புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_m10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10 
11 Posts - 50%
heezulia
அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_m10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_m10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10 
53 Posts - 60%
heezulia
அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_m10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_m10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_m10அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:30 pm

அமைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?’- இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கிடைத்தால்தான், அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும். ஆரம்பத்தில், விபத்துதான் என்று அடித்துச் சொல்லிய பலரும், 'அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்’ என்று மாற்றிச் சொல்வதற்குக் காரணம்... விபத்துக்கான லாரி இன்னமும் சிக்கவில்லை!


சி பி - அப்போ லாரி சிக்கிடுச்சுன்னா மரணத்துல மர்மம் இல்லைன்னு முடிவுக்கு வந்துடுவீங்களா?


விபத்து நடந்த இடத்தில் தொடங்கி, கார் டிரைவர் ஆனந்தன், அமைச்சரின் தனிப்பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன், காரில் பயணம் செய்த திருச்சி அ.தி.மு.க-வினர் கார்த்திகேயன், சீனிவாசன், வெங்க​டேசன், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எனப் பல தரப்பிலும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


சி. பி - முதல்ல டிரைவரை விசாரிங்க.. பெரும்பாலான வழக்குகள்ல டிரைவர் தான் உடந்தையா இருக்காப்ல..


இந்த வழக்கு விசாரணைக்காக தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான அர்ச்சனா ராமசுந்தரம், மே 25-ம் தேதி மதியம் விபத்து நடந்த இடமான பாடாலூருக்கு வந்து, நேரடி விசாரணையில் ஈடுபட்டார்.


சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் ரவிச்சந்திரன் என்ற தொழிலாளர் இருந்து இருக்கிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. டிரைவர் ஆனந்தன், கன்டெய்னர் லாரி என்று சொல்ல... ரவிச்சந்திரன், டிப்பர் லாரி என்று சொல்லி இருக்கிறார்.


சி.பி. - ஓப்பனிங்க்கே சரி இல்லையே?


அமைச்சரின் உடன் சென்றவர்களோ, ''அமைச்சர் வீட்டில் இருந்து இடியாப்பம் செய்து கொடுத்தார்கள். பசிக்கிறது என்று அமைச்சர் சொன்னதால், இடியாப்பத்தை எடுத்துப் பரிமாறுவதில் கவனமாக இருந்தோம். அந்த சமயத்தில் சம்பவம் நடந்துவிட்டதால், லாரியை சரியாகக் கவனிக்கவில்லை!'' என்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட லாரி எது என்பதிலேயே இடியாப்பச் சிக்கல் நீடிக்கிறது.


சி.பி - நல்ல வேளை டிரைவரும் இடியாப்பம் சாப்பிட்டுட்டு இருந்ததாலதான் விபத்து நடந்ததுன்னு சொல்லாம விட்டாங்களே?


டோல்கேட் வீடியோ பதிவுகளை ஆனந்தனிடம் காண்பித்தபோதும், அவரால் சரியாக அடையாளம் காட்ட முடிய​வில்லை. சம்பவம் நடந்த நேரத்தில், சமயபுரத்தில் இருந்து தொழுதூர் வரை சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்ற 11 லாரிகளின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடக்கிறது. இவற்றில் ஏழு ஆந்திராவைச் சேர்ந்தவை. நான்கு கேரளாவைச் சேர்ந்தவை. அந்த மாநிலங்களுக்குச் சி.பி.சி.ஐ.டி. படைகள் விசாரணைக்காகச் சென்றுள்ளன. பாடாலூர் வட்டாரத்தில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. ஏதேனும் ஒரு குவாரியில், 'அந்த லாரி’ பதுக்கிவைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் போலீஸுக்கு சந்தேகம்.


சி.பி - நெம்பர் பிளேட் மாத்திட்டா வேலை முடிஞ்சுது.. எப்படி கண்டு பிடிப்பீங்க?


பாதுகாப்பு தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளன. வி.ஐ.பி. வாகனம் செல்கிறது என்றால், அந்த வாகனம் ஆயுதப் படையில் நிறுத்தப்பட வேண்டும். வண்டி சோதிக்கப்படும். டிரைவரின் பின்னணி ஆராயப்படும். எந்த வழக்கும் அவர் மீது இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர்தான், வாகனமும் டிரைவரும், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவர். இந்த நடைமுறை, டிரைவர் ஆனந்தன் விஷயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா? ஆனால், ரெகுலராகச் செல்லும் டிரைவர்களுடன் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தும், அந்த வாகனங்களில் ஒன்று மரியம்பிச்சைக்கு ஏன் வழங்கப்படவில்லை?




அமைச்சருடன் பாதுகாப்பு போலீஸ் உடன் செல்லவில்லை. 'வேண்டாம்’ என்று அமைச்சரே சொன்னதால், திரும்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெறாமல், பாதுகாப்பு போலீஸார் ஏன் திரும்பி வந்தனர்?


சி. பி. - ஒரு வேளை உயர் அதிகாரிகளின் உயர் அதிகாரியான அமைச்சரே சொல்லீட்டாரே?ன்னு நினைச்சுட்டாங்களோ என்னவோ?


சம்பவம் நடந்த உடனேயே, வாகனத் தணிக்கையை முடுக்கிவிட்டு, விபத்துக்குக் காரணமான வண்டியைப் பிடிக்க முயற்சி செய்யாதது ஏன்? மாட்டு வண்டி ஓட்டுபவரிடம்கூட செல்போன் இருக்கும் இந்தக் காலத்தில், டிரைவர் ஆனந்தனிடம் செல்போன் இல்லாததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சி. பி - ஆமா, செல் ஃபோன் இருந்தாத்தான் கடைசியா யார்ட்ட பேசுனான்? என்ன எஸ் எம் எஸ் அனுப்பினான்னு தோண்டி துருவிடுவாங்களே. அதான்..


முதல் கட்ட விசாரணையை முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், ''இது, திட்டமிட்ட கொலை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்!'' என்று தகவல் கசிய விடுவதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு!


சி.பி - அதெல்லாம் எதையும் நீங்க வெளியிட வேணாம்.. கொலை செஞ்ச ஆளை வெளில விடாம அரெஸ்ட் பண்ணுனா சரி..


ஒரு லாரியைப் பிடிக்க 18 படை!


திருச்சியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள், விபத்துக்குக் காரணமான லாரியை போலீஸார் கோட்டை விட்டதுதான் மிகப் பெரிய தவறு. விபத்து நடப்பதற்கு முன், சமயபுரம் டோல்கேட் வழியாக கடந்த வாகனங்கள் 800.


அவற்றில் லாரிகளின் எண்களை வாங்கி அவற்றில் ட்ரைய்லர், கன்டெய்னர், டிப்பர் லாரி போன்ற வாகனங்களை வகைபிரித்து விசாரித்து வருகிறோம். வண்டியில் எழுதப்பட்டிருக்கும் எண்ணும் ரெக்கார்டுகளில் உள்ள எண்ணும் வேறுபடுகிறது. மேட்டுப்பாளையத்தில் ஒரு லாரியை பிடித்தோம். ஆந்திராவில் இரண்டு லாரிகளை பிடித்து சோதனை நடத்தினோம். மூன்று வண்டிகளிலும் விபத்து நடந்ததற்கான அறிகுறி இல்லை.


''சம்பந்தப்பட்ட லாரி டிரைவர், போலீஸுக்குப் பயந்து ஒளிந்து இருக்கலாம். அது யார் என்று விசாரித்து எங்களிடம் ஒப்படையுங்கள்!’' என்று லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடம் சொல்லி இருக்கிறோம். 18 தனிப்படைகள் இந்த விவகாரத்தில் களம் இறங்கி உள்ளன. இன்னும் ஓரிரு நாளில், விபத்துக்கு காரணமான லாரியைப் பிடித்து டிரைவர் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்!'' என்றார்.


அட்ரசக




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 28, 2011 1:38 pm

விபத்து நடந்தவுடன் லாரி டிரைவரை பிடிக்காமல் ஏன் விட்டார்கள்?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 1:46 pm

பகிர்வுக்கு நன்றி தாமு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 1:52 pm

என்ன கொடுமை சார் இது காவல்துறைக்கு தலைவலிதான்!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:54 pm

விபத்து நடந்த இடத்திலிருந்து 3 பாதைகள். சமயபுரத்தில் ஏன் காரை மாற்றினார்கள்?

திருச்சி, இந்தியா: பப்ளிக்காக வீதியில் ஓடிய ஒரு லாரி, ‘விபத்து லாரி’யாகி, ‘மர்ம லாரி’யாகி, இப்போது அமைச்சரின் மரணத்தின் முடிச்சே இதில்தான் இருக்கிறது என்ற அளவில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது! “அமைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?” என்ற கேள்வியுடன்தான் தமிழக காவல்துறை அல்லாடிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில், விபத்துதான் என்று பலரும் அடித்துச் சொல்லியிருந்தனர். இப்போது, மிகச் சிலரே இதை வெறும் விபத்துத்தான் என்கின்றனர். “அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்” என்று கதை மாறிப் பரபரப்பதன் ஒரே காரணம், விபத்துக்கான லாரி இன்னமும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கவில்லை என்பதே!

சி.பி.சி.ஐ.டி. போலீசார், லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியை இரவு பகலாக தொடர்ந்து வருகின்றனர். ஆனால்,அது அவ்வளவு சுலபமான டாஸ்க்காக இல்லை. காரணம், விபத்து நடந்த இடம் அப்படி. விபத்தின்பின் நிறுத்தாமல் அந்த இடத்திலிருந்து பறந்துவிட்டது லாரி. தப்பிப் போவதற்கு பல பாதைகள் அங்கிருந்து இருக்கின்றன.

விபத்தை ஏற்படுத்திய லாரி பெரம்பலூரை தொடாமல், வெளியூர்களுக்கு தப்பிச் செல்ல முடியும் என்பது ஒரு சிக்கல். விபத்து நடந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில், மூன்று பாதைகள் பிரிகின்றன. இவற்றில் ஒன்று துறையூர் செல்கிறது. மற்றையது சேலம் செல்லும் பாதை. மூன்றாவது, அரியலூர்வரை செல்கின்றது.

இதில் எந்தப் பாதையில் லாரி தப்பிச் சென்றது? இந்தக் கேள்விக்கான பதிலை அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்த விசாரணைகள் ஒருபக்கமாக நடக்க, அமைச்சரின் காரைச் செலுத்திய டிரைவர் ஆனந்தன், அமைச்சரின் தனிப் பாதுகாப்பு அதிகாரி மகேஸ்வரன், காரில் பயணம் செய்த திருச்சி அதிமுக பிரமுகர்கள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கார்த்திகேயன், வெங்க​டேசன், என்ற பெயர்களுடைய இரு லோக்கல் அதிமுக பிரமுகர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற லாரிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண ஹிட்-அன்ட்-ரன் கோணத்திலிருந்து, திட்டமிட்ட சதி என்பதுவரை பல கோணங்களில் விசாரணைகள் நடைபெறுகின்றன.


பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட டயர் தடம்.
தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, சுற்றுச்சூழல் துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியிலிருந்து சென்னையை நோக்கிச் சென்றபோதே கொல்லப்பட்டார்.

அமைச்சர் திருச்சியிலிருந்து புறப்பட்டபோது, ஸ்கார்பியோ கார் ஒன்றில் கிளம்பியிருக்கிறார். பின்பு சமயபுரத்தில் மற்றொரு காருக்கு மாறியிருக்கிறார். இந்த இரண்டாவது கார்தான் விபத்துக்குள்ளான இன்னோவா கார். அமைச்சர் சமயபுரத்தில் வைத்து எதற்காக காரை மாற்றவேண்டி வந்தது என்றும் விசாரிக்கப்படுகின்றது.

நெடுந்தூரப் பயணத்துக்கு ட்ராவல்ஸ் காரைப் பயன்படுத்துவது சகஜமாதான் என்ற போதிலும், அமைச்ரிடம் ட்ராவல்ஸ் காரைப் பயன்படுத்தும்படி யாராவது வற்புறுத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்.

விபத்துக்குள்ளானபோது காரை, ஆனந்த் என்பவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். அமைச்சரின் காருக்கு டிரைவராக அனுப்பப்படுமுன் இவரது பின்னணி ஆராயப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. குறிப்பிட்ட டிரைவர் அமைச்சரின் ஊழியர் அல்ல. காரின் உரிமையாளரான ட்ராவல்ஸின் ஊழியர்!

பெரம்பலூர், பாடாலூர் அருகில், திருவளக்குறிச்சியில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை, அமைச்சரின் கார் முந்த முயன்றது. அப்போது அந்த லாரி வலப்புறம் திரும்பியதால், அமைச்சரின் கார், லாரியின் பின்புறம் மோதியது. இதில், அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே இறந்தார். மெய்க்காவலர் மகேஸ்வரன் காயமடைந்தார்.

காரைச் செலுத்திய டிரைவர் ஆனந்த், மற்றும் காருக்குள் இருந்த லோக்கல் அதிமுக பிரமுகர்கள் ஆகியோர் எதுவித காயமுமின்றி தப்பியுள்ளனர். அமைச்சரின் கார் விபத்திற்குள்ளாகி, அவர் மட்டுமே இறந்திருப்பதும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எல்லா சந்தேகத்துக்கும் விடை, விபத்தை ஏற்படுத்திய லாரியைக் கண்டுபிடிப்பதில்தான் இருக்கின்றது. ஆனால் அந்த மர்ம லாரி, மாயமான்போல இவர்களுக்கு விளையாட்டுக் காட்டுகிறது.

விபத்து நடைபெற்றபோது காருக்குள் இருந்தவர்களே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த லாரி பற்றிக் கூறுகின்றனர். டிரைவர் ஆனந்த், அது ஒரு கன்டெய்னர் லாரி என்று கூறியிருக்கிறார்.காருக்குள் இருந்த லோக்கல் அதிமுகவினர், தாம் உணவு உண்பதில் பிசியாக இருந்ததால், லாரியைப் பார்க்கவில்லை என்கின்றனர். விபத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் அது ஒரு டிப்பர் லாரி என்கிறார்.

விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற சுமார் 75 லாரிகள் குறித்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவற்றில் அமைச்சரின் காரில் ஒட்டியுள்ள பெயின்ட் நிறத்தையுடைய லாரிகள் தீவிரமான விசாரணை வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அமைச்சர் பயணித்த காரில், லாரியின் பெயின்ட் ஒட்டியிருப்பதுபோல, லாரியிலும் காரின் பெயின்ட் ஒட்டியிருக்கலாம்!

ஐதராபாத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றைப் பிடித்து விசாரித்து வருவதாக கூறப்பட்ட கதையை போலீஸ் தரப்பு மறுத்திருக்கின்றது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ” நாங்கள் இன்னமும் விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடிவருகிறோம். லாரியோ, லாரி டிரைவரோ இதுவரையில் பிடிபடவில்லை” என்று கூறுவதுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய தேதிவரை, லாரிதான் இந்த மர்மத்தின் தங்க முடிச்சு!


விறுவிறுப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 28, 2011 3:38 pm

விரைவில் மர்மம் வெளிவரும் என்று நம்புவோம்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 28, 2011 6:32 pm


Viruvirupu, Saturday 28 May 2011, 08:15 GMT

• விபத்து நடந்த இடத்திலிருந்து 3 பாதைகள்.

• சமயபுரத்தில் ஏன் காரை மாற்றினார்கள்?

திருச்சி, இந்தியா: பப்ளிக்காக வீதியில் ஓடிய ஒரு லாரி, ‘விபத்து லாரி’யாகி, ‘மர்ம லாரி’யாகி, இப்போது அமைச்சரின் மரணத்தின் முடிச்சே இதில்தான் இருக்கிறது என்ற அளவில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது! “அமைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?” என்ற கேள்வியுடன்தான் தமிழக காவல்துறை அல்லாடிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில், விபத்துதான் என்று பலரும் அடித்துச் சொல்லியிருந்தனர். இப்போது, மிகச் சிலரே இதை வெறும் விபத்துத்தான் என்கின்றனர். “அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்” என்று கதை மாறிப் பரபரப்பதன் ஒரே காரணம், விபத்துக்கான லாரி இன்னமும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கவில்லை என்பதே!

சி.பி.சி.ஐ.டி. போலீசார், லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியை இரவு பகலாக தொடர்ந்து வருகின்றனர். ஆனால்,அது அவ்வளவு சுலபமான டாஸ்க்காக இல்லை. காரணம், விபத்து நடந்த இடம் அப்படி. விபத்தின்பின் நிறுத்தாமல் அந்த இடத்திலிருந்து பறந்துவிட்டது லாரி. தப்பிப் போவதற்கு பல பாதைகள் அங்கிருந்து இருக்கின்றன.

விபத்தை ஏற்படுத்திய லாரி பெரம்பலூரை தொடாமல், வெளியூர்களுக்கு தப்பிச் செல்ல முடியும் என்பது ஒரு சிக்கல். விபத்து நடந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில், மூன்று பாதைகள் பிரிகின்றன. இவற்றில் ஒன்று துறையூர் செல்கிறது. மற்றையது சேலம் செல்லும் பாதை. மூன்றாவது, அரியலூர்வரை செல்கின்றது.

இதில் எந்தப் பாதையில் லாரி தப்பிச் சென்றது? இந்தக் கேள்விக்கான பதிலை அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்த விசாரணைகள் ஒருபக்கமாக நடக்க, அமைச்சரின் காரைச் செலுத்திய டிரைவர் ஆனந்தன், அமைச்சரின் தனிப் பாதுகாப்பு அதிகாரி மகேஸ்வரன், காரில் பயணம் செய்த திருச்சி அதிமுக பிரமுகர்கள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கார்த்திகேயன், வெங்க​டேசன், என்ற பெயர்களுடைய இரு லோக்கல் அதிமுக பிரமுகர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற லாரிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண ஹிட்-அன்ட்-ரன் கோணத்திலிருந்து, திட்டமிட்ட சதி என்பதுவரை பல கோணங்களில் விசாரணைகள் நடைபெறுகின்றன.


பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட டயர் தடம்.

தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, சுற்றுச்சூழல் துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியிலிருந்து சென்னையை நோக்கிச் சென்றபோதே கொல்லப்பட்டார்.

அமைச்சர் திருச்சியிலிருந்து புறப்பட்டபோது, ஸ்கார்பியோ கார் ஒன்றில் கிளம்பியிருக்கிறார். பின்பு சமயபுரத்தில் மற்றொரு காருக்கு மாறியிருக்கிறார். இந்த இரண்டாவது கார்தான் விபத்துக்குள்ளான இன்னோவா கார். அமைச்சர் சமயபுரத்தில் வைத்து எதற்காக காரை மாற்றவேண்டி வந்தது என்றும் விசாரிக்கப்படுகின்றது.

நெடுந்தூரப் பயணத்துக்கு ட்ராவல்ஸ் காரைப் பயன்படுத்துவது சகஜமாதான் என்ற போதிலும், அமைச்ரிடம் ட்ராவல்ஸ் காரைப் பயன்படுத்தும்படி யாராவது வற்புறுத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்.

விபத்துக்குள்ளானபோது காரை, ஆனந்த் என்பவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். அமைச்சரின் காருக்கு டிரைவராக அனுப்பப்படுமுன் இவரது பின்னணி ஆராயப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. குறிப்பிட்ட டிரைவர் அமைச்சரின் ஊழியர் அல்ல. காரின் உரிமையாளரான ட்ராவல்ஸின் ஊழியர்!

பெரம்பலூர், பாடாலூர் அருகில், திருவளக்குறிச்சியில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை, அமைச்சரின் கார் முந்த முயன்றது. அப்போது அந்த லாரி வலப்புறம் திரும்பியதால், அமைச்சரின் கார், லாரியின் பின்புறம் மோதியது. இதில், அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே இறந்தார். மெய்க்காவலர் மகேஸ்வரன் காயமடைந்தார்.

காரைச் செலுத்திய டிரைவர் ஆனந்த், மற்றும் காருக்குள் இருந்த லோக்கல் அதிமுக பிரமுகர்கள் ஆகியோர் எதுவித காயமுமின்றி தப்பியுள்ளனர். அமைச்சரின் கார் விபத்திற்குள்ளாகி, அவர் மட்டுமே இறந்திருப்பதும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எல்லா சந்தேகத்துக்கும் விடை, விபத்தை ஏற்படுத்திய லாரியைக் கண்டுபிடிப்பதில்தான் இருக்கின்றது. ஆனால் அந்த மர்ம லாரி, மாயமான்போல இவர்களுக்கு விளையாட்டுக் காட்டுகிறது.

விபத்து நடைபெற்றபோது காருக்குள் இருந்தவர்களே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த லாரி பற்றிக் கூறுகின்றனர். டிரைவர் ஆனந்த், அது ஒரு கன்டெய்னர் லாரி என்று கூறியிருக்கிறார்.காருக்குள் இருந்த லோக்கல் அதிமுகவினர், தாம் உணவு உண்பதில் பிசியாக இருந்ததால், லாரியைப் பார்க்கவில்லை என்கின்றனர். விபத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் அது ஒரு டிப்பர் லாரி என்கிறார்.

விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற சுமார் 75 லாரிகள் குறித்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவற்றில் அமைச்சரின் காரில் ஒட்டியுள்ள பெயின்ட் நிறத்தையுடைய லாரிகள் தீவிரமான விசாரணை வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அமைச்சர் பயணித்த காரில், லாரியின் பெயின்ட் ஒட்டியிருப்பதுபோல, லாரியிலும் காரின் பெயின்ட் ஒட்டியிருக்கலாம்!

ஐதராபாத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றைப் பிடித்து விசாரித்து வருவதாக கூறப்பட்ட கதையை போலீஸ் தரப்பு மறுத்திருக்கின்றது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ” நாங்கள் இன்னமும் விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடிவருகிறோம். லாரியோ, லாரி டிரைவரோ இதுவரையில் பிடிபடவில்லை” என்று கூறுவதுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய தேதிவரை, லாரிதான் இந்த மர்மத்தின் தங்க முடிச்சு!அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை  20110527-MPC-4

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 8:46 pm

இதே கட்டுரை இங்கேயும் இருக்கிறதே!

http://www.eegarai.net/t60189-topic என்ன?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 28, 2011 8:53 pm

நன்றி பாலா முந்தைய பதிவோடு இணைத்துவிட்டேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக