புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
1 Post - 1%
Kavithas
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
1 Post - 1%
சிவா
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
1 Post - 1%
bala_t
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
1 Post - 1%
prajai
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
296 Posts - 42%
heezulia
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
6 Posts - 1%
prajai
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
4 Posts - 1%
manikavi
சுற்றுலா செல்ல Poll_c10சுற்றுலா செல்ல Poll_m10சுற்றுலா செல்ல Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலா செல்ல


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Mon Dec 12, 2011 7:32 pm

சிவகங்கை

கலை நேர்த்தியும், கம்பீரமும் மிகுந்த செட்டிநாட்டு மாளிகைகளை உள்ளடக்கியது சிவகங்கை சீமை. ஒரு பக்கம் காரைக்குடியைச் சுற்றி பிள்ளையார்பட்டி போன்ற கோயில்களும், இன்னொரு பக்கம் மருதுபாண்டியர் வாழ்ந்த வீரம் மிகுந்த பகுதியும் சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புக்கு சான்றுகள். கி.பி. 1674-1710க்கும் இடைப்பட்ட காலத்தில் இராமநாதபுரத்தின் ஏழாவது அரசனாகிய ரகுநாத சேதுபதி ஆட்சியின்கீழ் இருந்துள்ளது.
இடைக்காட்டுர் தேவாலயம்
மதுரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்தத் தேவாலயம் உள்ளது. பிரான்சில் உள்ள நீம்ஸ் கதீட்ரல் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில், முழுவதும் கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள எல்லா அழகிய சிலைகளும் பிரான்ஸ் நாட்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கு முன் வரவழைக்கப்பட்டவை.

காளீஸ்வரர் கோயில்

தேவகோட்டையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் 66 கி.மீ. தொலைவிலும் உள்ள இந்தக் கோயில் பண்டையக் கட்டடக்கலைச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு. காளீஸ்வரர் கோயில் இருப்பதால் இதற்கு காளையார் கோயில் என்று பெயர். இதைச் சுற்றியுள்ள கல் மதில் 18 அடி உயரம் ஆகும். சிறியதும் பெரியதுமாக இரண்டு இராஜ கோபுரங்களைக் கொண்ட இந்தக் கோயிலின் தென்புறம் பெரிய தெப்பக்குளம் ஒன்றுள்ளது.

கண்டதேவி கோயில்

தேவகோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சமேதராய் இக்கோயிலில் வீற்றிருக்கிறார். கிரகிலி நாதர் எனவும் அழைக்கப்படுகிறார். 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், ஆனி மாதத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு, சுற்றியுள்ள 75 கிராமங்களிலிருந்தும் மக்கள் கூடுவார்கள்.

கண்ணதாசன் மணிமண்டபம்

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பிரகடனம் செய்த கவியரசு கண்ணதாசனுக்கு, காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரே, அழகான மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டியின் அருகில் உள்ள சிறுகூடல் பட்டிதான், கண்ணதாசன் பிறந்த ஊர்.

குன்றக்குடி கோயில்

முருகனின் சிறப்பு வாய்ந்த எட்டுக்குடிகளில் இந்தக் கோயிலும் ஒன்று. காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றத்துக் கோயிலில் சண்முகநாதனாக முருகப்பெருமான் கோலோச்சுகிறார். கி.பி. 1000 இல் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக மயூரகிரி புராணம் கூறுகிறது. மருது பாண்டியர்களால் புதுப்பிக்கப்பட்டது. தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மற்றும் கந்தசஷ்டி திருவிழாக்கள் இந்தக் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
மருதுபாண்டியர் நினைவாலயம்

சிவகங்கைச் சீமையை ஒரு காலத்தில் திறம்பட ஆண்ட வேலு நாயக்கர் பரம்பரையில் வந்தவர்கள்தான் மருது பாண்டியர்கள். பெரிய மருது 1748லும், சின்னமருது 1753லும் பிறந்தனர். வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய இவர்களை 1801இல் வெள்ளையர்கள் தூக்கிலிட்டுக் கொன்றனர். இம் மாவீரர்களுக்கான நினைவாலயம் ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் 21.10.1992 இல் திறக்கப்பட்டது.

காரைக்குடி

நகரத்தார் என்று கூறப்படும் செட்டியார்கள் வாழும் செட்டி நாட்டுப் பகுதியின் தலைநகரம் போல் விளங்குவது இந்தக் காரைக்குடி நகரத்தாரின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாளிகை. மதில் போன்ற சுற்றுச் சுவர்களும், பளிங்குத் தரையும், சுதை ஓவியங்களும், வண்ணச் சித்திரக் கண்ணாடி சாளரங்கள், அலங்கார தொங்கு விளக்குகள், அழகான தேக்குமர வேலைப் பாடுகள் இப்படியாக இன்றும் கலைநயத்தோடு மிளிர்கின்றன. இவர்களின் வீடுகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்த இவர்கள், கடல்கொண்ட பூம்புகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையார்பட்டி

காரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மதுரை செல்லும் வழியில் உள்ள கோயில் இது. பாண்டிய மன்னர்களால் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதைக் கல்வெட்டு மூலம் அறியமுடியகிறது. ஒரு குன்றிலிருந்து துண்டிக்கப்பட்ட பாறையில் கோயிலையும் கட்டி, ஒரே கல்லில் கற்பக விநாயகர் மற்றும் லிங்கவடிவு ஆகியவற்றையும் வடித்துள்ளனர். இவற்றை வடித்த எக்கத்தூர் கூன்பெருபரணன் என்ற சிற்பி அதற்கு அடையாளமாகக் கல்வெட்டில் தனது கையெழுத்தைப் பொறித்து வைத்துள்ளார். இங்கு 14 கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.பி. 400 முதல் கி.பி 1238 வரை பொறிக்கப்பட்டவை. திருவீங்கைக்குடி, மருதக்குடி, ராஜநாராயணபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டிருந்த இந்த ஊர், தற்போது பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
இளையான்குடி

63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர். ஒரு விவசாயியான இவர் சிவனையும் சிவனடியாரையும் உயிரென மதித்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

திருக்கோஷ்டியூர்

108 திருப்பதிகளில் ஒன்றான பெருமாள் திருத்தலம் இது. இராமானுஜரே வந்து வழிபட்ட பெருமை பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசிமக தீபம் இந்தக் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

திருவேங்கடமுடையான் கோயில் – தென்திருப்பதி


ஸ்ரீனிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இந்தக் கோயில் தென் திருப்பதி எனப் பெயர் பெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயில் காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள அரியக் குடியில் அமைந்து உள்ளது.


http://karaikudifriendstravels.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக