புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
3 Posts - 4%
Baarushree
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
2 Posts - 3%
viyasan
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
2 Posts - 3%
prajai
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Rutu
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
1 Post - 1%
சிவா
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
1 Post - 1%
manikavi
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
2 Posts - 6%
viyasan
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
1 Post - 3%
Rutu
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
1 Post - 3%
manikavi
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_m10“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி?


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sun Sep 13, 2009 5:21 am

“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? 001aum2js2-150x150
இந்து மதத்தில் சொல்லப்படும் “ஓம்” மந்திரம் உலகில் தோன்றிய முதல் ஒலியாகக்
கருதப்படுகிறது. வேதங்களும், அதைப் பின்பற்றும் உபந்யாசர்கள், ரிஷிகள்,
ஞானிகள், யோகிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அது
கடவுளின் ஒலி வடிவம் என்றும் பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது
உண்மைதானா? உண்மை என்றால் எத்தனை பேருக்கு இதை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக்
கூடிய மனோபாவம் உள்ளது? இன்றைய காலத்தில் கல்வி கற்று தர்க்க அறிவு
வளர்ந்துவிட்டதால் எதையும் நம்பாத சூழல் வளர்ந்துள்ளது. இந்தச் சூழல் மூட
நம்பிக்கைகளை ஒழிக்க முற்பட்டாலும் பலர் உண்மையையும் சேர்த்தே
ஒழிக்கிறார்கள். “ஓம்” மந்திரத்தின் பலன் பற்றி பல இடங்களில்
பேசப்பட்டாலும், அதன் தோற்றம் பற்றிய கேள்வி எனது நட்பு வட்டாரத்தில்
எழுந்ததனால் விளைந்த கட்டுரை இது.
“ஓம்” தான் முதல் ஒலியா? அதை எப்படி நம்புவது?
நம்முடைய தமிழ்த் தாத்தா “வள்ளுவர்” நமக்காக திருக்குறளைக் கொடுத்து
இருக்கிறார். அது உலகம் முழுவதுக்கும் பொதுவான விதிகளைக் கொடுத்துள்ளது
என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் முதல் குறளில் இருந்தே என் பயணத்தைத்
துவக்குகிறேன்.
முதல் குறள்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”

பொருள்:

உலகில் வழங்கி வரும் எல்லா எழுத்துகளும் “அ” என்ற எழுத்தை முதலாக உடையன. அது போல உலகம் கடவுளை முதன்மையாக உடையது.
உங்களில் பலருக்கு இது ஏதோ பரிட்சைக்குப் படித்து எழுதுவது என்பது
போலத்தான் இருக்கும். இங்கு உள்ள இரண்டு வரிகளும் உங்களுக்கு மிக்க
பரிட்சையமான ஒன்றே. அதற்கு உண்டான விளக்கமும் நீங்கள் அறிந்ததே. ஆனால்
எத்தனைபேர் இதை ஆழமாக உணர்ந்தீர்கள்?
1. அதெப்படி அனைத்து எழுத்துகளுக்கும் “அ” முதல் ஆகும்?
2. தமிழில்தான் முதல் எழுத்து “அ”. உலகில் உள்ள மற்ற எல்லா
மொழிகளுக்கும் முதல் எழுத்து “அ” கிடையாது. பின்னர் எப்படி இந்தக் கூற்று
உலகம் முழுவதுமாக (2000 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து இன்றுவரை)
ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அதற்கான விளக்கத்தை என்னால் முடிந்தவரை உங்களுக்குப் புரியவைக்கிறேன்.

முதலில் எழுத்து என்பது என்ன? மனிதன், தான் உச்சரிக்கும்“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Aum_02-150x150
ஒலியின் குறியீடுதான் எழுத்து. அதாவது “க” என்ற உங்கள் உச்சரிப்பைக்
(ஒலியை) குறிக்க பயன்படுத்துவதே “க” என்ற எழுத்து. அப்படியானால் வள்ளுவர்
சொல்ல வருவது உலகில் உள்ள எல்லா ஒலிக்கும் “அ” என்ற ஒலியே ஆதாரம். (மூலம்;
அதாவது source, origin). இது எப்படி உண்மை? மனிதன் எழுப்பும் ஒலியை
விடுங்கள், நாம் இன்னும் சற்று ஆழமாகச் செல்வோம். நாம் உயிர் வாழ ஆதாரத்
தேவையான காற்றை எடுத்துக் கொள்வோம். காற்று மலைகளின் மேல் மோதி எழுப்பும்
ஓசை என்னவாக இருக்கும்? சற்று யோசித்தால் உங்கள் அனைவராலும் அதை ஊகிக்க
முடியும். முதலில் “அ”, பின்னர் “உ” இவை இரண்டும் கலந்த கலவையாக
இருக்கும். முதலில் “அ” தான், பின்னர் தான் “உ”. ( காற்றின் ஒலி “உஸ்ஸ்”
என்று சொல்ல முனையாதீர்கள். அடைத்து வைத்த காற்று வெளிவந்தால்தான் அவ்வாறு
ஒலிக்கும் ). “அ” என்ற ஒலியை எழுப்ப முயலும்போது உதடுகளைக் குறுக்கினால்
வருவது “உ”. (உச்சரித்து பாருங்கள், உண்மை புரியும்). காற்று மலைகளின்
மேல் மோதும்போது “அ”, அது பின்னர் குறுகிய பாதையிலோ அல்லது கீழிறங்கினாலோ
“உ” என்ற ஒலி பிறக்கும்.
(காற்றின் ஒலியை ஊகிக்க முடியாதவர்களுக்கு, ஒரு செயல்முறை விளக்கம்:
ஒரு காலி சொம்பு அல்லது டம்ளர் அல்லது சிறிய பாட்டிலை எடுத்துக்
கொள்ளவும். அதை, உங்கள் காதை முழுமையாக மூடியவாறு வைத்து அப்போது வரும்
சத்தத்தைக் கவனியுங்கள். எழும் ஒலி “உ”-ஆக இருக்கும். இப்போது அந்தப்
பொருளை சிறிது வெளியே எடுத்தும் மீண்டும் காதின் அருகே கொண்டு சென்றும்
பாருங்கள். மீண்டும் மீண்டும் இதையே செய்து பாருங்கள். “அ” மற்றும் “உ”
ஒலிகளை நீங்கள் கேட்கலாம். உங்கள் காதருகே கொண்டு செல்லும்போது காற்று
குறுகிய பாதைக்குள் செல்வதால் “உ”, வெளியே எடுக்கும்போது விரிந்த பாதையில்
செல்வதால் “அ”. இயல்பான காற்று விரிந்த பாதையில்தான் இருக்கிறது. ஆகவே
முதல் ஒலி “அ” தான் என்பது உறுதி.)
இதையே வள்ளுவர் எல்லா எழுத்துகளுக்கும் (ஒலிகளுக்கும்) முதல் “அ”
என்றார். இத்தனை ஆழமான கருத்தை சொல்ல வள்ளுவர் எடுத்துக் கொண்டது மூன்று
வார்த்தைகள் மட்டுமே. இது இம்மையைப் ( இவ்வுலகம்) பற்றிய உண்மை. மறுமையைப்
(மறுவுலகம்) பற்றிய உண்மையைக் கூற மீதி நான்கு வார்த்தைகளை எடுத்துக்
கொண்டார். இந்த அளவிற்கு நுண்மையாக வள்ளுவர் ஆராய்ந்து இருப்பதால்தான்,
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள். “

என்றார் ஒளவையார்.
இவர் மட்டுமல்ல, உலகமே இன்றளவும் வள்ளுவன் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்கிறது. திருக்குறள் முக்காலத்துக்கும் சொல்லப்பட்ட உண்மை.
(அறிவியல் ஆதாரம்: பூமியில் முதலில் இருந்தது காற்றும் பாறையும் (மலை)
மட்டுமே. நிலம் என்ற ஒன்று இருந்தால் ஆகாயம் என்பது “default”. காற்று
குளிர்ந்தால் நீர். கல்லும் கல்லும் மோதினால் நெருப்பு. (முதலில்
நெருப்பில் இருந்து பிறந்த கல்தான் பூமி என்பது தனிக் கதை). நீரில்
இருந்து தான் உயிர்கள்.)
“அ” மற்றும் “உ” என்ற இரண்டு ஆதார ஒலிகளைப் புரிந்துகொண்ட நாம் அடுத்து செல்லவிருப்பது “ம்” ஒலிக்கான ஆராய்ச்சி.
இந்தப் பிரபஞ்சமே அதிர்வுகளால் ஆனது என்பது அறிவியல் கூற்று. இயக்கம்
அல்லது வடிவம் என்ற ஒரு இருந்தாலே அதிர்வு என்பது நிச்சயம். இந்த அதிர்வை
(ஒலியை) எவ்வாறு குறியீடு செய்ய முடியும்? மனிதனால் கேட்க கூடிய ஒலியளவில்
இருந்தே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். ஒரு மெல்லிய நீண்ட கம்பியை எடுத்துக்
கொள்வோம். அதன் இரு முனைகளையும் நீட்டிப் பிடித்து அதன் நடுவில் மெதுவாகத்
தட்டி அதிர்வை ஏற்படுத்தினால் எழும் ஒலியில் “ம்” என்ற ஒலி பிரதான பங்கு
வகிப்பதை உணர முடியும். ஆக அதிர்வுகளின் ஒலி வடிவம் “ம்”. (தனியே அமர்ந்து
“ம்” என உங்களால் முடிந்தவரை சத்தமாக நீண்டநேரத்திற்கு (அடிவயிற்றில்
இருந்து ) ஒலித்துப் (சொல்லி) பாருங்கள். உடலின் எந்த ஒரு பாகத்தின்
அசைவும் இல்லாமல் (ஏன், நாக்கை கூட அசைக்கத் தேவை இல்லை) நீங்கள் உங்கள்
உடல் முழுவதும் ஓர் அதிர்வை உணரலாம்.)
“ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி? Tamil_om-150x150ஒலிகளுக்கு
எல்லாம் முதலாவதான “அ”, பின்னர் “உ”, பின் உடல் முழுவதும் அதிர்வை
ஏற்படுத்தும் “ம்” இவை மூன்றும் சேர்ந்தால் “அஉம்” . இதுவே பின்னர் மருவி
” ஓம்” ஆனது. (”அ”, “உ” இரண்டையும் சேர்த்துச் சொன்னாலே அது “ஒ” போல்தான்
இருக்கும்.) இதைத்தான் உயிர்களுக்கு ஆதார ஒலி “ஓம்” என்கிறது இந்து மதம்.
(அட! ஓர் ஆச்சர்யம்! ….. ஆன்மிகம் என்பது உடல், உயிர் சக்தியை
மேம்படுத்தி மனிதன் தன் வாழ்வில் இன்புற்று இருக்க வழி காட்டுவதே ஆகும்.
“ஓ” என்பது உயிர் எழுத்து, “ம்” என்பது மெய் (உடல்) எழுத்து. ஏதோ புரிகிற
மாதிரி இருக்கிறதா? புரிந்துகொள்ள முயலாமல் நீங்கள் கொட்டாவி சத்தமாகவோ/
சத்தமில்லாமலோ விட்டால்கூட வரும் ஒலி ” அ…..உ….ம்” தான்.)
“ஓம்” தான் உயிர்களின் ஆதார ஒலி; இந்த “ஓம்” என்ற ஒலி நம் பிராண
சக்தியோடு நெருங்கிய தொடர்பு உடையது. அந்தத் தொடர்பு பற்றி அறிய
விவேகானந்தர் கருத்துகள் உதவும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 11:45 am

ஓம் என்ற இரு எழுத்திட்ட்கு இவளவு இருக்கா விளக்கம்..உயிர்களின் ஆதார ஒலி.அருமையான விளக்கம்...
ரம்யா நன்றிகள்..உங்கள் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவைகள்.. நான் பலதை ெய்கின்றோம்..சொல்கின்றோம்..விளக்கம் தெரியாமலேயே..பாராட்டுக்கள் ரம்யா..



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக