புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 8:06 am



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டில்லி திகார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை, முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார். பயப்படாமல் இருக்கும்படி ஆறுதல் கூறினார்.



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனுவை, கடந்த வெள்ளியன்று, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி நிராகரித்ததால், அன்று மாலையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.உடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி டில்லி வந்தார். மறுநாள், பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி ஆஜரான போது, மகளை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார் ராஜாத்தி.கோர்ட்டில் நடைபெற்ற உருக்கமான சந்திப்புக்கு பின், கனிமொழியின் தந்தை கருணாநிதி, எப்போது டில்லிக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.கனிமொழி கைது செய்தி கேள்விப்பட்டவுடனே, கருணாநிதி, டில்லிக்கு கிளம்பலாம் என, முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம், நிருபர்களிடம் பேசிய அவர், "தற்போதைக்கு டில்லி செல்லும் திட்டம் இல்லை' என்று கூறினார்.அடுத்த நாள், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கருணாநிதி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்றார். இது, தி.மு.க., - காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தியது.



இந்நிலையில், நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர். இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார்.மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். அப்போது, சிறைக்கு வெளியே, எம்.பி.,க்கள் சிவா, ரித்தீஷ், ஜெயதுரை போன்றவர்கள் காத்திருந்தனர்.



கருணாநிதி உள்ளே சென்றபோது, அதற்கு முன்பாகவே, சந்திப்புக்கான ஏற்பாடு, முறைப்படி செய்யப்பட்டிருந்தது. அதாவது, 1ம் நம்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாவையும், 4ம் நம்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத்குமார் ரெட்டியையும், கனிமொழி அடைக்கப்பட்டிருக்கும், 6ம் நம்பர் சிறைக்கு அழைத்து வந்திருந்தனர். அருகில் உள்ள சிறை கண்காணிப்பாளர் அறையில், இவர்கள் மூன்று பேரும் காத்திருக்க, கருணாநிதி அங்கு சென்றார்.இந்த சந்திப்பின்போது, கருணாநிதியுடன் ராஜாத்தி, அரவிந்தன், துரைமுருகன், பொன்முடி, சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். உடன் சென்றிருந்த டி.ஆர்.பாலு, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது.
நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.



மகளைச் சந்தித்த பின், கருணாநிதி நேராக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு கிளம்ப திட்டமிட்டிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தன் சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டதாக, அப்போது தான் தகவலும் கிடைக்க, திரும்பவும் தாஜ்மான்சிங் ஓட்டலுக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்கு மாறாக, அந்த ஓட்டல் வேண்டாம் என்றும், வேறு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யும்படியும் கருணாநிதி தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.



ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், "சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.



- நமது டில்லி நிருபர் -



http://www.dinamalar.com/News_Detail.asp?Id=245468




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 24, 2011 11:47 am

சோகமான சந்திப்பு... ஆனாலும் ஏனோ இரக்கம் வரவில்லை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 12:51 pm

ஏன் பிறந்தாய் மகளே ,,ஏன் பிறந்தாயோ ?
(பின்னணியில் இந்த பாட்டு ஒலித்திருக்குமோ?)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 12:55 pm

ரபீக் wrote:ஏன் பிறந்தாய் மகளே ,,ஏன் பிறந்தாயோ ?
(பின்னணியில் இந்த பாட்டு ஒலித்திருக்குமோ?)


சோகத்திலும் ஒரு சுகம்...
உங்க பாட்டு..... கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 12:57 pm

உமா wrote:
ரபீக் wrote:ஏன் பிறந்தாய் மகளே ,,ஏன் பிறந்தாயோ ?
(பின்னணியில் இந்த பாட்டு ஒலித்திருக்குமோ?)


சோகத்திலும் ஒரு சுகம்...
உங்க பாட்டு..... கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300

எதுவும் உள்குத்து இல்லையே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 1:01 pm

ரபீக் wrote:
எதுவும் உள்குத்து இல்லையே ?

நிச்ச்யம் இல்லை அண்ணா....
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  359383




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 2:45 pm

கலைவேந்தன் wrote:சோகமான சந்திப்பு... ஆனாலும் ஏனோ இரக்கம் வரவில்லை..!

எதற்கு தோழர் இறக்கம் வரணும் ?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  38691590

இரா.எட்வின்

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக