புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
1 Post - 1%
Kavithas
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
1 Post - 1%
bala_t
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
1 Post - 1%
prajai
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
284 Posts - 42%
heezulia
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
5 Posts - 1%
prajai
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10கிரிக்கெட் யுத்தம்?  Poll_m10கிரிக்கெட் யுத்தம்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் யுத்தம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue 5 Apr 2011 - 11:17



எஸ். ராஜாராம்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுகிறதா? ஆரம்ப காலத்திலிருந்தே இந்த இரு அணிகளும் மோதும் போட்டி பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப்படுவது வழக்கம்.

அண்மைக்காலமாக, அது ஒரு போர்போல சித்திரிக்கப்பட்டு, ஏறக்குறைய இருநாட்டையும் சேர்ந்த பெரும்பாலான ரசிகர்களும் அந்த மனநிலைக்கே வந்துவிட்டனர்.

விளையாட்டு என்பது ஒற்றுமை உணர்வை வளர்க்கத்தானே தவிர, வேற்றுமையை விதைக்க அல்ல. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தால் அந்தப் போட்டியின் நோக்கமே மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியும் அதை நிரூபித்தது. அந்தப் போட்டி நடந்த தினத்தன்று பாகிஸ்தானில் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் தில்லி உள்பட சில மாநிலங்களில் அரைநாள் விடுமுறையை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன.

கிரிக்கெட் ஜுரத்தால் தனியார் அலுவலகங்களில் வேலையே நடக்கவில்லை. மாணவர்கள் படிப்பில் கவனமின்றி தொலைக்காட்சியே கதியெனக் கிடந்தனர். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பான நேரத்தில் தேர்தல் பிரசாரத்துக்குப்போன தலைவர்களைப் பார்க்கக்கூட கூட்டமில்லையாம்!

மத்தியப் பிரதேசத்தில் மின்தடையின்றி ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதற்காக அந்த மாநில அரசு 1.80 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியதாம்.

இந்தியாவுடனான போட்டியில் வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவை வீழ்த்தினால் போதுமாம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் முக்கியமான ஒன்று. அதுவும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இரு நாட்டு அணிகளும் மோதுவது பெரிய விஷயம்தான். அதற்காக அரசாங்கமே அரைநாள் விடுப்பு அறிவிக்கும் அளவு அத்தனை முக்கியத்துவம் அதில் இருக்கிறதா?

மேலும், அந்த நாளில் இரு நாடுகளிலும் முக்கியமான நகரங்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுபோல ஆள்நடமாட்டமே இன்றி வெறிச்சோடி இருந்தனவாம். கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து அதில் ஒன்றுமேயில்லை. ஆனால், அந்தப் போட்டியில் வெற்றிபெறுவது இரு நாடுகளின் கௌரவம் சார்ந்த விஷயமாக ஆக்கப்பட்டுவிட்டது.

இரு அணி வீரர்களையும் இந்த அழுத்தம் வேறு மாதிரி பாதித்துள்ளது. "இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே "டபுள் பிரஷர்' இருப்பது வழக்கம்தான்' என்கிறார் இந்திய அணியின் ஹர்பஜன் சிங். இரு அணி கேப்டன்களுக்கும் இந்தப் போட்டியில் வெல்வது என்பது உணர்வுபூர்வமான விஷயமாகிவிட்டது.

போட்டியில் வென்றுவிட்டால் பாராட்டு மழை; தோற்றுப்போனால் நாட்டின் மானத்தையே அடகுவைத்தாற்போன்ற அவச்சொல். ஒரு விளையாட்டுப் போட்டியின் வெற்றி தோல்வியில்தான் ஒரு நாட்டின் மானமே அடங்கியிருக்கிறதா? இதுதவிர, போட்டியில் ஏதாவது ஒரு வீரரின் செயல்பாடு மோசமாக இருந்தால், அந்த வீரரின் நேர்மையையே சந்தேகிக்க வேண்டிய சூழலை இந்த கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திவிட்டது.

இந்தப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸப் கிலானி நேரில் வந்திருந்து போட்டியை இந்திய பிரதமருடன் அமர்ந்து பார்த்தார்.

இரு நாடுகளின் உறவை மேம்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் கிரிக்கெட் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டார் என ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. "இந்தச் சந்திப்பால் உடனடி பலன் கிடைத்துவிடப் போவதில்லை; இருப்பினும் இரு நாடுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இருந்த தயக்கங்கள் குறைந்துவிட்டன' என பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதுகின்றன. இது எந்த அளவுக்குச் சரி?

எத்தனையோ முறை கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ள பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயக்கத்தை இந்த கிரிக்கெட் போட்டிதானா தகர்த்துவிடும்? இதெல்லாம் ஊடகங்கள் தோற்றுவிக்கும் மாயபிம்பங்கள்.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெறும் நாள்களில் எல்லாம் இரு நாடுகளிலுமே தொழில்துறையில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுபோதாது என்று, மொஹாலியில் நடந்த அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்றுப்போனதும் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். எத்தகைய மோசமான செயல் இது. பாகிஸ்தான் எத்தனையோ அணிகளிடம் தோற்கத்தான் செய்கிறது? ஆனால், இந்திய அணியிடம் தோற்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதாம்.

இரு நாட்டு ரசிகர்களையும் வசப்படுத்துகிற கிரிக்கெட் உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஆனால், வசப்படுத்திய ரசிகர்களை வெறிபிடிக்க வைக்கக்கூடாது. கிரிக்கெட்டை ரசியுங்கள், மகிழுங்கள். அது ஒரு விளையாட்டுதானன்றி யுத்தம் அல்ல.

- தினமணி


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue 5 Apr 2011 - 11:38

இஸ்லாமாபாத்: இந்தியா சிறப்பாக விளையாடியது, எனவே வென்றது என்று மொஹாலியில், இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்த பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி இப்போது இந்தியாவைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

Getty Images
இந்தியாவுடன் நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியைய பாராட்டிப் பேசியிருந்தார் அப்ரிதி. இது இந்திய ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. அப்ரிதியை ஜென்டில்மேன் என்று அனைவருமே பாராட்டினார்கள்.

ஆனால் தற்போது இந்தியர்கள் மீது பாய்ந்துள்ளார் அப்ரிதி. குறிப்பாக இந்திய மீடியாக்களை சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் இதில் மதத்தையும் அவர் இழுத்துள்ளார். தனது அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் மீடியாக்களிடமிருந்து தப்பவும், பாகிஸ்தான் மக்களின் அதிருப்தியிலிருந்து வெளியே வரவும் இதுபோல அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தியர்களையும், இந்திய மீடியாக்களையும், இந்தியாவையும் குறைத்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தானியர்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய மனது இந்தியர்களுக்குக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ளதைப் போன்ற அகண்ட மனது, இந்தியர்களுக்குக் கிடையாது என்றுதான் சொல்வேன். கணிவான இதயம் இந்தியர்களுக்குக் கிடையாது. அல்லா எங்களுக்குக் கொடுத்துள்ளதைப் போன்ற சுத்தமான, கணிவான இதயம் நிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

அவர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது நமக்கு மிக மிக கஷ்டமானது. அவர்களுடன் நீண்ட கால உறவையும் நம்மால் நிச்சயம் பேண முடியாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஒரு பயனும் ஏற்படாது என்பது எனது கருத்து. கடந்த 60 ஆண்டுகளில் நட்பை வளர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்துதவற்காகவும் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏதாவது பயன் இருந்ததா. இருக்காது. அவர்களுக்கு்ததான் நல்ல உள்ளம் இல்லையே.

சண்டை போட்டுக் கொள்வதில் இந்த இரு நாடுகளுக்கும் விருப்பம் இல்லை. ஆனால் மூன்றாவது நாடு ஒன்றுதான் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட விடாமல் தடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாடு இரு நாடுகளையும் இணைய விடாது, நட்பாக இருக்க விடாது.

இந்திய மீடியாக்கள் மிகவும் பொறாமை பிடித்தவை, பாரபட்சத்துடன் கூடியவை. இவர்களுடன் ஒப்பிடிட்டால் பாகிஸ்தான் மீடியாக்கள் நூறு மடங்கு சிறந்தவை என்பது எனது கருத்து. இவர்களால்தான் இரு நாடுகளின் உறவுகளும் கூட சீர்கெட்டுப் போயுள்ளது. இந்திய மக்கள் இப்படி இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மீடியாக்கள்தான் அனைத்தையும் கெடுக்கின்றன.

அதேபோல பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், பாகிஸ்தான் அணியினர் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேசமயம், பாகிஸ்தானை வென்று அந்த வெற்றியை, மும்பையில் பலியானவர்களுக்கு காணிக்கை ஆக்குவேன் என்று கெளதம் கம்பீர் கூறியதையும் நான் காட்டமாக கண்டிக்கிறேன். இதெல்லாம் அரசியல் பேச்சு. கம்பீர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. மும்பையில் நடந்த தாக்குதலுக்கு நானோ, அல்லது பாகிஸ்தான் வீர்ர்களா காரணம் என்று கேட்டார் அப்ரிதி.

பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue 5 Apr 2011 - 11:56

இந்திய நண்பர்களுக்காக உலகக்கிண்ணத்தை சிறிலங்கா விட்டுக் கொடுத்ததாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011, 00:18 GMT ] [ கார்வண்ணன் ]

உலகக்கிண்ணத்தை இந்திய நண்பர்களுக்காக சிறிலங்கா விட்டுக் கொடுத்தாகக் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

கடந்த சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிறிலங்கா அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

தோல்வியுடன் நாடு திரும்பி சிறிலங்கா அணியினருக்கு நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் விருந்தளித்தார்.

இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களின் மகிழ்ச்சிக்காக சிறிலங்காவில் உள்ள 2 கோடி மக்கள் உலகக்கிண்ணத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

சிறியதொரு எமது நாட்டின் மக்கள் இந்திய நண்பர்களுக்காக உலகக்கிண்ணத்தை விட்டுக் கொடுத்து பின்வாங்கினர் என்பதை இந்திய நண்பர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

சிறிலங்காவினர் பெருந்தன்மையுடன் தோல்வியடைந்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறாது போனாலும் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது மிகப்பெரிய விடயம்.

இதன்மூலம் எமக்குப் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சிறிலங்கா அதிபரின் மனைவி சிராந்தி ராஜபக்ச, வீரர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

உலகக்கிண்ண இறுதிப்போட்டியைக் காண மும்பை சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா அணி தோல்வியுற்றதும் அவர்களை அங்கேயே விட்டு விட்டு இரவோடு இரவாக நாடு திரும்பியிருந்தார்.

அத்துடன் கொழும்பு திரும்பிய சிறிலங்கா அணிக்கு சுதந்திர சதுக்கத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் சிறிலங்காவின் எந்தவொரு அமைச்சரும் கூட கலந்து கொள்ளவில்லை.

கிரிக்கெட் விளையாட்டு அரசியலாக்கப்பட்டு விட்டதாக ஐதேக குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே நேற்று அலரி மாளிகையில விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 5 Apr 2011 - 12:03

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 5 Apr 2011 - 12:14

உலகக்கிண்ணத்தை இந்திய நண்பர்களுக்காக சிறிலங்கா விட்டுக் கொடுத்தாகக் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.





சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 5 Apr 2011 - 12:22

கீழே விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டவில்லை என்கிற கதையாக அல்லவா இருக்கிறது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 5 Apr 2011 - 12:33

இதை நம் நண்பர் அசாம் பார்க்கவில்லையா இன்னும் இலங்கை அதிபருக்கு என்னவொரு பெரிய மனது விட்டுக் கொடுத்து விட்டார்களாம் கிரிக்கெட் யுத்தம்?  56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue 5 Apr 2011 - 12:41

யாரும் எதையும் விட்டுக் கொடுக்கவுமில்லை, யாரும் எதையும் தட்டிப் பறிக்கவுமில்லை..திறமையும், அதிர்ஷ்டமும், பல கோடி நெஞ்சங்களின் ஆசிர்வாதமும் இந்தியா அணிக்கு இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றார்களே தவிர இதில் வேறு கரணங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்ல.. ஓகே!!!!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 5 Apr 2011 - 12:43

Jiffriya wrote:யாரும் எதையும் விட்டுக் கொடுக்கவுமில்லை, யாரும் எதையும் தட்டிப் பறிக்கவுமில்லை..திறமையும், அதிர்ஷ்டமும், பல கோடி நெஞ்சங்களின் ஆசிர்வாதமும் இந்தியா அணிக்கு இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றார்களே தவிர இதில் வேறு கரணங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்ல.. ஓகே!!!!


உங்களுக்கு பெருந்தன்மை மிக அதிகம். நன்றிகள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 5 Apr 2011 - 12:56

ப்ரியாக்கு இருக்குற பரந்த மனசு வேற யாருக்கும் இல்ல நன்றி ப்ரியா கிரிக்கெட் யுத்தம்?  154550 கிரிக்கெட் யுத்தம்?  154550 கிரிக்கெட் யுத்தம்?  154550 கிரிக்கெட் யுத்தம்?  154550 கிரிக்கெட் யுத்தம்?  154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக