புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
3 Posts - 5%
prajai
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
2 Posts - 4%
viyasan
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
1 Post - 2%
Rutu
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
1 Post - 2%
சிவா
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
2 Posts - 13%
Rutu
தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_m10தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவி தரிசனம்... பாப விமோசனம்! (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:13 am

தேவி தரிசனம்... பாப விமோசனம்!
புதுக்கோட்டை - கொன்னையூர் ஸ்ரீமாரியம்மன்

'என்னவோ போப்பா, அடிக்கடி எனக்கு மேலு- காலுல ஒண்ணு மாத்தி ஒண்ணு எதுனா வலி வந்துக்கிட்டே இருக்குது... பண்ணாத வைத்தியம் இல்லே; பாக்காத டாக்டர் இல்லே..!’

'கவலைப்படாதப்பு..! ஆத்தாகிட்ட உன் குறையைச் சொல்லு! எல்லாத்தையும் அவ பாத்துக்குவா!’

'பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணி, கரையேத்துற வரைக்கும், வயித்துல நெருப்பைக் கட்டிட்டிருக்கிற மாதிரியில்ல இருக்கு. எங்க குறை எப்ப தீரப் போகுதோ?’

'நல்லது நடக்கணும்னு நீயும் நானும் மனசு வைச் சாப் போதுமாய்யா? அவ சந்நிதில கதறி அழு. தாய்க்குத் தாயா, தகப்பனுக்குத் தகப்பனா இருந்து, உன் பொண்ணு கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பா!’

- புதுக்கோட்டை மாவட்டத்தின் பல கிராமங்களிலும் இப்படித்தான் பேசிக் கொள்கின்றனர்; அன்னையே கதியென முழுவதுமாகச் சரணடைந்து, சக்தியின் பேரருளால் சந்ததி சிறக்க வாழ்ந்து வருகின்றனர். 'எல்லாத்தையும் மகமாயி பாத்துக்குவா’ என்று அவர்கள் சொல்லும் அன்னை வீற்றிருப்பது கொன்னையூர் திருத்தலத்தில்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ளது கொன்னையூர். புதுக்கோட்டை யில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலை விலும் உள்ளது இவ்வூர். ஊரின் மையப்பகுதியில் கோயில்கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், மாடு- கன்றுகளையும், காடு- கரைகளையும் வாழ வைத்தருள்கிறாள் ஸ்ரீமாரியம்மன்.

பன்னெடுங் காலத்துக்கு முன்பு, இந்தப் பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்ததாம். யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில், ஊர்மக்களை திடீர் திடீரென விசித்திர நோய்கள் தாக்கின; சிலர் தோல் நோயால் அவதிப்பட்டனர்; சிலர், வாந்திபேதியால் சுருண்டனர். இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட... குடிப்பதற்குக்கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்னைகள். போதாக்குறைக்கு நோயால் தாக்குண்டு, வாழவே வழியில்லை எனும் நிலையில், திருமணம் செய்வதும் பிள்ளை பெற்றுக்கொள்வதும் மெள்ள மெள்ளக் குறைந்தது. 'இப்படியே போனா, நம்ம பூமியும் வம்சமும் அழிஞ்சிடுமே...’ என கலங்கினார்கள்.

அவர்களின் ஓலக்குரல் உலகாளும் நாயகியை உசுப்பியது. அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்து, அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்துகொண்டாள்.



பாலை எடுத்துக்கொண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலை யானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து குபுக்கென்று ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப் பார்க்க... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி!

பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்ததுதான் தாமதம்... உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்தது, கன மழை! கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.



ஓலைக்குடிசை அமைத்து, அங்கே அம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர் ஊர்மக்கள். ஆரம்பத்தில், ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள், பிறகு, காட்டையே ஊராக்கிக் குடிபுகுந்தனர். கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றா னது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது. அதேபோல், ஓலைக்குடிசையாக இருந்த ஆலயமும், மிகப் பிரமாண்டமான கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டது. அன்று துவங்கி இன்றளவும் கொன்றையூர் மாரியம்மன்தான், இந்தப் பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம், கண்கண்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே! மனதில் என்ன குறை இருந்தாலும், வீட்டில் என்ன பிரச்னை ஏற்பட்டாலும், ஊருக்குள் எந்த அநீதி நடந்தாலும் விறுவிறுவென இங்கு வந்து, அம்மனின் சந்நிதியில், தங்கள் கண்ணீரைக் காணிக்கையாக்கி, மனமுருக வேண்டிச் செல்கின்றனர். நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர். இன்னும் சிலர், சந்தனம் மற்றும் பாலபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து தரிசிக்கின்றனர். நோயால் வாடும் குழந்தைகள் குணம் பெறுவதற்காக வேண்டிக் கொள்பவர்கள், இங்கு வந்து முடி காணிக்கை செலுத்தி, மாவிளக்கேற்றுகின்றனர். கோயிலின் சனி மூலையில் உள்ளது நெல்லிமரம். இந்த மரத்தில், தொட்டில் கட்டினால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; மஞ்சள் கயிறு அணிவித்தால், திருமண வரம் பெறலாம்; தொட்டிலும் வளையலும் கட்டிப் பிரார்த்தித்தால், சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை!

சாந்நித்தியம் கொண்ட அம்மனின் ஆலயத்தில், பங்குனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, கோலா கலமாக நடைபெறுகிறது பூச்சொரிதல் விழா. மறுநாள், அக்னிக் காவடி வழிபாடு. 2-வது ஞாயிற்றுக்கிழமையில் காப்புக் கட்டி, மறுநாளில் இருந்து நடைபெறுகிறது 15 நாள் மண்டகப்படி. இந்த 15 நாட்களும் தினமும் பாலபிஷேகம், மாவிளக்கேற்றுதல், பொன்னமராவதி, செவனூர், ஆல வயல் மற்றும் செம்பூதி என நான்கு நாட்டைச் சேர்ந்தவர்களும் திரளாக வந்து அம்மனைத் தரிசித்தல், வெள்ளி ரதத்தில் அம்மன் வீதியுலா எனக் கொன்னையூர் முழுவதும் கொண்டாட்டம்தான்; குதூகலம்தான்!

தவிர, 'எங்க குடும்பத்தை நல்ல விதமா கரைசேர்த்துடு தாயே!’ என வேண்டிக்கொண்டு, வெள்ளி ரதம் இழுக்கும் பக்தர்களை இங்கே தினமும் பார்க்கலாம்.

கொன்னையூர்த் தாயே... உன் திருவடி சரணம்!


நன்றி விகடன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேவி தரிசனம்... பாப விமோசனம்!  (புதுக்கோட்டை கொன்னையூர் ஸ்ரீ மாரியம்மன்) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக