புதிய பதிவுகள்
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
68 Posts - 60%
heezulia
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
105 Posts - 60%
heezulia
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 28 Nov 2011 - 16:58

செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை எண்ணம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமெழப், பால்நிலவுங் கதிரோன்

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பைப் போலே
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணி போமோ

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோன்றுநிலைகண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் தருமென்
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

செங்குருதி குறுகுறுக்க சீறுமலைபோலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையின் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமலர் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

சிந்தனைக்குள் சினம்பொரிந்து சீண்டுவதைக் கண்டு
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடைவாளும்
தந்தசுகம் என்னருமை தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகே வாழ்க!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 28 Nov 2011 - 17:04

மனதின் எண்ணங்களைப் போல் இந்தக்கவிதையையும் புரிந்துகொள்ள
முடியவில்லையா

இந்தக் கவிக்கான சிறு குறிப்புகள்:
செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை எண்ணம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமெனப், பால்நிலவுங் கதிரோன்



சிவந்த கனிகள் தூங்கும் சோலை மரங்களில் ஊஞ்சல்போல் அங்குமிங்கும் ஆடும் குரங்குகள் (கவி) போன்றது மன எண்ணங்கள் (மனம் ஒரு குரங்கு)
நிலவின் முகத்தில் காணும் மறைகள் (கறுப்பு நிறம்) போன்று
பங்கமுள்ள அல்லது களங்கமான நிலைகொண்டது மனம்.

( நிலவும் சூரியனும் )

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ


நிலவும் சூரியனும் (முறையே சூடும் குளிருக்கும் உதாரணமானவை) ஒன்றுசேரும் நேரம் சூரியகிரகணமாகும் அவ்வேளையில் காணும் தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது எமது மனமாகும்.
(( இங்கு சூரியனும் சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழப்பட்டது.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் குரைத்து ஊளையிடும்போது
(சங்கொலிபோன்று தோற்றுமென கூறப்பட்டது --தவறென்றால் மன்னிக்கவும்)
அப்படிப்பட்ட ஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விட்டு விலகி ஓடியா போகும்? (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை மறைக்கும் மாயைஇருளை நாம் முயன்றும் நீக்க முடியுமா என கொள்க

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்


1. விளக்கில் தங்கியிருக்கும் நெய் எரிந்து முடிய திரியில் எண்ணெய்க்கான
தாகமுற்ற நிலைபோலவும் (அச்சமயம் எரிந்துகருகும் இருள் கவ்வும்)
2. வெந்தணலில் எரிகின்ற ( தீ உண்ணும்) சந்தணக் கட்டையானது வரும்
வீழ்புனல் (மழை) பட்ட வுடன் கரியாகிப்போகும் , அதுபோன்றும்---
கருமையானது உள்ளம். (சாந்த ரூப உள்ளம் -- மீண்டும் இகழ்வுக்காய்
புகழப்பட்டது)

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ


உடலில் இளரத்தம் உள்ளபோது குறுகுறுப்பை துடிப்பை ஏற்படுத்தும் மனமானது
கடலலைபோல் சீறியெழுந்தாலும்.

உண்மையில் தாமரையின் இலை பொய்கையில் படிந்து கிடந்து ஒன்றாக வாழ்ந்தும்,
பொய்கையின் நீர் துள்ளி ஏறினால் இலை தள்ளி விழுத்திவிடும். அது போன்று
அன்பு கொண்ட (அன்பற்ற) உள்ளங்கள் வாழும் இந்த உலகானது ஒன்றும்
அதிசயமில்லை

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின் இன்பம்!


அப்படிப்பட்ட உள்ளங்கள் கோபமுற்றபோது தீபோலும் நிறங்கொண்டு சிவந்து
முளைக்கும் தளிர்களாகவும் ஏற்கனவே காணும் புண்ணில் அரசன் கைகொண்ட வாள்
பதம்பார்க்கும் போது (வெட்டும்போது) ஏற்படும் வேதனையைஉண்டாக்குவதாலும் -
(இகழ்வுக்காக ’தந்த சுகம் என்னருமை’ என்றேன்) இந்த உலகம் எவ்வளவு இன்பமாக
உள்ளது! (பெரும் நரகம் என்று பொருள் கொள்க)

-கிரிகாசன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 28 Nov 2011 - 17:09

ஐயா,

முதலில் கவியைப் படித்தேன், படிக்க நன்றாக அருமையாக இருந்தது. பொருள் புரிவதில் மிகச் சிரமமாய் இருந்தது.

இப்பொழுது தாங்கள் இட்ட விளக்கம் படித்து, நன்றாக விளங்கியது, அருமையான விளக்கத்துடன் கூடிய கவி ஐயா,

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 28 Nov 2011 - 17:23

பிஜிராமன் wrote:ஐயா,

முதலில் கவியைப் படித்தேன், படிக்க நன்றாக அருமையாக இருந்தது. பொருள் புரிவதில் மிகச் சிரமமாய் இருந்தது.

இப்பொழுது தாங்கள் இட்ட விளக்கம் படித்து, நன்றாக விளங்கியது, அருமையான விளக்கத்துடன் கூடிய கவி ஐயா,

நன்றிகள்

மனம் மகிழ தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள்! என்றும் அன்புடன்
கிரிகாசன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 28 Nov 2011 - 17:25

உங்கள் விளக்கம் படித்ததும் என் கலக்கம் தீர்ந்தது,
நன்றி கிரி. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 28 Nov 2011 - 17:45

உமா wrote:உங்கள் விளக்கம் படித்ததும் என் கலக்கம் தீர்ந்தது,
நன்றி கிரி. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110

நிச்சயமாக இதற்கு விளக்கம் வேண்டும். புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மறைபொருளில் வேண்டுமென்றே எழுதப்பட்டது புரியாமல் பின் புரிந்து கொள்வதில் ஒரு சுவை இருப்பதாக எண்ணினேன்
நன்றிகள் தங்கள் பாராட்டுக்கு!
-கிரிகாசன்

கனி இலையில் மறையு மொரு
தனி நிலவு முகில் மறையும்
, இனிகவிதை பொருள் மறையும்
இவை அறிய மகிழ்வுஅன்றோ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 28 Nov 2011 - 17:48

kirikasan wrote:
உமா wrote:உங்கள் விளக்கம் படித்ததும் என் கலக்கம் தீர்ந்தது,
நன்றி கிரி. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110

நிச்சயமாக இதற்கு விளக்கம் வேண்டும். புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மறைபொருளில் வேண்டுமென்றே எழுதப்பட்டது புரியாமல் பின் புரிந்து கொள்வதில் ஒரு சுவை இருப்பதாக எண்ணினேன்
நன்றிகள் தங்கள் பாராட்டுக்கு!
-கிரிகாசன்

கனி இலையில் மறையு மொரு
தனி நிலவு முகில் மறையும்
, இனிகவிதை பொருள் மறையும்
இவை அறிய மகிழ்வுஅன்றோ

நீங்கள் வித்யாசமானவர் மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 28 Nov 2011 - 17:50

kirikasan wrote:மனதின் எண்ணங்களைப் போல் இந்தக்கவிதையையும் புரிந்துகொள்ள
முடியவில்லையா

இந்தக் கவிக்கான சிறு குறிப்புகள்:


செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ


நிலவும் சூரியனும் (முறையே சூடும் குளிருக்கும் உதாரணமானவை) ஒன்றுசேரும் நேரம் சூரியகிரகணமாகும் அவ்வேளையில் காணும் தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது எமது மனமாகும்.
(( இங்கு சூரியனும் சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழப்பட்டது.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் குரைத்து ஊளையிடும்போது
(சங்கொலிபோன்று தோற்றுமென கூறப்பட்டது --தவறென்றால் மன்னிக்கவும்)
அப்படிப்பட்ட ஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விட்டு விலகி ஓடியா போகும்? (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை மறைக்கும் மாயைஇருளை நாம் முயன்றும் நீக்க முடியுமா என கொள்க


-கிரிகாசன்
கவிதையை விளக்கமாக கொடுத்தமைக்கு நன்றிகள்.. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 224747944 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 224747944



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக