பெண்ணின்
பின்னப்பட்ட
கூந்தலுக்கு
மணம் இருக்கலாம்..!
அதோடு
அவிழ்க்கப்படாத
பொய்களும்
இருக்கலாம்..!

பெண்ணின்
கன்னங்கள்
ரோஜா இதழ்களைப்
போல
இருக்கலாம்...!
அதனுள்
முட்களும்
இருக்கலாம்..!

பெண்ணின்
குங்குமம்
மங்களகரமாக
இருக்கலாம்...!
அதுவே
ஆபத்தின்
அறிகுறியாகவும்
இருக்கலாம்..!..

ஆகவே
இளைஞனே...!
காதலிக்கும் முன்...
கொஞ்சம்
யோசித்துப் பார்..!

காதல்
கண்களைப்
பார்த்துச்
செய்வது..!
கல்யாணம்
பணத்தை மட்டுமே
பார்த்துச்
செய்யப்படுவது...!

என்றெல்லாம்
கிறுக்கிக் கொண்டே
எப்போது
உறங்கிப் போனேன்
என்பதே
தெரியவில்லை...!

காலையில்
கண் விழித்த போது
எதிர் வீ ட்டுப் பெண்
தண்ணீர் குடம்
சுமந்து
ஜன்னலில்
புன்னகைத்தாள்...!

முந்தய நாள்
எழுதிய கவிதை
காற்றில்
பறப்பதைக் கூட
அறியாமல்
அவளையே
பார்த்துக்
கொண்டிருந்தேன்..!
உன் கண்களில்
தெரிவது காதலா..?
இல்லை என் எண்ணங்களின்
அத்து மீறலா..?
நன்றி
TMT