புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_m10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_m10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_m10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_m10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_m10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_m10ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Thu Jul 21, 2011 8:28 am

“அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட அணு உலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு குஜராத்தில் உள்ள பள்ளிகளில் கணினிகள் இயக்கப்படும் நாளை எதிர்பார்க்கிறேன்” என்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளதை இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பின் அவசியத்தையும் பலனையும் பற்றிய மதிப்பீடாக நாம் நினைத்தோமானால் அது பரிதாபத்திற்குரிய பாமரத்தனமாகும்.

ஏனெனில் இந்த வார்த்தைகளை மட்டுமே ஹில்லாரி சொல்லிவிட்டுப் போய்விடவில்லை, மேலும் பேசுகிறார்: “அணு சக்தி ஒத்துழைப்பின் பலனை இரு நாடுகளும் அனுபவிக்க வேண்டுமெனில் அதன் தொடர்பாக இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டாக வேண்டும்” என்று கூறியுள்ளதையும் கருத்தில் கொண்டு, அவர் கூறிய பின்வரும் வார்த்தைகளையும் படித்தால் முழுமையாக புரிந்துகொள்ளலாம்: “இதன் பலன் அதிகம் (த ஸ்டேக்ஸ் ஆர் ஹை). எனவே இந்த (இந்திய அரசுடனான) பேச்சுவார்த்தை உறுதியான, ஒருங்கிணைந்த முடிவுகளை நோக்கிச் செல்வது அவசியமாகும். அப்போதுதான் அது உண்மையான பலன்களை அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

இவை யாவும் ஹில்லாரி கிளிண்டன் வெளியிலும், இந்திய அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தொடகத்திலும் கூறியவையே. இவை யாவற்றின் மூலக் கூறு என்னவெனில், அமெரிக்க அணு உலைகளை இந்தியாவிற்கு விற்க தடையாக உள்ள சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்பதே. இந்தியாவின் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அணு உலை விபத்து இழப்பு காப்பீடு சட்டம் அமெரிக்க அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் நெருடலாக உள்ளது. அதனை நீக்க வேண்டும் என்கிறார் ஹில்லாரி. அதன் மூலம் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் பலனை இரு தரப்பும் அனுபவிக்கலாமாம். அது தொடர்பான பேச்சுவார்த்தைதான் இன்று காலை முதல் மத்திய அரசுடன் ஹில்லாரி தலைமையிலான அமெரிக்க அரசுக் குழு நடத்தி வருகிறது.

“The Stakes are high” என்று அவர் கூறுவது, இந்தியாவிடம் இருந்து அமெரிக்க அணு உலைத் தயாரிப்பு நிறுவனங்களான ஜெனரல் எலக்டிரிக், வெஸ்டிங் ஹவுஸ் ஆகியன எதிர்ப்பாக்கும் அணு உலைகளின் விற்பனை மதிப்பு 150 பில்லியன் டாலர்கள் (ரூ.6,75,000 கோடி). இதைத்தான் ஸ்டேக்ஸ் ஆர் ஹை என்று கூறுகிறார் ஹில்லாரி. அமெரிக்காவின் நொந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த இதைவிட வேறு எந்த ‘ஒப்பந்த’த்தால் முடியும்?

எனவே, ஹில்லாரியின் பயணம் என்பது, நமது நாட்டின் ஊடகங்களில் கூறப்படுவதுபோல், அது ஒன்றும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கான தந்திராபோய திட்டம் வகுக்கும் பேச்சுவார்த்தை நடத்த அல்ல. மாறாக, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. 123 ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஒரு அணு உலைக்கான ஒப்பந்தம் கூட தரப்படவில்லையே! என்ன உறவு இது? என்ற கசந்த மன நிலையில் மேற்கொள்ளப்பட்ட பயணம் இது.

அணு சக்தி ஒத்துழைப்புப் பற்றிப் பேச அந்நாட்டு அயலுறவு அமைச்சரா வருவார்? என்ற கேள்வி எழலாம்.
FILE
இதற்கு முன்னர் இருந்து ஜார்ஜ் புஷ் ஆட்சியின் போது அயலுறவு அமைச்சராக இருந்த கோண்டலிசா ரைஸ் மேற்கொண்ட இறுதி இந்தியப் பயணம் பற்றி அவரே கூறிய கருத்து “இது சுத்தமான வணிகப் பயணம்”.

அவர்களைப் பொருத்த வரை அயலுறவு என்பதும் பிசினஸ் உறவுதான். எனவே இப்போது வந்துள்ள இந்தப் பயணத்திலும் வணிக நலனே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணம், ஆனால் இடையில் மும்பையில் தாக்குதல் நடந்துவிட்டதால், பயங்கரவாதம் பற்றியும் பேசுகிறார்கள் அவ்வளவே. இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கி வருகின்றன என்று அந்நாட்டு இராஜ தந்திரிகள் கூறுவதெல்லாம், இந்தியாவின் தேவைகளுக்கு மிக அதிக அளவிற்கு அமெரிக்காவி்ன் தயாரிப்புகளை வாங்கிக்கொள்வது என்பதுதான் பொருள். அதுமட்டுமின்றி, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிடுவது.

2005ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், ஜார்ஜ் புஷ்ஷிற்கும் இடையே இந்திய - அமெரிக்க தந்திரோபாய கூட்டாண்மை ஒப்பந்தம் (India - US Strategic Partnership Agreement) கையெழுத்தானது. அதன் ஒரு அங்கமாகவே 2006ஆம் ஆண்டில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் ஒப்பந்தத்தின் நோக்கம், இந்தியா தனது அயலுறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அமெரிக்காவின் நலனிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே. அமெரிக்காவின் நலனிற்கும் அயலுறவுக் கொள்கைக்கும் எதிரான எந்த நாட்டுடனும் இந்தியா உறவு கொண்டிருப்பதை அமெரிக்கா ஏற்காது.

அதனால்தான் இதுநாள்வரை ஈராக்கிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டிருந்த இந்தியா, அதற்கான பணத்தை ஆசிய கிளியரிங் ஹவுஸ் என்பதன் வழியாக செலுத்திக்கொண்டிருந்ததை நிறுத்தியது. இந்தியப் பணத்தில்தான் பட்டுவாடா செய்ய முடியும் என்று ஈரான் அரசுக்குத் தெரிவித்தது. விளைவு: இதற்கு மேல் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவிற்கு ஈரான் வந்துவிட்டது. ஆக அமெரிக்காவின் ‘எதிரி’ இந்தியாவின் எதிரியாகிவிட்டாரா? ஈரான் நாட்டுடன் இத்தனையாண்டுக் காலமாக கொண்டிருந்து உறவு இன்று இல்லாமல் ஆகிவிட்டது.

ஹில்லாரியின் பயணத் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம் உள்ளதையும் அயல் நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. அது பல வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் வால் - மார்ட் உள்ளிட்ட பெரும் கடைகளை நகரத்திற்கு நகரம் திறக்க இந்திய அரசு வழிவிட வேண்டும் என்பதாகும். உலகில் நகர மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றல்லவா இந்தியா? அதை அமெரிக்க வர்த்தக முதலைகள் குறிவைக்கின்றன. இதேபோல், நடுத்தர வருவாய் கொண்ட மக்களிடம் காப்பீடு வர்த்தகம் செய்யவும் அமெரிக்க நிறுவனங்கள் மிகவும் ‘ஆர்வம்’ கொண்டுள்ளன. அதற்கெல்லாம் எப்போது இடமளிக்கப் போகிறீர்கள் என்பதுதான் இன்று மத்திய அரசுடன் ஹில்லாரி நடத்தும் பேச்சுவார்த்தையாகும்.

அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் முதற்கட்ட பேச்சு, பிறகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அடுத்த கட்டப் பேச்சு, இறுதியாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு. அதில் உறுதி செய்யப்படும் விடயங்கள் என்னென்ன என்பதை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த அரசு கொண்டுவரும் ‘திருத்த’ங்களில் இருந்தும், அடுத்த சில மாதங்களில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளில் இருந்தும் தெரிந்துகொள்ளலாம். மற்றபடி இன்று நாள் முழுவதும் நடைபெறும் நிகோசியேஷன் பற்றியெல்லாம் முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு இந்திய ஜனநாயகத்தில் வாய்ப்பு எதுவும் இல்லை.

பேச்சுவார்த்தையின் முடிவில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘பயங்கரவாதத் தாக்குதலை முறியடிப்பதில் இரு நாடுகளும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இணைந்து பணியாற்றும்’ என்ற அறிவிப்பு விடுப்பார்கள். அது எல்லா ஊடகங்களிலும் பெரிதாக செய்தியாக்கப்படும்.

மற்றபடி... பள்ளிகளில் கணினியை இயக்க... அமெரிக்காவின் அணு உலைகளில் இருந்துதான் மின்சாரம் வர வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இப்போதும் இந்தியா முழுவதும் பெரும்பாலான வசதியான பள்ளிகளில் கணினிகள் - அமெரிக்காவின் எந்த வித உதவியுமின்றி இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
நன்றி:தமிழ் வெப்துனியா



இனியொரு விதி செய்வோம்
ஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Sஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Emptyஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Pஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Emptyஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Sஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Eஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Lஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Vஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  Aஹில்லாரி கிளிண்டனின் பிசினஸ் டிரிப்  M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக