான், புகழ் வாய்ந்த இயக்குநர்; நடிகர்; உயர்ந்த கலா ரசிகர் - எஸ்.ஜெ. சூர்யா அவர்கள்!
- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
‘பாட்டு எழுதிகிறோம்;
பணம் வருகிறது;
வேறென்ன வேண்டும்?
குறையொன்றுமில்லை, கோவிந்தா!”
- இப்படி எண்ணிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை; பணத்தையும் தாண்டி, என் பாட்டுகள் பாராட்டையும் வாங்கி வந்தால்தான் - பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.
‘பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று’-என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால்,
என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்?
உடுமலை; மருதகாசி; கண்ணதாசன்; பட்டுக்கோட்டை - இந்த வரிசையிலே, காலம் என் பேரையும் வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் - நான், சென்னை வந்தேனே தவிர; பங்களாவும், படகனைய காரும், வாங்க வேண்டும் என்ற அரிப்போடு வந்தவனல்ல.
நான், பிறிதொரு உத்தியோகத்தில் அமர்ந்தே காரையும் கட்டடத்தையும் வாங்கியிருக்க முடியும்.
இவ்வுலகின் மாட்டு - பணம் பண்ண பத்து வழிகள் இருக்கின்றன; புகழ் பண்ண ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் திறமை!
என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடி வைக்கும் பெருத்த அவமானமாகும்.
சாதியால்; சந்தர்ப்பத்தால்; சிபாரிசால்; சிலாகித்து சிலரைப் பேசுவதால்-
எனக்குப் பட வாய்ப்பு வருமாயின், அது நான் நரகல் தின்பதற்கு ஒப்பாகும். நான் மிகப் பெரிய அங்கீகாரமாக, என் எழுத்துக்கு எதை எண்ணுகிறேன் என்றால் -
ஒரு பட இயக்குநரோ; ஓர் இசையமைப்பாளரோ; ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ -
என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும்.
‘வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமா சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது!இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!’ - என்னைப் பற்றிய இத்தகு கமெண்ட்ஸ் தான், என் தொழிலை கெளரவப்படுத்துகின்றன.
ஒருவருக்கு - என்னை, எதற்காகப் பிடிக்க வேண்டும்? அப்படிப் பிடித்துத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் - அந்த ஒருவருக்கும் இல்லை; அடியேனுக்குமில்லை!
ஆனால் - என் பாட்டு, இன்னொருவருக்குப் பிடித்திருக்க வேண்டியவனாயிருக்கலாம்; என் பாட்டு, தவிர்க்கப்பட முடியாத்தாக இருக்க வேண்டும். இதைத்தான், நான் என் தொழில் தர்மமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!
கேட்டு வாங்க வேண்டியது கைத்துட்டு; கேட்காமல் வாங்க வேண்டியது கைத்தட்டு!
சில பேச்சாளர்கள் மைக்கைப் பிடித்த உடனேயே, அவையோர் முன் கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோளை வைப்பார்கள்.
‘எனக்குத் தெரியும்... நான் பேசும்போது, ஆங்காங்கு உங்கள் பலத்த கைத்தட்டல்கள் மூலம் - என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று; ஏன் என்னை ஆரம்பத்திலேயே உற்சாகப் படுத்தக் கூடாதா?’
இப்படிக் கைத்தட்டைக் கேட்டு வாங்குவார்கள். அவையோரிடமிருந்து கைத்தட்டுகள் தானாய் வர வேண்டும் - அதாவது, அவர்களுக்கு ஏப்பம் வருவதுபோல; தும்மல் வருவது போல!
கேட்டுப் பெறுவது யாசகம்; கரகோஷங்களைக் கேட்காமல் பெறுவதுதான், மாணிக்க வாசகம்!
இறையருலால்- விருதுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. அன்னணம் நான் வாங்கிய விருதுகளெல்லாம் - என் பாட்டு வாங்கிய விருதுகளே தவிர, கேட்டு வாங்கிய விருதுகளல்ல!
படவுலகில், நான் புனைந்த எல்லாப் பாடல்களும், பாராட்டுகளைப் பெற்றவை அல்ல; ஆனால், பாராட்டுகளை இயல்பாகப் பெற்று, என்னை எனக்கே இனங்காட்டிய பாடல்கள் உண்டு!
திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில், ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா - 1963-ல் திரு.விசுவநாத அண்ணன்; திரு.ராமமூர்த்தி அண்ணன் இருவருக்கும் நடந்தது.
சிவாஜி, கண்ணதாசன் முதலிய திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து, விசுவநாதன் ராமமூர்த்தியை -
வாய்கள் மணக்க, வாழ்த்தியருளிய விழா அது!
அந்த விழாவில் - விசுவநாதன் ராமமூர்த்திக் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடந்து -
கற்கண்டுத் தமிழைக் காற்று வாகனத்தில் ஏற்றி, அண்டை அயல் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்த அற்புதம் -
அந்த அந்தி நேரத்தில் அங்கு நிகழ்ந்தது!
கண்ணதாசன் பாடல்களுக்கிடையே - அதுகாறும் படத்தில் வெளிவராத என்னுடைய ஒரு பாட்டை -
அண்ணன் விசுவநாதன் அவர்கள் பி.சுசிலாவைக் கொண்டு பாடவைத்தார்கள்.
அந்தப் பாடல் -
அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும், இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் - ‘கற்பகம்’ படத்துப் பாடல்; பாடலின் பல்லவி -
‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்; பார்வையிலே படம் பிடிச்சான்; பார்வையிலே படம் பிடிச்சு - பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்!’ - இந்தப் பாடலின் சரணத்தில், ஒரு வரி வந்தது.
’மனசுக்குள்ளே தேரோட்ட -
மை விழியில் வடம் பிடிச்சான்!’
- என்பதுதான் அந்த வரி; இந்த வரியைக் கண்ணதாசன் ‘ஓஹோ’வென்று சிலாகித்து மேடையிலே பாராட்டி -
‘வாலியை என் வாரிசு என்பேன்!’ என்றார் -
அவை நடுவில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று - கவியரசு கண்ணதாசனை நோக்கி கை கூப்பினேன்.
எவருக்கு எதிராக நான் கடைவிரித்தேனோ - அவர் பராட்டுகிறார். இதுதான் நூறு விழுக்காடு, கிடைத்தற்கரிய நிஜமான பாராட்டு. இந்தப் பாராட்டின் எடையை நிறுத்துச் சொல்ல, ஏது ஒரு தராசு?
இந்த விழாவில்தான் -
என் அருமை அண்ணன்; என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியப் பெருந்தகை -
விசுவநாதன் அவர்களுக்கும் அண்ணன் ராமமூர்த்தி அவர்களுக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் பட்டம், பலத்த கரகோஷத்திற்கிடையே -
சிவாஜி, கண்ணதாசன் இருவராலும் வழங்கப் பெற்றது!
எத்துணையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் -
ரசிகமணி டி.கே.சி. போல் - உடனே நல்ல வரியைக் கேட்ட மாத்திரம் பாட்டைப் பாராட்டுவதில் -
இராம நாராயணனுக்கு நிகர் இராம நாராயணனே!
பல பாடல்களைச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்டு ‘ப்ரமாதம் சார்; ப்ரமாதம் சார்’ என்று சின்னத் தொந்தி குலுங்கச் சிரிப்பார்.
இதோ - அவர் ரசித்த ஒரு பாடல், ஒரு பானைச் சோறுக்கு, ஓர் அரிசி பதம்போலே!
’மஞ்சள் பூசி
மைல்கல் இருந்தால் -
கடவுள் என்பாரு; இந்த -
மக்களைப் பத்தி
நானா சொன்னேன்?
பெரியார் சொன்னாரு!’
இன்னோர் இயக்குநரை, இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏ. ஆர்.ரஹ்மான் இசையில், அவர் படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் எழுதி, அவை பதிவாகி - அதற்கான பணம் மொத்தத்தையும், அந்த இயக்குநர் எப்பொழுதோ கொடுத்துவிட்டார்.
அவர் - திடீரென்று ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார்.
‘உங்களுக்கு நான் முழுப் பணமும் செட்டில் பண்ணிட்டேன். இருந்தாலும், கடைசியா ஒரு சிச்சுவேஷனுக்கு நீங்க எழுதிக் கொடுத்த பாட்டு இருந்ததே -
அது அற்புதம்! ஒரு ரசிகன் என்கிற முறையிலே, என்னுடைய அன்பளிப்பாக இந்தப் பணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகணும்!’
- என்று சொல்லி என் கையில், ஒரு லட்சம் ரூபாயைத் திணித்து விட்டு -
என் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அவர் காரேறிப் போய்விட்டார்.
அவர்தான், புகழ் வாய்ந்த இயக்குநர்; நடிகர்; உயர்ந்த கலா ரசிகர் - எஸ்.ஜெ. சூர்யா அவர்கள்!
- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|