புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
3 Posts - 6%
prajai
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
2 Posts - 4%
viyasan
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
1 Post - 2%
Rutu
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
1 Post - 2%
சிவா
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
2 Posts - 15%
Rutu
முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_m10முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...


   
   
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 8:44 pm

"உன்னுடைய அழைப்பிற்கு
எவரும்
செவி சாய்க்கவில்லையெனில்
தனியாகவேனும் நட!
தனியாகவேனும் நட!!"

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடுத்து நடந்த பாகப் பிரிவினையில் பாகிஸ்தானின் பங்கு 75 கோடி ரூபாய் என்று கணக்கிடப் பட்டது. அதில் 20 ௦ கோடியை மட்டுமே கொடுத்த அன்றைய நேரு அரசு மீதமுள்ள 55 கோடியைத் தர இயலாது என்று அழிச்சாட்டியம் செய்தது. காஷ்மீர் பிரச்சினையில் தங்களோடு ஒத்துப் போகும் வரை அந்தப் பங்குத் தொகையை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லையென வல்லபாய் படேல் பிடிவாதமாய் கூறிவிட்டார். இந்த நிலையில் இது விஷயத்தில் நேருவிடமிருந்தும் நியாயம் கிடைத்துவிடாது. ஏன் எனில் துருப் பிடித்த இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலை மீறி நேருவால் எதையும் செய்துவிட முடியாது. மன்மோகன் அளவுக்கு சத்தியமாய் இல்லைதான் என்றாலும் நேருவுக்கும் நிறைய நெருக்கடிகள் இருக்கவே செய்தன. இதை உணர்ந்துகொண்ட காந்தி 1948 ஜனவரி 13 அன்று பிர்லா மாளிகையில் உண்ணாவிரததை தொடங்கினார்.அப்பொழுது அங்கு திரண்டிருந்த ஜனங்களை மேலே காணும் தாகூரின் பாடலைத்தான் பாட சொன்னதாக அருணன் சொல்கிறார். (ஆக காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து முதன் முதலில் உண்ணாவிரதம் இருந்தது அநேகமாக காந்திதான் என்று படுகிறது)

அஸ்மா மக்பூல் மேற்காணும் தாகூரின் வரிகளை வாசித்திருக்க சத்தியமாய் வாய்ப்பில்லை. ஆனால் இதற்கு மிகவும் நெருக்கமாக ஒரு நான்கைந்து வரிகளை "பேஸ் புக்" கில் அவர் கொளுத்திப் போட எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி முபாரக் உசிருக்கு பயந்து தனது குடும்பத்தோடு நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டு மொத்த எகிப்து மக்களின் சகலத்தையும் சுரண்டிக் கொழுத்த சர்வாதிகாரி முபாரக்கிற்கு எதிராக மக்களின் கவனத்தைத் திருப்ப நான்கு எகிப்திய இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீயிட்டுக் கொளுத்திக் கொண்டு செத்துப் போகிறார்கள். எரிந்த அந்த இளைஞர்களின் ஜுவாலையிலிருந்து எகிப்து மக்கள் இருண்டு கிடந்த தங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கண்டார்கள். இதற்கு காரணமாக அமைந்தது இருபத்தி ஆறே வயதான அஸ்மா மக்பூலின் நான்கைந்து வரிகளும் செயலும்தான்.

" தீக் குளித்த நான்கு இளைஞர்களுக்கும் அஞ்சலி செலுத்த "தஹ்ரீக் சதுக்கத்திற்குப்" போகிறேன். என்னைப் போல் சிந்தனை உள்ள எவரும் வரலாம்" என்கிறமாதிரி ஒரு சன்னமான அழைப்பாகத்தான் அவரது முதல் "பேஸ் புக்" குறிப்பு இருந்தது. அவர் சதுக்கத்திற்குப் போன போது ஒரு மூன்று நான்கு இளைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர்.விவரம் தெரிந்து அங்கு வந்த காவலர்கள் அதை அவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை அழைத்துப் போய் எச்சரித்து அனுப்பி விட்டனர். அந்தக் காவலர்களுக்கு மட்டுமல்ல அந்த இளைஞர்களுக்கும் ஏன் அஸ்மா மக்பூலுக்கே அப்போது அவர் அடுத்ததாய் எழுதப் போகும் நான்கைந்து வரிகள் எகிப்தை மட்டுமல்ல உலகையே ஒரு புரட்டு புரட்டப் போகிறது என்பது.

"தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் , ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்க வேண்டும். யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீக் குளிப்பதற்காக அல்ல. என்னை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை, நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள். அல்லாவைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்" என்று அவர் "பேஸ் புக்" கில் எழுதி போட்ட போது லட்சக் கணக்கான மக்களை ஓரிடத்திலே ஒன்றிணைத்து இறுதி வெற்றி கிட்டும் வரை
அவ்விடம் விட்டு நகராமல் அவர்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறாக அது மாறும் என்பதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க நியாயமில்லை.இந்த வரிகளின் விளைவு ' நீங்கள் உங்களை ஆணாகக் கருதினால்' என்ற அவரது அடி மனசில் உறைந்து கிடக்கும் ஆணாதிக்க நம்பிக்கையை விமர்சிக்க விடாமல் நம்மை நகர்த்திப் போகிறது.

பலரது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே கார்களும் பங்களாக்களும் எஸ்டேட்டுகளும் நிறைந்து மென்மையாய் புன்னகைத்துக் கொண்டிருக்க அஸ்மா மக்பூலோ தான் செய்யப் போவதை எழுதினர். எழுதிய படியே செய்தும் காட்டினார்.

"நீங்கள் ஒன்றும் அனாதைகளல்ல, உங்களோடு நாங்களிருக்கிறோம்" என்று போர்ராடத் திரண்டிருந்த எகிப்திய மக்களிடம் உலக மக்கள் ஒவ்வொருவரும் சொன்னோம்.உலக மக்களின் உணர்வுப் பூர்வமான ஆதரவு அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்தது.எழுச்சியடைந்தார்கள். சலிர்க்கிற மாதிரியும் நெகிழ்கிற மாதிரியும் ஏராளம் சம்பவங்கள் அந்தப் போராட்டத்தில்.

"போராடும் மக்களை நோக்கி ஆயுதுங்களைத் திருப்புங்கள். ராணுவத்தையும் என் குடும்பத்தையும் தவிர அனைவரும் செத்துப் போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை நசுக்குங்கள்" என்ற அதிபர் முபாரக்கின் உத்திரவை ராணுவம் நிராகரித்தது. "எங்கள் மக்கள் மீது துப்பாக்கியைத் திருப்பவா நாங்கள் ராணுவத்தில் சேர்ந்தது?. எதிரிகளிடமிருந்து எங்கள் மக்களைப் பாதுக்காப்பதே அல்லாமல் சொந்த மக்களை அழித்து அதிபரைக் காக்கும் அரண்மனை அடியாட்கள் அல்ல. எங்கள் மக்களின் ஊழியர்கள் நாங்கள்" என்கிற அவர்களின் புரிதலும் தெளிவும் சிலிர்ப்பூட்டும் சம்பவம் எனில் அடுத்த சம்பவமோ நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.

ஒரு அம்மா ஒரு மகன் என்று மிக மிக அழகான குடும்பம். மகன் ராணுவ வீரன். அந்தத் தாய் போராட வருகிறாள் சதுக்கத்திற்கு. அந்தப் புள்ளியில் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்பதை அந்தத் தாய் உட்பட யாரும் அறிந்திருக்க வில்லை. அதே சதுக்கத்திற்கு அவரது மகனும் ராணுவப் பணிக்காக வருகிறார். அம்மாவும் பிள்ளையும் சதுக்கத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். காலையில் வீட்டிலிருந்து பணிக்குப் புறப்படும் போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த போதுகூட அம்மா தான் அங்கே வரப் போவதை சொல்ல வில்லையே என்ற ஆச்சரியம் மகனுக்கு. கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்கிறார்கள். மகன் ராணுவ வீரர்களை நோக்கிப் போகிறார். தாய் போராளிகளோடு போய் சங்கமிக்கிறார்.

தனது ராணுவம் என்று முபாரக் கருதியிருந்த ராணுவம் மக்கள் ராணுவமாக மாறுகிறது. மக்கள் புரட்சி வெற்றி பெறுகிறது. மிரண்டுபோன முபாரக் தன் குடும்பத்தோடு தனது நாட்டை விட்டு தப்பியோடி தனது உசிரக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தீ அண்டை நாடுகளில் பரவுகிறது. குறிப்பாக லிபியாவில் அயோக்கியத் தனத்தில், கொடூரத்தில், முபாரக்கிற்கு கொஞ்சமும் குறைவுபடாத கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டு எழுந்திருக்கிறார்கள். ராணுவம் இன்னும் மக்கள் ராணுவமாக மாறாமல் கடாபியின் இராணுவமாகவே உள்ளது. எனவே அவர்கள் மக்களை நோக்கித் தங்கள் ஆயுதங்களைத் திருப்பி மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் எந்த ஆயுதத்தாலும் இந்த நொடி வரை மக்களின் எழுச்சியை ஊனப் படுத்த முடியவில்லை.

ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் நமது உச்சரிப்புக்குள் சிக்க மறுக்கும் பல நாடுகளும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவும் அறிக்கைகளை மட்டுமல்ல படைகளையும் அனுப்பத் தயாராகின்றன. அமெரிக்கா அனுப்பியே விட்டது.

போராட்டம் வெடித்து சில நூறு மக்கள் செத்துப் போன உடனே லிபியா மீது பொருளாதாரத் தடையினை ஐ.நா வீசியது.

லிபியா மக்கள் மீது வானிலிருந்து லிபிய ராணுவம் குண்டுகளை வீசினால் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்துவோம். லிபியா மீது எந்த விமானம் பறப்பதையும் தடை செய்கிறோம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரகடனம் செய்கின்றன.

மக்களை கொல்வதற்கு ஆணையிட்ட கடாபி, அவரது மகன், மற்றும் அதிகாரிகள் மீது இன்டர்போல் எனப்படும் சர்வ தேச காவல் துறை பிடி வாரண்ட் போட்டிருக்கிறது.

மக்கள் நம்பிக்கையோடு தங்கள் போராட்டத்தை நகர்த்துகிறார்கள். இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ லிபிய மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் .

நாம் நமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் லிபியா மற்றும் போராடும் ஒவ்வொரு
மக்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

அதே நேரம் உலக மக்களிடம் சில ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் , போராடும் மக்களிடம், "ஏமாந்து விடாதீர்கள்" என்று அன்போடும் அக்கறையோடும் எச்சரிக்கவும் கடமை
பட்டிருக்கிறோம்.

சில நூறு மக்களை அதன் ராணுவமே கொன்று குவித்த போது சற்றும் தாமதிக்காது கண்டனத்தையும் பொருளாதாரத் தடையையும் வெளியிட்ட ஐ. நா சபையும் ,கடாபி
மீது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச காவல் துறையும் , அமெரிக்காவும் , பிரிட்டனும் ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?

எகிப்து லிபியா மற்றும் போராடும் என் இனிய மக்களே , நீங்கள் உங்களையும் உலக மக்களின் ஆதரவையும் மட்டுமே நம்புங்கள். முபாரக்குகளைவிடவும் கடாபிகளைவிடவும் கோடி மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அருள் கூர்ந்துஇவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  38691590

இரா.எட்வின்

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 9:32 pm

சில நூறு மக்களை அதன் ராணுவமே கொன்று குவித்த போது சற்றும் தாமதிக்காது கண்டனத்தையும் பொருளாதாரத் தடையையும் வெளியிட்ட ஐ. நா சபையும் ,கடாபி
மீது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச காவல் துறையும் , அமெரிக்காவும் , பிரிட்டனும் ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொள்ளப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?

எகிப்து லிபியா மற்றும் போராடும் என் இனிய மக்களே , நீங்கள் உங்களையும் உலக மக்களின் ஆதரவையும் மட்டுமே நம்புங்கள். முபாரக்குகளைவிடவும் கடாபிகளைவிடவும் கோடி மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அருள் கூர்ந்துஇவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

மிகச்சரியான கேள்வி.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 15, 2011 9:45 pm

உண்மையை வெளிச்சமிட்டு காட்டிய பதிவு.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 9:57 am

அறிமுக நாயகன் wrote:உண்மையை வெளிச்சமிட்டு காட்டிய பதிவு.

மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  38691590

இரா.எட்வின்

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:09 pm

கலை wrote:
சில நூறு மக்களை அதன் ராணுவமே கொன்று குவித்த போது சற்றும் தாமதிக்காது கண்டனத்தையும் பொருளாதாரத் தடையையும் வெளியிட்ட ஐ. நா சபையும் ,கடாபி
மீது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச காவல் துறையும் , அமெரிக்காவும் , பிரிட்டனும் ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொள்ளப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?

எகிப்து லிபியா மற்றும் போராடும் என் இனிய மக்களே , நீங்கள் உங்களையும் உலக மக்களின் ஆதரவையும் மட்டுமே நம்புங்கள். முபாரக்குகளைவிடவும் கடாபிகளைவிடவும் கோடி மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அருள் கூர்ந்துஇவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

மிகச்சரியான கேள்வி.. சூப்பருங்க

கேள்வி இல்லை கலை .அச்சம். அமெரிக்கா என்றாலே அயோக்கியத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம்.அமெரிக்க மக்களை நாம் இதோடுப் பொருத்திப் பார்க்க முடியாது.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  38691590

இரா.எட்வின்

முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...  9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக