புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 5%
Rutu
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
prajai
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Jenila
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_m10இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 4:14 pm

நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும்.

மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!






அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு என்னோட ரெண்டு நண்பர்களை உங்களுக்கு சின்னதா அறிமுகம் பண்றேன். அவங்கள அறிமுகம் செய்யிறதுக்கும், மேல நான் சொன்ன விஷயத்துக்கும் ஒரு முடிச்சி இருக்கு!! அதான்!

ரங்கன் - ராக்கி, இவங்க ரெண்டுபேரும் தாங்க அந்த ஃப்ரெண்ட்ஸ். எந்த மேட்டர்னாலும் ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது. கடைசில சண்டைல தான் முடியும். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியாம எங்க போனாலும் சேர்ந்தே போவாங்க. எனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஒன்னியும் கிடையாது. சொல்லப்போனா அவங்களுக்கு என்ன தெரியவே தெரியாது!! ஆனா நான் எப்ப ஃப்ரீயா ஆனாலும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு அங்கபோய் அவங்களுக்கு தெரியாம உட்கார்ந்துடுவேன்.

அவங்க பேசுறத கேக்க எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். பொழுது போறதே தெரியாது. நேத்து சாயந்திரமா ரொம்ப போர் அடிக்கவே, நம்ம ராக்கி - ரங்கனை பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அவங்க நம்ம ஊரு மெயின் பஜார் அம்மன் கோவில் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் பின்புறமா இருக்குற ஓப்பன் பார்ல ஒக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருந்தாங்க. இந்த மது வகைகள் வாசம் எல்லாம் எனக்கு பிடிக்காதுன்னாலும்(!) பேச்சு சுவாரஸ்யமா இருக்குமேன்னு அவங்க பக்கத்துல் போயி உட்கார்ந்தேன்.

அப்ப ரங்கன் சொன்னான், மாப்பி.. நாம நாள் தவறாம ஒரு குவாட்டராவது பிராந்தி சாப்ட்டா தாண்டா நம்ம அரசாங்கம் மக்களுக்கு எல்லாம் இலவசமா மாசம் 20 கிலோ அரிசி தரமுடியும் என்று! முதல் ரௌண்டு பாதில இருந்த நம்ம ராக்கிக்கு ஒண்ணுமே புரியல. "நீயும் இப்பத்தானடா ஆரம்பிச்ச அதுக்குள்ள ஏண்டா உளருரே?" ன்னு கேட்டான். நீ இப்படி கேப்பன்னு தெரிஞ்சிதான் முதல் ரவுண்டுலயே பேச்சை ஆரம்பித்தேன் என்றான ரங்கன். மாப்பி எதோ விவரமாத்தான் பேசப்போறான்னு புரிஞ்சிகிட்டு நம்ம ராக்கி, மீதி ரவுண்ட ஒரே இழுப்புல உள்ள தள்ளினான்.

ரங்கனும் அடுத்த ரவுண்ட ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே ஆரம்பித்தான் கலாட்சேபத்தை!

நம்ம அரசு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை பத்து ரூபாய் ஐம்பது காசுக்கு வாங்குகிறது. அதை வாங்குவதற்கான குடோன் மற்றும் நிர்வாகச் செலவு 50 காசு, அதை மில்லுக்கு கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் 50 காசு. ஆக மில்வரையிலும் ரூபாய் 11.50 ஆகிவிடும். அரவைக் கூலி ஒரு ரூபாய் ஐம்பது காசு, அதை திரும்ப அரசு குடோனுக்கு எடுத்துவர ஐம்பது காசு ஆக 13.50 ஆகிறது.

இன்னுமொரு அதிர்ச்சி... ஒரு கிலோ நெல்லை அரைத்தால் தவிடு, நொய் எல்லாம் போக அரை கிலோ அரிசி தான் தேறும்! அப்படியானால் ரூபாய் 13.50 என்பது அரைகிலோ அரிசிக்கான விலை மட்டுமே.

அப்ப ஒரு கிலோ அரிசியின் விலை 27 ரூபாய் அடக்கம் ஆகிவிடும். அதை திரும்ப ரீடெல் (ரேஷன்) கடைகளுக்கு கொண்டுவர, அந்த அலுவலர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசியின் அடக்கவிலை 30 ரூபாய் ஆகிவிடும். ஆக தமிழ் நாட்டில் ஒரு குடும்ப அட்டைகு 600 ரூபாய் வரையிலும் மாதாமாதம் இலவசம் (அரிசிக்காக மட்டும்) தரப்படுகின்றது.

இப்பத்தான் நம்ம மேட்டருக்கே வருகிறேன். ஒரு குவாட்டர் 70 ரூபாய் என்றால் அதில் கிட்டத்தட்ட 30 ரூபாய் வரையிலும் அரசுக்கு வரியாகக் கிடைக்கின்றது. அதில் நிர்வாகச் செலவு போக 20 ரூபாய் நிகரமாகக் கிடைத்தால் கூட ஒரு கார்டு அரிசிக்கான விலையை ஈடு செய்ய 30 குவார்ட்டர் விற்க வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தலைவன் ஒரு மாதம் முழுவதும் ஒரு நாள் தவறாமல் ஒரு குவார்ட்டர் அடித்தால் தான் அவன் குடும்பம் இலவசமாக வாங்கி சாப்பிடும் அரிசி ஜீரணமாகும்!!

அதாவது தமிழ்நாட்டுல 1.85 கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. அத்தனை கார்டுக்கும் இலவச அரிசி ஒதுக்கப்படுகின்றது. (வாங்கினாலும் வாங்காவிட்டாலும்). ஆக 1.85 கோடி பேர் நாள் தவறாமல் ஒரு குவாட்டர் அடிக்க வேண்டும். எல்லோராலும் தொடர்ந்து எல்லா நாளும் குடிக்க முடியாதுங்கறதுனால, ஒவ்வொருத்தரும் மாதத்துக்கு 15 நாள்ங்கிற வீதம் 3.7 கோடி தமிழக தமிழர்கள் ஒரு குவாட்டர் பிராந்தி சாப்பிட்டால் கணக்கு டேலி ஆகிவிடும்! மக்களுக்கும் இலவசம் தந்த மாதிரி ஆகிவிடும், அரசாங்கத்திற்கும் உதவின மாதிரி ஆகிவிடும்!

ஒரு மனிதன் சுவாசத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொண்டு, அவனுக்குத் தேவையான் ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்கு 20 மரங்கள் வேண்டுமாம். அதே மாதிரிதான் நாமும்! தினமும் ஒரு குவாட்டருக்கு மேல அடிப்பதால இனிமே நம்ம பொண்டாட்டியெல்லாம் குடிச்சிட்டு வீட்ட கவனிக்காம இருக்கோம்னு நாக்குல பல்ல போட்டு பேசிடப்பூடாது என்று நம்ம ராக்கி ஒருவித மந்தகாசப் புன்னகையுடன் கூறினான்.

இவர்கள் பேச்சை மனதில் அசைபோட்டுக் கொண்டே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு படுக்கும் போது, தங்கமணியிடம், ராக்கி - ரங்கன் சம்பாஷணையைக் கூறி, அரசாங்கம் செய்வது சரியா? தவறா? என்ற எனது சந்தேகத்தைக் கேட்டேன். பல சமயங்களில் நம்மைவிட அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை! துணிகளையெல்லாம் மடித்து வைத்துக் கொண்டே என் மனைவியும் பேச ஆரம்பித்தார்.

ஏங்க, அஞ்சு வருஷம் முன்னாடி, நம்ம வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்யணும்னா, ஒரு தொழிலாளிக்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய் வரையிலும் கூலி தருவோம். ஆனா இன்னக்கி என்னா தற்றோம்? 250 ரூபாய்க்கு குறைவாக யாருமே வேலைக்கு வருவதில்லை. அதுவும் முன்பு செய்ததில் பாதி வேலை தான் செய்கிறார்கள். அதனால் அடுத்த நாளும் செய்யச் சொல்லி மொத்தமாக அதே வேலைக்கு 500 ரூபாய் செலவாகிறது.

ஒரு நாளைக்கு 250 சம்பாதிக்கும் அந்த தொழிலாளியின் அன்றைய செலவு என்ன? 4 நபர்கள் கொண்ட அவன் குடும்பதுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை அரசாங்கம் இலவசமாகவே தந்துவிடுகிறது. அன்றைக்கு நல்லமுறையில் குழம்பு வைக்க 25 ரூபாயும் காய்கறி 25 ரூபாயும் அதிகபட்சமாக செலவாகிறது. மற்ற திண்பண்டங்கள் இத்தியாதிகளுக்காக 50 ரூபாய் என்றால் 100 ரூபாயில் அன்றைய சாப்பாட்டுப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடுகின்றது. மிச்சம் 150 ரூபாய்.

மாதம் 20 நாட்கள் மட்டுமே அவன் வேலை செய்வதாக வைத்துக் கொண்டாலும் மாதம் 3000 ரூபாய் அவனுக்கு சேமிப்பாகிறது. வருடத்திற்கு 36000 ரூபாய். அதில் இரு குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள், துணிமணிகள் எல்லாம் முடித்துக் கொள்ளலாம். வருடத்திற்கு 120 நாட்கள் சும்மாயிருக்கின்றானே, அந்த நாட்களில் ஒரு 50 நாட்கள் வேலை செய்தால் கூட தீபாவளி, பண்டிகைகள், பொழுது போக்குகள் அனைத்தையும் சீராகக் கொண்டாடி விடலாம்.

250 ரூபாய் கூலி வாங்கும் ஒரு தொழிலாளி கூட இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, மனைவியை குடும்பத் தலைவியாக மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அதே தினக்கூலி தொழிலாளி இந்த ராக்கி - ரங்கன் போல் குடித்து விட்டு வெட்டி நியாயங்களும், வியாக்கியானங்களும் பேசிக்கொண்டிருக்காமல், வேறு கெட்ட பழக்கங்கள் இல்லாமலும் இருந்து, தன் முன்னேற்றத்தில் கருத்தாக இருந்தாலே போதும், ஒரு வருடத்திலேயே, பயிற்சி பெற்ற தனித்திறமை தொழிலாளியாக, அதாவது ஒரு டிரைவர், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கம்பி கட்டுதல், வெல்டிங்... இப்படியாக மாறி விட நிச்சயமான வாய்ப்பு இருக்கிறது.

அப்படி ஆகும் பட்சத்தில் அவனுடைய ஒரு நாள் சம்பளமே 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் என்றாகிறது!

ஒரு ஆவேசம் வந்தவராய் இத்தனையும் பேசி விட்டு கடகடவென்று தண்ணீரைக் குடித்த தங்கமணியை ஒருவித ஆயாசையுடன் பார்த்தேன். எனக்கு அந்த ராக்கி - ரங்கன் சொல்றதும் சரின்னு படுது, தங்கமணி சொல்றதும் சரிதானோன்னு யோசிக்க வைக்குது, என்ன ஒரு மனது எனக்கு? புதுசா நாமளும் ஏதாவது யோசிக்கணுமோ?



கழுகு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 5:50 pm

இந்தப் பதிவை ஏற்கனவே வாசித்ததாக நினைவு.. இருப்பினும் அருமையான அலசல்... பகிர்வுக்கு நன்றி தாமு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 30, 2011 6:12 pm

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196 இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 677196



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 7:26 pm

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 8:38 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Jul 01, 2011 12:22 am

2007 இல் கொத்தனார் கூலி 160 ருபை ஆனால் இன்று 500 ருபை ,3 ஆண்டுகளில் 3 மடங்கு கூலி உயர்வு ஏற்பட்டுள்ளது .
எந்த பொருள் 3 மடங்கு உயர்ந்துள்ளது(3 ஆண்டுகளில்)???????????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக