புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
13 Posts - 25%
prajai
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 4%
Baarushree
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 4%
Rutu
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 2%
சிவா
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 2%
viyasan
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 8%
Rutu
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 5:04 pm

உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து

அருமை நண்பர்களே,
புதிய முயற்சிகளில் ஈடுபடுவோரை இந்த உலகம் பழிக்கத்தான் செய்கிறது!.. பலர் திறமைசாலிகளாய் இருந்தும், ஊர் என்ன சொல்லுமோ என்கின்ற அச்சத்தால், அல்லது மற்றவர் ஒப்புக்கொள்வார்களா என்னும் தேவையற்ற யோசனைகளால், காட்டுக்குள் காயும் நிலா போல் பயனற்றுப்போகின்றனர்.

' நாலு பேர் என்ன சொல்வார்களோ?'

' ஊர் உலகம் ஏற்றுக்கொள்ளுமா?'

என்பன போன்ற முடக்கு வாதங்களால் ஒடுங்கிப்போனவர்களுக்காக இந்தக் கவிதை.

தன்னம்பிக்கை கொள்ளச்செய்யும் அற்புதத்தை நிகழ்த்தும் இக்கவிதையை உஙகள் சிந்தனைக்கு வைக்கிறேன்.

( கவிப்பேரரசு வைரமுத்துவின் 'தமிழுக்கு நிறம் உண்டு' என்னும் தொகுப்பிலிருந்து )

உலகம்
***********

உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

***********
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது

எளிய தோற்றமே இயல்பென ருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் டைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் பத்து என்றது

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக்காரன் தள்ளி நில் என்றது

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்து விட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது

***********
பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது

சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது

கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை ருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது

மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேண்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது

***********
அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி ருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்.[/size][/b]


***************************************
http://rsuresh.weebly.com/vairamuthu.html



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 6:16 pm


  • வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

  • சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)

    • முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
    • ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
    • கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
    • சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
    • கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
    • "தென்மேற்கு பருவக்காற்று" (பாடல்:கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..)

  • -Wiki



    நல்லதோர் வீணைசெய்தே:
    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி; - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி! - பாரதி

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக