புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
34 Posts - 52%
heezulia
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
17 Posts - 2%
prajai
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
9 Posts - 1%
jairam
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_m10அவள் மனம்போல் இருக்கட்டும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் மனம்போல் இருக்கட்டும்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 11:27 am

அவள் மனம்போல் இருக்கட்டும். E_1322236297

கம்பெனி ஆடிட் என்பதால், சுந்தரி பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள்! நிற்க நேரமில்லை!

ஜெனரல் மானேஜர் அறையில் இருந்தான். தேவையான தகவல்களை அவர் முன் பரப்பியிருந்தாள்! சுந்தரி நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமே ஆபீஸிக்கு வந்துடுங்க லேட் ஆனாலும் ஒவர் டைம் க்ளெய்ம் பண்ணிக்கலாம் இல்ல சார் நாளைக்கு வர முடியாது லீவு வேணும்''

லீவா நாளைக்கா சான்ஸே இல்லை என்ன சுந்தரி நீங்க? ஆடிட் ஏரிய முழுக்க நீங்கதானே பார்க்றீங்க? ஸாரி ஸார்! புரியுது நாளைக்கு என் மாமனார் திதி! அதனால வர முடியாது'' என்ன நீங்க? பொழப்பு முக்கியம் ஏதாவது எளிமையா செஞ்சிட்டு வந்து சேருங்க!'' இல்ல சார் வாய்ப்பே இல்லை. ஜெனரல் மானேஜருக்குக் கோபம் வந்து விட்டது. நாளைக்கு நீங்க வரலைனா மெமோ தரும்படி நேரும் சுந்தரி'' நான் கவலைப்பட போவதில்லை. நான் நாளைக்கு வரலை. சரக்கென வெளியே வந்துவிட்டாள்! இந்தச் சேதி சில நொடிகளில் ஆபிஸ் முழுக்க மின்சார வேகத்தில் பரவி விட்டது. செக்ஷன் ஆபீசர் பத்மினி, சுந்தரிடம் வந்தாள் என்ன சுந்தரி நீ இது தேவையில்லாத பிரச்னை உன் சர்வீஸ் ரெக்கார்ட்ல கரும்புள்ளி வேணுமா!

மேடம் அதுக்காக நான் கவலைப்படலை என் மாமனார் இறந்து பத்து வருஷமாச்சு அவருக்கு முறையா திதி குடுத்துட்டு வர்றோம், உயிரோட இருக்கும்போது செய்றது பெரிசில்லை. பிதுர்களுக்குச் செஞ்சாத்தான் புள்ளைங்க நல்லா இருக்கும் குடும்பம் தழைக்கும் நான் சாக் கிடந்தாலும் எழுந்து வந்து திதி கொடுப்பேன் இதை மாத்திக்க நான் தயாரா இல்லை

வயதான பஞ்சாபகேசன் அருகில் வந்தார். வெல்டன் சுந்தரி உன் மாமனார் செத்துட்டாலும் புண்ணியம் செஞ்சவர் உயிரோட இருக்கிற என்னை மாதிரி ஆட்கள் மருமகள் கிட்ட படற பாடு நீ நடத்தும்மா நல்லாயிருப்போ தேங்க்யூ சார்! சுந்தரி பர்மிஷன் போட்டு நால மணிக்கே புறப்பட்டுவிட்டாள். நேராக மாõர்க்கெட் வந்து தேவையான காய்கறிகளை, விடுபட்ட மளிகைப் பொருள்கள், வாழை இலை என திதிக்கு தேவையான சகல பொருட்களையும் தேடி தேடித் வாங்கினாள்.

ஆட்டோ பிடித்து வீடு திரும்பும்போது இரவு ஏழுமணி, சுந்தரியின் கணவன் துறை டி.வி. பார்த்துக் கொண்டிருக்க இதப்பாருங்க டிவியை அணைங்க அய்யருக்கு போன் போட்டு காலை பத்து மணிக்கு இங்கே இருக்கணும்னு சொல்லுங்க திதி முடிஞ்சு படையல் போட்டதும் வழக்கமா நம்ம வீட்டுச் சாப்பிட வர்ற கோபால் மாமவுக்குத் தகவல் குடுங்க! சரி சரி

சுந்தரியின் மகன்கள் இருவரும் விளையாடிக்கொண்டிருக்க நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ஓட்டல்ல டிபன் சாப்பிட்டு பள்ளிக்கூடம் போங்க ராத்திரிதான் வீட்டுச் சாப்பாடு இரவு உணவுக்கு அனைவரும் கூடிவிட, அம்மா நீ சாப்பிடலையா? இன்னிக்குப் பூரா நான் விரதம் நாளைக்கு திதி முடிஞ்ச பிறகுதான் சாப்பிடுவேன், புதிதாக வந்த வேலைக்காரி பிரமித்தாள். இப்படி ஒரு பாரம்பரிய உணர்வுள்ள பெண் இருந்தக் காலத்தில் வாழ முடியுமா?

மறுநாள் விடிந்தது முதல் பரப்பரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள் சுந்தரி. ஐயர் வர மந்திரங்கள் ஒலிக்க, முறையாக திதி நடக்க, கோபால் மாமா உள்ளே வந்து விட்டார். அவர் கை காலை கழுவிக் கொண்டு வந்து சாமி கும்பிட்டார். அவரை உபசரித்து சாப்பிட வைத்து அவருக்கு வேஷ்டி, துண்டு தந்து நமஸ்கரித்தார்கள் துரையும், சுந்தரியும் அதாவது இறந்து போன மாமனாரே வந்து உணவருந்தி அவர்களை வாழ்த்திவிட்டுப் போவதாக ஜதீகம். அது இந்த வீட்டு பழக்கம்.

துரையும் சாப்பிட்ட பிறகு சுந்தரி சாப்பிட ஆரம்பித்தாள்! வேலைக்காரி பார்த்துக்கொண்டேயிருந்தாள்! நேத்து பூரா பட்டினி! இன்னிக்கு திதி முடிஞ்சு, சாப்பிடறீங்க! திதியை விமரிசையா நடத்தறீங்க, பூரிப்பா இருக்கு தாயி! உங்க மாமனார் உங்க கூடவே இருந்து வாழக் குடுத்து வைக்கலைலியே! சுந்தரி பேசவில்லை. அந்த கோபால் மாமா எழுந்தார்! துரை, நான் வர்றேன்பா சரிங்க மாமா, அவர் வாலை நோக்கி நட்தார். படிகளில் இறங்க என்னங்க அவரை ஆட்டோ வச்சு அனுப்புங்க சுந்தரி குரல் கொடுத்தாள். துரை வாசலுக்கு வந்துவிட்டான்!

மாமா இருங்க ஆட்டோ புடிச்சுத் தர்றேன்! அவர் திரும்பினார். முகத்தில் சிரிப்பில்லை இறுக்கம் பரவியிருந்தது. வேண்டாம் துரை! நான் ஏதாவது பேசினா தப்பாயிடும்! நீ உள்ளே போ! நான் எதுக்காக இங்கே வந்து இந்த திதில கலந்துட்டு. நீ தர்றதையெல்லாம் வாங்கிட்டுப் போறேன்னு அந்த தெய்வத்துக்கு மட்டுமே தெரியும் என்னை பேச வைக்காதே! வேகமாக நடந்தார். உள்ளே வேலைக்காரி,

தாயி நீ இத்தனை மரியாதை குடுத்தும் அந்தப் பெரியவர் போகும்போது உங்கிட்ட சொல்லிக்காம ஏன் போறார்? அவரெல்லாம் ஒரு மனுஷனா. அப்படியெல்லாம் பேசக்கூடாது மத்தவங்க நன்றி சொல்லணும்ன்னு எதிர்பார்த்து யாரும் எதையும் செய்யக் கூடாது. நீ போய் வேலையைப் பாரு'' தெருக்கோடிக்கு வந்த கோபால் மாமா, பேருந்துக்காக நிற்க. அது வந்த்து கூட்டத்தில அடித்து பிடித்து ஏறினார் அடுத்த ஒரு மணி நேரத்தில் பாலவாக்கம் பஸ் ஸ்õடப்பில் இறங்கினார். உள்நோக்கி இருபது நிமிடங்கள் நடக்க அந்த முதியோர் இல்லம் இருந்தது. நிர்வாகி இருந்தார். ருக்குமணி அம்மா இருக்காங்களா?


ஒக்காருங்க வரச் சொல்றேன் சிலநொடிகளில் அந்த வயதான ருக்குமணியம்மா வெளியே வர கோபால் எழுந்து நின்றார். அம்மா வணக்கம். நல்லாருக்கீங்களா? கோபால் வறண்ட பார்வையை வீச, என் வீட்டுக்காரடோ திதி நல்லபடியா முடிந்ததா? பேசவே கூடாதும்மா!

அவரோட மனைவி நீஙக உங்களை நல்லபடியா மரியாதை குடுத்து வீட்ல வச்சுக்காம இங்கே விட்டுட்டு உங்க புருஷனுக்கு திதி குடுத்து என்னம்மா லாபம்? ஐயா “அப்படிச் சொல்லாதீங்க என் பிள்ளை குடும்பம் தழைச்சு வாழனும் ஒரு குறையும் வரக் கூடாது. தப்பும்மா தாய் கண்ணீருக்குக் காரணமாகன பிள்ளைங்க செய்யற எந்த ஒரு தர்ம காரியங்களுக்கும் மரியாதை இல்லை பிதுர்க்கள் வாழ்த்தணும்னு திதியா? உங்க கணவரால் இவங்களை வாழ்த்த முடியுமா? இந்த வேட்டியும் துண்டும் வாங்கி தலை வாழை இலைல சாப்பிட்டு, அவங்களுக்கு அட்சதை போட எனக்குக் கூசுதும்மா?

நான் சொல்லித்தானே நீங்க போறீங்க அவரோட முப்பது வருஷப்பழக்கம் உங்களுக்கு அதானாலதான் உங்களை நான் அனுப்பி வைக்கிறேன். முதியோர் இல்லத்துல என்னை அவங்க கொண்டு வந்து விடலையே. "அவங்க குடுத்த குடைச்சல் தாங்க முடியாம நீங்களே வந்துட்டங்க! இதப்பாருங்க எல்லாத்தையும் விடுங்க புள்ளைங்க வாழணும் சாம்பாதிக்கற மனைவிகளை எதிர்க்கற சக்தி இப்பல்லாம் ஆண்களுக்கு இல்லை குடும்பம் குஸ்தி மேடையில்லை. ரெண்டு கையும் தட்டினாத்தானே சப்தம்?

யாராவது ஒருத்தர் ஒதுங்கிட்டா, நிம்மதி இருக்குமில்லையா? உங்களைக் கண்ணர் விட வச்சிட்டு உங்க மருமகள் போடற வேஷம் எத்தனை காலத்துக்கும்மா? அவ பிள்ளைகளுக்கு மனைவி வர்ற வரைக்கும். அவ மனம் போல இருக்கட்டுமே விடுங்க கொண்டாங்க அந்த வஸ்திரத்தை!! அவர் தர ருக்குமணி அம்மா அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்! ஐயா! தந்தவங்க தப்பானவங்களா இருந்தாலும். இதைக் கட்டிக்கப் போற நீங்க நல்லவர்! என் புருஷனோட ஆத்மா உங்க வழியால அவங்களை ஆசிர்வதிக்கட்டும் கண்கலங்கி நிற்கும் அந்த தாயைப் பார்த்துக் கொண்டே நடந்து போகிறார் கோபால் மாமா!.

-தேவிபாலா @ குமுதம்



அவள் மனம்போல் இருக்கட்டும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 2:43 pm

தாய் கண்ணீருக்குக் காரணமாகன பிள்ளைங்க செய்யற எந்த ஒரு தர்ம காரியங்களுக்கும் மரியாதை இல்லை.
இது சத்தியமான உண்மை அவள் மனம்போல் இருக்கட்டும். 224747944
தேவிபாலா கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் தேடி பிடிச்சு வாங்கி படிப்பேன் . பகிர்வுக்கு நன்றி அண்ணா

இன்று நீ செய்வது நாளை உனக்கு வரும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 5:09 pm

கதை நல்லா இருக்கு சிவா.
நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஆரம்பத்தில் மாமியார் than மருமகளிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பொருத்தும் இந்த நிலைக்கு காரணம் இருக்கிறது அல்லவா.
மாமியார் திருமணமான புதிதில்,அதற்கு பிறகும் தனக்கு சக்தி இருக்கும்வரை தான் மருமகளிடம் நன்றாக நடந்து கொண்டால், அவங்களுக்கு முடியாம போகும்போது மருமகளும் அவங்களை நன்றாக வைத்துக்கொள்வார் தானே.



அவள் மனம்போல் இருக்கட்டும். Uஅவள் மனம்போல் இருக்கட்டும். Dஅவள் மனம்போல் இருக்கட்டும். Aஅவள் மனம்போல் இருக்கட்டும். Yஅவள் மனம்போல் இருக்கட்டும். Aஅவள் மனம்போல் இருக்கட்டும். Sஅவள் மனம்போல் இருக்கட்டும். Uஅவள் மனம்போல் இருக்கட்டும். Dஅவள் மனம்போல் இருக்கட்டும். Hஅவள் மனம்போல் இருக்கட்டும். A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 5:54 pm

ஜாஹீதாபானு wrote:
இன்று நீ செய்வது நாளை உனக்கு வரும்

உண்மை தான்.. நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி




அவள் மனம்போல் இருக்கட்டும். Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக