புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
19 Posts - 49%
heezulia
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
1 Post - 3%
Guna.D
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
1 Post - 3%
Shivanya
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
10 Posts - 2%
prajai
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_m10கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 05, 2012 10:21 pm

சந்நியாசிகளும், சாதுக்களும் செய்வது போன்ற ஒரு பூஜையை இங்கே சொல்லி, உங்களை நான் பயமுறுத்தப் போவதில்லை.

ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் சொல்வது போல, சில எளிமையான வழிகளையே சொல்லப் போகிறேன்.

ஆத்மாவையும், உடலையும் அமைதியடையச் செய்வதே பூஜையின் நோக்கம். இரண்டும் அமைதியுற்ற நிலையே, நிம்மதிக்கு மூலாதாரம்.

பகவத் கீதை படித்திருப்பீர்கள். அதிலுள்ள தியான யோகம் உங்களுக்கு விளங்கியிருக்கும். அது சற்று கடுமையானது.

எளிமையான முறையில் ஒரு சிறிய அறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த அறையில் விநாயகர், சூரியன், ஈஸ்வரன், விஷ்ணு, அம்பாள் இந்த ஐந்து தெய்வங்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அன்பும் பக்தியும் மீறிப்போய், கிடைக்கின்ற சுவாமி படங்கள், சிலைகள் அனைத்தையும் வைத்துக் கொள்வது தவறில்லை என்றாலும், பெரியவர்கள் சொல்வது போல மேற்கண்ட ஐந்து மூல மூர்த்திகளையும் ஒருங்கு வைத்துப் பூஜை செய்வதே சிறந்தது.

இதற்குப் `பஞ்சாயதன பூஜை’ என்று பெயர்.

இந்த மூர்த்திகளைக்கூட ஓவிய ரூபமாகவோ, சிலை வடிவமாகவோ வைக்காமல் வேறொன்றில் ஆவாகனம் செய்து வைப்பது நல்லது என்கிறார் பெரியவர்.

அவை இயற்கையாகக் கிடைக்கும் ஐந்து பொருள்களில் அமைந்திருக்க வேண்டும்.

இவற்றில் ஈஸ்வரனுக்குரிய `பாண லிங்கம்’. இது நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.

அம்பிகைக்குரியது, `ஸ்வர்ணமுகி சிலா’ என்ற கல்; தங்க ரேகை ஓடிய அந்தக் கல், ஆந்திர தேசத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.

விஷ்ணுவின் வடிவமான, `சாலக் கிராமம்’, நேபாளத்தில் கெண்டகி நதியில் கிடைக்கிறது.

சூரியனுக்குரிய `ஸ்படிகம்’, தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.

விநாயகருக்குரிய `சோனபத்திரக் கல்’ கங்கையோடு கலக்கும், `சோனே’ ஆற்றில் அகப்படுகிறது.

இந்த ஐந்தையும் ஒரு இடத்தில் சேர்த்து வைத்தால், `தேசத்தையே ஒரு இடத்தில் வைத்துப் பார்த்தது போல் இருக்கும்’ என்கிறார் பெரியவர்.

எல்லாக் கற்களுமே வழுவழுப்பாக இருக்குமாம். இடுக்குகள், இடைவெளிகள் இருக்காதாம். கழுவுவதும், துடைப்பதும் சுலபமாம். அபிஷேகம் செய்து துடைக்க அதிக நேரம் ஆகாதாம். இதற்கு பூஜை மண்டபம் கூடத் தேவை இல்லையாம். ஒரு சின்ன சொம்பிலோ, சம்புடத்திலோ கூடப் போட்டு வைத்து விடலாமாம்.

நாலு கரண்டி தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், அட்சதை வைத்து அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாமாம்.

வெளியூருக்கு அதை எடுத்துக்கொண்டு போகலாமாம்; அங்கே புஷ்பம் கிடைக்கவில்லையே என அலையாமல் வில்வ இலையையும், துளசி தலத்தையும் காய வைத்து எடுத்துக் கொண்டு போனால், ஈஸ்வரனையும், விஷ்ணுவையும் அவற்றால் அர்ச்சிக்கலாமாம். மற்ற தெய்வங்களையும் அட்சதையால் அர்ச்சனை செய்யலாமாம்.

நைவேத்தியத்திற்கு காய்ந்த திராட்சைப் பழங்களைக் கொண்டு செல்லலாமாம்; எல்லாவற்றையும் ஒரு சின்னப் பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு போய் விடலாமாம்.

இந்தப் `பஞ்சாயதன’ பூஜைக்கு, பின்னால் புத்துயிர் கொடுத்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். அவர் இந்த ஐந்து தெய்வங்களோடு, முருகப் பெருமானையும் சேர்த்துப் பார்த்தார்.

நாமும், மேற்கண்ட ஆவாகனக் கற்களோடு ஒரு சிறு வேலையும் வைத்துக் கொள்ளலாம்.

கண் ஒன்றைப் பாராமல், காது ஒன்றைக் கேளாமல், மனம் ஒன்றை நாடாமல், வாய் ஒன்றைப் பேசாமல், கை ஒன்றைத் தேடாமல், சிந்தனை ஈஸ்வரன்; ஜெபிப்பது அவனையே; பூஜை தீபாராதனை கைகளால் என்றிருக்க வேண்டும்.

அறைக்கதவை நன்றாகச் சாத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம். இது ஒரு வகை ரிலாக்ஸேஷன்.

உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சுவாமிகளிடம் விட்டுவிடுங்கள். துன்பங்களை அவன் மீது இறக்கி வைத்து விடுங்கள்.

`மரணத்திற்கு எப்போதும் தயார்; அதுவரை அமைதியைக் கொடு’ என்று வேண்டுங்கள்.

`வடிவேலறிய வஞ்சகம் இல்லை’ என்று சத்தியம் செய்யுங்கள். உடம்புக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்துக்கு அமைதியையும் பிரார்த்தியுங்கள்.

`வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டும்’ என்று சொல்வார்கள். `குளித்து விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும்’ என்பார்கள். எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது.

துன்பம் நெருங்கும் போதெல்லாம் பூஜையில் உட்காருங்கள். சோதனை நேரும்போதெல்லாம் உட்காருங்கள். அடுத்தவர்மீது கோபம் வரும்போது உட்காருங்கள்.

சந்தோஷம் வரும்போது நன்றி செலுத்துவதற்காக உட்காருங்கள். நோயுற்ற போது நோய் தீரப் பிரார்த்தியுங்கள்.

புறத்தூய்மை வெறும் தண்ணீரால் அமைகிறது; அகத் தூய்மைதான் உங்கள் வாய்மையில் காணப்பட வேண்டும்.

பக்தித் தத்துவம் பயன் மிக்கது.

பாவிகளையும் துரோகிகளையும் விட்டு விலகி நிற்கப் பரமேஸ்வரனைச் சரணடையுங்கள்.

பிறப்பிற்கு முன்னால் அவனிடம் தான் இருந்தோம். இறப்புக்குப் பின்னால் அவனிடம் தான் போகப் போகிறோம்.

(ஒவ்வொரு கடவுளையும் வணங்கும் போது பாராயணம் செய்ய வேண்டிய பாடல்கள் இங்கே தனித்தனியாக இடம்பெற்றுள்ளது)

(தொடரும்)

***



சூரியனை வணங்குகிறவர்கள் கீழ்க்கண்ட எனது பாடலைப் பாடுங்கள்.

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர்உயிர்கட் கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே! நலமே போற்றி! நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி! போற்றி!

***

ஈஸ்வரனை வணங்குகிறவர்கள் கீழ்க்கண்ட இராமலிங்க சுவாமிகளின் மகாதேவ மாலைப் பாடலைப் பாடுங்கள்.
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயி ராம்ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ணதாகி
இலகுதிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே!

உலகமெலாம் தனிநிறைந்த உண்மை யாகி யோகியர்தம் அனுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகமுறா உபசாந்த நிலைய தாகிக் களங்கமற்ற அருள்ஞானக் காட்சி யாகி
விலகலுறா நிபிட ஆனந்த மாகி மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர் இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே!

வித்தாகி முளையாகி விளைவ தாகி விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாக்கிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே!

வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின் மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின் நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தங்கி நின்ற முதலாகி மனோதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்று மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே!

வாயாகி வாயிறந்த மவுன மாகி மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக் கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித் தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சக்தியெல்லாம் உடைய தாகி ஒன்றாகிப் பலவாகு ஓங்குந் தேவே!

அடியேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட அருட்கடலே!
மன்றோங்கும் அரசே! இந்நாள்
கொடியனேன் செய்பிழை திருவுள் ளத்தே கொண்டுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டே!
நெடியனே முதற்கடவுட் சமூகத் தோர்தம் நெடும்பிழைகள் ஆயிரம் பொறுத்த மாயை
ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல் எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே!

அன்பர்திரு உளங்கோயி லாகக் கொண்டே அற்புதசிற் சபையோங்கும் அரசே! இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய்! நின்னைத்துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர் துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ என்னளவெனச் செல்வேனிவ் வேழையே னே!

அருளுடைய பரம்பொருளே! மன்றி லாடும் ஆனந்தப் பெருவாழ்வே! அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவமே!மெய் அறிவுருவாம் தெய்வமே! இம்
மருளுடைய மனப்போதை நாயினேன் செய் வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே!

***

வறுமையில் வாடுபவர்கள் அம்பாளை வணங்குங்கள். அம்பாளை வணங்குகிறவர்கள் கீழ்க்கண்ட இராமலிங்க சுவாமிகளின் பாடல்களைப் பாடுங்கள்.

கடலமுதே! செங்கரும்பே! யருட் கற்பகக் கனியே!
உடலுயிரே! யுயிர்க்குள் ளுணர்வே! யுணர் வுள்ளொளியே!
அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே!
மடலவிழ் ஞான மலரே! வடிவுடைய மாணிக்கமே!

கண்ணே! யக் கண்ணின் கருமணி! மணியில் கலந்தொளிசெய்
விண்ணே! வியனொற்றி யூரண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே! மலைபெறும் பெண்மணியே! தெய்வப் பெண்ணமுதே!
மண்ணேய நீத்தவர் வாழ்வேமணி வடிவுடை மாணிக்கமே!

முப்போது மன்பர்கள் வாழ்த்தொற்றி யூரெம் முதல்வர் மகிழ்
ஒப்போ தருமலைப் பெண்ணமுதே! யென் றுவந்துநினை
எப்போதுஞ் சிந்தித்திடர் நீங்கிடு வார்தனக் கருள்வாயே!
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே!

தாயே! மிகவும் தயவுடை யாளெனச் சாற்றுவரிச்
சேயேன் படுந்துயிர் நீக்கவென்னே உளஞ் செய்திலையே
நாயேன் பிழையினி நாடாது நல்லருள் நல்கவரு
வாயே! வெம்ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே!

பூவாய்! மலர்குழற பூவாய்! மெய் யன்பர் புனைந்த தமிழ்ப்
பாவாய்! நிறைந்தபொற் பாவாய்! செந் தேனிற் பகர் மொழியாய்!
காவா யெனவயன் காவா பவனுங் கருதுமலர்
வாவா யெழி லொற்றி வாழ்வே! வடிவுடை மாணிக்கமே!

ஒயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல் போல்
ஈயா விடுனுமோ ரெள்ளளவேனு இரங்கு கண்டாய்
சாயா அருள்தரும் தாயே! எழிலொற்றித் தற்பரையே!
மாயா நலமருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!

வாழி! நின் சேவடி போற்றி, நின் பூம்பத வாரிசங்கள்
வாழி! நின் றாள்மலர் போற்றி, நின் கண்ணொளி வாழி; நின்சீர்
வாழி! யென் னுள்ளத்தில் நீயுநின் னொற்றி மகிழ்நருநீ
வாழி! யென் னாருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!

***

திருமாலை வணங்குகிறவர்கள் பிரபந்தத்திலுள்ள திருமங்கையாழ்வாரின் பின்வரும் பாடலைப் பாடுங்கள்.

கொங்க லர்ந்த மலர்க் குருந்த மொசித்த கோவல னென்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணனின்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்குநீர்
செங்க யல்திளைக் கும்சு னைத்திரு வேங் கடமடை நெஞ்சமே!

பள்ளி யாவது பாற்க டலரங் கம்இ ரங்கவன் பேய்முலை,
பிள்ளை யாயுயி ருண்ட வெந்தை பிரான வன்பெருகும் இடம்
வெள்ளி யான்கரி யான்மணி நிற வண்ண னென்றெண்ணி, நாடோறும்
தெள்ளி யார்வணங் கும்ம லைத்திரு வேங் கடமடை நெஞ்சமே!

நின்ற மாமரு திற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொ ழும்இணைத் தாம ரையடி யெம்பிரான்
கன்றி மாரி பொழிந் திடக்கடி தாநி ரைக்கிடர் நீக்குவான்
சென்று குன்ற மெடுத்த வன்திரு வேங் கடமடை நெஞ்சமே!

பார்த்தற் காயன்று பார தங்கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர்
கோர்த்தங் காயர் தம்பாடி யில்குர வைபிணைந்த எம் கோவலன்
ஏத்து வார்தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய யெம்பிரான்
தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ்த்திரு வேங்க டமடை நெஞ்சமே!

வண்கை யானவு ணர்க்கு நாயகன் வேள்வி யில்சென்று மாணியாய்
மண்கை யாலிரந் தான்ம ராமர மேழு மெய்த வலத்தினான்
எண்கை யானிம யத்துள் ளானிருஞ் சோலை மேவிய எம்பிரான்
திண்கைம் மாதுயர் தீர்த்த வன்திரு வேங்க டமடை நெஞ்சமே!

எண்டி சைகளு மேழு லகமும் வாங்கிப் பொன்வயிற் றில்பெய்து
பண்டோ ராலிலைப் பள்ளி கொண்டவன் பான்ம திக்கிடர் தீர்த்தவன்
ஓண்டி றல்அவு ணன்உ ரத்துகிர் வைத்தவன் ஒள்ளெ யிற்றோடு
திண்டி றல்அரி யாய வன்திரு வேங்க டமடை நெஞ்சமே!

பாரு நீரெரி காற்றி னோடா காச மும்இவை யாயினான்
பேரு மாயிரம் பேச நின்ற பிறப்பி லிபெரு கும்இடம்
காரும் வார்பனி நீள்வி சும்பிடைச் சோரு மாமுகில் தோய்தர
சேரும் வார்பொழில் சூழெ ழில்திரு வேங்க டமடை நெஞ்சமே!

அம்ப ரம்அனல் கால்நி லம்சல மாகி நின்ற அமரர்கோன்
வம்பு லாமல மேல்ம லிமட மங்கை தான்கொழு நன்அவன்
கொம்பி னன்னவி டைம டக்குற மாதர் நீளித ணந்தொறும்
செம்பு னம்அவை காவல் கொள்திரு வேங்க டமடை நெஞ்சமே!

பேசும் நின்திரு நாம மெட்டெழுத் தும்சொல் லிநின்று பின்னரும்
பேசு வார்தமை யுய்ய வாங்கிப் பிறப்ப றுக்கும் பிரானிடம்
வாச மாமலர் நாறு வார்பொழில் சூழ்த ரும்உல குக்கெல்லாம்
தேச மாய்த்திக ழும்ம லைத்திரு வேங்க டமடை நெஞ்சமே!

செங்க யல்திளைக் கும்சு னைத்திரு வேங்க டத்துறை செல்வனை
மங்கை யர்தலை வன்க லிகன்றி வண்ட மிழ்ச்செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து ரைக்கவல் லார்கள் தஞ்சம தாகவே
வங்க மாகடல் வையங் காவலர் ஆகி வானுல காள்வரே!

***

விநாயகரைப் பிரார்த்தியுங்கள். கீழ்க்கண்ட ஔவையாரின் அகவலைப் பாராயணம் செய்யுங்கள்.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே,

திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே எந்தன் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைத்தான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளி

கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரந்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழும்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முகலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டிச்

சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சுக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே!





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   1357389கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   59010615கவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Images3ijfகவிகர் கண்ணதாசரின் நெஞ்சுக்கு நிம்மதி- பூஜையில் நிம்மதி   Images4px
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Jan 06, 2012 11:13 am

அருமையான கட்டுரை... ஆன்மீகத்தில் கரைகண்டவர் கண்ணதாசன்.. அவரது கருத்துகளுக்கு சிறப்பான அந்தஸ்து உண்டு.. அவற்றினை இங்கே வழங்கியமைக்கு மிக்க நன்றி கேசவன்..

இதன் மூலத்தை அந்த தொடுப்பினை அறியக்கொடுத்தால் நலம்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக