புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
30 Posts - 50%
heezulia
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
72 Posts - 57%
heezulia
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_m10விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu May 19, 2011 7:20 am

புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..?
சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..?

புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..?

புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான்.

இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது.

நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள் என்ற அமைப்பு வந்தாலும் வராவிட்டாலும் புதுமாத்தளனில் கொல்லப்பட்ட மரணங்கள் கலவரம் என்ற வடிவில் வந்து சேர்ந்திருக்கும். கலவரம் பண்ணாமல் சிங்கள இனத்தால் வாழ முடியாது என்பதே வரலாறு. புலிகள் போராடினாலும், போராடாவிட்டாலும் சிங்கள சமுதாயத்தின் கலவர மனோநிலை அடங்கிப் போகாது.

சரி.. புலிகள் போராடியதால் என்ன நடந்தது..?

போராட்டக்களத்தில் நின்றவர்கள், அவர்களை நம்பி வன்னியில் இருந்தவர்கள், தளபதிகள், முக்கிய உறுப்பினர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்..

இதற்கு யார் பொறுப்பு…?

இந்தியா என்று கோபப்படுகிறோம்…!

உலக சமுதாயம் காரணம் என்று விரக்தியடைகிறோம்..!

நமது கோபத்திலும் விரக்தியிலும் நியாயம் உண்டு…

ஆனால்..

இதற்கு நாமும் பொறுப்பு என்று நமது மனச்சாட்சியை தொட்டு வெளிப்படையாகக் கூற மறுக்கிறோம்…

இதற்கு ஓர் உதாரணம் :

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்ததும் நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ற் என்ற பிரபலமான வழக்கு நடைபெற்றது… அதில் போர்க் குற்றவாளிகள் தண்டனை பெற்றார்கள்..

போர் நடக்கும்போது சரணடையும், கைது செய்யப்படும் மனிதர்களை நடாத்துவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. நோயுற்ற போர்க் கைதிகளைக்கூட இறக்கவிடக்கூடாது என்ற விதி அதில் இருக்கிறது.

எதிரிகள் நமது கையில்… கேட்கப்பார்க்க நாதியில்லை என்று ஜேர்மனிய நாஜிகள் நடாத்திய போர்க்குற்றத்திற்காக பலரை தூக்குமரத்தில் ஏற்றியது இந்த வழக்கு. இம்மாதம் வெளியான வரலாறு டேனிஸ் சஞ்சிகையில் இந்த வழக்கு வெளியாகியுள்ளது. காயப்பட்டவர்களை பராமரிக்க மறுத்தவர்களில் தூக்குத் தண்டனை பெற்ற தளபதிகளின் பெயர்களும் பட்டியலாக வந்துள்ளது.

மகிந்தராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, டக்களஸ் தேவானந்தா போன்றவர்கள் இந்த நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ரை வாசித்துப் பார்க்க வேண்டும்.

அந்த நூரம்போர் ஜட்ஜ்மன்ற் ஒரு மகத்தான கவலையை வெளிப்படுத்துகிறது.. ஏன் இந்த மரணங்கள்.. இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது…

உலகம்…
அத்தனை மதங்களும்…
அத்தனை சமுதாய தாபனங்களும்…
அத்தனை கல்விமான்களும்..
அத்தனை ஊடகங்களும்..
அத்தனை நாடுகளும் பொறுப்பு… என்று அந்த வாதாட்டம் முடிகிறது..

இதில் பொறுப்பு என்ற சொல் மிக முக்கியம்..

பாப்பரசர், அமெரிக்க அதிபர்கள், சாமியார்கள், இஸ்லாமிய காமய்னிகள், புத்தமத குருக்கள், மார்க்சிஸ்டுக்கள், ஆஸ்திகர், நாஸ்திகர், பொதுமக்கள் என்று அனைவருமே பொறுப்பற்று நடந்ததால்தான் இந்த உலக யுத்த அழிவு வந்ததென நூறம்பேர்க் வழக்கு சுட்டிக்காட்டுகிறது.

இதில் நமக்கு தொடர்பில்லை என்று வேடம்போடுவோர் ஏமாற்றுப் பேர்வழிகளே..

புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் 140.000 பேரைக் கொன்றொழித்த போர். இந்தத் தவறும் யூதப் படுகொலை போன்றதே.. இதற்கும் மேலே சொன்ன அத்தனைபேருமே பொறுப்பு..

இதனால் தமிழர் மட்டுமல்ல..

புத்த, இந்து, கிறீத்தவ, இஸ்லாம் மதங்கள் தோல்வியடைந்திருக்கின்றன..
இந்தியா, சீனா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஸ்யா அனைவரும் தோல்வியடைந்திருக்கிறார்கள்…

இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகியிருக்கிறது…

புலிகள் மீது ஆறு பெரும் குற்றங்களும்…
சிங்கள இனவாத அரசின் மீது ஐந்து பெரும் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன..

இனி என்ன செய்யலாம்…

படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவு வந்துவிட்டது தீபம் ஏற்றலாமா..?
யூலைக்கலவரத்திற்கு தீபம் ஏற்றி.. ஏற்றி.. மறந்து போனதுபோல இதுவும் ஒரு தொடர் கதையா..?
ஏற்றும் தீபங்களை மனச்சாட்சியோடு உற்றுப் பாருங்கள்..!
அந்த நெருப்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கும்..!
நீங்கள் இதற்கு பொறுப்பில்லையா என்று…?

பொறுப்பில்லை என்று சொல்ல எவராலும் முடியாது… எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகளே..

இனியாவது நாம் பொறுப்புடன் நடக்க வேண்டும்…!

ஐ.நா அறிக்கை சிங்கள இனவாத அரசை புதுமாத்தளனைவிட ஆபத்தான பொறிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது…

இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை எழுதிக் கொடுத்தால்கூட, தப்ப முடியாத வரலாற்று சேற்றை தன் முகத்தில் அது அப்பியிருக்கிறது..

ஐ.நா அறிக்கையில் இருந்து சிறீலங்காவை காப்பாற்ற இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளாலும் முடியாது என்பதே நிதர்சனம்..

இது ஈழத் தமிழினத்திற்கு ஓர் அரிய வாய்ப்பு..

இதை வென்றெடுக்க வேண்டும்…

அதை விளங்கியவர்கள், முன்னெடுக்க தகுதியானவர் எவரும் இப்போது உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆடுகளத்தில் இல்லை..

ஆகவே..

மக்களே.. தூய ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.. எகிப்து, ரூனிசியா போல..

இதுவரை அரசியல் சாயம் பூசாத புதிய முகங்கள் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்காவில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டம்போல மக்கள் போராட்டம் மலர வேண்டிய காலம் இது..

ஐ.நா அறிக்கையை துணையாக வைத்து, இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் ஈழத் தமிழ் மக்கள் சில முக்கிய இலக்குகளை குறுங்காலத்தில் தொட்டுவிட முடியும்.

பாலஸ்தீன பிரச்சனை முடிக்கப்பட்டு, பாலஸ்தீன ஸ்ரேற் வரப்போகிறது.. அதோடு இணைந்த போராட்டமான ஈழத் தமிழர் போராட்டமும் ஒரு நல்ல இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.

இறந்த பொதுமக்கள், மாவீரர் அனைவருடைய இறப்புகளுக்கும் நாமும் பொறுப்பேற்று அவர்கள் கனவுகளை நிறைவேற்றி வைக்க இதுதான் தருணம்..

ஒரு காலமும் சமுதாயம் பின்னடைவதில்லை.. அது ஒவ்வொரு காலத்திலும் வளர்ச்சியடைந்து செல்கிறது என்பது உலகப்புகழ் பெற்ற பழமொழி..

ஈழத் தமிழினமும் பின்னடைந்துவிடாது, அது வரலாற்றின் நியதி..

தீபத்திற்கு ஓர் அர்த்தமிருக்கிறது…

எண்ணெய் அறிவு..
திரி நெறி..
நெருப்பு உணர்ச்சி..

அறிவாகிய எண்ணெய் வற்றினால் உணர்ச்சியாகிய நெருப்பு நெறியாகிய திரியை எரித்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும்..

இறந்தவர்களை அஞ்சலிக்க தீபம் ஏற்றுவது இந்த மூன்று நிலையிலும் நாம் சமமாக இருக்கிறோம் என்று விளக்கத்தான். இந்த மூன்று நிலையையும் நாம் சமமாக வைத்திருந்தால் நமது விடுதலைத் தீபமும் ஊடுபற்றியிருக்காது..

புதுமாத்தளன் சோகங்களுக்கு தீபமேற்றுவோர் அந்தத் தீபங்களை ஒரு தடவை உற்று நோக்குங்கள்..

சிந்தனையை மாற்றிப் போடுங்கள்..

இந்த இரண்டாண்டு நினைவில் உங்களுக்காக இரண்டு நம்பிக்கைகள்..

ஒன்று…

புலிகள் போராடியிருக்காவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழினமுமே அழிக்கப்பட்டிருக்கும்..

இரண்டு…

புலம் பெயர் தமிழன் என்ற பலமிக்க சக்தி உலகில் பிறந்திருக்காது..

இந்த இரண்டு விடயங்களையும் மனதில் ஏந்தி நடவுங்கள்..

மூன்றாவதாக ஈழத் தமிழினத்திற்கான விடிவு வரும்…ஏனென்றால் புதுமாத்தளன் இழப்புக்களுக்கு மூன்றாவது ஆண்டு விளக்கேற்றும்போது ஒரு விடிவு வந்திருக்க வேண்டும்..

இரண்டாவது விளக்கின் தொடர்கதையாக மூன்றாவது விளக்கை ஏற்றினால் அது அஞ்சலியல்ல சடங்கு.. இதை இன்றாவது புலம் பெயர் ஊடகங்களை நடாத்துவோர் புரிந்து மக்களுக்குப் புது வழி காட்டவேண்டும்.

அலைகள் புதுமாத்தளன் இரண்டாவது ஆண்டு பார்வை.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 19, 2011 9:56 am

புல்லை கண்டு நடுங்கும் மனிதன் இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன் இறந்த பின்பும் வாழ்கிறான்
தன்னை மட்டும் காத்து கொள்ளும் வாழ்வில் இல்லை நன்மையே !
தன்னை போல
பிறரை காக்கும் தர்மம் வெல்லும்
உண்மையே !


விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? 678642

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 12:25 pm

நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக