புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
4 Posts - 3%
prajai
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
1 Post - 1%
bala_t
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
293 Posts - 42%
heezulia
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
6 Posts - 1%
prajai
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_m10"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!


   
   
abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Tue Nov 15, 2011 1:33 am

http://abuwasmeeonline.blogspot.com

ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் ஒரு நடைமுறை ஹாஜி அடைமொழி / பட்டம். அதுவரை சாதாரண அபூபக்கராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி அபூக்கராகி விடுவார். அதன்பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச் சேர்த்துப் போடுகின்றார்கள். ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும் இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம். நபி (ஸல்) அவர்கள், அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் மதீனாவிலிருந்து மக்கா வந்து ஹஜ் என்னும் கடமையை முடித்துவிட்டு மீண்டும் மதீனா திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோ தங்களின் பெயர்களுக்கு முன்னாள் “ஹாஜி” என்றோ அல்லது “ஹாஜிமா” என்றோ அடைமொழி இட்டுக்கொள்ளவில்லை. நபி( ஸல்) அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூட தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி பெயரை சூட்டிக் கொள்ளவில்லை. ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.




ஆனால் சில அறிவீலிகள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் ஹாஜி என்று போட மறந்துவிட்டார்களா? அல்லது அல்லாஹ் இவர்களுக்கு மட்டும் தனியாக வஹீ அனுப்பி இவ்வாறு போட்டுக்கொளுமாறு கூறினானா? இவர்கள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக்கொள்கிறார்கள் என்றால் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து இருக்கின்றது நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளை பாழ்படுத்திவிடும்.





அதுமட்டுமல்லாமல் சிலர் தாங்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு "ஹாஜி ஆன் சன்ஸ்" என்றும், "ஹாஜி மளிகைக்கடை" என்றும் பெயர் வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம். அல்லாஹ் முஸ்லிம்களின் மீது விதித்த ஹஜ்ஜைத் தவிர மற்ற கடமைகளான ஈமான் கொள்வது, தொழுவது, ஜக்காத் கொடுப்பது, நோன்பு நோற்பது போன்ற கடமைகளை நிறைவேற்றும் எவரும் இதுபோன்று செய்வதில்லை.


ஈமானி – (ஈமான் கொண்டவர்) என்றும், முஸல்லி – (தொழுகையாளி) என்றும், ஸோம்வி – (நோன்பாளி) என்றும், ஜக்காத்தி – (ஜக்காத் கொடுப்பவர்) என்றும் தங்களின் பெயருக்கு முன் போடுவதில்லை. ஆனால் ஹஜ் செய்தவர் மட்டும் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு தங்களின் அமலை விளம்பரமாக்குகின்றனர்.

குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் இதுபோன்று தங்களின் பெயருக்கு முன் ஹாஜி என்று சூட்டிக் கொள்கின்றனர். இது முற்றிலும் விளம்பரத்தின் நோக்கமே!







விளம்பரத்தால் வீணாகும் வணக்கங்கள்:





இதுபோன்று வணக்கத்தை விளம்பரமாக்குபவர்களையும், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக அமல் செய்பவர்களையும் மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.










அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38)










நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்2:264)













அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் நாடியதை நாம் நாடியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து, அருளுக்கு அப்பாற்பட்டு அதில் கருகுவார்கள். (அல்குர்ஆன் 17:18)












நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், ”யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 6499








அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர்தான் (ஷஹீத்) மறுமையில் முதன் முத­ல் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.










அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்கு பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப் படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.










அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­), நூல் : முஸ்­லிம் 3537









மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் முகஸ்துதிக்காக (விளம்பரத்திற்காக) ஒரு அமலைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அதற்குக் கூ­லி நரகம் தான் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.










அல்லாஹ்வுக்காக செய்கின்ற வணக்கங்களில் மிக அதிகமாக முகஸ்துதிக்கு உள்ளாகும் வணக்கம் ஹஜ்தான். ஹஜ்ஜுக்குச் செல்லும் போது வீடுவீடாகச் சென்று, நான் ஹஜ் செய்யப் போகிறேன் துஆ செய்யுங்கள் என்று கூறுவது, விருந்து வைபவங்கள் நடத்தி ஹஜ்ஜை விளம்பரம் செய்வது, ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் கழுத்துகளில் மாலைகள், அது போல் வழியனுப்பு மற்றும் வரவேற்பு விழாக்கள், இதற்கென்று நியமிக்கப்படும் மேடைகளில் பொன்னாடைகள் போர்த்துதல். இவ்விழாக்களில் ஹாஜிகளின் புகழ்பாடுதல் போன்ற காரியங்கள் நிச்சயமாக ரியா (மறைமுக இணைவைப்பு) ஆகும்.










நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ரியா (மறைமுக இணைவைப்பு)என்று பதிலளித்தார்கள். நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூ­லி கிடைக்குமா என்று பாருங்கள்என்று அடியார்களின் அமல்களுக்குக் கூ­லி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ர­லி), நூல்: அஹ்மத் 22528










நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளைப் பாழ்ப்படுத்தி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

submit_url="http://abuwasmeeonline.blogspot.com/2011/11/blog-post_13.html"





submit_url ="http://abuwasmeeonline.blogspot.com/2011/11/blog-post_13.html"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக