புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா. கோடை வாசஸ்தலமான கொடைநாடு எஸ்டேட் போனவர், பாவம் அங்கும் என் மீது வசை மாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு ஓய்வெடுக்க முடியாமல் என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
யாரை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்? 1956ல் சிதம்பரம் திமுக பொதுக்குழுவில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
24&8&77ல் சென்னையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடத்தியவன் நான்.
1981ல் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ‘இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. வட கொழும்பில் தமிழர் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரயில்கள் தாக்கப்படுகின்றன. தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு தூக்கியெறியப்படுகிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்க மனிதா பிமான அடிப்படையில் உதவிட வேண்டும்’ என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இலங்கை தமிழர் பிரச்னையில் அதிமுக அரசால் கைது செய்யப்பட்ட கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
25&7&83ல் வெலிக்கடை சிறைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை கொலை செய்தபோது தமிழக தலைநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10&8&83ல் நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.
16&5&85ல் காஞ்சிபுரம் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன்.
23&8&85ல் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் நான் பேரணி நடத்தியதை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இலங்கை தமிழருக்கு ஆதரவாக 1986 மே மாதம் மதுரையில் பேராசிரியர், வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘டெசோ’ அமைப்பின் சார்பில் அனைத்திந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்திய கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
3&6&86ல் என் பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்கு பகிர்ந்து கொடுத்தேன்.
1987 அக்டோபர் 15ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தினோம்.
16&10&87ல் தளபதி கிட்டுவை காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக் கை விடுத்தவன் நான்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக எட்டு மாநில முதல்வர்களுக்கும் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான்தான்.
6&11&87ல் சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக மனிதச் சங்கிலி நடத்தியவனும் நான்தான்.
15&3&89ல் டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையை விவாதித்தவனும் நான்தான்.
15&6&89ல் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்னை குறித்து பேசியவனும் நான்தான்.
1991 ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திமுக ஆட்சியே கலைக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்ததே நான்தான்.
1989 நவம்பரில் தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி ÔÔஇலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி’’ என்று கூறினார். அவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 ஏப்ரல் 23ம் தேதி பேரவையில் ÔÔஇலங்கையில் முறையான அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டும்ÕÕ என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 அக்டோபர் 6ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லியில் உள்ள இலங்கை தூதரை உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா..?
ÔÔபிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வலியுறுத்துகிறது. புலிகளின் இயக்கத்தை சேர்ந்த எவரையும் இந்திய நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறதுÕÕ என்று பேரவையில் 2002 ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.
தமிழர்களை கொன்று குவித்ததை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது, ÔÔஇலங்கை தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் புலிகள் பிடித்து வைத்து ராணுவத்தின் முன்னால் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’’ என்று 17&1&09ல் அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை மன்னிப்பு கேட்க செல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு ஏதாவது இருக்க முடியுமா?
இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் திமுகவையும் என்னையும் குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவரா?
அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அத்தனையும் கபட நாடகம் என்று வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கைநழுவ விடுவதும், பதவியில் இருக்கும்போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும், யாரையும் மதிக்காமல் ஆணவமாக நடப்பதும் ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை; உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதையை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி தினகரன்
முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா. கோடை வாசஸ்தலமான கொடைநாடு எஸ்டேட் போனவர், பாவம் அங்கும் என் மீது வசை மாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு ஓய்வெடுக்க முடியாமல் என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
யாரை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்? 1956ல் சிதம்பரம் திமுக பொதுக்குழுவில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
24&8&77ல் சென்னையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடத்தியவன் நான்.
1981ல் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ‘இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. வட கொழும்பில் தமிழர் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரயில்கள் தாக்கப்படுகின்றன. தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு தூக்கியெறியப்படுகிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்க மனிதா பிமான அடிப்படையில் உதவிட வேண்டும்’ என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இலங்கை தமிழர் பிரச்னையில் அதிமுக அரசால் கைது செய்யப்பட்ட கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
25&7&83ல் வெலிக்கடை சிறைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை கொலை செய்தபோது தமிழக தலைநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10&8&83ல் நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.
16&5&85ல் காஞ்சிபுரம் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன்.
23&8&85ல் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் நான் பேரணி நடத்தியதை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இலங்கை தமிழருக்கு ஆதரவாக 1986 மே மாதம் மதுரையில் பேராசிரியர், வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘டெசோ’ அமைப்பின் சார்பில் அனைத்திந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்திய கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
3&6&86ல் என் பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்கு பகிர்ந்து கொடுத்தேன்.
1987 அக்டோபர் 15ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தினோம்.
16&10&87ல் தளபதி கிட்டுவை காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக் கை விடுத்தவன் நான்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக எட்டு மாநில முதல்வர்களுக்கும் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான்தான்.
6&11&87ல் சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக மனிதச் சங்கிலி நடத்தியவனும் நான்தான்.
15&3&89ல் டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையை விவாதித்தவனும் நான்தான்.
15&6&89ல் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்னை குறித்து பேசியவனும் நான்தான்.
1991 ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திமுக ஆட்சியே கலைக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்ததே நான்தான்.
1989 நவம்பரில் தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி ÔÔஇலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி’’ என்று கூறினார். அவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 ஏப்ரல் 23ம் தேதி பேரவையில் ÔÔஇலங்கையில் முறையான அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டும்ÕÕ என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 அக்டோபர் 6ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லியில் உள்ள இலங்கை தூதரை உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா..?
ÔÔபிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வலியுறுத்துகிறது. புலிகளின் இயக்கத்தை சேர்ந்த எவரையும் இந்திய நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறதுÕÕ என்று பேரவையில் 2002 ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.
தமிழர்களை கொன்று குவித்ததை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது, ÔÔஇலங்கை தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் புலிகள் பிடித்து வைத்து ராணுவத்தின் முன்னால் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’’ என்று 17&1&09ல் அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை மன்னிப்பு கேட்க செல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு ஏதாவது இருக்க முடியுமா?
இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் திமுகவையும் என்னையும் குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவரா?
அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அத்தனையும் கபட நாடகம் என்று வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கைநழுவ விடுவதும், பதவியில் இருக்கும்போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும், யாரையும் மதிக்காமல் ஆணவமாக நடப்பதும் ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை; உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதையை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி தினகரன்
தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்''-ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? ``சாட்சாத்'' ஜெயலலிதா தான். எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு, பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கை தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.
யாரை மன்னிப்பு கேட்க சொல்கிறார் ஜெயலலிதா?
1956-ம் ஆண்டிலே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணாவின் முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் ஜெயலலிதா பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
24.8.1977 அன்று சென்னையிலே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணியை நடத்தியவன் நான். 1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆம் ஆகஸ்ட் 13-ம் தேதியன்றே-``கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது.
வடகொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன, யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்படுகின்றன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்'' என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
அதே 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் அன்றிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகத் தலைநகரிலே 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10.8.1983 அன்று நானும், கழக பொதுச்செயலாளர் பேராசிரியரும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.
16.5.1985 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.
23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று நான் அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களிடையே சகோதர யுத்தம் கூடாதென்பதற்காகவும், 1986-ம் ஆண்டு மே திங்களில் மதுரையில் பொதுச்செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ``டெசோ'' அமைப்பின் சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்திய கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்காக பகிர்ந்து கொடுத்தவன் நான்.
1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க. சார்பில் பேரணி நடத்தினோம். 16.10.1987 அன்று தளபதி கிட்டுவை காணச்சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை விடுத்தவன் நான்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான் தான்.
6.11.1987 அன்று சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலியை நடத்தியவனும் நான்தான்.
15.3.1989 அன்று டெல்லியில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்தவனும் நான்தான். 15.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து பேசியவனும் நான் தான்.
1991-ம் அண்டு ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டபோது, முதலமைச்சராக இருந்ததே நான் தான்.
1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில் தற்போது என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிற ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் - விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்'' என்று அறிக்கை அல்லவோ ஜெயலலிதா விடுத்தார்.
5.11.1989 அன்றும் 6.11.1989 அன்றும் தமிழ்நாட்டில் பேசிய ராஜீவ்காந்தி, ``இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க. அரசுக்கும் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் நன்றி'' என்று கூறினார். இவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
23.4.2008 அன்று தமிழக சட்டப்பேரவையில்-``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென இப்பேரவை வலியுறுத்துகிறது'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
6.10.2008 அன்று காலையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு-புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?
இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழக சட்டப்பேரவையில் 16.4.2002 அன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜெயலலிதா தான் என்னைப் பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.
இலங்கையில் ராஜபக்சேயின் சிங்கள படையினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தபோது, அதனை கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, ``இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம்-ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம்-போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கை தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்'' என்று 17.1.2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது-இதே ஜெயலலிதா தான் ``விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால் தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார் என்றும் அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை; இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற சில ஏடுகளே வெளியிட்டனவே!
இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில்-எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும்-அந்த கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவர்தானா?
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அதனையும் ``கபட நாடகம்'' என்றுதான் வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும்-நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கை நழுவ விடுவதும்-பதவியிலே இருக்கும் போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும்-யாரையும், எவரையும் மதிக்காமல் தன்னை மீறி எதுவுமில்லை என்ற ஆணவப்போக்கோடு நடப்பதும் ஜெயலலிதா போன்ற ``கபட வேடதாரி''களுக்குத்தான் கைவந்த கலையே தவிர-உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதை என்பனவற்றை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதா தான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
http://www.maalaimalar.com/2011/04/24050431/chife-minister-karunanidhi-rep.html
இதற்க்கு வந்து இருக்கும் கருத்தையும் இந்த லிங்க்கில் படிக்கவும்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்''-ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? ``சாட்சாத்'' ஜெயலலிதா தான். எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு, பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கை தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.
யாரை மன்னிப்பு கேட்க சொல்கிறார் ஜெயலலிதா?
1956-ம் ஆண்டிலே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணாவின் முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் ஜெயலலிதா பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
24.8.1977 அன்று சென்னையிலே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணியை நடத்தியவன் நான். 1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆம் ஆகஸ்ட் 13-ம் தேதியன்றே-``கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது.
வடகொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன, யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்படுகின்றன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்'' என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
அதே 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் அன்றிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகத் தலைநகரிலே 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10.8.1983 அன்று நானும், கழக பொதுச்செயலாளர் பேராசிரியரும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.
16.5.1985 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.
23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று நான் அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களிடையே சகோதர யுத்தம் கூடாதென்பதற்காகவும், 1986-ம் ஆண்டு மே திங்களில் மதுரையில் பொதுச்செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ``டெசோ'' அமைப்பின் சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்திய கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்காக பகிர்ந்து கொடுத்தவன் நான்.
1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க. சார்பில் பேரணி நடத்தினோம். 16.10.1987 அன்று தளபதி கிட்டுவை காணச்சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை விடுத்தவன் நான்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான் தான்.
6.11.1987 அன்று சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலியை நடத்தியவனும் நான்தான்.
15.3.1989 அன்று டெல்லியில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்தவனும் நான்தான். 15.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து பேசியவனும் நான் தான்.
1991-ம் அண்டு ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டபோது, முதலமைச்சராக இருந்ததே நான் தான்.
1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில் தற்போது என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிற ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் - விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்'' என்று அறிக்கை அல்லவோ ஜெயலலிதா விடுத்தார்.
5.11.1989 அன்றும் 6.11.1989 அன்றும் தமிழ்நாட்டில் பேசிய ராஜீவ்காந்தி, ``இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க. அரசுக்கும் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் நன்றி'' என்று கூறினார். இவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
23.4.2008 அன்று தமிழக சட்டப்பேரவையில்-``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென இப்பேரவை வலியுறுத்துகிறது'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
6.10.2008 அன்று காலையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு-புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?
இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழக சட்டப்பேரவையில் 16.4.2002 அன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜெயலலிதா தான் என்னைப் பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.
இலங்கையில் ராஜபக்சேயின் சிங்கள படையினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தபோது, அதனை கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, ``இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம்-ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம்-போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கை தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்'' என்று 17.1.2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது-இதே ஜெயலலிதா தான் ``விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால் தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார் என்றும் அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை; இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற சில ஏடுகளே வெளியிட்டனவே!
இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில்-எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும்-அந்த கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவர்தானா?
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அதனையும் ``கபட நாடகம்'' என்றுதான் வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும்-நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கை நழுவ விடுவதும்-பதவியிலே இருக்கும் போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும்-யாரையும், எவரையும் மதிக்காமல் தன்னை மீறி எதுவுமில்லை என்ற ஆணவப்போக்கோடு நடப்பதும் ஜெயலலிதா போன்ற ``கபட வேடதாரி''களுக்குத்தான் கைவந்த கலையே தவிர-உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதை என்பனவற்றை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதா தான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
http://www.maalaimalar.com/2011/04/24050431/chife-minister-karunanidhi-rep.html
இதற்க்கு வந்து இருக்கும் கருத்தையும் இந்த லிங்க்கில் படிக்கவும்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பதவிக்காக கபட நாடகம் ஆடுவதில் நீங்கள் இருவ்ரும் சளைத்தவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உண்மையில் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் நீங்கள் இருவரும்
இல்லை. உங்கள் இருவரையும் நம்பி கொண்டிருந்த நாங்கள்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இல்லை. உங்கள் இருவரையும் நம்பி கொண்டிருந்த நாங்கள்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
Similar topics
» போர்க்குற்றம்: இலங்கை பொதுமன்னிப்பு கோர வேண்டும்! - பான் கி மூன்
» போர் விசாரணை குழு பற்றி விமர்சனம் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு
» தமிழில் உள்ள மெல்லோடி [Melody Songs A-Z] பாடல்களின் தொகுப்பினை தகவிறக்கம் செய்ய: கேட்க கேட்க இனிமை
» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
» நளினிக்கு பொதுமன்னிப்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
» போர் விசாரணை குழு பற்றி விமர்சனம் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு
» தமிழில் உள்ள மெல்லோடி [Melody Songs A-Z] பாடல்களின் தொகுப்பினை தகவிறக்கம் செய்ய: கேட்க கேட்க இனிமை
» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
» நளினிக்கு பொதுமன்னிப்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|